Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''பான் கீ மூனும் ஏமாற்றிவிட்டார்''

Featured Replies

''பான் கீ மூனும் ஏமாற்றிவிட்டார்''
அநாதைகளாகி விட்டோம் என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்
showImageInStory?imageid=295011:tn
 

(ஆர்.ராம், எம்.நியூட்டன்)

எமது கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஒரு ஆறுதல் வார்த்தையாவது கூறி எம்மை சமாதானப்படுத்துவார் என எதிர்பார்த் திருந்த போதும் அவ்வாறு அவர் நடந்து கொள்ளவில்லை. பான் கீ மூனும் எம்மை ஏமாற்றிவிட்டார்.

இதனால் நாம் மிகுந்த ஏமாற்றமும் கவலையும் அடைவதோடு எமது பிரச்சி னைகளுக்கு ஐ.நா. தீர்வளிக்கும் என வைத்திருந்த நம்பிக்கையும் வீண்போ யுள்ளது என பாதிக்கப்பட்ட தமிழ் மக் கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி யுள் ளனர்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இதன்போது வடமாகாண ஆளுநரை அவரது உத்தியோகபூர்வ இல் லத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடமாகாண முதலமைச்சர் தலை மையிலான குழுவினரை தனித்தனியாக யாழ்.பொது நூலகத்திலும் சந்திருந்தார்.

இச் சந்திப்புக்கள் நடைபெற்றுக் கொண் டிருந்த சமயத்தில் யாழ்.மாவட்ட செயலக த்திற்கு முன்னால் வடக்கு,கிழக்கு ஒருங் கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டிலும், யாழ்.பொது நூலகத்திற்கு முன்னால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, வடபகுதியில் கைதுசெய்யப்பட்டு காணாமல் போனோர் பாதுகாவலர் சங்கம், மயிலிட்டி கடற்றொழி லாளர் கிராமிய அமைப்பு, மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், மன்னார் மாவட்ட பொது அமைப்பு க்கள், சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றின் ஏற்பாட்டிலும் பாரிய கவனயீர்ப்புப் போரா ட்டங்கள் இடம்பெற்றன.

இச்சமயத்தின் போது பான் கீ மூன் வாக னத்தில் செல்லும் போது ஆர்ப்பாட்டத்தை அவதானித்தவாறு சென்றாரே தவிர அவர் களுடன் நேரடியாக கலந்துரையாடவில்லை. அவரது பிரதிநிதி ஒருவரே மக்களிடத்தில் வருகை தந்து மகஜர்களையும் கருத்துக்க ளையும் சில நிமிடங்களில் கேட்டுச் சென்றி ருந்தார். மாறாக ஆறுதல் வார்த்தையைக் கூட அந்தப் பிரதிநிதி வெளிப்படுத்தியி ருக்கவில்லை. அதேநேரம் ஐ.நா. செயலா ளரின் வாகனத் தொடரணியும் கவனயீர்ப் புப் போராட்டங்கள் இடம்பெற்ற பகுதி களை தவிர்த்துச் செல்வதற்கே முயற்சித்தி ருந்தது.

இவ்வாறான செயற்பாடுகளால் கவன யீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டி ருந்த காணாமல் போனோரின் உறவுகள், இடம்பெயர்ந்து வாழும் மக்கள், அரசியல் கைதிகளின் உறவுகள், பாதிக்கப்பட்டுள்ள பெண்கள், சிறுவர்கள் அதிருப்தி அடைந் ததோடு தமது ஆதங்கத்தையும் வெளி யிட்டிருந்தனர்.

குறிப்பாக யுத்தம் நிறைவடைந்த பின்னர் அப்போதைய அரசாங்கமும் எம்மை ஏமாற்றியது. தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கமும் எதுவும் செய்யவில்லை. எமக்காக ஐ.நா. குரல்கொடுக்கும், ஆதரவாக இருக்கும் என நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால், எமது வலிகளையும் கஷ்டங்க ளையும் ஒரு நொடியாவது பான் கீ மூன் கேட்டுச் சென்றிருக்கலாம். அதுவே எமக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கும். ஆனால், அவர் எம்மை தவிர்த்துச் செல்வ தற்கே முயற்சித்திருக்கின்றார். எமக்கு அவ ருடைய செயற்பாடு கவலையளிக்கின்றது.

இறுதி யுத்தத்தில் ஐ.நா. தவறிழைத்து விட்டது என ஏற்றுக்கொண்டிருக்கும் அவர் எம்மையும் கண்டுகொள்ளாது சென்றிருப்பதானது ஆழ்ந்த கவலையளிக் கின்றது. பான் கீ மூனும் எம்மை ஏமாற்றி விட்டார். ஐக்கியநாடுகள் சபையை நாம் எவ்வாறு தொடர்ந்தும் நம்பிக் கொண்டிருப் பது. எமது உறவுகளை நிலங்களை பெற் றுக்கொள்வதற்கு நாம் இயலும் வரை போராடுவோம்.

ஒருவேளை எம்மை நசுக்குவதற்கு முனைந்தார்களாயின் எமது கோரிக்கை களை முன்னிலைப்படுத்தி உண்ணா விரதமிருந்தோ அல்லது தீக்குளித்தோ உயிரை துச்சமென மதித்து மாய்த்துக் கொள்வோம் என கண்ணீருடன் கதறிய ழுதனர்.

 

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=19&editionDate=04/09/2016

  • கருத்துக்கள உறவுகள்

பாங்கி மீன் : அண்ணே தேவை இல்லாத ஆணி எப்படி தெரிந்து கொள்வது..?
வடிவேல் :நீ புடுங்கறது பூராமே தேவையில்லாத ஆணிதான் .. போய் புடுங்கு.. ஆணிய புடுங்கறங்களாம்..!:cool:

 

முதலில் தமிழ் மக்கள் தாம் தேர்வு செய்யும் அரசியல்வாதிகளை எதிர்க்க பழக்க வேண்டும், மக்களுக்கு எதுவும் செய்யாது விட்டல் தமது அரசியல் முடிந்து விடும் என்ற அச்சம் அவர்களுக்கு வர வேண்டும் 

ஆனால் தமிழ் அரசு கட்சி என்று கூறி  கொண்டு புலிகளையும் போராட்டத்தையும் துணைக்கு வைத்து கொண்டு எதுவும் செய்யலாம் என்ற நிலை இருக்கும் வரை சம்பந்தன்,சுமந்திரன்,மாவை போன்ற கேடு கேட்ட கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

ஒரு வேலை கஜேந்திரகுமாருக்கு வாக்களித்திருந்தால்  கூத்தமைப்புக்கு பயம் வந்திருக்கும் அதே போல் கஜன் தரப்பும் தாம் ஏதாவது செய்யாமல் விட்டால் தாம்  ஆடுர்த்த முறை தோர்ப்போம் என்ற பயம் இருந்திருக்கும் .

அப்படியெல்லாம் செயாமல் இப்படியான ஒரு திருட்டு கும்பலிடம் அதிகாரத்தை கொடுத்தது விட்டு இப்பொழுது கவலைப்பட்டு என்ன பயன் ??

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை இணைத்து போராடக்கூடிய தலைமை இல்லை. தமிழர்கள் வாக்களித்து வந்த தலைமை ஆங்கிலத்தில் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள் என்பது தான் வெட்ககேடானது. இப்படி தலைமை உலகில் எங்காவது உண்டா??

1 hour ago, nunavilan said:

மக்களை இணைத்து போராடக்கூடிய தலைமை இல்லை. தமிழர்கள் வாக்களித்து வந்த தலைமை ஆங்கிலத்தில் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள் என்பது தான் வெட்ககேடானது. இப்படி தலைமை உலகில் எங்காவது உண்டா??

அக்கறையில்லை, அரசியல்வாதிகள் , புலம்பெயர்ந்த மக்கள், தாயகத்தில் வாழும் மக்கள் என எவருக்கும் அக்கறையில்லை.

மக்கள் அரசியல்வாதிகளை விட்டு தாமாக போராட வேண்டும், இதற்கு வடக்கு மாகாணத்தில் இருக்கும் அனைத்து மக்களையும் இணைக்க வேண்டும்.

அப்படி செய்தால் தான் மக்களுக்கு விடிவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Dash said:

முதலில் தமிழ் மக்கள் தாம் தேர்வு செய்யும் அரசியல்வாதிகளை எதிர்க்க பழக்க வேண்டும், மக்களுக்கு எதுவும் செய்யாது விட்டல் தமது அரசியல் முடிந்து விடும் என்ற அச்சம் அவர்களுக்கு வர வேண்டும் 

ஆனால் தமிழ் அரசு கட்சி என்று கூறி  கொண்டு புலிகளையும் போராட்டத்தையும் துணைக்கு வைத்து கொண்டு எதுவும் செய்யலாம் என்ற நிலை இருக்கும் வரை சம்பந்தன்,சுமந்திரன்,மாவை போன்ற கேடு கேட்ட கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

ஒரு வேலை கஜேந்திரகுமாருக்கு வாக்களித்திருந்தால்  கூத்தமைப்புக்கு பயம் வந்திருக்கும் அதே போல் கஜன் தரப்பும் தாம் ஏதாவது செய்யாமல் விட்டால் தாம்  ஆடுர்த்த முறை தோர்ப்போம் என்ற பயம் இருந்திருக்கும் .

அப்படியெல்லாம் செயாமல் இப்படியான ஒரு திருட்டு கும்பலிடம் அதிகாரத்தை கொடுத்தது விட்டு இப்பொழுது கவலைப்பட்டு என்ன பயன் ??

கூட்டமைப்புக்கு ஒரு பலமான எதிர்க்கட்சி வேணுமெண்டு சொல்லித்தான் போன லெக்சனிலை கனபேர் வேறைமாதிரி யோசிச்சு சயிக்கிளும் வேணுமெண்டு சொன்னவை. அதுக்கு வந்த நக்கல் நளினங்கள் சொல்லி வேலையில்லை....
இப்ப இல்லை அப்பதொடக்கம் உந்த சம்பந்தன் கோஷ்டியளை மட்டும் நம்பி நம்பி வந்த அவலங்களும் கொஞ்ச நஞ்சமில்லை...சனங்களும் திருந்தின பாடில்லை.
ஒருக்கால் அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்திலை எண்டுவினம்....
பிறகு   நாடு பிரிய அனுமதியோம் எண்டுவினம்...
இடையிலை கிடந்து சாகிறது பொதுசனம்

நேரத்துக்கு நேரம் கோட்டு சூட்டு பட்டுவேட்டி சால்வையெண்டு உடுப்பு மாத்திக்கொண்டு திரிவினம்...
தமிழ்சனங்கள் வீதிக்கு வீதியாய்....ஊருக்கு ஊராய்.....நாட்டுக்கு நாடாய் அலைக்கழிஞ்சுகொண்டு திரிய வேண்டியதுதான்......tw_angry:tw_angry:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.