Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை அண்ணா சாலையில் உருவான திடீர் பள்ளம்: மாநகர பேருந்து, கார் கவிழ்ந்தது

Featured Replies

சென்னை அண்ணா சாலையில் உருவான திடீர் பள்ளம்: மாநகர பேருந்து, கார் கவிழ்ந்தது

 

சென்னை அண்ணா சாலையில் இன்று திடீரென உருவான பள்ளத்தில் பேருந்தும், காரும் சிக்கி கவிழ்ந்ததில் சிலர் காயமடைந்தனர்.

 
சென்னை அண்ணா சாலையில் உருவான திடீர் பள்ளம்: மாநகர பேருந்து, கார் கவிழ்ந்தது
 
சென்னை:

சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் காரணமாக சாலையில் திடீரென பள்ளம் ஏற்படுவதும், அதில் இருந்து சிமெண்டு கலவை மற்றும் ரசாயன கலவை வெளியேறுவதும் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் அண்ணா சாலையில் சர்ச் பார்க் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே பள்ளம் ஏற்பட்டு அதிலிருந்து ரசாயன கழிவு வெளியேறியது. இதையடுத்து அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ரசாயன கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன. பின்னர் பள்ளத்தை அடைத்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

மெட்ரோ ரெயில் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு, மூடப்பட்ட அந்த பகுதியில் இன்று மீண்டும் திடீரென பள்ளம் ஏற்பட்டது. ஏற்கனவே பள்ளம் விழுந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில், அமெரிக்க தூதரகம் அருகே இந்த பள்ளம் உருவானது. அப்போது, அந்த இடத்தில் சென்றுகொண்டிருந்த மாநகர பேருந்தும், ஒரு காரும் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய பேருந்து அண்ணா சதுக்கத்தில் இருந்து வடபழனி நோக்கி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
201704091509101801_B._L_styvpf.gif
விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போக்குவரத்தை மாற்றியமைத்தனர். எல்.ஐ.சி.யில் இருந்து அண்ணா சாலைக்கு செல்லக்கூடிய வாகனங்கள், கடற்கரை சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. எதிர்புறத்தில், அண்ணா சாலையில் இருநது ஆயிரம் விளக்கு வழியாக செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்கின்றன.

பேருந்து மற்றும் காரில் இருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உளள்து
201704091509101801_bu-a._L_styvpf.gif
மேலும், பள்ளத்தில் இருந்து வாகனங்களை வெளியேற்றி போக்குவரத்தை சீரமைக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. மெட்ரோ ரெயில் ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து பள்ளத்தை மூடும் பணியை தொடங்க உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/09150910/1078989/mtc-bus-and-car-collapsed-in-suddern-crater-on-chennai.vpf

 

  • தொடங்கியவர்

சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பஸ் விழுந்ததால் பரபரப்பு

Bild könnte enthalten: im Freien

 

சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் வாகனங்கள் சிக்கின

  • தொடங்கியவர்

"சாலையில் திடீர் பள்ளம்: நடந்தது என்ன?" நடத்துநர் பேட்டி!

 

 

 

சென்னை அண்ணாசாலை ஆயிரம்விளக்கு பகுதியில் திடீரென்று சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் பேருந்தும், காரும் சிக்கிக் கொண்டதன் பின்னணியில் நடந்தது என்ன என்பதை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

annasalai cave-in


அண்ணாசதுக்கத்தில் இருந்து வடபழனி நோக்கி இன்று மதியம் சென்று கொண்டிருந்த தடம் 25G எனும் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்தை ஓட்டுநர் குணசீலன் ஓட்டிச் சென்றார். இப்பேருந்தில் நடத்துநராக ரமேஷ் இருந்தார். பேருந்து ஆயிரம்விளக்கு சர்ச் பார்க் அருகேயுள்ள நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக நின்றபோது இந்த விபத்து நேரிட்டது. 

விபத்து குறித்து பேருந்து ஓட்டுநர் குணசீலனும், நடத்துநர் ரமேஷூம் நம்மிடம் தெரிவித்ததாவது:
"பிற்பகல் 2 மணியளவில் ஆயிரம் விளக்கு நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தினோம். அப்போது, சிலர் இறங்கிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று சாலையில் விரிசல் ஏற்படுவது போன்று உணர்ந்தோம். உடனடியாக, பேருந்தில் இருந்த 35 பயணிகளையும் அவசரமாக பேருந்தை விட்டு இறங்குமாறு கேட்டுக் கொண்டோம். இதனால், எல்லா பயணிகளும் வேகமாக இறங்கினர். கண்இமைக்கும் நேரத்திற்குள் சாலையில் விரிசல் ஏற்பட்டதால், பேருந்தை வேறுஇடத்திற்கு நகர்த்த முடியாமல் போய் விட்டது. எனினும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதே நல்ல விஷயம்தான்" என்று விவரித்தார்.

பேருந்தை பின்தொடர்ந்து வந்த ஒரு காரும், சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அதில் ஓட்டுநர் மட்டுமே இருந்தார். நடந்தது பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் முன், அவர் காரை விட்டு குதித்து தப்பியோடி விட்டார். இந்த திடீர் விபத்தைத் தொடர்ந்து, அண்ணாசாலை ஆயிரம் விளக்கு பகுதியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பள்ளத்தில் சிக்கிய கார் உடனடியாக மீட்கப்பட்டது. பேருந்தை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

http://www.vikatan.com/news/tamilnadu/85892-reason-behind-cave-in-on-chennais-anna-salai.html

  • தொடங்கியவர்

பள்ளம் விழுவது இது முதல் முறையல்ல அமைச்சரே!!

மெட்ரோ ரயில் பணி காரணமாகதான் அண்ணா சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் ஜெயக்குமார், இவ்வாறு பள்ளம் விழுவது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்துள்ளார். 

Jayakumar, annasalai
 

சென்னை அண்ணாசாலை ஆயிரம்விளக்கு பகுதியில், சர்ச் பார்க் பேருந்து நிலையம் அருகே,  திடீரென்று சாலையில்  பள்ளம் விழுந்தது. பள்ளத்தில் பேருந்தும், காரும் சிக்கிக் கொண்டது. 

Jayakumar
 

பள்ளம் விழுந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட  நிதியமைச்சர் ஜெயக்குமார், 'இவ்வாறு சாலையில் பள்ளம் விழுவது இதுதான் முதல் முறை. கடந்த சில ஆண்டுகளாக  மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக பள்ளம் தோண்டப்பட்டு மீண்டும் மூடும்போது கலவை விகிதங்கள் மாறுபட்டிருக்கலாம். எனவே, தற்போது ஈரப்பதம் அதிகரிப்பால் மண் இலகி, பள்ளம் விழுந்திருக்கலாம். மீண்டும் சாலை விபத்துகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்', என்றார். 

அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சைக் கேட்ட செய்தியாளர்கள் தெளிவான விளக்கம் கேட்டு கூச்சல் எழுப்பினர். மேலும், இவ்வாறு சென்னையில் பள்ளம் ஏற்படுவது முதல் முறை  என்று கூறுவது தவறு என்றும் அங்கிருந்தவர்கள் கூச்சல் எழுப்பியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. 

http://www.vikatan.com/news/tamilnadu/85897-minister-jayakumar-about-cave-in-on-chennais-anna-salai.html

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா சாலையில் இன்று ஏற்பட்ட மெட்ரோ இரயில் சுரங்க வேலை பள்ளத்தினை சசிகலா ஓங்கி அறைந்ததால் ஏற்பட்டது என நெட்டிசன்கள் மீம்ஸ்...!

 

294mmw0.jpg

 

- 'வாட்ஸ் அப்'பில் வந்தது..

2 hours ago, நவீனன் said:

பள்ளம் விழுவது இது முதல் முறையல்ல அமைச்சரே!!

வெல்லுமா அண்ணாசாலை

அண்ணாசாலைக்கும் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கும் இடையே போட்டி ஆரம்பம்.

தனது நூற்றை நெருங்கி கொண்டிருக்கும் மீனம்பாக்கம் விமான நிலையத்துடன் அண்ணாசாலை போட்டி போடமுடியாது என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தபோதும் - அதிரடியான தனது ஆரம்ப ஆட்டத்தை தொடர்ந்த அண்ணாசாலை மிகவும் வேகமாகவே ரன்களை குவிக்கத்தொடங்கியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.