Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் சுவரொட்டியை ஒட்டிய ஜேர்மனி பிரஜை கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதெல்லாம் தலைவர் ஏதோதோவுக்கெல்லாம் உதவுகிறார்

சிலவேளை ஒட்டப்பட்ட இடத்தின் சொத்து சிக்கலை தலைவர் படம் முடிவுக்கு கொண்டு வரும் என்ற நம்பிக்கையும் காரணமாக இருக்கலாம்..

சுவரொட்டியை அங்கபோய் ஒட்டினால்தானே பிரச்சனை. இங்கு இருந்துகொண்டு முகநூல் சுவரிலோ அல்லது வேறு ஏதாவது தளத்தின் சுவரிலோ ஒட்டினால் பிரச்சனை இல்லைத்தானே? ஒரு சின்ன டவுட் அவ்வளவுதான். அதற்காக இங்கு நான் கையில் பசைவாளியும், சுவரொட்டியுமாய் திரிகின்றேன் என்று நினைக்ககூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்பட்டு  நேற்று வாழ்த்து கூறியவர்களும் ,வக்காலத்து வாங்கியவர்களும் மேடைக்கு வரவும் 

தனது செயலால் எதை சாதித்தார் எதை சாதிக்கவில்லை என்பதற்கப்பால் அந்தப் பெண்ணின் துணிவும், தனது செயலை தொடர்ந்து நியாயப்படுத்திய உறுதியும் பாராட்டுக்கு உரியவை. அவர் ஒரு வீரப் பெண்மணியே!

இப் பெண்மணியின் உறவினர்களின் முகநூல் பதிவுகள் இவர் குடும்பம் அற்ற மனநிலை சரியில்லாதவர் என்றும், பிரசுரம் ஒட்டியதற்காக தானாகவே போய் சரணடைந்தவர் என்றும் சொல்கின்றன. சுயநினைவு அற்ற ஒருவரால் எப்படி பிரசுரம் அடிக்க கூடியதாக இருந்தது என்பதற்கு சிலர் இவரிடம் அவற்றைக் கொடுத்து 'இயக்கி' உள்ளனர் என்றும் எழுதுகின்றனர்.

எது எப்படியோ இவரது செயல் படு முட்டாள்தனமானது என்பதுடன், இதன் மூலம்  இவ் வருட மாவீரர் தின நிகழ்வுகளை யாழில் இடம்பெற விடாமல் தடுக்க அரசு எடுக்கும் செயல்களுக்கு உறுதுணையாக நிற்க போகின்றது என்பது மட்டும் தெளிவானது.

  • கருத்துக்கள உறவுகள்

தூ  வெட்கமாயில்லை  , நாங்களெல்லாம் பாதுகாப்பாக மண்ணுக்குள்  தலையை புதைத்துக்கொண்டு  ,மற்றவர்களை  பப்பாவில் ஏற்றுவது 

6 minutes ago, நிழலி said:

இப் பெண்மணியின் உறவினர்களின் முகநூல் பதிவுகள் இவர் குடும்பம் அற்ற மனநிலை சரியில்லாதவர் என்றும், பிரசுரம் ஒட்டியதற்காக தானாகவே போய் சரணடைந்தவர் என்றும் சொல்கின்றன. சுயநினைவு அற்ற ஒருவரால் எப்படி பிரசுரம் அடிக்க கூடியதாக இருந்தது என்பதற்கு சிலர் இவரிடம் அவற்றைக் கொடுத்து 'இயக்கி' உள்ளனர் என்றும் எழுதுகின்றனர்.

எது எப்படியோ இவரது செயல் படு முட்டாள்தனமானது என்பதுடன், இதன் மூலம்  இவ் வருட மாவீரர் தின நிகழ்வுகளை யாழில் இடம்பெற விடாமல் தடுக்க அரசு எடுக்கும் செயல்களுக்கு உறுதுணையாக நிற்க போகின்றது என்பது மட்டும் தெளிவானது.

வாழ்த்து ,கேட்டவர்கள் தான் பதில் தரவேண்டும் .

இப் பெண்மணியின் செயலால் இன்று பலருக்கு தேசம் தலமை தேசீயச் சின்னங்கள் போராட்டம் என்பன நினைவுபடுத்தப்பட்டுள்ளது. நாளை என்னும் நன்குபேர் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு ஒரு துண்டுகோலாக இது அமைந்துள்ளது. இது பிரயோசனம் அற்றது அல்லது முட்டாள்தனமானது என்ற கருத்தை முன்வைப்பதற்கு முன்னால் பிரயோசமானதும் புத்திசாலித்தனமானதுமானகாரியங்களை எங்கே யார்செய்துகொண்டிருக்கினம் என்று சொல்லவதே பொருத்தமானது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

தூ  வெட்கமாயில்லை  , நாங்களெல்லாம் பாதுகாப்பாக மண்ணுக்குள்  தலையை புதைத்துக்கொண்டு  ,மற்றவர்களை  பப்பாவில் ஏற்றுவது 

வாழ்த்து ,கேட்டவர்கள் தான் பதில் தரவேண்டும் .

மகிந்தாகூட தன்சகாக்களைப் பாதுகாக்க லண்டனைத்தான் தேர்ந்தெடுத்தார். இலங்கையில் தமிழினத்தின் அவல நிலைக்கு லண்டன்தான் தலையான காரணம். அங்கிருப்பதால் கேள்விகளும் இப்படி வருவதில் ஆச்சரியமில்லை, 

  • 3 weeks later...

பிரபாகரனின் உருவம் பொறிக்கப்பட்ட சுவரொட்டி வைத்திருந்த பெண் நாடு கடத்தப்பட்டார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை வைத்திருந்த ஜெர்மன் குடியுரிமை பெற்றுக்கொண்ட இலங்கைப் பெண் ஜெர்மனிக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் கீ டெக்குகள் என்பன குறித்த பெண்ணிடமிருந்து மீட்கப்பட்டிருந்தது.

இந்தப் பெண்ணை உடனடியாக நாடு கடத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆடிகல உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 11ம் திகதி சுன்னாகம் பிரதேசத்தில் வைத்து பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட பெண் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

மலர்விழி விஸ்வராஜா என்ற குறித்த பெண்ணின் பெற்றோர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக கடமையாற்றியவர்கள் எனவும், மலர்விழி 15 ஆண்டுகளுக்கு முன்னதாக ஜெர்மனி சென்று குடியுரிமை பெற்றுக்கொண்டுள்ளார் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த விபரங்கள் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டதாகவும் பெண்ணை உடனடியாக நாடு கடத்துமாறு நீதவான் உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த பெண் எப்போது நாடு கடத்தப்பட்டார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/special/01/122917?ref=morenews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.