Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டை காக்க திரண்டு வாரீர்,விந்தணு தாரீர்: - பர பரப்பாகும் சீன விளம்பரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சீனாவில் தற்போது நாட்டை காக்க திரண்டு வாரீர்; விந்தணு தாரீர் என்ற விளம்பரங்கள் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. அந்நாட்டில் விந்தணு தானம் செய்பவர்களுக்கு ஆப்பிள் ஐ-போன்கள், பணம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகிறதாம். சீனாவில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அமலில் இருந்த ஒரு குழந்தை சட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து வயதானவர்கள் கூட இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், குழந்தைகள் பிறப்பு பற்றாக்குறையை நீக்க சீன இளைஞர்கள் திரண்டு வந்து விந்தணு தானம் செய்ய வேண்டும் என அந்நாட்டில் பல தரப்பட்ட விளம்பரங்கள் குவிந்து வருகின்றன.

சீனாவில் தற்போது நாட்டை காக்க திரண்டு வாரீர்; விந்தணு தாரீர் என்ற விளம்பரங்கள் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. அந்நாட்டில் விந்தணு தானம் செய்பவர்களுக்கு ஆப்பிள் ஐ-போன்கள், பணம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகிறதாம். சீனாவில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அமலில் இருந்த ஒரு குழந்தை சட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து வயதானவர்கள் கூட இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், குழந்தைகள் பிறப்பு பற்றாக்குறையை நீக்க சீன இளைஞர்கள் திரண்டு வந்து விந்தணு தானம் செய்ய வேண்டும் என அந்நாட்டில் பல தரப்பட்ட விளம்பரங்கள் குவிந்து வருகின்றன. "நாட்டின் நலனுக்காக விந்தணு தானம் செய்வீர்" என்று அரசாங்கமே விளம்பரம் செய்து வருகிறது.

   

அந்நாட்டு விந்தணு வங்கிகளில் குறைந்த அளவே அந்நாட்டு இளைஞர்கள் தானம் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும், தானம் செய்பவர்களில் பாதி பேர் சமூக ஆர்வலர்கள் என்றும் கருத்துக் கணிப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.அந்நாட்டின் பல்வேறு கலாச்சார மற்றும் அரசியல் கொள்கைகளால் இந்த தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், வேறு ஒருவரின் விந்தணு மூலம் எப்படி குழந்தை பெற்றுக் கொள்வது என சீனர்கள் எண்ணுவதும் காரணமாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தான் விந்தணு தானத்திற்கான விளம்பரங்கள் குவிந்து வருகின்றன.சீன மக்களின் மனநிலை மாற்றும் விதமாக "ரத்த தானமும் விந்தணு தானமும் ஒன்று தான்"., நாட்டை காக்க திரண்டு வாரீர்; விந்தணு தாரீர் என்ற விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID=159571&category=WorldNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனத்தொகை கூடின நாடே பிள்ளைச்செல்வத்துக்கு தவம் கிடக்குது.......
எங்கடையள் வேலை வீடு பந்தா எண்டு தவண்டடிக்குதுகள்.
 

baby.gif

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

சனத்தொகை கூடின நாடே பிள்ளைச்செல்வத்துக்கு தவம் கிடக்குது.......
எங்கடையள் வேலை வீடு பந்தா எண்டு தவண்டடிக்குதுகள்.
 

baby.gif

எறிறவன் கையில் பொல்லு கிடைக்குதில்லையே ??

ஆனால் இதற்கு தமிழ் சிறியர் விளக்கம் கொடுக்க வேண்டும் என்பது அடியேன் கருத்து ??

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சனத்தொகை பெருக்கத்துக்காக அல்ல. சீனா மனித முளைய ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த முளையங்களை உருவாக்கி ஆராய்ச்சியின் பின் அழித்து விடுகிறார்கள். அதற்கு தான் இத்தனை கூவல். 

எங்கடையள்.. உடன அம்மாள்.. ஆச்சி.. பிள்ளைச் செல்வம்... ஆட்டுக்குட்டின்னு கிட்டு.. ஐயோ ஐயோ. பிள்ளை எல்லாம் இப்ப செல்வமாப்பா.. செலவுன்னு அழுவுறாங்க. முன்னர் எல்லாம் கேட்காமல் உதவி செய்த முன்வந்தவை எல்லாம் கல்யாணம் கட்டி பிள்ளை ஒன்றைப் பெத்ததும்.. நாங்க குடும்பஸ்தர் செலவு கூட.. கேட்டும் உதவி செய்ய மறுப்பவர்களாக மாறி வருவதை சமூகத்தில் வெளிப்படையாகக் காண்கிறம். இதுதான் பிள்ளைச் செல்வம் காணும் எம்மவரின் தார்ப்பரியம் போலும்.  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இதெல்லாம் சனத்தொகை பெருக்கத்துக்காக அல்ல. சீனா மனித முளைய ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த முளையங்களை உருவாக்கி ஆராய்ச்சியின் பின் அழித்து விடுகிறார்கள். அதற்கு தான் இத்தனை கூவல். 

எங்கடையள்.. உடன அம்மாள்.. ஆச்சி.. பிள்ளைச் செல்வம்... ஆட்டுக்குட்டின்னு கிட்டு.. ஐயோ ஐயோ. பிள்ளை எல்லாம் இப்ப செல்வமாப்பா.. செலவுன்னு அழுவுறாங்க. முன்னர் எல்லாம் கேட்காமல் உதவி செய்த முன்வந்தவை எல்லாம் கல்யாணம் கட்டி பிள்ளை ஒன்றைப் பெத்ததும்.. நாங்க குடும்பஸ்தர் செலவு கூட.. கேட்டும் உதவி செய்ய மறுப்பவர்களாக மாறி வருவதை சமூகத்தில் வெளிப்படையாகக் காண்கிறம். இதுதான் பிள்ளைச் செல்வம் காணும் எம்மவரின் தார்ப்பரியம் போலும்.  tw_blush:

ஹாஹா உன்மை  உன்மை ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nedukkalapoovan said:

இதெல்லாம் சனத்தொகை பெருக்கத்துக்காக அல்ல. சீனா மனித முளைய ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த முளையங்களை உருவாக்கி ஆராய்ச்சியின் பின் அழித்து விடுகிறார்கள். அதற்கு தான் இத்தனை கூவல். 

எங்கடையள்.. உடன அம்மாள்.. ஆச்சி.. பிள்ளைச் செல்வம்... ஆட்டுக்குட்டின்னு கிட்டு.. ஐயோ ஐயோ. பிள்ளை எல்லாம் இப்ப செல்வமாப்பா.. செலவுன்னு அழுவுறாங்க. முன்னர் எல்லாம் கேட்காமல் உதவி செய்த முன்வந்தவை எல்லாம் கல்யாணம் கட்டி பிள்ளை ஒன்றைப் பெத்ததும்.. நாங்க குடும்பஸ்தர் செலவு கூட.. கேட்டும் உதவி செய்ய மறுப்பவர்களாக மாறி வருவதை சமூகத்தில் வெளிப்படையாகக் காண்கிறம். இதுதான் பிள்ளைச் செல்வம் காணும் எம்மவரின் தார்ப்பரியம் போலும்.  tw_blush:

உதுக்கு காரணங்கள் எக்கச்சக்கமாய் இருந்தாலும்.....ஒரு காரணத்தை சிம்பிளாய் சொல்லுறன்.
எங்கடை அப்பு ஆச்சிமார் ஒரு நூல் சாறியையோ வேட்டியையோ வாங்கினால் அது கிழியும் மட்டும் கட்டுவினம்.ஆனால் இப்பத்தையான் நோடாலங்கள் ஒரு சாறியை ஒருலட்சம் ரூபாவுக்கு வாங்கி ஒருக்கால் மட்டும் கட்டி பந்தாகாட்டிப்போட்டு மடிச்சு வைச்சால்.......காசுக்கு எங்கை போறது? மரத்திலையே புடுங்கிறது?????:cool:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

உதுக்கு காரணங்கள் எக்கச்சக்கமாய் இருந்தாலும்.....ஒரு காரணத்தை சிம்பிளாய் சொல்லுறன்.
எங்கடை அப்பு ஆச்சிமார் ஒரு நூல் சாறியையோ வேட்டியையோ வாங்கினால் அது கிழியும் மட்டும் கட்டுவினம்.ஆனால் இப்பத்தையான் நோடாலங்கள் ஒரு சாறியை ஒருலட்சம் ரூபாவுக்கு வாங்கி ஒருக்கால் மட்டும் கட்டி பந்தாகாட்டிப்போட்டு மடிச்சு வைச்சால்.......காசுக்கு எங்கை போறது? மரத்திலையே புடுங்கிறது?????:cool:

என்னது ஒரு  லட்சமா :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழச்சியாய் இருந்து கொண்டு இதைச் சொல்ல வெட்கமாய்த் தான் இருக்கு.எனக்கு பிடிக்காத உடுப்பு என்டால் அது சாறி தான்.அதுக்கும் என்னை பிடிக்கிறதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

ஒரு தமிழச்சியாய் இருந்து கொண்டு இதைச் சொல்ல வெட்கமாய்த் தான் இருக்கு.எனக்கு பிடிக்காத உடுப்பு என்டால் அது சாறி தான்.அதுக்கும் என்னை பிடிக்கிறதில்லை

என்னடா இது புதூசா இருக்கே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.