Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு...! கர்நாடகாவுக்கு ஒற்றுமையை கற்பிக்கும் தமிழகம்

Featured Replies

பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு...! கர்நாடகாவுக்கு ஒற்றுமையை கற்பிக்கும் தமிழகம்

temple.jpg

 

ராமேஸ்வரம் : காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் பதற்றம் நிலவி வரும் நிலையில், ராமேஸ்வரத்தில் தரிசனத்துக்கு வந்த கர்நாடகா பக்தர்களை பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்று, தரிசனத்து அழைத்து சென்று பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி நீர் பங்கீடு பிரச்சினையில் கர்நாடகாவில் பெரும் கலவரம் வெடித்த நிலையில், தமிழகத்திலும் சில இடங்களில் கர்நாடக வாகனங்கள் தாக்கப்பட்டன. அதன்படி ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட 7 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் ராமேஸ்வரத்தில் பேருந்து நிலையங்கள், பார்க்கிங் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக ராமேஸ்வரத்தில் பதற்றம் நிலவியது. இதை தடுக்கும் வகையிலும், காவிரி பிரச்னையில் இரு  மாநிலங்களிலும் நிலவும் வன்முறை மற்றும் அசாதாரண சூழலை மாற்றி அமைதி ஏற்படுத்தும் வகையிலும் ராமேஸ்வரம் வந்த கர்நாடக பக்தர்களுக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்து மக்கள் கட்சியினர் கர்நாடகா பக்தர்களை பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்று, கோவிலுக்கு அழைத்துச்சென்று   சுவாமி தரிசனம் செய்துவைத்து பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் பூர்ண கும்ப மரியாதையுடன் கர்நாடாக பக்தர்களை வரவேற்று பாதுகாப்புடன் அனுப்பி வைப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தமிழக பதிவு எண் வாகனங்களை பார்த்தாலே அடித்து உடைக்கப்படும் நிலையில், ஒற்றுமையை கற்பிக்கும் வகையில், கர்நாடக பக்தர்களுக்கு வரவேற்பும், பாதுகாப்பும் அளித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/68314-this-is-how-tamil-people-treat-karnataka-poeple-in-rameswaram.art

10 minutes ago, நவீனன் said:

ராமேஸ்வரத்தில் தரிசனத்துக்கு வந்த கர்நாடகா பக்தர்களை பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்று, தரிசனத்து அழைத்து சென்று பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதற்கெடுத்தாலும் தமிழன் மீது மற்றவர்கள் துணிந்து தாக்குவதற்கு, தமிழன் அழிந்து போவதற்கு இது போன்ற செயல்கள் தான் காரணமா?

  • கருத்துக்கள உறவுகள்

    இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
    நன் நயம் செய்து விடல்..


அவமான படுத்துறாங்களாம்.. திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் அது சரியா இருக்கலாம்.. இப்பொ ஒரு கன்னதில் அறைந்தால் மறு கன்னத்தில் காட்டினா அதிலும் சப்பென்று அறையு காலம். அவனவனுக்கு புரியமொழியில் சொன்னால்தான் பிரியும். அப்படி புரியவைத்த ஒருவனை தேச துரோகி என்று போட்டு தள்ளிவிட்டீர்கள் மன்னிக்கவும் சோற்றில் விசம் கலந்து சாகடித்துவிட்டீர்கள்.. இப்போ குத்து குடையுதுன்ன என்ன செய்ய முடியும்..

டிஸ்கி :

வீரப்பன் : டேய் தம்பி அங்க என்னடா சத்தம்..?
கன்னடன் : ஒண்ணுமில்லணே!! தமிழகதிற்கு சம்பா பாசனத்திற்காக டேமு திறக்குறம்..!!
வீரப்பன் : அப்படியா நல்லது.. நடக்கட்டும்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

    இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
    நன் நயம் செய்து விடல்..


அவமான படுத்துறாங்களாம்.. திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் அது சரியா இருக்கலாம்.. இப்பொ ஒரு கன்னதில் அறைந்தால் மறு கன்னத்தில் காட்டினா அதிலும் சப்பென்று அறையு காலம். அவனவனுக்கு புரியமொழியில் சொன்னால்தான் பிரியும். அப்படி புரியவைத்த ஒருவனை தேச துரோகி என்று போட்டு தள்ளிவிட்டீர்கள் மன்னிக்கவும் சோற்றில் விசம் கலந்து சாகடித்துவிட்டீர்கள்.. இப்போ குத்து குடையுதுன்ன என்ன செய்ய முடியும்..

டிஸ்கி :

வீரப்பன் : டேய் தம்பி அங்க என்னடா சத்தம்..?
கன்னடன் : ஒண்ணுமில்லணே!! தமிழகதிற்கு சம்பா பாசனத்திற்காக டேமு திறக்குறம்..!!
வீரப்பன் : அப்படியா நல்லது.. நடக்கட்டும்!!

tw_thumbsup:                     tw_thumbsup:                     tw_thumbsup:

முள்ளை முள்ளால் தான் எடுக்கவேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

14344721_1735977123307979_5952208855977890129_n.jpg?oh=516153abfcd84686d0caa4a94bef313a&oe=5842EBA6

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.