Jump to content

சித்திரை வந்தாள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரையைப் பர்சோனிபை (personification) செய்து எல்லோரும் சித்திரையாளாக்கி விட்டார்கள்.  அதனால் எனக்கும் சித்திரையென்னும்போது   பழைய சின்னமேள நாட்டியத்தாரகை சித்திராவின் நினைப்புத்தான் வருகிறது.   அந்தப் பெண் இப்போது கிழவியாகிச் செத்தும் போனாளோ தெரியாது.  அதற்கென்ன நாட்டியத்தாரகை பத்மினியை யாராவது கிழவியாகவா நினைத்து எழுதுவார்கள் பேசுவார்கள் அப்படித்தான் இதுவும்.

சித்திரை வந்தாள்

 

 

நித்திரையில் ஆழந்திருந்தேன் நீண்ட துயில் ரா முழுதும்

தத்திமித்தா தையெனும் ஓசை – அட

எத்திசையில் வுருகிறது என்று புலன் போனதங்கே

சித்திரையாள் என்னிடம் வந்தாள்.

 

கட்டழகி மொட்டழகிற் கச்சைகட்டித் துள்ளி நட

மிட்டதனை எங்ஙனம் சொல்வேன்  - பிடித்

திட்ட பத முத்திரைகள் ஆயிரமாம் அன்னவளின்

திட்டமென்ன என்பதறியேன்.

 

கச்சிறுக்கு மார்பழகு காட்டிடத் திமிர் அவளின்

கைகள் பிடித்திட்ட பதத்தால் – ஒரு

பொய்ச்சிரிப்பினூடு மருள் பொங்கிடத் தா தை தையென்றே

போதையெழப் பாய்ந்த விதத்தால்

 

அச்சிறுக்கி என்றனைத் தன் அடிமைகொள்ள வந்தளென்ற

ஆத்திரத்தில் மோக மயக்கில் – பெரும்

இச்சையொடு பாய்ந்தணைக்க என்னது சீ என்ற குரல்

என் மனைவி என்ன கண்றாவி.

 

நாள் முழுதும் வேலை கொஞ்சம் நானயர வேண்டுமென்றால்

நாசமது உங்களின் தொல்லை – அட

காலையெடுங்கள் நெடுகக் கனவு கண்டு கனவு கண்டு

கண்ணயர வழியுமிங்கில்லை.

 

என்றவளின் காதில் அடி இன்று புது வருஷமென்றேன்

எங்களுக்கஃதில்லை விடுங்கள் – அது

என்றுமினித் தையினிற்தான் எம்மினத்திற் கென்றனள் நான்

என் கனவில் மீண்டு லயித்தேன்.

 

தை தை தை தை முதலே தமிழர் புதுவருடமெனத்

தாளமிட்டுத் தத்தி உதைத்தாள் – அவள்

செய் கைகள் யாவினையும் தௌிவாகப் பார்த்திருந்தேன்

செய்தவள் என் அன்பு அகத்தாள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, karu said:

 

சித்திரையைப் பர்சோனிபை (personification) செய்து எல்லோரும் சித்திரையாளாக்கி விட்டார்கள்.  அதனால் எனக்கும் சித்திரையென்னும்போது   பழைய சின்னமேள நாட்டியத்தாரகை சித்திராவின் நினைப்புத்தான் வருகிறது.   அந்தப் பெண் இப்போது கிழவியாகிச் செத்தும் போனாளோ தெரியாது.  அதற்கென்ன நாட்டியத்தாரகை பத்மினியை யாராவது கிழவியாகவா நினைத்து எழுதுவார்கள் பேசுவார்கள் அப்படித்தான் இதுவும்.

சித்திரை வந்தாள்

 

 

நித்திரையில் ஆழந்திருந்தேன் நீண்ட துயில் ரா முழுதும்

தத்திமித்தா தையெனும் ஓசை – அட

எத்திசையில் வுருகிறது என்று புலன் போனதங்கே

சித்திரையாள் என்னிடம் வந்தாள்.

 

கட்டழகி மொட்டழகிற் கச்சைகட்டித் துள்ளி நட

மிட்டதனை எங்ஙனம் சொல்வேன்  - பிடித்

திட்ட பத முத்திரைகள் ஆயிரமாம் அன்னவளின்

திட்டமென்ன என்பதறியேன்.

 

கச்சிறுக்கு மார்பழகு காட்டிடத் திமிர் அவளின்

கைகள் பிடித்திட்ட பதத்தால் – ஒரு

பொய்ச்சிரிப்பினூடு மருள் பொங்கிடத் தா தை தையென்றே

போதையெழப் பாய்ந்த விதத்தால்

 

அச்சிறுக்கி என்றனைத் தன் அடிமைகொள்ள வந்தளென்ற

ஆத்திரத்தில் மோக மயக்கில் – பெரும்

இச்சையொடு பாய்ந்தணைக்க என்னது சீ என்ற குரல்

என் மனைவி என்ன கண்றாவி.

 

நாள் முழுதும் வேலை கொஞ்சம் நானயர வேண்டுமென்றால்

நாசமது உங்களின் தொல்லை – அட

காலையெடுங்கள் நெடுகக் கனவு கண்டு கனவு கண்டு

கண்ணயர வழியுமிங்கில்லை.

 

என்றவளின் காதில் அடி இன்று புது வருஷமென்றேன்

எங்களுக்கஃதில்லை விடுங்கள் – அது

என்றுமினித் தையினிற்தான் எம்மினத்திற் கென்றனள் நான்

என் கனவில் மீண்டு லயித்தேன்.

 

தை தை தை தை முதலே தமிழர் புதுவருடமெனத்

தாளமிட்டுத் தத்தி உதைத்தாள் – அவள்

செய் கைகள் யாவினையும் தௌிவாகப் பார்த்திருந்தேன்

செய்தவள் என் அன்பு அகத்தாள்.

 

 கருவும் கவிதையும் அழகு...tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான கவிதை கரு.... சந்தங்களுடன் இணைந்து போகுது....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குமாரசாமி, நன்றி சுவி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.