Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கில் பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கில் பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி

house-1.jpg

வடக்கு, கிழக்கில் முன்நிர்மாணிக்கப்பட்ட பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தலா 15 இலட்சம்ரூபா செலவில் 6 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இவ் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்நிர்மாணிக்கப்பட்ட பொருத்து வீட்டை, வடக்கு – கிழக்கில் அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்ததுடன் வடக்கு மாகாண சபையும் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இவற்றை புறமொதுக்கி, முன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை அமைப்பதற்கு மத்திய அரசின் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு வீட்டுக்கு 1.5 மில்லியன் ரூபா எனும் அடிப்படையில் 6 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை செயற்குழு தீர்மானித்துள்ளது. அதன் அடிப்படையில் 6 ஆயிரம் முன்நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை அமைப்பது தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மறுவாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/26493

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் காலம் தற்போது இலங்கையில் இல்லை. கிடைப்பதைப் பெற்று அதனைத் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதே இன்றைய நிலையில் சிறந்தது. :rolleyes:

சாக்கடை நீரை ஊற்றினாலும் உறுஞ்சும் தென்னைமரம் அதனைச் சுவையான இளநீராக மாற்றிக்கொள்கிறது. :) 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

தமிழர்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் காலம் தற்போது இலங்கையில் இல்லை. கிடைப்பதைப் பெற்று அதனைத் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதே இன்றைய நிலையில் சிறந்தது. :rolleyes:

சாக்கடை நீரை ஊற்றினாலும் உறுஞ்சும் தென்னைமரம் அதனைச் சுவையான இளநீராக மாற்றிக்கொள்கிறது. :) 

................................................................... கிடைக்கும் வரைக்கும் லாபமே அரசிடமிருந்து  தமிழரசுக்கட்சி தடுத்தாலும் 6000 வீடுகள் அமைக்கப்படும்  அனுமதி வழங்கப்பட்டுள்ளது :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இது தொடர்பாக ஒரு பொருத்தப்பாட்டுக்கு வரல்லையா. சொறீலங்கா இராணுவம் இருக்கும் மாடிகளையும் பங்களாக்களையும் மக்களிடம் கையளித்து விட்டு.. இந்தப் பொருத்து வீடுகளை தென் சொறீலங்காவில் அமைத்து அங்க அதனை இருத்தலாமே.:rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

இன்னும் இது தொடர்பாக ஒரு பொருத்தப்பாட்டுக்கு வரல்லையா. சொறீலங்கா இராணுவம் இருக்கும் மாடிகளையும் பங்களாக்களையும் மக்களிடம் கையளித்து விட்டு.. இந்தப் பொருத்து வீடுகளை தென் சொறீலங்காவில் அமைத்து அங்க அதனை இருத்தலாமே.:rolleyes:tw_angry:

தற்போது இராணுவத்துக்கும் அமைத்துக்கொடுத்து  இருப்பது பொருத்து வீடுகளிலான மூகாம்களே நெடுக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, முனிவர் ஜீ said:

தற்போது இராணுவத்துக்கும் அமைத்துக்கொடுத்து  இருப்பது பொருத்து வீடுகளிலான மூகாம்களே நெடுக்கு 

ஆனால் யாழ்ப்பாணத்தில் பெரிய மாடமாளிகைகள் அமைச்சு சிங்கள இராணுவம்.. கடற்படை..விமானப்படை வாழுதப்பா.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

ஆனால் யாழ்ப்பாணத்தில் பெரிய மாடமாளிகைகள் அமைச்சு சிங்கள இராணுவம்.. கடற்படை..விமானப்படை வாழுதப்பா.tw_blush:

ம் முக்கியமான முகாம்கள் மட்டும்  அப்படி அமைத்து விட்டார்கள் மிக பெரிய முகாம்கள்  வவுனியாவில் கூட   இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

ஆனால் யாழ்ப்பாணத்தில் பெரிய மாடமாளிகைகள் அமைச்சு சிங்கள இராணுவம்.. கடற்படை..விமானப்படை வாழுதப்பா.tw_blush:

புலி இனி வரபோவதில்லை ஆனால் புலிவருது புலிவருது  என்று வருடத்துக்கு நாலுமுறை கத்திக்கொண்டு அந்த மாட மாளிகைகளில் சுகமாக வாழுகின்றனர் .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

புலி இனி வரபோவதில்லை ஆனால் புலிவருது புலிவருது  என்று வருடத்துக்கு நாலுமுறை கத்திக்கொண்டு அந்த மாட மாளிகைகளில் சுகமாக வாழுகின்றனர் .

சுகமா அல்ல.. பூங்காக்கள்.. தடாகங்கள் என்று பழைய அந்தப்புற வாழ்க்கை வாழினம். அப்பப்ப தமிழ் பெண்களின் கையை பிடிச்சும் இழுத்துப் பார்த்துக்கிறது. முயற்சி கூடினால்.. கொண்டாட்டம். கூடாட்டி.. திண்டாட்டம். அதையும் சமாளிக்க சொரீலங்கா அராஜகம் கொழும்பில அரசு கட்டி இருக்கல்ல. 

tw_blush::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.