Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைலாகு மட்டும் கொடுத்து வழியனுப்ப சொன்னவர்கள். பின்னர் ஆறு நிமிடம் ஒதுக்கினார்கள்.

Featured Replies

கைலாகு மட்டும் கொடுத்து வழியனுப்ப சொன்னவர்கள். பின்னர் ஆறு நிமிடம் ஒதுக்கினார்கள்.

 

கைலாகு மட்டும் கொடுத்து வழியனுப்ப சொன்னவர்கள். பின்னர் ஆறு நிமிடம் ஒதுக்கினார்கள்.
ஐ.நா செயலாருக்கு கைலாகு மட்டும் கொடுத்து வழியனுப்புங்கள் என முன்னதாக கோரியவர்கள் பின்னர் எங்கள் மனவருத்தத்தை புரிந்து கொண்டு ஆறு நிமிடங்கள் மாத்திரம் ஒதுக்கி தந்தார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
 
யாழ்ப்பணத்திற்கு வெள்ளிக்கிழமை காலை விஜயம் மேற்கொண்ட ஐ.நா செயலாளர் யாழ்.பொது நூலகத்தில் வடமாகாண முதலமைச்சர் , மற்றும் மாகாண அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
 
குறித்த கலந்துரையாடல் தொடர்பில் வடமாகாண முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் வினாவிய போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , 
 

ஐநா செயலாளர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர தாமதமானதால் எல்லா  நிகழ்வுகளும் தாமதாகி விட்டது. ஒரு மணித்தியாலம் காத்திருந்தோம். அதன் பின்னர் அவரது அலுவலகர் வந்து நீங்கள் வெறுமையே கைலாகு  கொடுத்துவிட்டு அவரை வழியனுப்பி விடுங்கள் என கேட்டார். அதற்கு நாம் மனவருத்தத்தை தெரிவித்தோம். பின்னர் சரி  ஆறு நிமிடங்கள் ஒதுக்கி தரலாம் என ஆறு நிமிடங்கள் மாத்திரமே ஒதுக்கி தரப்பட்டது. 

 
 
ஆவணங்களை கையளித்து விட்டேன். 
 
ஆறுநிமிட பேச்சு தான் எமக்கு இடையில் நடைபெற்றது.  இது  இப்படி  தான்  நடக்கும் என  முன்னரே  நான்  ஊகித்துக் கொண்டதால் எங்கள் பிரச்சனைகள் தொடர்பில் உரிய ஆவணங்களை தயாரித்து அவற்றை  எல்லாம் அவரிடம் கையளித்து உள்ளேன். 
 
காணாமல் போனவர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் தொடர்பிலான விபரங்களை ஒரு புத்தக வடிவில் கையளித்து உள்ளேன். விடுவிக்க படவேண்டிய காணிகள் தொடர்பிலான அறிக்கைகளும் கையளித்து உள்ளேன். 
 
இவ்வாறு ஒவ்வொரு விடயம் தொடர்பிலான பல்வேறு தகவல்களை கொடுத்து இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை ஐக்கிய நாடுகளுக்கு இருக்கின்றது. என குறிப்பிட்டு உள்ளேன்.
 
அத்துடன் 2009ம் ஆண்டு இங்கு வந்திருந்த போது மனித உரிமை சம்பந்தமாக சகல நடவடிக்கைகளையும் எடுப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் பயங்கரவாத தடை சட்டம் இதுவரை நீக்க படவில்லை.  அடுத்து போர் குற்றம் தொடர்பிலான பொறிமுறை தொடர்பில் இன்னமும் எந்த முன்னேற்றமும் இல்லை என குறிப்பிட்டுக் காட்டினேன். அடுத்து நல்லிணக்கத்திற்காக பாரிய பணம் செலவிட போவதாகவும் , அதற்காக உலக நாடுகள் பணத்தை வாரி வாரி அளிகவுள்ளதாகவும் , குறிப்பிடப்பட்டு உள்ளது 
 
அவ்வாறு இருக்க பணத்தை நல்லிணக்கத்திற்கு பயன்படுத்துகிறோம் என கூறிக்கொண்டு போர் குற்றம் தொடர்பில் சரியான பொறிமுறையை உருவாக்காமல் எப்படி நாங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த போகின்றோம். 
 
வடமாகாணத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் இருக்கின்றார்கள். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை எந்த நன்மைகளும் செய்யவில்லை , காணாமல் போனோர் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்க வில்லை. சிறையில் எத்தனையோ அரசியல் கைதிகள் வாடிக்கொண்டு இருக்கின்றார்கள். இவ்வாறன சூழ்நிலையில் எவ்வாறு நல்லிணக்கத்தை உருவாக்க போகின்றீர்கள். ?
 
முதலில் போர் குற்ற விசாரனைககளை உரிய முறையில் நடாத்தினால் , மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஏற்படும் என குறிப்பிட்டேன்.
 
அத்துடன் , மிதிவெடி அகற்றல் போன்ற சில தேவையான விடயங்கள் தொடர்பிலும் எடுத்துக் கூறினேன். 
 
பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக் கொள்ளும் பொறிமுறை ஊடாகவே போர்குற்ற விசாரணை முன்னெடுக்க படும். 
 
 
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு சென்ற முறை வந்த போதும் அரசாங்கத்திடம் கோரி இருந்தேன். இதுவரை காலமும் அதனை நீக்காது வைத்து இருப்பது அரசாங்கத்தின் பிழை எனவும் , 
 
அதனை நீக்கும் போது குறித்த சட்டத்தின் கீழ் யார் யார் கைது செய்யப்பட்டார்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள் அவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரி இருந்ததாகவும் கூறினார். 
 
போர் குற்ற விசாரணை மக்களால் ஏற்றுக் கொள்ள பட கூடியவாறு இருக்க வேண்டும். முக்கியமாக பாதிக்கப்பட்ட மக்கள் அதனை ஏற்றுகொள்ள கூடிய பொறிமுறையாக இருந்தால்  தான்  அந்த பொறிமுறை மூலம் விசாரணை செய்யப்படும். அதற்கே ஐக்கிய நாடுகள் சபை உதவிகளை வழங்கும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர்  குறிப்பிட்டார். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135532/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

"கைலாகு"  என்றால்... என்ன?
பான் கீ மூனுக்கே..... லஞ்சமா?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா ..உங்கள் இன உணர்வை மதிக்கிறேன்.......வாழ்க

7 hours ago, தமிழ் சிறி said:

"கைலாகு"  என்றால்... என்ன?
பான் கீ மூனுக்கே..... லஞ்சமா?

 

 

"கையூட்டு " என்றால் லஞ்சம்.  "கைலாகு"  என்றால் கை குலுக்குதல்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா விக்னேசுவரன் அவர்களே! பிரபாகரன் என்ற தமிழ்த் தலைவன் ஆட்சியின்கீழ் வாழ்ந்தபோது இருந்த பெருமை திரும்பக் கிடைத்தது போன்று சந்தோசமாக உள்ளது. இத்தருணத்தில், பிரபாகரன்போல் எங்களை நம்பி வாழாதீர்கள். நம்ப வாழுங்கள். இல்லையெனில் நந்தவனத்து ஆண்டிபோல் நாங்கள் கூத்தாடி உங்களையும் உடைத்துவிடுவோம். :(

  • தொடங்கியவர்

கூட்டறிக்கையில் உறுதியளிக்கப்பட்டவை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை 

Published by Pradhap on 2016-09-03 09:36:21

 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவுடன் ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இணைந்து வெளியிட்ட கூட்­ட­றிக்­கையில் உறு­தி­வ­ழங்­கப்­பட்ட விட­யங்கள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என வட­மா­காண முத­லை­மச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் ஐ.நா செய­லாளர் நாய­கத்­திடம் நேரில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

22223.gif

அத்­தோடு நல்­லி­ணக்கம் தொடர்­பான பேசு­வ­தற்கு முன்­ன­தாக போர்க்­குற்ற விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் அவ­ரி­டத்தில் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் செய­லாளர் பான்கி மூனுக்கும் வடக்கு முதல்வர் சி.வி.விக்­னேஸ்­வ­னுக்கும் இடை­யி­லான சந்­திப்பு நேற்று வெள்ளிக்­கி­ழமை யாழ். பொது­நூ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இச்­சந்­திப்­பின்­போது வடக்கு முதல்வர் சி.வி.விக்­னேஸ்­வரன் தலை­மையில் வட­மா­காண விவ­சாய அமைச்சர் பொ.ஐங்­க­ர­நேசன், மீன்­பிடி அமைச்சர் பா.டெனீஸ்­வரன், கல்வி அமைச்சர் த.குரு­கு­ல­ராஜா ஆகி­யோரும் கலந்­து­கொண்­டி­ருந்­தார்கள்.

இச்­சந்­திப்பு குறித்து வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்வரன் கருத்து வெளியி­டு­கையில்,

ஐக்­கிய நாடுகள் பொதுச்­செ­ய­லாளர் நாய­கத்தை சுமார் ஒரு­மணி நேர காத்­தி­ருப்­புக்கு பின்­னரே சந்­திக்க நேர்ந்­தது. நாம் அவரை பார்ப்­ப­தற்­காக காத்­தி­ருந்த­போது அவ­ரு­டைய அலு­வ­லகர் ஒருவர் அவ­ருக்கு கைலாகு கொடுத்து விட்டு தாம­தப்­ப­டுத்­தாது விட்­டு­வி­டுங்கள் என என்­னி­டத்தில் கோரினார். அப்­போது மன­வ­ருத்­தத்தை தெரி­வித்தேன். அதன் பின்னர் ஆறு நிமி­டங்கள் ஐ.நா செய­லாளர் நாய­கத்தை சந்­திப்­ப­தற்­காக எமக்கு நேரம் ஒதுக்­கப்­பட்­டது. இறு­தித்­த­ரு­ணத்தில் இவ்­வாறு இடம்­பெ­று­வ­தற்­கான வாய்­புக்கள் ஏற்­ப­டலாம் என்­பதை நான் முன்­னரே அறிந்­தி­ருந்தேன்.

ஆகவே அர­சியல் கைதிகள், மீள்­கு­டி­யேற்றம், காண­ாமல்­போனோர் விடயம் உட்­பட அனைத்து விட­யங்கள் தொடர்­பா­கவும் விரி­வான விட­யங்­களை அவ­ரி­டத்தில் கைய­ளித்­தி­ருந்தேன். குறிப்­பாக காணாமல்போனோர் விட­யத்தில் சுமார் 4200பேரின் முழு­மை­யான விப­ரங்­கள், இரா­ணு­வத்­திடம், கடற்­ப­டை­யி­ன­ரிடம், விமான படை­யி­ன­ரிடம் உள்ள எமது மக்­க­ளுக்­குச்­சொந்­த­மான காணிகள், கட்­டங்கள் தொடர்­பான விட­யங்­களை புத்­தக வடிவில் அவ­ரி­டத்தில் கைய­ளித்­தி­ருந்தேன். இவ்­வாறு அனைத்து விட­யங்கள் தொடர்­பான விப­ரங்­களை அவ­ரி­டத்தில் கைய­ளித்து இவ்­வி­ட­யங்கள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு கடப்­பாடு உள்­ளது என்­பதை அவரின் கவ­னத்­திற்கு கொண்டு சென்­றுள்ளேன்.

யுத்தம் நிறை­வ­டைந்த பின்னர் பான் கீ மூன் இலங்­கைக்கு வருகை தந்­தி­ருந்­த­போது மனித உரி­மைகள் சம்­பந்­த­மாக அனைத்து விட­யங்­க­ளையும் விசாரிப்பதாக அர­சாங்கம் அவ­ரி­டத்தில் குறிப்­பிட்­டி­ருந்­தது. ஆனால் தற்­போது வரையில் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் கூட நீக்­கப்­ப­டாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது என்­பது பாரிய குறை­பா­டாகும் என்­பதை அவ­ரி­ய­டத்தில் நான் குறிப்­பிட்டேன்.

போர்க்­குற்­றங்கள் தொடர்­பான விசா­ரணை செய்­வ­தற்­கான பொறி­முயை இன்­னமும் முன்­னெ­டுத்­துச்­செல்­லப்­ப­ட­வில்லை என்­பதை எடுத்­துக்­கூ­றினேன். நல்­லி­ணக்­கத்­திற்­காக பாரி­ய­ளவில் பணம் செல­வி­ட­ப்­போ­வ­தாகவும் உலக நாடுகள் அதற்­கான உத­வி­களை வழங்­கு­வ­தற்கு தயா­ரா­க­வி­ருப்­ப­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றி­ருக்­கையில், போர்க்­குற்ற விசா­ர­ணையை முறை­யாக முன்­னெ­டுக்­காத நிலையில் எவ்­வாறு நல்­லி­ணக்க பொறி­மு­றையை முறை­யாக முன்­னெ­டுக்­கப்­போ­கின்றோம். குறிப்­பாக ஒரு இலட்­சத்­திற்கும் அதி­க­மான இரா­ணு­வத்­தினர் வட­மா­க­ணத்தில் இருக்­கின்­றார்கள். போரினால் பாதிக்­க­பட்ட மக்­க­ளுக்கு எவ்­வி­த­மான நன்­மை­யான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. காணா­மல்­போனோர் தொடர்பில் பிரச்­சி­னை­ நீ­டிக்­கின்­றது. சிறையில் எத்­த­னையோ பேர் வாடிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவ்­வா­றான நிலையில் எவ்­வாறு நல்­லி­ணக்­கத்தை எற்­ப­டுத்­தப்­ப­டப்­போ­கின்­றீர்கள். ஆகவே முதலில் போர்க்­குற்ற விசா­ர­ணையை முறை­யாக மேற்­கொண்டால் அதன் பின்னர் மக்கள் மனதில் நம்­பிக்­கை­யொன்று ஏற்­படும். அகவே அது தொடர்பில் உடன் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும் என வலி­யு­றுத்­தினேன்.

ஐக்­கிய நாடுகள் சபை, ஆசிய அபி­வி­ருத்தி வங்கி, உலக வங்கி, ஐரோப்பி ஒன்­றியம் ஆகி­ய­வற்­றுடன் இணைந்து வட­மா­காண மக்­களின் தேவைகள் குறித்த கணிப்­பீ­டொன்றை மேற்­கொள்­ள­வேண்­டு­மென கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. ஆகவே அதனை முன்­னெ­டுத்­துச்­சென்று உட­ன­டி­யா­க­மேற்­கொள்­வதன் ஊடா­கவே வடக்கு மாகா­ணத்­திற்­கான திட்­ட­மொன்றை வகுக்க முடியும் அதற்கு முழு­மை­யான உத­வி­களை வழங்­வேண்டும் என்­ப­தையும் அவ­ரி­டத்தில் எடுத்­து­ரைத்தேன்.

அதே­போன்று வட­மா­காண மக்­களின் உட­ன­டித்­தே­வை­களை நிறை­வேற்­று­வது தொடர்­பா­கவும் அவ­ரு­டைய கவ­னத்­திற்கு கொண்­டு­சென்றேன்.

இவ்­வி­ட­யங்­களை கேட்­டுக்­கொண்ட ஐ.நா செய­லாளர் தனது பதிலில், பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­படும் என கடந்­த­முறை தான் வருகை தந்­த­போது கூறப்­பட்­போதும் தற்­போது வரையில் அச்­சட்டம் நீடித்­துக்­கொண்­டி­ருப்­பது தவ­றா­னது. ஆகவே அச்­சட்டம் உடன் நீக்­கப்­ப­ட­வேண்டும். அச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் அச்­சட்டம் நீக்­கப்­பட்ட பின்னர் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டு­மென அர­சாங்­கத்­தி­டத்தில் குறிப்­பிட்­டுள்­ள­தாக தெரி­வித்தார்.

போர்க்­குற்ற விசா­ரணை முன்­னெ­டுக்­கின்­ற­போது அதனை பாதிக்­கப்­பட்ட மக்கள் ஏற்­றுக்­கொள்­கின்ற விதத்தில் பொறி­மு­றைகள் அமை­ய­வேண்டும். அது குறித்து உத­வி­களை வழங்­கு­வ­தற்கு ஐ.நா. சபை தயா­ரா­க­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

சுமா­தா­னத்தை கட்­டி­யெ­ழுப்­பதல் தொடர்­பான விட­யத்தில் கருத்­து­ரைத்த ஐ.நா.செய­லாளர் இம்­மாதம் 21ஆம் திகதி இத்­திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்­காக உலக நாடுகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் இணைத்தலைவராக இருக்கும் வெ ளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இத்திட்டத்திற்காக கிடைக்கும் நிதி தொடர்பாக கருத்துக்களை முன்வைப்பார். அதன்போது தான் எமது மக்களின் தேவைகள் தொடர்பாக கூறி நிதியைப் பெற்றுக்கொடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு எதிர்வரும் நான்கு மாத காலப்பகுதியில் தன்னுடைய பதவிக்காலம் நிறைவடைந்தாலும் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியாக தனது செயற்பாடுகளை பொறுப்புடன் முன்னெடுக்குமென உறுதியளித்தார்.

மேலும் பெண்தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு அவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் கவனமெடுக்கவேண்டுமென அவரிடத்தில் கோரிக்கை விடுத்திருந்தேன் என்றார்.

http://www.virakesari.lk/article/10914

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா இதையெல்லாம் கதைக்க...நம்ம சம் , சும், மாவை மூனுக்கு பீடா கொடுத்தவையோ....

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.