Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“அப்பா சிறையில் வருமானத்திற்காக கச்சான் விற்கிறோம்”

Featured Replies

“அப்பா சிறையில் வருமானத்திற்காக கச்சான் விற்கிறோம்” – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:-

child

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யபட்டு உள்ள பிரதான சந்தேக நபர்களில் ஒருவரின் பிள்ளைகள் வறுமை காரணமாக யாழ். நகரில் கச்சான் விற்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் முன்னதாக கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களில் ஒருவரின் பிள்ளைகளே குடும்ப வறுமை காரணமாக கச்சான் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்.நகர் பகுதிகளில் கச்சான் விற்கும் சிறுவன் ஒருவன்  தனது அப்பா புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தான்.

அந்த சிறுவன் மேலும் தெரிவிக்கையில் ,

தனது அப்பா சிறையில் உள்ளதனால் குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் உள்ளது. நாம் முதலில் புங்குடுதீவில் வசித்தோம். பின்னர் அப்பா அந்த வழக்கில் கைது செய்யப்பட்டதனால் நாம் தொடர்ந்து அங்கு வசிக்க முடியாததால் யாழ்.நகருக்கு வந்து விட்டோம்.

நாம் தற்போது உள்ள வீட்டின் அருகில் உள்ள பாடசாலையில் தான் கல்வி கற்று வருகின்றோம். பாடசாலை சென்று வீடு வந்ததும் அம்மா கச்சான் வறுத்து சரையாக கட்டி வைச்சு இருப்பா, அதனை எடுத்து வந்து யாழ்.நகர் பகுதிகளில் விற்போம்.  அதில் வரும் வருமானம் மூலமே எமது குடும்பம் நடக்கின்றது.

img_5208

எமது குடும்பத்தில் நாம் மூன்று பிள்ளைகள் நான் தான் முதல் பிள்ளை அடுத்த ஆண்டில் நான்காம் ஆண்டுக்கு செல்கிறேன். எனக்கு ஒரு தங்கையும் ஒரு தம்பியும் உண்டு என தெரிவித்தான் அந்த சிறுவன்.

புங்குடுதீவு மாணவி கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி பாடசாலைக்கு செல்லும் பொழுது கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அது தொடர்பான பொலிஸ் விசாரணைகளை அடுத்து புங்குடுதீவை சேர்ந்த மூன்று நபர்கள் முதலில் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் மூவருமாக 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருடங்களாக தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கபட்டு உள்ளனர்

 

 

 

 

child

 

http://globaltamilnews.net/archives/10021

Edited by நவீனன்

குற்றவாளிகளுக்கு தண்டனை குடுப்பதில் காலம் தால்தினால் இவ்வாறான பிரச்சசினகளுக்கு முகம் கொடுக்கவேண்டி வரும் இது செட்அப் போட்டோ என்று வடிவா தெரியுது அனுதாபப்படுவதை தவிர வேறு ஒன்றும் சொல்வதுகில்லை 

இது உண்மையாக இருந்தால் பிள்ளைகளின் படிப்புக்கு உதவ முயற்சிக்கலாம்! தந்தை செய்த பாதகச்செயல் பிள்ளைகளை பாதிப்பது நியாயமல்ல!

  • தொடங்கியவர்
கச்சான் விற்கும் சிறார்கள்...
 
12-12-2016 11:34 AM
Comments - 0       Views - 15

article_1481522797-Cap4%20%281%29.JPG

தமது அப்பா சிறையில் உள்ளதால் தமது குடும்ப வருமானத்துக்காக கச்சான் விற்கும் தொழில் ஈடுபட்டு வருவதாக, யாழ்.நகர் பகுதியில் கச்சான் விற்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ள சிறார்கள் தெரிவித்தனர்.

 

யாழ்.நகர் பகுதியில் சிறார்கள் மூவர் கச்சான் விற்கும் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களிடம் அது தொடர்பில் வினாவிய போதே அவ்வாறு தெரிவித்தனர்.

 

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

எமது அப்பா புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ளதனால் எமது குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் உள்ளது.

அதனால் நாம் காலையில் பாடசாலை சென்ற பின்னர் மாலை வேளைகளில் கச்சான் விற்று வருமானம் ஈட்டுகின்றோம். காலையில் அம்மா கச்சான் வறுத்து சிறு சிறு சரையாகக் கட்டி வைத்து இருப்பார். மாலை வேளைகளில் அவற்றை நாம் வீதிகளில் கொண்டு சென்று விற்று வருமானத்தை ஈட்டி வருகிறோம் எனத் தெரிவித்தனர். (படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)

article_1481522807-Cap4%20%282%29.JPGarticle_1481522814-Cap4%20%283%29.JPG

- See more at: http://www.tamilmirror.lk/187891/கச-ச-ன-வ-ற-க-ம-ச-ற-ர-கள-#sthash.Dh9SyZHZ.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

தகப்பனை வெளியில கொண்டு வாறதிற்கு நல்ல ஜடியா

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

தகப்பனை வெளியில கொண்டு வாறதிற்கு நல்ல ஜடியா

யாருக்கும்  தெரியாது என்று நினைத்து நாம் செய்யும் தவறு எங்கோ ஒருவரை ( பலரை) பாதித்து விடுகிறது  இது உன்மையா அல்லது விடுவிப்பதற்க்கான திட்டமா என தெரியாது   ஆலானும் குழந்தைகளின் எதிர்க்காலம் என்பது ??

  • கருத்துக்கள உறவுகள்

அப்பனின் மன   வக்கிரகத்துக்கு  வித்தியா  மட்டுமில்லை , இந்தப்பிள்ளைகளும்  பலி  கச்சான்  விற்பதற்கான  காரணத்தை  பிள்ளைகள் மாற்றி  சொல்லவில்லை . 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.