Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுன்னாகத்தில் வாள்வெட்டு: பொலிஸார் இருவர் படுகாயம்

Featured Replies



சுன்னாகத்தில் வாள்வெட்டு: பொலிஸார் இருவர் படுகாயம்
 
 

article_1477220022-sd.jpgசெல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் சந்தை பகுதியில், மர்ம நபர்கள் இருவரால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் படுகாயமடைந்த பொலிஸார் இருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீதே வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் இலக்கத்தகட்டையும், முகத்தையும் துணியால் மறைத்தபடி வந்த இருவரே இவ்வாறு வாள் வெட்டை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.tamilmirror.lk/184520/ச-ன-ன-கத-த-ல-வ-ள-வ-ட-ட-ப-ல-ஸ-ர-இர-வர-பட-க-யம-

சுன்னாகத்தில் இரண்டு பொலிஸார் மீது வாள்வெட்டு
சுன்னாகத்தில் இரண்டு பொலிஸார் மீது வாள்வெட்டு

2ஆம்  இணைப்பு

 சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டில் சுன்னாகம் பொலிஸ்நிலையத்தை சேர்ந்த  நிமல் பண்டார(வயது52)   கையில் வெட்டுக்காயங்களுடன்  24ஆம் விடுதியிலும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த    எச்.எம்.ஹேர(48) என்பவர் தலையில் வெட்டுக்காயத்துடன் அவசர சிகிச்சைப்பிரிவிலும்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சுன்னாகம் பூட்சிற்றிக்கு முன்பாக மதியம் 2 மணியளவில்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

23-10-2016%2016.10.53%202.jpg

 

unnamed%20%288%29.jpg

 

  1ஆம் இணைப்பு

சுன்னாகம் நகரப்பகுதியில் இனந்தெரியாதவர்களின் வாள்வெட்டில் இரண்டு பொலிஸார் படுகாயமடைந்நநிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இன்று மதியம் சுன்னாகம் நகரப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸார் மீதே இ்ந்த வாள்வெட்டு  தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இவர்கள் இருவரும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக  சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவருக்கு தலையிலும் மற்றயவருக்கு கையிலும் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது

http://onlineuthayan.com/news/19310

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் கொலைக்கு பெயின்ற் அடிச்சாச்சு.....எனி அவ்வள வுதான்..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் அடக்குமுறையிலிருந்து மீட்சிபெற்றுவிடாது தடுப்பதற்கு சிங்கள அரசானது, சந்தர்ப்பங்களை வெகு நுட்பமாகப் பயன்படுத்திக் கொள்கிறதா.....?? :( 

  • கருத்துக்கள உறவுகள்

மகாபாரதத்தில் வருவது போல் சுட்டவனும் அவனே வெட்டினவனும் அவனே

 

  • தொடங்கியவர்

யாழ்.சுன்னாக பகுதியில் இரண்டு பொலிஸார் உட்பட மூவர் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

யாழ்.சுன்னாக பகுதியில் இன்று மதியம் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவொன்று சுன்னாகம் சந்தியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றினுள். வாள்களுடன் புகுந்து அட்காசம் செய்துள்ளனர்.

பின்னர் சிவில் உடையில் நின்ற இரண்டு பொலிஸார் உட்பட மூவரை வாளால் வெட்டி காயப்படுத்திய பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

தற்போது சுன்னாகம் , மருதனார்மடம் பகுதிகளில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட  அதிரடிப்படை என்பன குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்படுகின்றது

img_2084img_2085

 

http://globaltamilnews.net/archives/4201

  • தொடங்கியவர்



சுன்னாகம் விவகாரம்: அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கம்
 
 

article_1477231812-image_1477227776-4c0aசுன்னாகம் சந்தைப் பகுதியில், முகமூடி அணிந்திருந்த நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் படுகாயமடைந்த பொலிஸார் இருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், இடம்பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிளில் இலக்கத்தகடுகள் இன்றி, முகங்களையும் துணியால் மறைத்தபடி வந்தவர்களே இவ்வாறு வாள் வெட்டை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரில் ஒருவர், கேகாலையைச் சேர்ந்த 52 வயதுடைய நிமால் பண்டார என்றும் மற்றையவர் பி.எஸ். நவரத்ன என்றும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

சிவில் உடையில் இருந்த இருவரும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சுன்னாகம் நகரத்தில், இன்று இடம்பெற்ற சிறிய சம்பவமொன்றில் காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

சுன்னாகம் நகரில், கடையொன்றில் கப்பம் பெறுவதற்கு, முகங்களை மூடியவாறு, இலக்கத்தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிளில் வந்த அறுவர், அந்தக் கடை உரிமையாளருடன் முரண்பட்டுள்ளனர்.

இதன்போது, அக்கடைக்கு அண்மையில் ஆயுதங்கள் இல்லாமல் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர், இதில் தலையிட்டுள்ளனர். அதன்போதே அக்கொள்ளையர்கள், பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீதும் வாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/184539/ச-ன-ன-கம-வ-வக-ரம-அரச-ங-க-த-ண-க-களம-வ-ளக-கம-

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாழ்கள உறுப்பினர்களில் அனேகர் குற்றவாளிக்ளுக்கு வெள்ளை பெயின்ட் அடிக்க முயல்கிறார்கள்.

மோட்டர் சைக்கிள் உட்பட்ட வாகனங்கள் அனைத்தும் ஓட்டும்ப்போது தகுந்த ஆவணங்கள் பராமரிக்கப்ப்டவேண்டும் வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் உட்பட, வாகன ஓட்டுனடின் இரத்தத்திலோ அன்றேல் பரிசோதனைக்கான ஊதலிலோ 0,03 புறோமில்லி அளவிலான மதுசாரத்தில் தாக்கம் இருந்தாலும் வாகன ஓட்டும் திறன் பாதிக்கப்பட்டு விபத்து நடக்க வாய்ப்பிருக்கு 

யாழ் குடாநாட்டில் வாழும் மொத்தப்படிதவர்களை உள்ளடக்கிய நடுத்தரவர்க்கம் மற்றும் பல்கலைகழகத்தைச் சேர்ந்தோர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குச் சமூகப்பொறுப்பு முற்றிலும் கிடையாதோ!

அப்பாவிகளை அச்சுறுத்துதல் நீதிமன்றத்திற்குள் புகுந்து வாளாள் வெட்டுதல் இதுபோன்றவற்றை ஊக்குவிக்கும் யாழ் சமூகமும் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட ரவுடிக்கூடமுமே இந்த இருமாணவகளது மரணத்துக்கான சூழ்நிலையை உருவாக்கியவர்கள்

ஓட்டுமொத்தமாக யாழ் குடாநாட்டு மக்களும் ரவுடிகளுமே இம்மாணவர்களைக் கொலைசெய்தவர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.