Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’கோப்பை எனது கையில் திணித்துவிட்டனர்’ -

Featured Replies

’கோப்பை எனது கையில் திணித்துவிட்டனர்’
-

- எஸ்.நிதர்ஷன்

"ஆளுநரிடம் செல்வதற்கான உள்ளே சென்ற போது, வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானக் கோப்பை (பைல்) என்னுடைய கையில் கொண்டுவந்து திணித்து விட்டார்கள். எல்லோரும் கெட்டிக்காரர்கள்தானே? இல்லாவிட்டால் எப்படி மாகாண சபை உறுப்பினராகத் தெரிவாவது?" என, வட மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் கோப்பாய்த் தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில், சமகால அரசியல் கருத்தரங்கும் கேள்வி - பதில் நிகழ்ச்சியும், நீர்வேலி கந்தசுவாமி ஆலய வடக்கு வீதி மண்டபத்தில் இன்று (11) நடைபெற்றது.

அங்குவைத்து அவர் மேலும் தெரிவிக்கையில், "வடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பில் பரிசீலிக்கப்பட்ட 3 கட்சிக் கூட்டத்திலும் நான் கலந்து கொள்ளவில்லை. இதனால் அங்கு பேசப்பட்ட விடயங்கள், நடந்தவை எனக்குத் தெரியாது. ஆனால், அவர்களுடைய நிலைப்பாடு எனக்கு அறிவிக்கப்பட்டது. 14 ஆம் திகதி நடைபெற்ற அமர்வில் பிறழ்வு இடம்பெற்றது. இருப்பினும், அதற்குப் பின்னர் நடைபெற்ற கட்சிக் கூட்டங்களுக்கு நான் போகவில்லை. பின்னர் என்னை கட்சி அலுவலகத்துக்கு வருமாறு சொல்லப்பட்டது.

கட்சி அலுவலகத்துக்குள் போன போது ஏற்கெனவே முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரையப்பட்டு, கணினியில் தட்டச்சப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை பார்த்த போது, அதில் முதலாவது பெயராக என்னுடைய பெயர் இருந்தது.

கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் நான் கையெழுத்திடுகின்றேன். ஆனால், அத்தீர்மானத்தில் என்னுடைய பெயர் முதலாவதாகப் போட வேண்டாம். அதைத் தவிருங்கள் என்று நான் கூறினேன். இதனை நான் இரண்டு மூன்று தடைவைகள் சொன்னேன்.

இருப்பினும், தொடர்ந்தும் என்னுடைய பெயரைத்தான் தீர்மானத்தில் முதலாவது பெயராகப் போட்டனர். என்னுடைய பெயர் முதலாவதாக போட்டப்பட்டமைக்கு, நான் கட்சியின் மூத்த உறுப்புரிமை என்று சொன்னார்கள்.

என்னால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது, நான் முதலாவதாக கையெழுத்து வைத்துவிட்டேன். என்னால் அங்கு நின்று சண்டை போட முடியாது. இதற்குப் பிறகு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்குக் கொண்டு செல்ல புறப்பட்டோம்.

நான் வாகனத்தில் ஏறிய போது, பிரதி அவைத் தலைவர், அத்தீர்மானம் அடங்கிய கோப்பை (பைல்) என்னிடம் தந்தார். அப்போது நான் அவரைப்பார்த்து, 'கமலேஸ் நான் இத்தீர்மானத்தை கையளிப்பது சரியல்ல. வேறு யாரிடமும் கொடுத்து கையளியுங்கள்' என்று கூறி பிரதி அவைத் தலைவரிடமே அதை கொடுத்துவிட்டேன். இது உண்மையாக நடந்தது.

தீர்மானக் கோப்பைத் திருப்பி கொடுத்துவிட்டு நான் வாகனத்தில் ஏறினேன். அதற்கு முதல் சில வாகனங்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்குச் சென்றன.

ஆளுநர் அலுவலகத்துக்குள் சென்ற போது உள்ளே வருமாறு எங்களை அழைத்தார்கள். அப்போது சிலர் முன்னுக்குச் சென்றார்கள். எனக்கு பின்னாலும் சிலர் நின்றார்கள்.

ஆளுநரிடம் செல்வதற்கான உள்ளே சென்ற போது, அந்தக் கதவடியில் வைத்து அத்தீர்மானக் கோப்பை என்னுடைய கையில் கொண்டுவந்து திணித்து விட்டார்கள். எல்லோரும கெட்டிக்காரர்கள்தானே. இல்லாவிட்டால் எப்படி மாகாண சபை உறுப்பினராகத் தெரிவாவது.
இன்றுவரை அச்சந்தர்ப்பத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை என்னுடைய கையில் திணித்தவர் யார் என்று எனக்குத் தெரியாது. சம்பந்தருடைய கையில் சிங்கக் கொடி புகுத்தியது போன்ற சம்பவமே நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்னுடைய கையில் வந்த சம்பவமும்.
எனது கையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்த பின்னர் அவ்விடத்தில் நின்று என்னுடைய கட்சியை காட்டிக் கொடுக்கவோ, சண்டை பிடிக்கவோ நான் விரும்பவில்லை. நான் கொண்டு சென்று வருத்தத்துடன் முகம் சுழித்தவாறே ஆளுநரிடம் கையளித்தது உண்மை. நான் சிரித்துக் கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கையளிக்கவில்லை" என்றார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கோப்பை-எனது-கையில்-திணித்துவிட்டனர்/71-200423

3 minutes ago, நவீனன் said:

இன்றுவரை அச்சந்தர்ப்பத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை என்னுடைய கையில் திணித்தவர் யார் என்று எனக்குத் தெரியாது. சம்பந்தருடைய கையில் சிங்கக் கொடி புகுத்தியது போன்ற சம்பவமே நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்னுடைய கையில் வந்த சம்பவமும்

தலைவருக்கு ஏற்ற தொண்டன்...என்ன திடிரென பிளேட் மாறுது
 

  • கருத்துக்கள உறவுகள்

இவரல்  கையில் அதிகாரம்

நாளைக்கு சொல்வார்

ஊழலை யார் திணித்தார்கள்  என்று தெரியவில்லை என்று..

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அவைத்தலைவர் செய்யக்கூடாதவை எல்லாவற்றையும் செய்துவிட்டு பல்டி அடிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, MEERA said:

ஒரு அவைத்தலைவர் செய்யக்கூடாதவை எல்லாவற்றையும் செய்துவிட்டு பல்டி அடிக்கிறார்.

இதுதான் தமிழன் குத்துக்கரணம்  என்பது யெப்பா என்ன நடிப்புடா சாமி 

  • தொடங்கியவர்

பிரபாகரனின் நம்பிக்கைக்கு காத்திரமானவன் நான்: சி.வி.கே.சிவஞானம் தெரிவிப்பு

 
 
பிரபாகரனின் நம்பிக்கைக்கு காத்திரமானவன் நான்:  சி.வி.கே.சிவஞானம் தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நம்பிக்கைக்கு காத்திரமானவன் தான் என வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நம்பிக்கைக்கு காத்திரமான தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லையென தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் கோப்பாய் தொகுதியின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற சமகால அரசியல் கருத்துக்களம் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

1949ஆம் ஆண்டிலிருந்து சமஷ்டி அமைப்பு முறைமையை இலங்கை தமிழரசுக் கட்சி வலியுறுத்தி வந்ததாகவும் கடந்த கால தேர்தல் விஞ்ஞாபனங்களிலும், வடக்கு, கிழக்கு இணைப்பையும், தேசியத்தையும், சுய நிர்ணயத்தையும் தன்னாட்சியையும் வலியுறுத்தி வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடதுசாரி கட்சிகளை சேர்ந்த, ஜயம்பதி விக்ரமரட்ண , லால் விஜேயநாயக்க போன்றோர் அரசியல்  சார்பில் தங்களுடைய நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்கள் ஏற்கக் கூடிய தீர்வையே தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பும் ஏற்கும் என தெரிவித்த தலைவர் இரா.சம்பந்தனுடன் இணைந்து நாம் செயற்பட வேண்டும் என சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/prabagaran-appointend-me-sivaganam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை தமிழர்களுக்கு எதுவுமே செய்யாத தமிழரசுக்கட்சியை அடுத்த தேர்தலில் புறந்தள்ள வேண்டும்.

தாம் மட்டும் தான் தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் என்ற நிலைப்பாட்டை சிதறடிக்க வேண்டும்.

புதிய தலைமுறையினருக்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.

புதிய முன்னெடுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

புதிய அரசியல் இளைஞர்களை உருவாக்க வேண்டும்.

இவர்களை வைத்து இன்னும் தாலாட்டிக்கொண்டிருந்தால்.....

இலங்கையில் தமிழினம் வாழ்ந்தது என்று புத்தகங்களில் மட்டுமே படிக்கமுடியும்.

இது.....
அவர்களின் அரசியல் நாடகங்களை அறிந்தவன் என்ற வகையில்.....

1 hour ago, குமாரசாமி said:

இதுவரை தமிழர்களுக்கு எதுவுமே செய்யாத தமிழரசுக்கட்சியை அடுத்த தேர்தலில் புறந்தள்ள வேண்டும்.

தாம் மட்டும் தான் தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் என்ற நிலைப்பாட்டை சிதறடிக்க வேண்டும்.

புதிய தலைமுறையினருக்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.

புதிய முன்னெடுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

புதிய அரசியல் இளைஞர்களை உருவாக்க வேண்டும்.

இவர்களை வைத்து இன்னும் தாலாட்டிக்கொண்டிருந்தால்.....

இலங்கையில் தமிழினம் வாழ்ந்தது என்று புத்தகங்களில் மட்டுமே படிக்கமுடியும்.

இது.....
அவர்களின் அரசியல் நாடகங்களை அறிந்தவன் என்ற வகையில்.....

கிழிச்சீனம் , தனிழ் தேசியம், மாவீரர்கள் என்று பல இருக்கும் வரை இவர்களுக்கு பிரச்சனை இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.