Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு ,கிழக்கு இனவாத சக்திகளால் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் தடங்கல் -அமைச்சர் ஹக்கீம் கவலை

Featured Replies

வடக்கு ,கிழக்கு இனவாத சக்திகளால் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் தடங்கல் -அமைச்சர் ஹக்கீம் கவலை
 
 
வடக்கு ,கிழக்கு இனவாத சக்திகளால் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் தடங்கல் -அமைச்சர் ஹக்கீம் கவலை
இனப்பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தரத் தீர்வைக் காண முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆனால், வடக்கிலும் தெற்கிலும் உருவாகியுள்ள இனவாத சக்திகளின் செயற்பாடுகளே எமக்கு சவாலாக உள்ளன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர், பின்னர் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் அங்கு தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,
 
கடந்த கால அனுபவங்களுடன் பார்க்கையில் தற்போது உருவெடுத்துள்ள இனவாதம் எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப்புலிகளும் ‘பொங்கு தமிழ்’ நடத்தியே, அவர்களுக்கிருந்த நல்ல வாய்ப்பைத் தவற விட்டனர். சில விடயங்களில் அவ்வப்போது விட்ட தவறுகள் எங்களுக்கு படிப்பினையாக உள்ளன.
 
இனப்பிரச்சனைக்கான தீர்வு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை மேலும் சர்ச்சைக்குள்ளாக்கும் வகையில் சில விடயங்கள் இடம்பெற்று வருகின்றன. வடக்கில் ‘எழுக தமிழ்’, கிழக்கில் ‘கிழக்கின் எழுச்சி’, தெற்கில் ‘சிங்-ஹலே’ என்றும் விதவிதமான இனவாத தீவிர சக்திகள் தலைதூக்கத் தொடங்கியிருக்கின்றன.
 
இவர்கள் வெவ்வேறு துருவங்களாக செயற்படுவதாக தென்பட்டாலும் ஒருவருக்கொருவர் உதவுகின்ற பாணியிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இறுதியில் இவர்கள் எல்லோரும் எதிரியின் நண்பர்கள் என்ற அடிப்படையில் செயற்படுவதை நாங்கள் காண்கின்றோம்.
 
குறிப்பாக பக்குவமாகவும், சாணக்கியமாகவும் கையாளப்பட வேண்டிய விடயங்களைப் பகிரங்கமாக போட்டுடைத்துக் குழப்பிவிடுகின்ற நிலவரங்களை ஏற்படுத்தக்கூடாது. மிகவும் கவனமாக இந்த விடயங்களைக் கையாள வேண்டியுள்ளது. பக்குவ மாகவும், சாணக்கியமாகவும், சமயோசிதமாகவும், செயற்பட்டால் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வை காணமுடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
 
ஆனால் வடக்கிலும், தெற்கிலும் உருவாகியுள்ள இனவாத சக்திகளின் செயற்பாடுகளே எமக்கு சவாலாக உள்ளன. அவர்கள் சித்துவிளையாட்டுக்களை ஆரம்பித்துள்ளனர். இதிலே நாங்கள் சிக்கிவிடாமல் நடுநிலைப் பேணி செயற்படவேண்டும்- என்றார்

http://onlineuthayan.com/news/18156

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நவீனன் said:

இதிலே நாங்கள் சிக்கிவிடாமல் நடுநிலைப் பேணி செயற்படவேண்டும்

அதை நீங்கள் பல வருடங்களாக செய்து வருகின்றீர்கள்.இனவாதிகள் எழும்ப முதல் அரசியல் தீர்வை கொடுப்பது மிதவாதிகளின் கடமை....ஆனால் சிறிலங்காவில் அது நடக்காது....ஆயிரம் மைத்திரிகள் உருவானால் பத்தாயிரம் ராஜாபசாக்கள்  வருவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

குறிப்பாக பக்குவமாகவும், சாணக்கியமாகவும்

அதெண்டா என்னெண்டு குறிப்பாக சொல்லிவிடுங்கோ நானா. தலையாட்டிப் பிழைக்கிறது....? அவனவன் தன் பங்குக்கு, வாங்குற  கூலிக்கு கூவுகிறான். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27.9.2016 at 8:28 AM, நவீனன் said:

வடக்கு ,கிழக்கு இனவாத சக்திகளால் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் தடங்கல் -அமைச்சர் ஹக்கீம் கவலை

ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுதுதாம்...

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கை முழுங்கி விட்டு.. இப்போ வடக்கை கொஞ்சம் கொஞ்சமாக முழுங்கிக் கொண்டிருக்கும் முஸ்லீம் மதவாதத்தை விட.. தமிழர்களின் நியாயமான உரிமைக் கோரிக்கை எவ்வளவோ மேலானது. அதனை இனவாதம் என்று சொல்ல.. முஸ்லீம் மதவாதிகளுக்கும் மதவெறியர்களுக்கும் எந்த தார்மீக உரிமையும் இல்லை. 

6 hours ago, nedukkalapoovan said:

கிழக்கை முழுங்கி விட்டு.. இப்போ வடக்கை கொஞ்சம் கொஞ்சமாக முழுங்கிக் கொண்டிருக்கும் முஸ்லீம் மதவாதத்தை விட.. தமிழர்களின் நியாயமான உரிமைக் கோரிக்கை எவ்வளவோ மேலானது. அதனை இனவாதம் என்று சொல்ல.. முஸ்லீம் மதவாதிகளுக்கும் மதவெறியர்களுக்கும் எந்த தார்மீக உரிமையும் இல்லை. 

நெடுக்கர் முஸ்லிம்கள் எவ்வகையான வழிகளில் வடக்கை ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளார்கள் என தெளிவுபடுத்த முடியும்மா??

வைத்தியம் செய்ய முதல் நோயின் தன்மை பற்றி அறிதல் அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

நெடுக்கர் முஸ்லிம்கள் எவ்வகையான வழிகளில் வடக்கை ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளார்கள் என தெளிவுபடுத்த முடியும்மா??

வைத்தியம் செய்ய முதல் நோயின் தன்மை பற்றி அறிதல் அவசியம்.

எல்லா முக்கிய நகரங்களின் மையமும்.. இப்போ அவர்கள் கையில்.... யாழ்.. முல்லை.. கிளி.. சாவகச்சேரி....பருத்தித்துறை.. மன்னார்.. வவுனியா... என்று பட்டியல் நீளுது. இதே தான் கிழக்கிலும் நடந்தது. முதலில் நகர மையங்களை பிடிப்பார்கள். பின் அங்கிருந்து பெத்துப் பெருக்கிக் கொண்டு புற்றுநோய் கணக்கா அயலை ஆக்கிரமிப்பார்கள். 

Edited by nedukkalapoovan

5 hours ago, nedukkalapoovan said:

எல்லா முக்கிய நகரங்களின் மையமும்.. இப்போ அவர்கள் கையில்.... யாழ்.. முல்லை.. கிளி.. சாவகச்சேரி....பருத்தித்துறை.. மன்னார்.. வவுனியா... என்று பட்டியல் நீளுது. இதே தான் கிழக்கிலும் நடந்தது. முதலில் நகர மையங்களை பிடிப்பார்கள். பின் அங்கிருந்து பெத்துப் பெருக்கிக் கொண்டு புற்றுநோய் கணக்கா அயலை ஆக்கிரமிப்பார்கள். 

உண்மையில் சிங்களவரை விட  எழுக தமிழால் கதி கலங்கி போய் இருப்பது இவர்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Dash said:

உண்மையில் சிங்களவரை விட  எழுக தமிழால் கதி கலங்கி போய் இருப்பது இவர்கள் தான்.

கறட்டி ஓணான் வேலை பாத்து சம்பாதிக்கும் பிழைப்பில் மண் விழப்போகுதெண்டு. தூபம் போட்டு காத்திருக்கினம். கொழுந்து விட்டெரிய புடுங்கிறதுக்கு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.