Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மழையால் யாழில் 5 ஆயிரம் பேர் பாதிப்பு

Featured Replies

மழையால் யாழில் 5 ஆயிரம் பேர் பாதிப்பு

(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு நாட்களாக நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 5ஆயிரத்து எண்ணுற்றி நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப்பணிப்பாளர் ச.ரவி தெரிவித்துள்ளார்.

dcb7f21b80a2f58949d721c43d9e5ab7_XL.jpg

அத்துடன் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் 17 வீடுகள் முற்றாகவும் 172 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளார்.

 

வங்காளவிரிகூடாவில் ஏற்பட்ட தாழமுக்கத்தால்  நாட்டின் சகல இடங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணதிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் நெடுந்தீவு, யாழ்ப்பாணம், நல்லூர், சாவகச்சேரி, காரைநகர், பருத்தித்துறை, மருதங்கேணி, தெல்லிப்பழை, உடுவில், கோப்பாய், கரவெட்டி, ஊர்காவற்றுறை, சண்டிலிப்பாய், வேலனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை யாழ் நகரப் பகுதிகளில் மழை வெள்ள நீர் தேங்குவதற்கு பொதுமக்களின் பொறுப்பற்ற செயலே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக மழை வெள்ளம் வழிந்தோடக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்த வாய்க்கால்கள் கால்வாய்களில் குப்பைகள், கழிவுப்பொருட்கள் மேலும்  அடைத்திருந்து மழை வெள்ளம் வழிந்தோட முடியாத நிலை காணப்படுவதாகவும் அவற்றை சீரமைத்து வெள்ள நீர் வழிந்தோடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் பிரதிபணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/6530

  • கருத்துக்கள உறவுகள்

210 சாராயக் கடை இருக்கெண்டால்.....போத்திலும் கப்புகளும் அடைக்கும் தானே....

  • கருத்துக்கள உறவுகள்

பாதிப்புகளும், இழப்புகளுமே தமிழனுக்கு நிரந்தரம்.

  • கருத்துக்கள உறவுகள்

குப்பைகள் கழிவுகளைத் துப்பரவு செய்யவேண்டுமென்றால் அதுக்கு உரியவர்கள்தான் வருகை தரவேண்டும். மற்றவர்கள் செய்யமாட்டார்கள். இன்றைய அவலத்திற்கு இதுவும் ஒரு காரணம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, நவீனன் said:

இதேவேளை யாழ் நகரப் பகுதிகளில் மழை வெள்ள நீர் தேங்குவதற்கு பொதுமக்களின் பொறுப்பற்ற செயலே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதெற்கெடுத்தாலும் பொதுமக்கள் மீது பழியை போட்டுவிட்டு அரச ஊழியர்களும்/அரசியல்வாதிகளும் தப்பித்து கொள்கின்றார்கள்.ஒழுங்கான சட்டங்களை அமுல்படுத்தினால் பொதுசனங்கள் தானகவே திருந்துவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

குப்பைகள் கழிவுகளைத் துப்பரவு செய்யவேண்டுமென்றால் அதுக்கு உரியவர்கள்தான் வருகை தரவேண்டும். மற்றவர்கள் செய்யமாட்டார்கள். இன்றைய அவலத்திற்கு இதுவும் ஒரு காரணம். 

நம்ம சனம் அப்படியே கான்களை துப்புரவு செய்ய இறங்கினால்  

உடனே என்ன முன்சுபாலிட்டியில் இணைந்து விட்டீர்களா என்று நக்கல் கேள்வி  இன்று கான்கள் அடைபடுவதற்கு காரணம் குப்பைகள்தான் அதிலும் பிளாஸ்டிக் பொருட்கள் தான் அதிகமாக பாவனையில் உள்ளது இதுவும் ஒரு காரணம் தான் 

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

எதெற்கெடுத்தாலும் பொதுமக்கள் மீது பழியை போட்டுவிட்டு அரச ஊழியர்களும்/அரசியல்வாதிகளும் தப்பித்து கொள்கின்றார்கள்.ஒழுங்கான சட்டங்களை அமுல்படுத்தினால் பொதுசனங்கள் தானகவே திருந்துவார்கள்.

பொது மக்களாவது திருந்துவதாவது இலங்கை மக்களை இன்னுமா புரிந்து கொள்ளவில்லை 

அரசாங்கத்தின் நகர சபை ஊழியர்கள் இல்லையென்றால் பல நகரங்கள்  நரகங்களாக காட்சியெடுக்கும் அண்ணே சட்டத்தை அமுல்படுத்துவது அரசுதான் ஆனால் அதை நடைமுறையில் கொண்டு கடைபிடிக்க வேண்டியது மக்களின் கையில் தான் உள்ளது 

தலைகவசம் அணிந்து செல்லுங்கள் என்றால் அணியாமல் சென்று விபத்துகளில் சிக்குவது மக்கள் தான் ?

12 minutes ago, குமாரசாமி said:

எதெற்கெடுத்தாலும் பொதுமக்கள் மீது பழியை போட்டுவிட்டு அரச ஊழியர்களும்/அரசியல்வாதிகளும் தப்பித்து கொள்கின்றார்கள்.ஒழுங்கான சட்டங்களை அமுல்படுத்தினால் பொதுசனங்கள் தானகவே திருந்துவார்கள்.

பொது மக்களாவது திருந்துவதாவது இலங்கை மக்களை இன்னுமா புரிந்து கொள்ளவில்லை 

அரசாங்கத்தின் நகர சபை ஊழியர்கள் இல்லையென்றால் பல நகரங்கள்  நரகங்களாக காட்சியெடுக்கும் அண்ணே சட்டத்தை அமுல்படுத்துவது அரசுதான் ஆனால் அதை நடைமுறையில் கொண்டு கடைபிடிக்க வேண்டியது மக்களின் கையில் தான் உள்ளது 

தலைகவசம் அணிந்து செல்லுங்கள் என்றால் அணியாமல் சென்று விபத்துகளில் சிக்குவது மக்கள் தான் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, முனிவர் ஜீ said:

பொது மக்களாவது திருந்துவதாவது இலங்கை மக்களை இன்னுமா புரிந்து கொள்ளவில்லை 

அரசாங்கத்தின் நகர சபை ஊழியர்கள் இல்லையென்றால் பல நகரங்கள்  நரகங்களாக காட்சியெடுக்கும் அண்ணே சட்டத்தை அமுல்படுத்துவது அரசுதான் ஆனால் அதை நடைமுறையில் கொண்டு கடைபிடிக்க வேண்டியது மக்களின் கையில் தான் உள்ளது 

தலைகவசம் அணிந்து செல்லுங்கள் என்றால் அணியாமல் சென்று விபத்துகளில் சிக்குவது மக்கள் தான் ?

 

சட்டங்களை கடுமையாக்கினால் அடுத்த சந்ததி அல்லது அதற்கு அடுத்த சந்ததியாவது சட்டத்தை மதித்து வாழும்.:)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எதெற்கெடுத்தாலும் பொதுமக்கள் மீது பழியை போட்டுவிட்டு அரச ஊழியர்களும்/அரசியல்வாதிகளும் தப்பித்து கொள்கின்றார்கள்.ஒழுங்கான சட்டங்களை அமுல்படுத்தினால் பொதுசனங்கள் தானகவே திருந்துவார்கள்.

பிரபாகரன் ஆட்சிக்குப் பிறகும் திருந்தவில்லை, இனியா திருந்தப்போகிறார்கள்! :shocked: எங்களுடைய தலைமுறையில் காணமுடியாது. :(

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சட்டங்களை கடுமையாக்கினால் அடுத்த சந்ததி அல்லது அதற்கு அடுத்த சந்ததியாவது சட்டத்தை மதித்து வாழும்.:)

சட்டத்தை கடுமையாக்கினால் அதன் ஓட்டைகளை கண்டு பிடித்து தப்பித்துக் கொண்டு ஓடுவது நம்ம தமிழர்களை மிஞ்ச இங்கே ஆட்கள் கிடையாது சாமியாரே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.