Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்டுப்பால் அப்பாசின் அடுத்ததோர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுப்பால் அப்பாசின் அடுத்ததோர் அரசியல் இராணுவ ஆய்வு

இந்திய கடற்பரப்பில் புலிகளின் கப்பல் இந்திய கடற்படையால் சுற்றிவழைப்பு தமி்ழ் நாடு சட்டசபையில் பரபரப்பு அதுபற்றிய விரிவான ஆய்வு

கடந்த வாரம் இந்திய பாகிஸ்தான் கடற்பரப்பில் இந்திய ரோந்து கடற்படை படகு ஒன்று நங்கூரமிட பட்டிருக்கின்றது அதன் உள்ளே சில கடற் படையினர் சீட்டாடி கொண்டும் சில படையினர் உறங்கி கொண்டும் இருந்தவேளை அந்த கப்பலின் கப்ரன் சோம்பல் முறித்படி கடலை பார்க்கிறார்.

தூரத்தில் ஒரு படகு கப்ரன் உடனே தனது பைனாகுலரை எடுத்து அந்த கப்பலை நோட்டம் விடுகிறார் அந்த கப்பல் மேல் தளத்தில் தாடி வளர்த்த இருவர் தலையில் துண்டு கட்டியபடி நிப்பதை கவனித்து விட்ட கப்ரனுக்கு இவர்கள் தீவிர வாதிகளாய் இருக்கலாம் எனறொரு சந்தேகம் வரவே உடனே கப்பலை இயக்கி தூரத்தில் தெரிந்த கப்பலை வழி மறிக்குமாறு கட்டளையிருகிறார்.இவர்கள் கப்பல் மற்றைய கப்பலை அண்மித்ததும் அந்த கப்பலின் இயந்திரத்தின் உறுமல் சத்தம் மிக தெளிவாக கப்ரன் காதுகளில் கேட்கிறது .

உடனே அவர் ஊகித்து விட்டார் உறுமல் சத்தம் வருவாதால் நிச்சயம் இது புலிகளின் கப்பலாகதான் இருக்கும் எனவே அந்:த கப்பலை சுற்றிவழைத்து பிடிக்க உத்தரவிடுகிறார். உடனே சந்தேகத்திற்கிடமான கப்பல் கடலில் அங்கும் இங்கும் கெட்டி ஒட தொடங்க சுமார் அரை மணி நேர போராட்டத்தின் பின்னர்.அந்த கப்பலில் இருந்த 5 பேர் கைது செய்ய படுகின்றனர். அந்த கப்பலின் உள்ளே சென்று பார்த்த இந்திய கடற்படைக்கு அதிர்ச்சி அனால் ஆச்சரிய படவில்லை காரணம் அவர்கள் சந்தேகித்தது சரிதான் உள்ளே பயங்கர ஆயுதங்கள் வெடிகுண்டுகள் இருந்தன.

ஆனால் யாரும் இந்திய கடற்படைக்கு எதிரா அவற்றை பயன் படுத்தவில்லை காரணம் உள்ளே இருந்தவர்களிற்கு ஆயுதங்களை இயக்கவோ அல்லது வெடிகுண்டுகளை எறியவோ தெரியாதது தான் காரணம் அவர்கள் வேலை கடத்துவது மட்டும் தான். மற்றும் புலிகளிற்கு தேவையா இராணுவ சீருடைகளான சங்கு மார்க் சாரங்கள் ஏராளமான ஜட்டிகள் பனியன்கள் அது மட்டுமல்ல தற்கொலை குண்டு தாரிகள் உடுத்தும் காஞ்சி புரம் பட்டு மற்றும் தங்க வேட்டை சாறிகள் என்பனவும் ஏராளமாக கைப்பற்ற பட்டன.

இதையடுத்து தமிழ் நாடு சட்டசபையில் சூடான விவாதம் நடை பெற்றது.செல்வி ஜெயலலிதா பேசுகையில் கருணாநிதி இந்த கடத்தலை தடக்க தவறி விட்டார் என்றும் அதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை விட்டு ஒடிபோக வேண்டும் என்றும் சொன்னபொழுது அதற்கு பதிலளித்த கலைஞர் தனக்கு கப்பல் ஓட்ட தெரியாதென்றும் தெரிந்திருந்தால் நிச்சயம் தன்னால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கும் என்றும் கூறினார்.

அனால் யெயலலிதா விடுவதாக இல்லை இப்போ புலிகள் வெகுவாக மன்னேறி விட்டார்கள் கப்பலில் மட்டுமல்ல விமானங்களிலும் ஆயுதம் கடதுகிறார்கள் அதுவும் அன்னிய நாட்டு விமானங்களில். இன்று காலையும் எனது வீட்டிற்கு மேலால் இரண்டு விமானங்கள் பறந்தன. நான் பூத கண்ணாடி வைத்து பார்த்த போது அவற்றில் ஒன்று எயார் அமெரிக்கா என்றும் மற்றையது எயார் லங்கா என்றும் எழுதியிருந்தது. இப்படி அன்னிநாட்டு விமானங்கள் எங்கள் நாட்டின் மேலால் பறப்பது எங்கள் தேசத்தின் ஜன நாயகத்திற்கு பெரும் பாதிப்பு அதற்கு கருணா நிதியும் உடந்தை என்று குற்றம் சாட்டினார்.

இது பற்றி பத்திரிகையாளர்கள் கலைஞரிடம் கேட்ட போது அந்த அம்மையார் எதற்கு பூத கண்ணாடி வைத்து விமானத்தை பார்க்க வேண்டும் அவர் சாதாரண மூக்கு கண்ணாடி போட்டு பார்த்தாலே பூதம் கண்ணாடி போட்டது போல தானே இருக்கும்.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்றார். நன்றி எல்லாம் என்னுடைய கற்பனை தானுங்கோ அடுத்த அய்வில் சநதிப்போம் .. :rolleyes:

நக்கல் கூடிப்போச்சுது

உங்கள் கட்டுரையில் ஒரு சிறு தவறு நடந்துள்ளது. புரட்சித்தலைவி திட்டும் போது தி.மு.க மைனாரிட்டி அரசு என்று குத்திக் காட்டியே திட்டுவார். அடுத்த முறை எழுதும் போது தி.மு.க மைனாரிட்டி அரசு எனும் சொற்பதத்தை பாவிக்க மறந்து விடாதீர்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நக்கல் கூடிப்போச்சுது

ஈழவன் இதை நக்கல் எண்டா அப்ப அந்த செய்தியையும் அம்முவின்ரை அறிக்கையளையும் என்னவெண்டு சொல்லறது :lol:

ஓய் சாத்து!

உது கற்பனை மாதிரித் தெரியேல்லை..... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மீன்டும் ஒரு நல்லதொரு ஆய்வுக்கட்டுரை படித்த திருப்த்தி :P

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா வீட்டுக்கு மேல விமானம் பறந்தது பற்றி இனி சோவின் துக்ளக்கிலும், தினமலரிலும், ராமின் இந்துவிலும் தலைப்புச் செய்தியாக வரப் போகுது

  • கருத்துக்கள உறவுகள்

உடனே அவர் ஊகித்து விட்டார் உறுமல் சத்தம் வருவாதால் நிச்சயம் இது புலிகளின் கப்பலாகதான் இருக்கும் எனவே அந்:த கப்பலை சுற்றிவழைத்து பிடிக்க உத்தரவிடுகிறார்

நல்லாத் தான் கடிக்கின்றியள் சாத்து! :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.