Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவச் சப்பாத்துக்கள் தீர்மானிக்கப்போகும் ஓயாத அலைகள் ஐந்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Despite occasional, ineffectual criticism, international military, political and financial aid continues to be forthcoming to the Rajapakse regime.

The fundamental point is this: irrespective of whether Ranil or Rajapakse is at its helm, the overall objective is to defend the Sri Lankan state by blunting the Tamil struggle for autonomy and destroying the LTTE.

Had Ranil been President, a more subtle program of undermining and dismantling the LTTE would have been pursued. With Rajapske, a cruder set of tactics are being used.

There is only one lesson the Tamils can draw from studying the conduct of the Kumaratunga, Ranil and Rajapakse along with the international community since 2002:

Unless and until the LTTE is proven to be too resilient to destroy without unacceptably high levels of international investment (military, political and financial), resolving Tamil ‘grievances’ will remain a peripheral issue in comparison to ensuring the stability and viability of the Sinhala dominated Sri Lankan state

http://www.tamilguardian.com/article.asp?articleid=1081

  • Replies 61
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Despite occasional, ineffectual criticism, international military, political and financial aid continues to be forthcoming to the Rajapakse regime.

The fundamental point is this: irrespective of whether Ranil or Rajapakse is at its helm, the overall objective is to defend the Sri Lankan state by blunting the Tamil struggle for autonomy and destroying the LTTE.

Had Ranil been President, a more subtle program of undermining and dismantling the LTTE would have been pursued. With Rajapske, a cruder set of tactics are being used.

There is only one lesson the Tamils can draw from studying the conduct of the Kumaratunga, Ranil and Rajapakse along with the international community since 2002:

Unless and until the LTTE is proven to be too resilient to destroy without unacceptably high levels of international investment (military, political and financial), resolving Tamil ‘grievances’ will remain a peripheral issue in comparison to ensuring the stability and viability of the Sinhala dominated Sri Lankan state

http://www.tamilguardian.com/article.asp?articleid=1081

நாம் முன்னர் வேறோர் இடத்தில் சுட்டிக்காட்டிய பின் தமிழ்காடியன் கட்டுரைகள் இங்கு இடம்பெறுவது நல்ல முன்னேற்றம். நாம் இந்தாக் கட்டுரையைப் படித்துவிட்டோம்.

புலிகள் காலி துறைமுகம் மற்றும் கொழும்பில் நடத்தும் சிறிய சிறிய தாக்குதல்கள் சர்வதேச நலன்களை பாதிக்கும் வகையில் இருக்கும் அதேவேளை புலிகளிடம் பலமற்ற சூழல் இருக்கும் என்றால் சர்வதேசம் அரசைக் கொண்டு புலிகளை நசுக்கவே முனையும்..! ஆக புலிகள் அரசும் சர்வதேசமூம் இணைந்து நடத்தும் தற்போதைய போர் முனைப்பை தமக்கு பலவீனம் உண்டு பண்ணா வண்ணம் செய்ய வேண்டும். அப்போதுதான் சர்வதேசம் தமிழர்களின் பலத்தின் மீது ஒரு அச்சத்தை சந்திக்கும். அதுவே தமிழர்கள் மீதான சர்வதேச கருசணையாகவோ அல்லது பாதகமற்ற அணுகுமுறைகளைக் கையாளவோ உதவும்.

குறிப்பாக கிழக்கில் திருமலையின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது கடற்புலிகளின் பலமும் செயற்பாடும். எத்தனை துறைமுகங்களைப் பாதுகாப்பினும் கடற்புலிகளால் கடற்கலங்களை அணுக முடியும் தாக்க முடியும் என்றால் அது சர்வதேச நலங்களை மறைமுகமாக தாக்குவதற்கு ஈடானது. அதனால் தான் அரசைக் கொண்டு அதன் கடற்படையைப் பலப்படுத்தி சர்வதேசம் கடற்புலிகளை முடக்கவும் முனைகிறது.

ஆக சர்வதேசம் இப்போ பலப்பரீட்சை செய்கிறது. இதை தமிழர் தரப்பு சாதுரியமாக எதிர்கொண்டு அரசுக்கும் சர்வதேசத்துக்கும் காத்திரமான பதிலளிப்பதன் மூலமே தமிழர்களின் போராட்ட நியாயத்தை சர்வதேசம் கணக்கில் எடுக்கச் செய்ய முடியும். எனவே புலிகள் தோற்கிறார்கள் பலமிழந்துவிட்டார்கள் என்று அலட்டிக் கொண்டிராமல்..சர்வதேச பலப்பரீட்சையில் புலிகள் வெற்றி பெற தமிழர்கள் அனைவரும் அவர்களோடு தோளோடு தோள் நிற்க வேண்டும்..!

அரசினதும் சர்வதேசத்தினதும் போர் மற்றும் பலப்பரீட்சை முனைப்புக்களுக்கு முகம் கொடுக்கும் அதேவேளை சமாதான விரும்பிகள் என்பதை தமிழர் தரப்பும் வெளிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அது தமிழர் தரப்பின் நிலையை சர்வதே அரங்கில் மேலும் நியாயத்தின் பக்கம் வைத்திருக்க உதவும். அந்த வகையில் சமாதான உச்சரிப்பும் எமக்கு அவசியம். இன்றேல் வன்மூறைவாதிகள் என்ற பழைய உச்சரிப்பு மீண்டும் எதிரொலிக்கும். சர்வதேசம் தன்னைப் பலவீன சக்தியாக இனங்காட்ட ஒரு போதும் முனையாது..! அதை எதிர்பார்க்கவும் கூடாது. தமிழர் தரப்பு தனது பலத்தை நியாயத்தைக் காட்டவேண்டியதே இப்போ தேவை. நிலங்களைப் பிடிப்பதோ அல்லது இராணுவத்தைக் கொன்று கணக்கிடுவதோ அல்ல வெற்றி..இப்போ..! :lol:

Edited by nedukkalapoovan

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றிவிரசவை புலிகள் முடக்கவில்லை..

அந்தக்காலத்தில் புலிகள் பேச்சுக்குப் போகவுமில்லை.

அந்தநேரத்தில் தலைவர் பிரபாகரன் சொன்னது:

"சமாதானத்தின் கதவுகள் இறுக மூடப்பட்டிருக்கும்".

றிவிரசவை புலிகள் முடக்கவில்லை..

அந்தக்காலத்தில் புலிகள் பேச்சுக்குப் போகவுமில்லை.

அந்தநேரத்தில் தலைவர் பிரபாகரன் சொன்னது:

"சமாதானத்தின் கதவுகள் இறுக மூடப்பட்டிருக்கும்".

அப்ப புளியங்குளத்திலை 3வருசமாய் நிண்டவை ஒரே நாளிலை ஓட்டி ஒளிச்சதை முடக்க பட்டதாக சொல்ல கூசுதோ...?? அப்படி முடக்க படவில்லை எண்றால் இண்றும் இராணுவம் மாங்குளத்துக்குள்தானே நிக்க வேணும்..??

ஆனையிறவு தாக்குதலுக்கு பிறகு புலிகளின் அடி சூரிய கதிர் இராணுவத்துக்குதான் கடைசியாக விழுந்தது.....! அதன் பின்னர் புலிகள் தாங்களாக போர் நிறுத்தம் செய்து கொண்டார்கள்.. அப்போது படை எடுத்த தீச்சுவாலையை முறையடிப்பு தாக்குதல் ஒண்றன் மூலம் தான் தடுத்து நிறுத்தினார்கள்... அந்த காலம் புலிகள் போர் நிறுத்தம் செய்து கொண்ட காலம்....

இதை மறைந்த ஊடகவியலாளர் மாமனிதர் தாரகி அவர்கள் மிகக்கடுமையாக புலிகளை விமர்சித்து கட்டுரை வெளியிட்டார்... தீச்சுவாலை நடவடிக்கைக்காக இராணுவத்தினர் தங்களை நிலைப்படுத்தி பலப்படுத்த அவகாசத்தை புலிகள் வளங்கி இருக்க கூடாது பலவீனமாக இருந்த இராணுவ கட்டமைப்பை இன்னும் பலவீனப்படுத்தி அரசாங்கமாக போர் நிறுத்தத்துக்கு வர செய்து இருக்க வேணும் எண்றும் எழுதி இருந்தார்... இதை அமெரிக்கா நோர்வே ஊடாக புலிகளுக்கு எதிராக செய்த சதி எண்றும் கூறி இருந்தார். காரணம் இந்த தாக்குதலுக்கான திட்டமும் பயிற்ச்சியும் அமெரிக்கர்களால் வழங்கப்பட்டதாம்...!

Edited by Thala

என்னது ராணுவ சப்பாத்தியா, சப்பாத்தி நல்ல ருசியா இருக்குமா? சப்பாத்திக்கு சென்னா குருமா இருந்தா சூப்பரா இருக்கும்.

கிழிஞ்சுது போ.. நல்லவன் உந்த றிவரிச பற்றி ஏன் தேவையில்லாத கருத்து.

புளியங்குளத்தை 3 வருசத்தாலை 1 நாளிலை பிடிச்சமாதிரி சாம்பூர் வாகரை எல்லாம் 1 நாளிலை பிடிப்பம். ஆனா அதுக்கும் இந்த முறை 3 வருசம் காத்திருக்கத் தேவையில்லை ஏன் இன்றால் இப்ப செரியான பலமாக இருக்கிறம். இன்னு மொரு 3 மாதம் காணும். அகலக்கால் வைத்த பிறகு பிடிக்கிறதில ஒரு தனி ருசி இருக்கு. கனரக ஆயுதங்கள் எல்லாம் இலவசமாக வரும். உதுகள் எல்லாம் விளங்க ஆழமான அரசியல் இராணுவ அறிவும் முதிர்ச்சியும் வேணும்.

ஏன் பிரச்சனையை... நாங்கள் விசையத்துக்கு வரும்.

இப்ப கருண குழுவும் கையில கிளவஸ் போடுதாம் உண்மையோ? இல்லை தாடி வளத்தவங்கள் தலையில துணி கட்டினவங்கள் கிளவஸ் போட்டிருக்கிறாங்களாம் அந்த மகிந்த நிண்ட படத்தில. அப்ப கருணா குழு கிளவஸ் போட்டுக் கொண்டு திரியிற அளவுக்கு பலமாக இருப்பதாக அரசு காட்ட முற்படுதோ?

குறுக்ஸ்,

அவையள் வந்து SF (Special Force - not STF) அவை STF ஐ விட பவர்புல் ஆனவையாம் எண்டு பெரும்பான்மை இன பொடியல் கதைக்கினம். இவை தானாம் மாவிலாறு வாகரை கதாநாயகர்களாம்.

ம்...ம்.....ம்....

சப்பாத்தி ருசியா இருக்குமா என்று கேட்கும் இந்தியனை வெறுக்கிறேன்.

கிழிஞ்சுது போ.. நல்லவன் உந்த றிவரிச பற்றி ஏன் தேவையில்லாத கருத்து.

புளியங்குளத்தை 3 வருசத்தாலை 1 நாளிலை பிடிச்சமாதிரி சாம்பூர் வாகரை எல்லாம் 1 நாளிலை பிடிப்பம். ஆனா அதுக்கும் இந்த முறை 3 வருசம் காத்திருக்கத் தேவையில்லை ஏன் இன்றால் இப்ப செரியான பலமாக இருக்கிறம். இன்னு மொரு 3 மாதம் காணும். அகலக்கால் வைத்த பிறகு பிடிக்கிறதில ஒரு தனி ருசி இருக்கு. கனரக ஆயுதங்கள் எல்லாம் இலவசமாக வரும். உதுகள் எல்லாம் விளங்க ஆழமான அரசியல் இராணுவ அறிவும் முதிர்ச்சியும் வேணும்

அப்ப என்ன சொல்ல வாறியள் வெல்லப்பட முடியாத யுத்ததிலை இருக்கும் நாங்கள் எங்கட எங்கட வேலைகளை பாத்துக்கொண்டு இருக்கலாம் எண்டுறியளோ..???

நீங்கள் சொல்லுறதை ரசிக்க கூட முடியவில்லை... செம்மறி தனமான வக்கற்றநிலை ..... ரிவிரசவுக்கு பின்னர் புலிகள் போர் நிறுத்தம் செய்ய வில்லை எண்டு ஒருத்தர் சொன்னால் அதுக்கு பதில் சொல்லவது ஏதோ சட்ட விரோதம் மாதிரி ஒரு எருமை புலம்பிறதுதான் ஏன் எண்டு விளங்க இல்லை...

இல்லை கேக்கிறன் உம்மட நிகள்ச்சி நிரலால என்னதை கிளிச்சி விட்டீர்... எத்தினை எருமையளை உம்மட குட்டையிலை குளிக்க வாத்து போட்டீர்... எவ்வளவு நிதியை தாயகத்தை வளப்படுத்த திரட்ட முடிந்தது...! எத்தினை தாயக மீட்பில் நம்பிக்கை இல்லாதவர்களை உம்மால் உதவியாளர்களாக்க முடிந்தது.... ( அவனவன் படும் கஸ்ரம் உம்மட மரமண்டைக்கு எங்க விளங்கும்) இண்றைக்கும் இளந்திரேயன் தலைவரின் வளிகாட்டுதலில் தாயகத்தை விரைவில் மீட்ப்போம் எண்டுறார்... உம்மட அனுமதி இல்லாமல் சொல்லிப்போட்டாரோ...??

தாயக வலம் என்பதை நீர் எந்த வகையான மக்களுக்கு புகுத்த முயல்கிறீர் என்னும் ஜதார்த்தம் கூட விளங்காமல் பினாத்தி திருயுறீர் எண்டா கோதாரியாவது விளங்குதோ தெரியாது..

Edited by Thala

  • கருத்துக்கள உறவுகள்

""முந்துவான் பிந்துவான். பிந்துவான் முந்துவான்" (பைபிளிலிருந்து)

இதில் உண்மையிருக்கிறதோ என சிந்தித்தால்.....

இல்லை எனவும் மறுக்கலாம்....

இருக்கிறதெனவும் உரைக்கலாம்.....

கொஞ்சம் குழப்பகரமாக இரண்டையும் ஏற்கலாம்.

இப்படி மூன்று தரப்பினர் யாழ்களத்தில் மட்டுமல்ல வெளியேயும் இருக்கிறார்கள்.

கொஞ்சம் சிந்தித்தால்....முதலாம் தரப்பினருக்கும் இராண்டாம் தரப்பினருக்கும் மூன்றாம்தனப்பினருக்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்துகொள்ளலாம். அதை சிந்திக்க தெரியாதவர்களை சிந்திக்கவே வைக்கமுடியாது அவர்களின் மூளை உறைநிலையில் இருக்கும் ஆதலால் அது மருத்துவர்களாலேயே சாத்தியம்!

கொஞ்சம் காலத்தைபின்தள்ளி பார்த்தோமானால்....

கிரேக்கராச்சியம் ரோமராச்சியம் இந்தியராச்சியம முகாலயராச்சியம். இவைகள் மனிதவளர்சியின் ஊடாக நாகரீகம் பண்பாடு பெற்று மற்றைய பிரதேசங்களுக்கு உதாரணமாக ஏதொஓரு வகையில் திகழ்ந்தவை.

ஆனால் இப்போது அவையனைத்தும் அமெரிக்காவிற்கு கைகட்டி நிற்கின்றன. சில கூலிகளாகவே செயற்படுகின்றன. ஏன் இவர்களால் தொடர்ந்தும் முன்னேற முடியவில்லை. முன்னேற்றம் காணும் என்று விட்டுவிட்டார்களா??? மற்றவரும் முன்னேறவேண்டும் என்று ஓய்வுபெற்றுவிட்டார்களா?

சமீபத்தில் திரும்பிபார்த்தால் சந்திரனை முதன்முதலில் எட்டிய சோவியத்யூனியன் விபச்சாரத்தை நம்பி நாட்டை நடத்த வேண்டிய நிலையில் நிற்கிறது. ஏன் அமெரிக்கா தோற்கடித்துவிட்டதா???

முன்நிலையில் இருந்தால் தொடர்ந்தும் பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க வேணடும் என்று ஓய்வுபெற்றுவிட்டதா???

இப்டியான வரலாற்று உண்கைமகள் என்ன சொல்லிநிற்கின்றன?

இப்படியாக அமெரிக்காவும் ஓர்நாள் இன்னொரு நாட்டால் வெற்றி கொள்ளப்படும்???

முன்னேற்றம் முன்னேற்றம் என்று சொல்லி தமக்கான அழிவையும் தாமாகவே அறியாத்தனத்தால் செய்து கொண்டிருக்கிறார்களா???? அல்லது இயற்கை ஏதோ ஒரு மர்ம முறையில் இதில் ஈடுhடுகிறதா?

அல்லது மதவாதிகள் நம்புவதுபோல் கடவுள்தான் இதை தீர்மான்க்கின்றாரா?

மேலே உள்ள கேள்விகளுக்கு ஏதோ ஓரு பதில் உங்களுக்கு தோன்றியிருக்மல்லவா?

ஆகவே.... தமிழீழ போரை தமிழர்களால் வெல்லமுடியுமென நீங்கள் நம்புகின்றீகளா????

சிங்களவர்களால் தோற்கடிக்கப்பட்டுவிடலாம் என நினைக்கின்றீர்களா?

அமெரிக்க ஜனாதிபதி திரு ஜோர்ஜ் புஸ் அவர்களை வெறுப்பவர்கள் அல்லது விரும்புவர்களா நீங்கள்? ஏதற்காக அவரை விரும்புகிறீர்கள் அல்லது வெறுக்கின்றீர்கள்?? தனிப்ட்ட முறையில் அவரது முடிவுகள் உங்களை பாதித்தனவா? அல்லது அவர் அமெரிக்க அதிபர் என்பதால் இந்த விருப்பு வெறுப்பா? அப்டியாயின் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி பற்றிய தங்களுடைய தற்போதைய நிலைப்பாடு என்ன??

உலகம் பூராகவும் அமெரிக்க அதிபரை மக்கள் வெறுக்கிறார்கள் என்றுதான் ஆய்வுகள் கூறுகின்றன. ஆதலால்தான் உலகமக்களிடையே அமெரிக்காமீதும் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர். எனவே அடுத்த அமெரிக்க ஜனாதிபதி உலமக்களுடன் ஒத்துப்போனால் அமெரிக்காமீதான அவநம்பிக்கை மறையும் வாய்ப்புள்ளதா?

சில சில நிகழ்வுகள் மனிதரிடையே பாரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. உதாரணத்துக்கு எத்தனையோ பேரின் தலையில் பழங்கள் விழுந்திருக்கும். ஆனால் ஐசாக் நீயூட்டனின் தலையில் விழுந்த அப்பிள் பூமிக்குள்ளே மனிதனை பார்க்க துண்டியது..... இப்படி சொல்லிகொண்டே போகலாம். அது போல 1995ம் ஆண்டிலிருந்து அடுத்தடுத்து பல இந்திய பெண்கள் உலக அழகிகளாக தேர்வு பெற்றார்கள் ஏன் அப்போதுதான் இந்திய பெண்கள் ஆழகாக தொடங்கினார்களா? இது எவ்வாறு இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தியது? அமெரிக்காவில் தயாராகும் லான்கோம் உதட்டுசாய பூச்சூ சன்ரீவியில் வேபிபிலைகாரி தொடரை ஸ்பான்சர் பண்ணிக்கொண்டிருக்கிறது. ஆம் இந்தியாவில் வேலைவாய்பு அதியமாகிறதுதான் ஆனால்..... இதில்வரும் லபங்கள் எல்லாம் எங்கே போய்சேருகின்றது????

ஒரு நாடடில் அடிப்படை தேவையான அரிசியின் விலை ஏறுவதும் ஆடம்பர பொருளான செல்பொன்களின் விலை குறைவதும் ஆரோக்கியமானதா????

சிறிமா தன்னை மதிப்பதில்லை என இந்திராகாந்தி நினைத்ததனால் தமிழ் போராளிகள் இந்தியாவில் ஆயுத பயிற்சியும் பெற்று ஆயுதங்களும் பெற்றுக்கொண்டு வந்தார்கள்.

இப்போ இந்திய நேர் எதிராளியான பாகிஸ்தானை இலங்கை தூக்கிவைத்தாலும். இந்திய பிரதமர் மளுப்பாக இரண்டு தரப்பும் பேச வேண்டுமென்கின்றார். அமெரிக்கா தூதுவர் கொஞ்சம் ஒரு படி மேலே போய். யுத்தத்தை உடனடியாக நிறுத்தி கொண்டு பயங்கரவாதத்துக்கான போரை தொடரவேண்டுமென்றும் அதற்கு அமெரிக்கா துணை நிற்குமென்றும் கூறுகிறார்.

அமெரிக்காவும் இந்தியாவும் புலிகளை வெறுக்கின்றனவா விரும்புகின்றனவா????

புலிகள் ஓரு சாதாரண விடுதலைப்போராளிகள் குழு. அவர்களுக்கு பயந்துதான் தமது உண்மையான நிலைப்பாட்டை சூட்சமாக மறைகின்றார்களா? அல்லது புலிகளை மறைமுகமாக ஆதரிப்பதை இலங்கை அரசு புரிய கூடாதென நினைக்கிள்றார்களா???

அல்லது அவையிரண்டும் ஏதோ ஓரு உள்நோக்கத்தோடுதான் இலங்கை பிரச்சனையை கையாள்கிறார்களா?? அப்படியாயின் தமக்கு லாபமெனில் இலங்கை அரசை தண்டிப்பார்களா?

"'சாண் ஏற முழம் சறுக்கும்"""

உலகில் ஒரு நாட்டினுடைய வளர்ச்சி மற்றைய நாட்டினது வளர்சியை தடுக்கிறது அல்லது சூறையாடுகிறது. ஆகவே அடுத்த வருடங்களின் நிலைப்பாட்டை யாராலும் அறுத்துறுத்து கூற முடியாது. இந்தியாவின் மசியப்போக்கு அமெபிக்காவுடன் ஓத்துபோய் நைசாக மூன்றாம் நாடுகளு;ககான மருத்துவ ஏற்றுமதி அனுமதியை பெறுவதிலேயே குறியாய் இருக்கிறது. இதற்காக இந்திய பல விடயங்களை அமெரிக்காவிற்கு விட்டு கொடுக்கிறது பல நண்பர்களையும் இழக்கிறது. ஆனால் தனக்கு ஓரு போதும் கைக்கெட்டாது என சீனா கருதி சில தொழில் நுட்பங்களையும் இயந்திரங்களையும் பிரேசிலுக்கு வழங்கினால்....?

இந்தியாவின் விட்டு கொடுப்பு தோல்வியே. பின்பு உள்நாட்டு சண்டியனாகி இலங்கையை நண்பனாக்க வேண்டும் இல்லையேல் புலிகளுடன் நட்பு பேண வேண்டும். இது அமெரிக்காவிற்கு தெரியாதா? அவர்கள் முற்கூட்டியே காய்களை நகர்த்தினால்????

அமெரிக்காவின் அனைத்து பலமும் சற்றலைற்றை நம்பியே இருக்கிறது... சற்றலைற் இல்லாவிடின் அமெரிக்கர்கள் உணவு உண்பதே கடினம் எனும் நிலையில் இருக்கும் போதுதான். சீனா சற்றலைற்றை அழிக்கும் ஏவுகணையை வெற்றி கரமாக பரிசோதித்த்து பார்த்திருக்கிறது. இதுதான் அமெரிக்காவின் தலையில் விழுந்த முதல் அடி. சீனாவை அணைப்பதா எதிர்பதா??? நிச்சயம் எதிர்க்கமுடியாது. இப்பொழுது அமெரிக்காவின் ஆயுளை சீனாவால் நிர்ணயிக்க முடியும்.... சற்றலைற்றை நெருங்கும் ஏவுகணைகளை தாக்கும் பதில் ஏவுகணைகளை அமெரிக்கா கண்டுபிடிக்கும்வரை. சீனாவை காதலித்தே தீரவேண்டும். இவர்களுக்குள் காதல் நடக்கும் கப்பை ஐரோப்பிய ஒன்றியமோ வேறு நாடு ஏதாவது பயன்படுத்தி புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கினால். காதல் முடியும்போது இருவரும் அவர்களிடம் சரணடைய வேண்டியதுதான். இதுதான் உலகில் இது வரையிலும் நடந்திருக்கிறது. உலகத்தின் மௌனம் சம்மதம் போல் தோன்றியதாலேயே இலங்கை அரசு போரை முடிவு செய்தது போரை நடத்த இந்த நாடுகளின் கடைக்கண் பார்வையும் உதவியும் இலங்கைக்கு தேவை. புலிகள் போத்தல் ஓட்டை நம்பி போரை தொடங்கியவர்கள் ஆகவே போரில் வெற்றி கிடைக்குமா கிடைக்காதா என்ற கேள்விக்கு உங்களின் பதில் என்ன? எவ்வளவு காலம் முடிவில்லாத போரை இலங்கை அரசால் தொடரமுடியும்? அவ்வளவுக்கு தமிழர்களால் நிச்சயம் முடியும் காரணம் தமிழர்களின் இலக்கு சொந்த விடுதலையே.

இந்திய இராணுவத்துடன் போர் தொடங்கிய போது தமிழ் கல்விமான்கள் புலிகளுக்கு ஆதரவு கொடுத்த பெரும்புள்ளிகளேல்லாம் போர் வேண்டாம் என்றே குரல் கொடுத்தனர்.

திருநெல்வேலியில் ஓரு வீட்டீல் திடீரென ஒரு கூட்டத்தை கூட்டி தலைவர் பிரபாகரன் எல்லோரையும் அழைத்து அவர்களிடத்தில் ஓரே ஓரு கேள்வியை கேட்டார். அது உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். எமக்கு இரண்டு தெரிவுகள்தான் இருக்கின்றன ஒன்று இப்படி குமரப்பா புலேந்திரன் போன்று சூழ்சிக்குள் மாட்டி சாவது. மற்றையது போராடி சாவது எதை செய்ய சொல்லி சொல்கின்றீர்கள?; என்றார். ஒருவரிடமும் பதில் இல்லை. அன்றைய போர் புலிகளின் அழிவின் தாக்கம் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் மீண்டும் மண்ணில் கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் தற்கொலைக்கே புலிகள் தயாரானார்கள். ஆனால் முடிவு என்னனாயிற்று.

முடியாத போரை எவ்வளவு காலம் இந்திய ராணுவம் செய்தது???

இந்தியாவில் அறிஞர்கள் கொஞ்சம் இலங்கை அரசிலும் விட கூட அதுதான் புத்திசாலித்தனமாக குறிப்பிட்ட காலத்தில் முடித்துவிட்டு. இப்பொழுது ஏதோ சொல்கிறார்கள் ஒருவருக்கும் விழங்குதில்லை அதுதான் "யுத்தத்தை நிறுத்திவிட்டு சண்டைபிடி"

Geneva III: A Ballet of Bullets and Ballots

A thought-experiment: if a tree falls in a forest upon deaf ears, did it make a sound? If children are abducted in Batticaloa sans witnesses, was there LTTE/Karuna recruitment? If shells rain in Jaffna sans media coverage, did anyone die? Sliding from post-2007 to pre-2002, momentarily embracing a path to Eelam IV over Geneva III, in coming weeks, the parties may find themselves between a (Alan) Rock and a hard line, and these metaphysical questions may find physical salience on the ground, in places like Kadavaanaikulam, Valachchennai refugee camps, trilingual headlines, makeshift bedrooms of Vakarai-Muttur-Sampur IDPs, given the proclivity towards political compromise and intention to tilt a future political negotiating platform in the present, militarily.

...

http://www.tamilcanadian.com/page.php?cat=577&id=4771

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றிவிரச நடவடிக்கை தன் நோக்கத்தை முழுமையாக எட்டியது.

95 இல் (சில பகுதிகள் 96 தொடக்கத்தில்) நிறைவு செய்யப்பட்ட நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட பகுதிகள் மீது 2000 இல் தாக்குதல் நடத்தி, முந்திய நடவடிக்கையை முடக்கியாச்சு முறியடிச்சாச்சு எண்டு சொல்ல முடியுமா?

சரி, அப்படியேதான் றிவிரசவை ஐந்தாண்டுகளின் பின் முடக்கியாச்சு என்று வைத்தாலும் அந்தப்பகுதியெல்லாத்தையும் விட்டுவிட்டு திரும்பி வந்தபின் எப்படிச் சொல்வது?

றிவிரச நடவடிக்கையில் மீண்டும் எதிரி வெற்றிபெற்றுவிட்டான் என்றா?

ஒருதலைப்பட்ச சமாதானம் அறிவித்தபின் இருநூறு பேரைச் சாகக்கொடுத்து அந்த இடங்கள் கைவிடப்பட்டன. (மொத்தமாக 650 பேர் அந்த நடவடிக்கை முழுவதிலும் - அதாவது தனங்கிளப்பு, அரியாலை, நாவற்குழி, கைதடி, சாவகச்சேரி உள்ளிட்ட பகுதிகளை மீட்க நடந்த சண்டையில் வீரச்சாவு).

பலமான நிலையிலிருந்துகொண்டு சமாதானத்துக்கு அறிவிப்பது போலவே அச்சூழல் குறிப்பிட்ட களத்தில் முறியடிப்புச்சமரைப் பொறுத்தவரை பலவீனமான நிலையிலிருந்து அறிவிக்கப்பட்டது.

எதிர்த்தரப்பு அதை ஏற்றுக்கொள்ளாமல் மூர்க்கமாகத் தாக்குதல் நடத்தியதும், மறிப்புச்சமருக்குரிய பலமான நிலையில் குறிப்பிட்ட பகுதியில் இயக்கம் இருக்கவில்லை என்பதைத் தெரிந்தே.

ஒட்டுசுட்டானை �“யாத அலைகள் - 3 இல் கைப்பற்றினோம் என்று சொல்கிறோமேயொழிய றிவிபலவை முறியடித்தோம், முடக்கினோம் என்று சொல்வதில்லை; அப்படிச் சொல்லவும் முடியாது. நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றியளவில் றிவிபல எதிரிக்கு வெற்றிகரமான நடவடிக்கையேதான்.

அதுபோல்தான் கட்டைக்காடு - வெற்றிலைக்கேணியை �“யாதஅலைகள் - 3 இல் கைப்பற்றினோம், பலவேகயவை முறியடிக்கவில்லை.

தற்போது நாங்கள் பலமாக இருக்கிறம் எண்டதில எனக்கு ஐயமில்லை.

நீங்கள் முதற்சொன்ன கருத்தின்படி றிவிரச காலத்திலயே இயக்கம் சமாதான அறிவித்தல் விட்டதாக - அதாவது 1995 இலேயே நடந்ததாக நான் கருதியதால், அப்படி நடக்கவில்லையென்பதைக் குறிப்பிட நானெழுதிய கருத்து அது.

Edited by nallavan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.