Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

12 வயது மாணவி துஷ்பிரயோகம்: அதிபர், ஆசிரியர்களுக்கு விளக்கமறியல்

Featured Replies

12 வயது மாணவி துஷ்பிரயோகம்: அதிபர், ஆசிரியர்களுக்கு விளக்கமறியல்
 
 

article_1466396642-aaaaaaaaaaaaaa.jpg-செல்வநாயகம் கபிலன், கி.பகவான்

வரணி பகுதியிலுள்ள பாடசாலையில் கல்வி கற்கும் 12 வயது மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய அப்பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட 5 பேரை எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் ஞாயிற்றுக்கிழமை (19) உத்தரவிட்டார்.

அந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர், இந்தச் சம்பவத்தை மூடிமறைப்பதற்கு முயற்சித்த அந்தப் பாடசாலையின் அதிபர் மற்றும் 3 ஆசிரியைகள் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி பாடசாலையில் கற்பிக்கும் 45 வயதுடைய ஆசிரியர் ஒருவர், அங்கு கல்வி கற்கும் 12 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் இவ்விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையடுத்து, பெற்றோர் பாடசாலைக்குச் சென்று அதிபரிடம் வினாவியபோது, இந்த விடயத்தை இத்துடன் விடுமாறும், அதுவே நல்லது எனவும் வெளியில் தெரியப்படுத்தவேண்டாம் எனவும் அதிபர் மற்றும் அங்கிருந்த 3 ஆசிரியைகள் பெற்றோர்களை அச்சுறுத்தும் பாணியில் கூறியுள்ளனர்.

இந்த விடயத்தை அறிந்த பிரதேசவாசியொருவர், சாவகச்சேரி சிறுவர் நன்னடத்தை அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்து, நடவடிக்கை எடுத்த சிறுவர் நன்னடத்தை அதிகாரி, சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன், இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், அதிபரும் சம்பந்தப்பட்ட ஆசிரியரும் இச்சம்பவத்துக்கு உடந்தையாகவிருந்த 3 ஆசிரியைகளையும் பொலிஸார் கைத செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

- See more at: http://www.tamilmirror.lk/175095#sthash.5cj32QT9.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

45 வயது ஆசிரியர்...12  வயது மாணவி....?

என்னப்பா நடக்குது...ஊரில...?

அந்த ஆசிரியருக்கு..அதிபரும்..மற்றும் மூன்று ஆசிரியைகளும் உடந்தை..!

பேசாமல் பள்ளிக்கூடத்தை மூடி விட்டு..மாணவர்களை அருகிலுள்ள ஏதாவது பள்ளிக்கூடத்துக்கு மாத்தி விடுகிறது நல்லது!

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, புங்கையூரன் said:

45 வயது ஆசிரியர்...12  வயது மாணவி....?

என்னப்பா நடக்குது...ஊரில...?

அந்த ஆசிரியருக்கு..அதிபரும்..மற்றும் மூன்று ஆசிரியைகளும் உடந்தை..!

பேசாமல் பள்ளிக்கூடத்தை மூடி விட்டு..மாணவர்களை அருகிலுள்ள ஏதாவது பள்ளிக்கூடத்துக்கு மாத்தி விடுகிறது நல்லது!

இது பாடசாலையில் மட்டும் அல்ல இந்த பிரச்சனை இலங்கையில் இப்ப அதிகமாக நடக்கிறது இந்த பிரச்சனை தான் 

இதற்காக தீர்வு என்பது தண்டனை தான் அதிகமாக கொடுக்க வேண்டும் அப்போது தான் மற்றவர் பயப்படுவார் 

19 hours ago, புங்கையூரன் said:

45 வயது ஆசிரியர்...12  வயது மாணவி....?

என்னப்பா நடக்குது...ஊரில...?

அந்த ஆசிரியருக்கு..அதிபரும்..மற்றும் மூன்று ஆசிரியைகளும் உடந்தை..!

வீட்டில் மனைவி இருக்க ஏன் இவர்கள் இப்பிடி நாய் போல் அலைந்து, பிள்ளைகளின் வாழ்க்கையையும் சீரழிக்கின்றனர்?

விசாரணை செய்து இவர்களை இடம் மாற்றாமல் உடனடியாக பதவிகளில் இருந்து நீக்குவதுடன், கடுமையான சிறைத் தண்டனையும் வழங்க வேண்டும். சிறுமிக்கு நிவாரணமாக குறைந்தது 10 இலிருந்து 20 இலட்சம் வரை கொடுக்கப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.