Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலை நிமிர்வோம்!

Featured Replies

தலை நிமிர்வோம்!

 
 
 

யாழ்ப்பாணம் வந்­தி­ருந்த சிங்­கப்­பூர் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஸ்­ணன் யாழ்ப்­பா­ணத்­த­வர்­களே மறந்­தி­ருந்த அவர்­க­ளின் பெரு­மை­கள் பல­வற்றை மீட்­டுப் பார்த்­தி­ருக்­கி­றார்.

அத்­தோடு ஈழத் தமி­ழர்­க­ளுக்கு உறைக்­கும் விதத்­தில், நீங்­கள் இந்த உல­கத்­தின் மற்­றைய பாகங்­க­ளுக்­கெல்­லாம் உழைத்­துக் கொடுத்­தது போதும், இனி­யா­வது உங்­க­ளுக்­காக உழைக்­கப் பாருங்­கள் என்று குத்­திக்­காட்­டி­விட்­டும் போயி­ருக்­கி­றார்.

இலங்­கை­யின் அர­சி­யல் பொரு­ளா­தா­ரத்­தில் அடிக்­கடி உச்­ச­ரிக்­கப்­ப­டும் ஒரு சொற்­றொ­டர், ‘‘ஒரு காலத்­தில் இலங்­கை­யைப் போன்று வள­ர­வேண்­டும் என்று சொல்­லிக் கொண்­ டிருந்­தது சிங்­கப்­பூர், இன்றோ சிங்­கப்­பூ­ரைப் போன்று வளர ­வேண்­டும் என்று சொல்­லும் நிலை­யில் நாம் இருக்­கின்­றோம்’’ என்­ப­து­தான்.

கொழும்­பில் இருந்­த­படி போருக்­குத் தலைமை­ யேற்று ஒரு குரு­திச் சக­தியை இலங்­கை­யில் உரு­வாக்­கிய சகல தலைவர்களும் ஏதா­வது ஒரு சந்­தர்ப்­பத்­தில் இத­னைக் கூறித்­தான் இருக்­கி­றார்­கள்.

அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஸ்­ணன் கூறி­யது முற்­றி­லும் சரி­யா­னது. ஒரு காலத்­தில் தெற்­கா­சி­யா­வி­லேயே அதி­கம் படித்த சமூ­க­மா­கத் தமிழ் இனம்­தான் இருந்­தது.

இலங்­கை­யைப் பார்த்து சிங்­கப்­பூர் வளர்ந்­தது மட்­டு­மல்ல, அந்த நாட்­டைக் கட்டி வளர்ப்­ப­தற்­கான அடித்­த­ளத்தை இட்ட ­வர்­க­ளில் தமி­ழர்­க­ளுக்­கும் மிகக் கணி­ச­மான பங்கு இருக்­கி­றது என்று ஆணித்­த­ர­மா­கத் தெரி­வித்­தி­ருக்­கி­றார் அமைச்­சர் விவி­யன். அதி­லும் குறிப்­பா­கக் கல்வி, மருத்­து­வம், வீதிக் கட்­ட­மைப்பு என்­ப­வற்­றின் பிதா­ம­கர்­கள் தமி­ழர்­கள்­தான் என்ற உண்­மை­யை­யும் அவர் போட்­டு­டைத்­தி­ருக்­கி­றார்.

இங்­கி­ருந்து சென்ற தமி­ழர்­கள் பலரே சிங்­கப்­பூரை இந்­த­ அள­வுக்கு வளர்த்­தெ­டுத்­தார்­கள் என்­றால், தம்மை அர­வ­ணைத்­துச் செல்­லும் ஒரு அரசு கொழும்­பில் இருந்­தி­ருந்­தால் இலங்­கை­யை­யும் அவர்­கள் எவ்­வ­ளவு தூரத்துக்கு வளர்த்­து­விட்­டி­ருப்­பார்­கள் என்ற சிந்­தனை, விவி­ய­னின் பேச்­சைக் கேட்­ட­தும் ஒரு கணம் மின்­சா­ர­மா­கத் தாக்­கு­கின்­றது.

சிங்­கப்­பூ­ரில் மட்­டு­மல்ல 19ஆம் நூற்­றாண்­டு­க­ளில் மலே­சியா உள்­ளிட்ட பல நாடு­ளி­லும் நிர்­வா­கத்­தில் சிறந்து விளங்­கி­ய­ வர்­கள் தமி­ழர்­களே. கல்­வியே இனி­வ­ரும் காலத்­தில் பலம் என்று உல­கம் மாறி வந்த காலத்­தில் அத­னோடு ஒத்­தி­சைந்து ஓடி தம்­மை­யும் தாம் சென்ற இடங்­க­ளை­யும் வளர்த்­த­வர்­கள் தமி­ழர்­கள்.

துர­தி­ஷ்­ட­வ­ச­மா­கத் தமி­ழ­னின் அந்த அறி­வும், அத­னால் அவ­னுக்­குக் கிடைத்த அதி­கா­ர­முமே இலங்­கை­யில் அவன் மேல் வெறுப்­பும் இனத்­து­வே­ச­மும் மேலோங்­கக் கார­ண­மா­கி­யது என்­ப­தும், அத­னால் இலங்கை கெட்­டுக் குட்­டிச் சுவ­ரா­கிப் போனது என்­ப­தும் மறக்க முடி­யாத, மறக்­கப்­ப­டக்­கூ­டாத தனிக் கதை.

தமி­ழர்­க­ளின் பலம் என்ன என்­ப­தை­யும், அதனை நாம் பயன்­ப­டுத்­தா­ம­லேயே காலத்தை வீண­டிக்­கின்­றோம் என்­ப­தை­யும் எமக்கு நாசுக்­கா­கக் குத்­திக்­காட்­டி­விட்­டுச் சென்­றி­ருக்­கி­றார் அமைச்­சர் விவி­யன்.

அவர் தெளி­வா­கக் குறிப்­பி­டுகி ­றார், ‘‘உல­கத்­திற்­குச் சேவை­யாற்­றக் கிடைத்த பொக்­கி­சமா ­கத் தமி­ழர்­கள் இது­வரை உழைத்­துக் கொடுத்­த­து­போ­தும். உங்­கள் அறி­வும் திற­மை­யும் இனி­மே­லா­வது உங்­களை மேம்­ப­டுத்­த­வும் யாழ்ப்­பா­ணத்தை மேம்­ப­டுத்­த­வும் பயன்­ப­டட்­டும்.

அதற்கு நீங்­கள் தகு­தி­யா­ன­வர்­கள், பொருத்­த­மான­ வர்­கள். அதற்­காக நீங்­கள் நீண்ட காலம் காத்­தி­ருந்­தும் விட்­டீர்­கள். எனவே இனி­யா­வது உங்­கள் அறி­வை­யும் திற­மை­யை­யும் உங்­க­ளுக்­கா­கப் பயன்­ப­டுத்­துங்­கள்’’ என்­கி­றார்.

போரில் இருந்து மீண்டு வரும் ஒரு சமூ­கத்­திற்கு உந்து சக்­தி­ய­ளிக்­கக்­கூ­டிய ஒரு உரை அது. தனது பெரு­மையை, திற­மையை மறந்­தி­ருந்த, தூக்­கத்­தில் ஆழ்ந்­தி­ருந்த சமூ­கத்தைத் தட்­டி­யெ­ழுப்­பும் உரை அது. விவி­யன் அழ­கா­கச் சொன்­னார், நாங்­கள் இப்­போது செய்­வது உங்­கள் மூத்­தோர்­கள் செய்த ­வற்­றுக்­கான கைமாறு; இது வெறும் உத­வியோ தொண்­டுப் பணியோ அல்­ல­வென்று.

அந்த மூத்­தோ­ரின் மூச்­சுக் காற்­றி­லி­ருந்து பலம் பெற்று எழுந்து, நாம் இழந்­து­விட்ட பெரு­மை­க­ளை­யும் திற­மை­க­ளை­யும், திரும்­பப் பெற­வேண்­டும். அனைத்­துத் தமி­ழர்­க­ளும் ஒன்­றி­ணைந்து இப்­போது செய்­ய­வேண்­டி­யது அது­தான். அது­வே­தான் இந்த உல­கின் முன்­னாள் தமி­ழ­னைத் தலை­நி­மிர்ந்து நிற்க வைக்­கும்.

http://newuthayan.com/story/12836.html

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நவீனன் said:

தலை நிமிர்வோம்!

...

சிங்­கப்­பூ­ரில் மட்­டு­மல்ல 19ஆம் நூற்­றாண்­டு­க­ளில் மலே­சியா உள்­ளிட்ட பல நாடு­ளி­லும் நிர்­வா­கத்­தில் சிறந்து விளங்­கி­ய­ வர்­கள் தமி­ழர்­களே. கல்­வியே இனி­வ­ரும் காலத்­தில் பலம் என்று உல­கம் மாறி வந்த காலத்­தில் அத­னோடு ஒத்­தி­சைந்து ஓடி தம்­மை­யும் தாம் சென்ற இடங்­க­ளை­யும் வளர்த்­த­வர்­கள் தமி­ழர்­கள்..

....

http://newuthayan.com/story/12836.html

தமிழர்களின் பங்களிப்பை உணர்ந்தமைக்கு நன்றி ஐயா..! bjr1.gif

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களிடம் உள்ள திறமை தமிழர்களுக்கு உபயோகம் ஆவதில்லை. அதுதான் அவலம். காரணம்.. போட்டி.. பொறாமை.. ஒன்றை மற்றது முன்னேற உதவாதுகள். 

மாற்றார் தலைமையின் கீழ் அடிமையா அடிமாடாக உழைக்கத் தெரிந்த தமிழனுக்கு.. சொந்தத் தலைமைகளை ஏற்றுக் கொண்டு.. சொந்த மண் மக்களுக்காக உழைக்கத் தெரியாது. அதுதான் அவனின் ஆற்றலும் அறிவும் அவனுக்கு உபயோகம் ஆவதில்லை. காட்டிக்கொடுத்தே அதனை கெடுத்துக்குவான். :rolleyes:

என்னதான் தமிழருக்கு அவரின் தவறுகளை உணர்த்தினாலும்.. தமிழர்கள் தமிழர்களுக்காக உழைப்பது என்பது கடினமான ஒன்று அவர்களுக்கு. இந்த நிலை மாறனும் என்பதே எங்கள் விருப்பம். தமிழர்கள் ஒட்டுமொத்தமாகச் சிந்திக்கனும்.. நாம் தமிழர் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு.. தமிழர் நிலங்களில் தமது ஆட்சி அதிகாரங்களை நிறுவி.. அவற்றை.. உய்விக்க பாடுபடனும்.  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நவீனன் said:

நாங்­கள் இப்­போது செய்­வது உங்­கள் மூத்­தோர்­கள் செய்த ­வற்­றுக்­கான கைமாறு; இது வெறும் உத­வியோ தொண்­டுப் பணியோ அல்­ல­வென்று.

தமிழன்டா ....எங்க போனாலும் எழுந்திடுவான்.....நாங்கள் ஐந்தை பத்தை கொடுத்து போட்டு தொண்டு என்று சொல்லிக்கொண்டு திரிகின்றோம்...எங்கன்ட மூத்தோர் நல்ல காரியம் பல செய்துள்ளார்கள்...Jaffna-Fighter_001.jpg

1 minute ago, nedukkalapoovan said:

தமிழர்களிடம் உள்ள திறமை தமிழர்களுக்கு உபயோகம் ஆவதில்லை. அதுதான் அவலம். காரணம்.. போட்டி.. பொறாமை.. ஒன்றை மற்றது முன்னேற உதவாதுகள். 

மாற்றார் தலைமையின் கீழ் அடிமையா அடிமாடாக உழைக்கத் தெரிந்த தமிழனுக்கு.. சொந்தத் தலைமைகளை ஏற்றுக் கொண்டு.. சொந்த மண் மக்களுக்காக உழைக்கத் தெரியாது. அதுதான் அவனின் ஆற்றலும் அறிவும் அவனுக்கு உபயோகம் ஆவதில்லை. காட்டிக்கொடுத்தே அதனை கெடுத்துக்குவான். :rolleyes:

என்னதான் தமிழருக்கு அவரின் தவறுகளை உணர்த்தினாலும்.. தமிழர்கள் தமிழர்களுக்காக உழைப்பது என்பது கடினமான ஒன்று அவர்களுக்கு. இந்த நிலை மாறனும் என்பதே எங்கள் விருப்பம். தமிழர்கள் ஒட்டுமொத்தமாகச் சிந்திக்கனும்.. நாம் தமிழர் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு.. தமிழர் நிலங்களில் தமது ஆட்சி அதிகாரங்களை நிறுவி.. அவற்றை.. உய்விக்க பாடுபடனும்.  :rolleyes:

அடுத்த தலைமுறை மாறும் என்ற நம்பிக்கையில் முடிந்த வரை வாழ்வோம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது....ஆனால் இன்று வெறும் பங்களிப்பாளர்களாகவும், பார்வையாளர்களாகவும் மட்டுமே வாழ்கின்றோம். சரியாக சொல்வதென்றால் யோசியக்காரர்களின் கூண்டில் இரண்டு நெல்மணிகளோடு திருப்தியடையும் கிளிகள் போல் முதலாளித்துவ நாடுகளின் சிறப்பான பணியாளர்களாக , வேலையாட்களாக வாழப் பழகிவிட்டோம்....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.