Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகம்: சந்தேகநபர்கள் அடையாளங் காணப்படவில்லை

Featured Replies

மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகம்: சந்தேகநபர்கள் அடையாளங் காணப்படவில்லை

 

 

மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகம்:  சந்தேகநபர்கள் அடையாளங் காணப்படவில்லை
 

திருகோணமலை மூதூர் பெருவெளி கிராமத்தில் மூன்று சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று அடையாளங் காணப்படவில்லை.

மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இன்று அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.

இதன்போது பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளும் நீதிமன்றமத்தில் ஆஜராகியதை அடுத்து அடையாள அணிவகுப்பு இடம்பெற்றுள்ளது.

எனினும் பாதிக்கப்பட்ட சிறுமிகளால் சந்தேகநபர்களை அடையாளம் காணா முடியாது போயுள்ளது.

இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஐ.என். றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

மூதூர் பெருவெளி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாடசாலை மாணவிகள் மூன்று பேரை குறித்த பகுதியில் தொழில்புரிந்துக் கொண்டிருந்த சிலர் துஷ்பிரயோகத்தற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

http://newsfirst.lk/tamil/2017/06/மூன்று-சிறுமிகள்-துஷ்பி-3/

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமிகளால் சந்தேகநபர்களை அடையாளம் காணா முடியாது போய்விட்டால்...! பரிசோதனைகள் இருக்கின்றனவே.!! அதனைச் செய்ய இசுலாமியச் சட்டம் இடம்கொடுக்காதா ?

சிங்கள போலீசுக்கு மாமூல் கொடுக்கும் உண்மையான சந்தேகநபரான கட்டிட ஒப்பந்தக்காரரை கைது செய்யாதது ஏன்?

  • தொடங்கியவர்

திருகோணமலை: சந்தேக நபர்களை அடையாளம் காட்ட முடியாத பாலியல் வன்முறைக்குள்ளான சிறுமியர்

 

இலங்கையில் திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் மூன்று பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறைக்குள்ளானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான அடையாள அணிவகுப்பில் பாதிக்கப்பட்ட மாணவிகளினால் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படவில்லை.

போராட்டம் Image captionஅடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்டிருந்த சந்தேக நபர்களை மாணவிகளினால் அடையாளம் காட்ட முடியவில்லை

கடந்த 29ம் தேதி அந்த பிரதேசத்திலுள்ள அரசு தமிழ் பள்ளிக்கூடம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சைவ சமய வகுப்புக்கு சென்றிருந்த 6 முதல் 8 வயது வரையான மூன்று மாணவியர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, அந்த பள்ளிக்கூட கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட அயல் பிரதேச நபர்கள் 5 பேரை, சந்தேகத்தின் பேரில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை மூதூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி ஐ..எம். ரிஸ்வான் முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் ஐந்து சந்தேக நபர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

அடையாள அணிவகுப்புக்கு வருகை தந்திருந்த பாதிக்கப்பட்ட மாணவிகளால் சந்தேக நபர்கள் எவரையும் அடையாளம் காட்ட முடியவில்லை.

அடையாள அணிவகுப்புக்கு பின்னர் போலீஸாரால் மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த சந்தேக நபர்கள், நீதிமன்ற உத்தரவின்பேரில் எதிர்வரும் 12ம் தேதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

போராட்டம்

இதேவேளை, இந்த சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதிக் கோரியும் இன்று திங்கட்கிழமையும் அந்த பிரதேசத்தில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

மல்லிகைத்தீவு மற்றும் றால் குழி போன்ற இடங்களில் நடைபெற்ற ஆர்பாட்டங்களிலும் கவன ஈர்ப்பு போராட்டங்களிலும் மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

மல்லிகைத்தீவு சந்தியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போக்குவரத்துக்கு தடைகளை ஏற்படுத்தியமையால் மட்டக்களப்பு - திருகோணமலை சாலையில் ஓரிரு மணிநேரம் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன.

பாதிப்புக்குள்ளான மாணவிகளுக்கு நீதிக் கோரி கிழக்கு மாகாணத்தில் ஒரு வார காலமாக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/sri-lanka-40158329

  • கருத்துக்கள உறவுகள்

அடையாள அணிவகுப்புக்கு வருகை தந்திருந்த பாதிக்கப்பட்ட மாணவிகளால் சந்தேக நபர்கள் எவரையும் அடையாளம் காட்ட முடியவில்லை.

இப்போது கதையை பார்த்தால் சிறுமிகளில் குற்றம் சொல்வதைப்போல் தெரிகிறது. போலீசார் சரியான குற்றவாளிகளை அடையாள அணிவகுப்புக்கு கொண்டுவரவில்லை என்றும் கொள்ளலாம்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Rajesh said:

சிங்கள போலீசுக்கு மாமூல் கொடுக்கும் உண்மையான சந்தேகநபரான கட்டிட ஒப்பந்தக்காரரை கைது செய்யாதது ஏன்?

இது நியாயமான கேள்வி ஒப்பந்தக்காரர் எனும் போது உள்ள ஒன்று இடிக்கிறது  உன்மை வரவேண்டுடும் வெளியில்

3 hours ago, vanangaamudi said:

அடையாள அணிவகுப்புக்கு வருகை தந்திருந்த பாதிக்கப்பட்ட மாணவிகளால் சந்தேக நபர்கள் எவரையும் அடையாளம் காட்ட முடியவில்லை.

இப்போது கதையை பார்த்தால் சிறுமிகளில் குற்றம் சொல்வதைப்போல் தெரிகிறது. போலீசார் சரியான குற்றவாளிகளை அடையாள அணிவகுப்புக்கு கொண்டுவரவில்லை என்றும் கொள்ளலாம்தானே.

இதற்கு பின் ஏதேனும் அரசியல்  விளையாடுகிறது என இங்கே பேசிக்கொள்கிறார்கள் உன்மை வர கன காலம் எடுக்கும் போல் இருக்கிறது

  • தொடங்கியவர்
35 பேர் நிறுத்தப்பட்டனர் : 12 முறை பார்த்த 3 சிறுமியரும் அடையாளம் காட்டவில்லை
 

வடமலை ராஜ்குமார், பொன் ஆனந்தம், எப்.முபாரக், தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, மூதூர், பெரியவெளிக் கிராமத்தில், மூன்று சிறுமியர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கின், அடையாள அணிவகுப்பு, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று (05) இடம்பெற்றது.

மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஜ.றிஸ்வான், முன்னிலையில், இந்த அடையாள அணிவகுப்பு, நேற்றுக் காலை 8:30 மணியிலிருந்து சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் இடம்பெற்றது.

இந்த அடையாள அணிவகுப்பில், 35 பேர் நிறுத்தப்பட்டனர். அவர்களை, ஒவ்வொரு சிறுமியரும் நான்கு தடவைகள் பார்த்தனர். எனினும், அச்சிறுமியர் எவரையும் அடையாளம் காட்டவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பிலான வழக்கு, கடந்த 31ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, குற்றவாளியைக் கண்டறிவதற்காக அடையாள அணிவகுப்பை, 5ஆம் திகதியன்று (நேற்று) நடத்துவதற்கு அன்றையதினம் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டது.

அதனையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் என்றுமில்லாதவாறு, பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நீதிமன்றத்துக்குள் சென்றவர்கள் அனைவரும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆள் அடையாள அட்டையும் பரிசோதிக்கப்பட்டது. அத்துடன், அலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் எவையும், மன்றுக்குள் எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், திருகோணமலை விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டிருந்த, இந்த வன்புணர்வுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் ஐவரையும் ஏற்றிக்கொண்டு, சிறைச்சாலைகள் பஸ், காலை 8:15 மணியளவில் வந்தது.

மூதூர் நீதவான் நீதிமன்றத்துக்கு, கைதிகள் அழைத்துவரப்படும் போது, சிறைச்சாலை வாசலில் வைத்தே, அவர்கள் இறக்கப்பட்டு, நீதிமன்ற வளாகத்துக்குள் அழைத்துச்செல்லப்படுவர்.

எனினும், சிறைச்சாலை பஸ்ஸானது நேற்றையதினம், வளாகத்துக்குள்ளேயே சென்றுவிட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்துக்கு அண்மையில், பெருந்திரளானோர் குவிந்திருந்தனர். அங்கு அமைதியைக் காக்கும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அரச தமிழ் பள்ளிக்கூடம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சைவ சமய வகுப்புக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) மாலை 4.00 மணியளில் சென்றிருந்த, 7 மற்றும் எட்டு வயதுகளுடைய மூன்று மாணவியரே, இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டனர்.

இம்மாணவிகளை, மல்லிகைத்தீவு பாடசாலை கட்டுமாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்களில் சிலர், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளனர் என, அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் இருவரை அப்பிரதேச மக்கள் கட்டிவைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் வழங்கிய உறுதிமொழியை அடுத்து பதற்றம் தணிந்தது.

பாதிக்கப்பட்ட  மாணவிகள் மூவரும், மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அதன்பின்னர், அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அடையாள அணிவகுப்பு, நேற்று (05) நடத்தப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட ஐவருடன், மேலும் 30 பேர் அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகள் சார்பில், பெண் சட்டத்தரணிகள் இருவர் அடங்கலாக ஐந்து சட்டத்தரணிகள், முன்னிலையாகியிருந்தனர்.

முகங்களை மூடியிருந்த அந்தச் சிறுமிகள் மூவரும், தலா நான்கு தடவைகள் என்ற வீதத்தில் 12 தடவைகள், 35 பேரையும் தனித்தனியாகப் பார்த்தனர். எனினும், அச்சிறுமியர் எவரையும் அடையாளம் காட்டவில்லை.

இதனையடுத்து, அந்த ஐவரும், முகங்களை மூடி அழைத்துவரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கையும் அன்றைய தினத்துக்கே ஒத்தவைத்தார்.  

இதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து பெற்ற மரபணு மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி, அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் பணித்துள்ளதாக  மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். எனினும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் இவ்வழக்கு விசாரணை புலனாய்வு பிரிவுக்கு மாற்றுமாறு மன்றில் கோரியிருந்தனர்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/35-பேர்-நிறுத்தப்பட்டனர்---12-முறை-பார்த்த-3-சிறுமியரும்-அடையாளம்-காட்டவில்லை/150-198060

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.