Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல்

Featured Replies

சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல்

 

ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மான நகலை சசிகலாவிடம் வழங்கினார் அமைச்சர் உதயகுமார்.
ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மான நகலை சசிகலாவிடம் வழங்கினார் அமைச்சர் உதயகுமார்.
 
 

தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானங்கள் இடம்பெற்ற தாளை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து, அவரிடம் ஆசி பெறுவதற்காக வருவாய்த்துறை அமைச்சரும், ஜெயலிலதா பேரவை மாநில செயலருமான ஆர்.பி.உதயகுமார் மற்றும் பேரவையின் தமிழகம் முழுவதும் உள்ள 50 மாவட்ட செயலர்களுடன் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு இன்று வந்திருந்தனர். அங்கு அவருக்கு அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சசிகலா அதிமுக பொதுச்செயலராக பொறுப்பேற்று, கட்சிப் பணியை 100 சதவீதம் ஆற்ற வேண்டும். அவர் அதிமுக அரசுக்கு தலைமை தாங்கி, ஜெயலலிதா எப்படி மாநில அளவிலும், தேசிய அளவிலும் முதன்மை இடத்திலே வழிநடத்தினார்களோ, அதே போல காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு, மாபெரும் வெற்றிபெற்று, ஜெயலலிதா விட்டுச் சென்ற, அந்த அரசுப் பணியையும் சசிகலா தலைமை ஏற்று,முதலமைச்சராக பொறுப்பேற்று பணியாற்ற வேண்டும்.

இது தொடர்பாக ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து, அவரது ஆசியை பெற்றோம். அவர் அதிமுகவுக்கு தலைமையேற்க வேண்டும் என்பது தொண்டர்கள் விருப்பம். மக்கள் சேவையில் அனுபவம் பெற்ற சசிகலா, அரசியல் சேவையும் ஆற்ற வேண்டும். அதிமுகவுக்கு தலைமையேற்கும் வரை சசிகலாவை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்

அதனைத் தொடர்ந்து, போயஸ் கார்டன் சென்று, சசிகலாவை சந்தித்த அமைச்சர் உதயகுமார், ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து விளக்கி, தீர்மான நகலை வழங்கினார்.

 

http://tamil.thehindu.com/tamilnadu/சசிகலா-முதல்வராக-பொறுப்பேற்க-ஜெயலலிதா-பேரவை-தீர்மானம்-அமைச்சர்-உதயகுமார்-தகவல்/article9433081.ece

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அமைச்சர் அல்லக்கை ஒன்றின் முன்னால் நிற்பது இப்படியா????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடும்.......வளர்த்த வளர்ப்பும் அப்படி...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

ஒரு அமைச்சர் அல்லக்கை ஒன்றின் முன்னால் நிற்பது இப்படியா????

முதுகில் ஒரு  சின்ன குனிவு .....

அமைச்சரின் பொருள் வளம் எவ்வளவுக்கு எழுந்து 
நிமிர்ந்து நிட்கிறது அதனால் என்று தெரிந்தால் ..........
நாங்கள் விழுந்தே கிடப்போம் !

  • கருத்துக்கள உறவுகள்

விட்டால் காலை நக்கி சுத்தம் செய்வார்கள் போலுள்ளது..!

அவமானச் சில்லரைகள்.. த்தூ..!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.