Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இல்வாழ்வு தந்த இயலாமை

Featured Replies

இல்வாழ்வு தந்த இயலாமை

கனமான அந்த அல்பத்தை தூக்க முடியாமல் சிரமப்பட்டு தூக்கிக்கொண்டு, அங்காலயும் இங்காலயும் சாய்ந்து சாய்ந்து மகள் ஜனனி ஓவர் ஆக்சன் வேற போட்டுக்கொண்டு, "அம்மா அம்மா பிடியுங்கோ" என்று சத்தம் போட்டுக்கொண்டு வருவதைப் பார்த்ததும் மேனகாவுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

"இப்ப என்னத்துக்கு ஜனனி இதைத் தூக்கிக் கொண்டு வாறீங்கள்? அம்மாட்டா கேட்டா எடுத்துத் தந்திருப்பன்தானே?"

"அம்மா நான் உங்கட கல்யாண வீட்டுப் படம் பார்த்துக் கனநாள்தானே.. வாங்கோ பார்ப்பம். நான்; அதில நிக்கிற ஆக்களெல்லாம் யார் யாரெண்டு சொல்லுவனாம் நீங்கள் நான் சொல்றதெல்லாம் சரியோ என்று பார்ப்பீங்களாம். சரியோ?"

"ம்... மகாராணி சொன்னா அதுக்கு மறுபேச்சு இருக்கா? சரி சொல்லுங்கோ மகாராணி..."

"உங்களுக்குப் பக்கத்தில நிக்கிறது நேசன் மாமா. அவருக்குப் பக்கத்தில தாத்தாவும் பாட்டியும். இங்கால நிக்கிறது மஞ்சுச் சித்தி.. சரியா?"

"ம்... ஜனனிக்குட்டி கெட்டிக்காரி. சரி இப்ப இந்தப் படத்தில நிக்கிறது யாரெண்டு..."

"அம்மா அம்மா! நாங்கள் எப்ப ஊருக்குப் போவம்? எப்ப பாட்டி வீட்ட போறம்?"

ஜனனி இப்படிக் கேட்டதுதான் தாமதம் மேனகாவுக்கு பழைய நினைவுகள் அலைமோத ஏழு வருடத்துக்கு முதல் நடந்த சம்பவங்களனைத்தும் நினைவில் வந்து போயின.

2000 ஆம் ஆண்டு கலைப்பிரிவு மாணவர்களுக்கான பொருளியல் வகுப்பறை எப்பொழுதுமே கலகலப்பாக இருக்கும். அதுவும் மேனகா அங்கிருந்தால் எப்பவும் அவளைச் சுற்றி ஒரு கூட்டமிருக்கும். இவர்களுக்குப் பொருளியல் சொல்லித்தரும் வானதி ரீச்சரும் இளவயதினர் என்பதால் பாடநேரம் தவிர்ந்த நேரங்களில் மேனகா குறூப்புடன் அவ்வப்போது அரட்டையடிக்கத் தவறுவதில்லை. அப்படித்தானன்றும் மேனகாவின் நண்பிகள் மேனகா தேர்வு முடிந்ததும் திருமணத்திற்காகக் கனடா செல்லவிருப்பதால் சிறிய ஒன்றுகூடல் ஒன்றை ஏற்பாடு செய்து அவளைக் கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள்.

"மேனகா கனடா போப்போறம்தானே என்று தேர்வுக்குப் படிக்காம இருந்திடாதயும். திருப்தியாத் தேர்வெழுத வேணும் அப்பத்தான் எங்களுக்குச் சந்தோசம்" என்று சொல்லிக்கொண்டு வானதி ரீச்சரும் வந்து சேர்ந்தார்.

"ஓம் மிஸ். எனக்கு நம்பிக்கை இருக்கு. லொஜிக்கு இல்லாட்டாலும் கட்டாயம் உங்கட பாடத்துக்கு ஏ வரும்."

046kx5.jpg

"மிஸ்! மேனகா சொல்றதை நம்பாதயுங்கோ... இவள் படிக்கிறதேயில்லை. கனடாவில இருந்து அவான்ர ஆள் ஒவ்வொருநாளும் போன் பண்ணுவார். இவாக்கு இப்ப அவரோட கதைக்கிறதுதான் வேலை. படிக்கிறன் என்று சொல்றதெல்லாம் சும்மா."

"ஏய் கிருஸ்ணி ! சும்மா இரு. இல்ல மிஸ், படிக்கிறன் மிஸ்."

"இந்தா மேனகா! Autograph ல sign பண்ணிட்டன். கல்யாணக் கனவில நீர் எங்கட 4A கனவை கலைச்சிடாதயும். கல்வியிலும் வாழ்க்கையிலும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்."

"ஓகே கேர்ள்ஸ். பக்கத்தில எனக்கு வகுப்பிருக்கு. கொஞ்சம் அடக்கி வாசியுங்க என்ன. பாவம் மேனகா, ஒரேயடியாய் நக்கலடிக்காதயுங்கோ."

"ஓகே மிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" என்று கிருஸ்ணி சத்தமாச் சொல்ல,"உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" என்று கிருஸ்ணியைப் பார்த்துச் சொல்லிவிட்டு வெளியேறினார் வானதி மிஸ்.

"அவா போய்ட்டா.சொல்லு சொல்லு நீ சொல்லு. என்னவாம் கோபி?"

"சும்மா இருங்கடி... எனக்கு எக்ஸாம் தொடங்கப் போகுது என்று சொல்லிட்டன். இனிம அவர் போன் பண்ண மாட்டார். பண்ணினா றெக்கோட் பண்ணி வைக்கிறன் சரியா."

"இத்தால் யாவருக்கும் அறியத்தருவது என்னவெனின் ரேளடி மேனகா என நம்மால் அறியப்பட்ட மேனகா தற்போது வெக்கப்பட்டுக்கொண்டிருக்கி

Edited by Snegethy

ம்... வாழ்த்துக்கள்! யதார்த்தமான கதை. ஆனால்.. ஒரு பெண்ணுக்கு அவ்வளவு இயலாமை தற்போதும் உள்ளதா? இருப்பது கூடாதே! :P

  • கருத்துக்கள உறவுகள்

ம்... வாழ்த்துக்கள்! யதார்த்தமான கதை. ஆனால்.. ஒரு பெண்ணுக்கு அவ்வளவு இயலாமை தற்போதும் உள்ளதா? இருப்பது கூடாதே! :P

என்ன தான் வீர வசனம் பேசினாலும் இயற்கையாய் அளித்த இயலாமைகள் பெண்களிடம் ஏராளம் தாராளம். அதிலிருந்து அவர்கள் விடுபடவும் மாட்டார்கள்..விடுபட விரும்பவும் மாட்டார்கள்..! காரணம்..அவற்றை வைத்துத்தான் அவர்கள் இரக்க மனப்பான்மையை தூண்டி பிழைப்பு நடத்த வேண்டி இருப்பதால்..! பெண் தன்னைப் பெண்ணாக நோக்கும் வரை அந்த இயலாமை இருக்கும். எப்போ அவள் தன்னை மனிதனாகப் பார்கிறாளோ அப்போதே அவளின் மன இயலாமைகள் அகன்றுவிடும்..! உடலியலாமைகளை இயற்கைதான் மாற்ற வேண்டும்..! அதுவரை பெண் பெண்ணாகவே இயலாமைகளோடு இருக்க..அவர்களை மேய்க்க ஒரு ஆண்கள் கூட்டம் இயலுமையுடன் இருக்கும்..! :unsure:<_<

நல்ல கதை சினேகிதி,

பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாயிருப்பது வேதனைக்குரியது. ஆனால் அதுதான் யதார்த்தம்.

யதார்த்தமான கதை சிநேகிதி.

வாழ்த்துக்கள்

பெண்களுக்கு இயலாமையா அதுவும் கலியாணம் கட்டினவவுக்கு? கலியாணம் கட்டாதா நீங்க அப்படித்தான் நினைப்பீங்க.

கலியாணம் கட்டின ஆக்களிட்ட கேட்டுப்பாருங்க , 'டெக்கினிக்கச் ' சொல்லித் தருவினம். கனபேர் கலியாணம் கட்டினாப் பிறகு தான் சுதந்திரம் எண்டுவினம். :icon_idea::D

இல்வாழ்வு தந்த இயலாமை

கனமான அந்த அல்பத்தை தூக்க முடியாமல் சிரமப்பட்டு தூக்கிக்கொண்டு, அங்காலயும் இங்காலயும் சாய்ந்து சாய்ந்து மகள் ஜனனி ஓவர் ஆக்சன் வேற போட்டுக்கொண்டு, "அம்மா அம்மா பிடியுங்கோ" என்று சத்தம் போட்டுக்கொண்டு வருவதைப் பார்த்ததும் மேனகாவுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

"

2000 ஆம் ஆண்டு கலைப்பிரிவு மாணவர்களுக்கான பொருளியல் வகுப்பறை எப்பொழுதுமே கலகலப்பாக இருக்கும். அதுவும் மேனகா அங்கிருந்தால் எப்பவும் அவளைச் சுற்றி ஒரு கூட்டமிருக்கும். இவர்களுக்குப் பொருளியல் சொல்லித்தரும் வானதி ரீச்சரும் இளவயதினர் என்பதால் பாடநேரம் தவிர்ந்த

"என்னது மேனுக்கு வெக்கமா?"

". ஜனனியும் பிறந்து 7 வருடங்களாகிவிட்டன. ஆனாலும் அந்தத் திருமணத்தினத்திற்குப் பிறகு கோபியோ, கோபியின் பெற்றோர் உறவினர் என எவருமே மேனகா வீட்டினரோடு பேச்சுவார்த்தையில்லை. சீதனச் சாகரத்தில் இன்றுவரை தங்கைக்கென்று தமையன் கொட்டிக்கொண்டுதான் இருக்கிறான்..

எங்கேயோ இடிக்கிற மாதிரி இருக்குதே? 2000'ம் ஆண்டு படித்துகொன்டிருக்றா, ஆனால் இப்பொ 7 வயதில் மகள் இருக்கு.

நான் அறிந்த வரைக்கும், எங்கள் சமூகத்தில் வரதட்சனைக்காக கலியாணாம் நின்று போனதாக கேள்வி படவே இல்லை.அதுவும் வெளி நாட்டு மாப்பிள்ளையால்? அனேகமான வெளிநாட்டு மாபிள்ளை மார் சீதனம் இப்போ வாங்குவதில்லையே? சொல்ல போனால் அவர்கள் தான் பெண் வீடாருக்கு உதவி செய்கிறார்கள்.

இதில் கொஞ்சம் இந்திய சாயல் இருக்குது என்று நினைகிரேன். அப்புறம் மாமியார் கொடுமை என்பதும் எங்கள் சமூகத்தில் விரல் விட்டு எண்ண கூடியவையே! திருமணத்திற்க்கு பிறகு, அனேகமான ஆண்கள், தங்கள் மனைவி வீட்டில் தானே இருகிறார்கள்?

மற்றும் படி, கதை நன்றாக இருகிறது, வாழ்த்துக்கள்!

  • தொடங்கியவர்

வணக்கம் மூக்கி. 2000 ஆண்டு கலைப்பிரிவு மாணவர்கள் என்றால் 2000ம் ஆண்டு பரீட்சை எடுக்கப்போகறிவர்கள்.7 வயது என்று போடாமல் 6 வயது என்று போட்டிருக்கலாம் என்ன? சுட்டிக்காட்டியதுக்கு நன்றி.

;இது ஒரு உண்மைக்கதை .எங்கட ஆக்கள் சீதணம் வாங்குறது குறைவு மாமியார் மருமகள் சண்டை குறைவு என்று நாங்கள்தான் சொல்றம்.உண்மையும் அப்பிடியிருந்தாச் சந்தோசம்தான்.

  • தொடங்கியவர்

நன்றி சோழியண்ணா, நெடுக்காலபோவான்,மணிவாசகன் ரசி அக்கா, நாரதர் மற்றும் மூக்கி.

டெக்னிக்கா நாரதர்? :D ம் சொல்லுவீங்க சொல்லுவீங்க.

சில பேருக்குக் கல்யாணத்துக்குப் பிறகுதான் சுதந்திரம் கிடைக்கும் என்றது உண்மையா இருக்கலாம்.

Edited by Snegethy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.