Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவை காதலித்தேன் : முன்னாள் நீதிபதி.!

Featured Replies

ஜெயலலிதாவை காதலித்தேன் : முன்னாள் நீதிபதி.!

 

 

markandey-katju-s-love-note-for-jayalali

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் 3 வார காலமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா விரைவில் குணம் பெற்று பணிக்கு திரும்புவார் என தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஜெயலலிதாவை தான் ஒரு தலையாக காதலித்ததாக சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

அவரது பதிவில், ஜெயலலிதா சிங்கம் போன்ற ஒரு பெண். அவரி எதிர்ப்பவர்கள் குரங்குகள். அவர் விரைவில் குணம்பெற்று பணிக்கு திரும்புவார்.

நான் இளைஞனாக இருந்த போது, ஜெயலலிதா மிகவும் இளமையாக இருப்பார் அவரது கவர்ந்திழுக்கும் அழகால் அவரை நான் காதலித்தேன். ஆனால் அது ஜெயலலிதாவுக்கு தெரியாது. என்னுடைய காதல் என்றுமே மாறாதது.

இப்பொழுதும் அவரது கவரும் அழகை பார்க்க முடிகிறது. இப்பொழுதும் அவரை நான் காதலிக்கிறேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். என மார்கண்டேய கட்ஜூ கூறியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு பலரும் கம்மெண்ட் செய்து வந்தனர். இதனால் சர்ச்சை எழவே அவர் தனது பதிவை பேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டார்.

http://www.virakesari.lk/article/12324

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் எழும்பி வந்து சாத்தப் போறார்

:grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப் பொறுத்த வரையில்...ஜெயலலிதா சிங்கமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்!

அவரை எதிர்ப்பவர்கள் ஏன் குரங்குகளாக இருக்க வேண்டும்?

இராமாயண சிந்தனையின் தாக்கம் போல உள்ளது!

எவ்வளவு தான் முயற்சித்தாலும்... சில இந்தியர்களை என்னால் புரிந்து கொள்ளவே முடிவதில்லை!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முன்னாள்  நீதிபதி,  பேசுற பேச்சா இது.... 
சில பதவிகள்... இப்படியானவர்களின் செயல்களால், தரம் தாழ்ந்து  விடுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

ஒரு முன்னாள்  நீதிபதி,  பேசுற பேச்சா இது.... 
சில பதவிகள்... இப்படியானவர்களின் செயல்களால், தரம் தாழ்ந்து  விடுகின்றது.

இப்படி மாறாட்டம், தள்ளாட்டம் வரும் எண்டுதான், ஒரு வயதோட ஓய்வைக் குடுத்து அனுப்பிறவயல்.

பாவம்.... அந்தம்மாவே சேடம் இழுக்குது.... இவருக்கு காதல் கேக்குது.

போய் நாலு நாளைக்கு அந்தமாவோட நின்று, அதை, இதை அள்ளி பரிகாரம் பாரப்பா எண்டால் தான் பித்தம் தெளியும்.

உதுக்குத்தான் நம்மூரில சொல்லுறவயள்... 'ஆடான ஆடெல்லாம் குலைக்கு அழுகுது, சொத்திக் கிடாயாடு மட்டும் மறிக்கழுகுது'. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

இப்படி மாறாட்டம், தள்ளாட்டம் வரும் எண்டுதான், ஒரு வயதோட ஓய்வைக் குடுத்து அனுப்பிறவயல்.

பாவம்.... அந்தம்மாவே சேடம் இழுக்குது.... இவருக்கு காதல் கேக்குது.

போய் நாலு நாளைக்கு அந்தமாவோட நின்று, அதை, இதை அள்ளி பரிகாரம் பாரப்பா எண்டால் தான் பித்தம் தெளியும்.

உதுக்குத்தான் நம்மூரில சொல்லுறவயள்... 'ஆடான ஆடெல்லாம் குலைக்கு அழுகுது, சொத்திக் கிடாயாடு மட்டும் மறிக்கழுகுது'. :unsure:

நாதம்ஸ்.... அது குழை

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, MEERA said:

நாதம்ஸ்.... அது குழை

On 12/10/2016 at 3:01 PM, நவீனன் said:

ஜெயலலிதாவை காதலித்தேன் : முன்னாள் நீதிபதி.!

எங்கட பெரியப்பா எம் எல் வசந்தகுமாரியை காதலித்தார், அப்பர் எம் எஸ் சுப்புலக்சுமியை காதலித்தார், நானும் என் பங்குக்கு ஷெரோன் ஸ்டோன் முதல் நயன்தாரா வரை காதலித்தேன் - நாங்களெல்லாம் வெளியில சொல்லிக்கொண்டா இருக்கிறம். 

கம்முண்டு இருப்பா - நாடு நல்லா வரும். :grin::grin:

  • தொடங்கியவர்

https://pbs.twimg.com/media/CNeMZIIUwAAkiey.jpg

இவரும் காதலித்து இருப்பாரோ..tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

நாதம்ஸ்.... அது குழை

ஓ,

மாத்திபுட்டாங்களோ?

சொல்லவே இல்லை.

ஏதோ நம்மால முடிந்த டீசெண்டான  மொழிபெயர்ப்பு.

(பழமொழி உண்மையிலே இதிலும் பார்க்க மோசமானது... அட.. உங்களுக்கு தெரியாதா, மீரா..... )

31 minutes ago, நவீனன் said:

https://pbs.twimg.com/media/CNeMZIIUwAAkiey.jpg

இவரும் காதலித்து இருப்பாரோ..tw_blush:

அட இவர் குமாரசாமியார்.... 

கணிதத்தில் நோபல் பரிசுக்கு நாமினேட் பண்ணப் பட வேண்டியவர்.:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

ஓ,

மாத்திபுட்டாங்களோ?

சொல்லவே இல்லை.

ஏதோ நம்மால முடிந்த டீசெண்டான  மொழிபெயர்ப்பு.

(பழமொழி உண்மையிலே இதிலும் பார்க்க மோசமானது... அட.. உங்களுக்கு தெரியாதா, மீரா..... )

அதனாலேயே "குலையை" கண்டுபிடிக்க முடிந்தது.  

  • தொடங்கியவர்

 

43 minutes ago, Nathamuni said:

அட இவர் குமாரசாமியார்.... 

கணிதத்தில் நோபல் பரிசுக்கு நாமினேட் பண்ணப் பட வேண்டியவர்.:rolleyes:

நாதம்ஸ் சும்மா லொள்ளு பண்ணக்கூடாது. இவரது தியரம் இப்ப ரொம்ப பாப்புலர் - "குமாரசாமி கணக்கு:grin:

சரி நாதம்சுக்கு புரியிற மாதிரி (நாதம்ஸ் கணக்கில வீக்கெண்டா) விளக்க ஒரு வீடியோ.

 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி என்றால் வானத்தில் இருந்து குதித்தவர்களா ..? ரெல் மீ ரெல் மீ ..?

 

2014-11-09-file000704919536.jpg

 

என்னை கேட்டால் நம்மூரில் இருக்கும் பஞ்சாயத்து முறையே நல்லது என்பேன் ..(நாட்டாமை படம் மாதிரி)ஊர் பெரியவர்கள்  ஒண்டும் படிக்கவில்லை என்றாலும் ஓரளவு நல்ல தீர்ப்பு சொல்லிகொண்டு இருந்தார்கள் ..   ஊர் பஞ்சாயத்தில் தீர்வு வரவில்லை என்றால் கோர்ட்டுக்கு போவார்கள் .. இவனுங்க கல்லா கட்டுவதற்காக அதை கட்ட பஞ்சாயத்து  என்று ஒழித்து போட்டார்கள்..சரி இப்ப சென்னை உயர்நீதி மன்றத்தில் நடந்தது என்ன ? எதற்கு மத்திய ரிசர்வ் போலீஸ் வந்தது .? தினமும் நீதிமன்றத்திற்கு வரும் போது குடித்துவிட்டுவருவது .. அங்கயே கட்டபஞ்சாயத்து செய்வது நீதி கேட்டு வரும் ஏழை பாழைகளிடம் கிடைத்தவரை உருவவேண்டியது ..இதில் முக்கியமான விடயம் பி.எல் க்கும் எல்.எல்.பி க்கும் உண்டான வேறுபாடு..! துட்டு கொடுத்தால் தூசியாய் கிடைக்குது எல்.எல்.பி .. எல்லாம் பெங்களூரூ உட்பட பிற மாநில கைங்கரியம்.. சரி அது போகட்டும்

 

இவனுங்க வகுத்த சிவில் சட்டத்தின்  பொருளாதார அளவு கோல் என தெரியுமா ..? கேட்டால் நீங்களே அசந்து போவீர்கள் .. கிந்திய உச்சநீதிமன்றத்தின் அளவுகோல் கிந்திய சட்டவிதிகளின் படி ரூபாய் 20,000 அதாவது சொத்து அல்லது பொருளின் மதிப்பு அதற்கு கீழ் இருந்தால் விசாரணைக்கு எடுத்து கொள்ள மாட்டார்கள்.. ஒவ்வொரு உயர்நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிமன்றதிற்கும் இது பொருந்தும் ,,அது சரிஅநீதி இழைக்கபட்ட பாதிக்கபட்ட மக்களுக்கு என்ன தீர்வு என்று நீங்கள் கேட்பது பிரிகிறது..!! (அம்பானி.விஜ்ய மல்லைய்யா என்று கேட்கபடாது.. அவுங்க பணக்கார ஏழைகள்) தலை எழுத்து என்று தலையில் துண்டு போட்டு கொண்டு செல்லவேண்டியதுதான்!!.. ஆனாலும் இதில் நீதி இருப்பதாகவே படுகிறது.. 20,000 ரூபாய்காக எவனா  முதல் இய்யரிங்கிலே 2 லட்சம் செலவழிப்பானா ? ( நான் வக்கீல் பீஸை சொன்னன் !!) அது போகட்டும் இந்த தறுதலை மேட்டருக்கு வருவம்..  கொலிஜியம் சிஸ்டம் இது வெள்ளைக்காரன் அவனது காலணி ஆதிக்க முறைக்காக கொண்டுவர பட்டது.. அதாவது பூட்டிய ரூமிக்குள் நீதிபதியை தேர்ந்து எடுப்பார்களாம்.. இவனுங்க இரண்டாவது தூணாம் ..நீதிபதிகளாக யார் வருகிறார்கள்..? வக்கீல்கள்தானே..? அதிமுக / திமுக வழக்கறிஞர் அணி என்று ஏன் நீதிமன்றத்தில் பவனி வருகிறார்கள்..? நாளை அவர்களே நீதிபதிகளாக வருவார்கள்.. அப்போது என்ன நீதியை எதிர்பார்க்க முடியும் ..?

தமிழ் பெண்களின் கற்பு குறித்து இட்லியக்கா வார்த்தை விட்டபோது .. இதே ஜட்ஜிகள்தானே வந்து அவ கொண்டுவந்த இட்லியோடு அவளின்ட் தக்காளி சட்னியோடு சேர்த்து போட்டு சாப்பிட்டு தீர்ப்பு எழுதினார்கள் ..!

வக்கீல்கள் கோர்ட்டில் பொய் சொல்லலாம் ..அது கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி வழக்கிலே வெள்ளைகாரன் தீர்ப்பு எழுதிட்டு போய்விட்டான் ..கேட்டால் எதிர் தரப்பினரிடம் உண்மையை வரவழைதற்கென்று அவர்களாகவே  பீற்றி கொள்வார்கள்.. அதே போல பாரளுமன்றத்திலே அதன் உறுப்பினர்கள் பொய் பேசலாம் ..அவர்களை கைது செய்ய முடியாது .. இதுவும் சட்ட அங்கீகாரம்.. அது போகட்டும் உச்ச நீதிமன்றம் என்ன அதன் அதிகாரத்தை எதிர்த்து நின்றால் என்ன நடக்கும் ? ரொம்ப சிம்பிள் (மடியில் கனமில்லை வழியில் பயமில்லை ..அதாவது ஊழல் )  மக்கள் பலம் இருந்தால் சித்தராமையா போல நிம்மதியாக யாராலும் தூங்க முடியும்..அதாவது சட்டத்தின் வழி!! சட்டம் என்பது பெரும்பான்மை கோஸ்ட்களுக்கு வளைந்து கொடுக்கும்.. இதில் ஈழத்து  முன்னாள் போராளிகளை சித்ரவதை செய்வது முதற்கொண்டு அடக்கம்!!

டிஸ்கி:


வெள்ளைகாரன் காலணி ஆதிக்கதிற்காக  கொண்டு வரபட்ட சட்டங்களை  ஆரிய / சிங்களவாதிகள் பழைய காரை பட்டி டிங்கரிங் பார்த்து தங்களுக்கு ஏற்ப மாற்றி கொண்டார்கள்  இதை நமக்கான சட்டம்.. நமக்கான சட்டம்....  என்று ஊளை இடுவதை நிறுத்திவிட்டு... சமூக நலன்களுகாக மக்களுக்கான சட்டம் என்று புதியதாக இயற்றபட வேண்டும் . நீதிபதிகளை நியமிப்பதில் ஒரு பொதுதன்மை வேண்டும்... வெளிப்படை தன்மை வேண்டும் ... அப்படி அமைந்திருந்தால் வடக்கு கிழக்கு பிரிப்பு என்று ஈழத்திலும் நிகழ்ந்து இருக்காது .. இங்க தமிழர்நாடும் போற வர... கண்ட நாய்களிடம் அடிவாங்கும் போக்கும் இருக்காது..!!!

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

ஓ,

மாத்திபுட்டாங்களோ?

சொல்லவே இல்லை.

ஏதோ நம்மால முடிந்த டீசெண்டான  மொழிபெயர்ப்பு.

(பழமொழி உண்மையிலே இதிலும் பார்க்க மோசமானது... அட.. உங்களுக்கு தெரியாதா, மீரா..... )

ஓமோம்... நாதமுனியர், நானும்.... அந்தப் பழமொழியை முன்பு கேள்விப் பட்டனான், இப்ப மறந்து போனன்.  pondering-and-thinking-smiley-emoticon.gif:grin:  18.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.