Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நல்லூர் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபருக்கு மனைவி கொடுத்த பார்சலில் ‘ரெஸ்ரர்’

Featured Replies

நல்­லூர் துப்­பாக்­கிச் சூடு – சந்­தே­க­ந­ப­ருக்கு மனைவி கொடுத்த பார்­ச­லில் ‘ரெஸ்­ரர்’

 
நல்­லூர் துப்­பாக்­கிச் சூடு –  சந்­தே­க­ந­ப­ருக்கு மனைவி கொடுத்த பார்­ச­லில் ‘ரெஸ்­ரர்’

நல்­லூ­ரில் நடந்த துப்­பாக்­கிச் சூட்­டின் முதன்­மைச் சந்­தேக நபர் என்று பொலி­ஸா­ரால் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட சிவ­ராசா ஜெயந்­த­னுக்­குக் கொடுப்­ப­தற்­காக அவ­ரது மனைவி கொண்டு வந்த பார்­ச­லில் இருந்து மின்­சா­ரக் கடத்­த­லைப் பரி­சோ­திப்­ப­தற்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டும் ’ரெஸ்­ரர்’, சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளால் மீட்­கப்­பட்டுள்­ளது. இத­னை­ய­டுத்து ஜெயந்­த­னின் மனைவி சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளால் எச்­ச­ரிக்­கப்­பட்­டார்.

நல்­லூர் கோயில் பின் வீதி­யில் கடந்த சனிக்­கி­ழமை, யாழ்ப்­பா­ணம் மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யனை இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தில், அவ­ரது மெய்ப்­பா­து­கா­வ­லர் உயி­ரி­ழந்­தி­ருந்­தார். இந்­தச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய முதன்­மைச் சந்­தேகநபர் பொலி­ஸா­ரால் தேடப்­பட்டு வந்த நிலை­யில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் சர­ண­டைந்­தி­ருந்­தார். நீதி­வான் முன்­னி­லை­யில் முற்­ப­டுத்­தப்­பட்டு எதிர்­வ­ரும் 8ஆம் திகதி வரை­யில் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார்.

யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­லை­யில் தனிச் சிறை­யில் அவர் அடைக்­கப்­பட்­டுள்­ளார். இவ­ரைப் பார்ப்­ப­தற்கு இவ­ரது மனைவி கடந்த வியா­ழக்­கி­ழமை, யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­லைக்­குச் சென்­றுள்­ளார்.

அவர் கொண்டுசென்ற பொதி­க­ளைச் சிறைக்­கா­வ­லர்­கள் சோத­னை­யிட்­டுள்­ள­னர். உடுப்­பு­க­ளுக்­குள்­ளி­ருந்து ‘ரெஸ்­ரர்’ (மின்­சா­ரக் கடத்­த­லைப் பரி­சோ­திக்­கும் கருவி) மீட்­கப்­பட்­டுள் ளது. சந்­தேக நப­ரின் மனை­வி­யைச் சிறைக்­கா­வ­லர்­கள் கடு­மை­யாக எச்­ச­ரித்­துள்­ள­னர். அத்­து­டன் சிறைக்கு வந்து அவ­ரது கண­வ­ரைப் பார்­வை­யி­டு­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டு உள்­ள­தாகச் சிறைச்­சாலை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

http://uthayandaily.com/story/14973.html

  • தொடங்கியவர்

சிறைக்குள் ரெஸ்ரர் கடத்தல் – நல்லூர் துப்பாக்கி சூட்டு சந்தேகநபரின் மனைவிக்கு கணவரை பார்க்க ஒருவருட தடை

jeyanthan.jpg
நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபருக்கு அவரது மனைவி ரெஸ்­ரர்  (மின்சாரம் பரிசோதிக்கும் கருவி ) ஒன்றினை பொதிக்குள் வைத்து கொடுக்க முயன்ற வேளை சிறைசாலை காவலர்களால் அது கைப்பற்றப்பட்டு உள்ளது.
 
யாழ்.சிறைச்சாலையில் தனி சிறைகூடத்திலேயே சந்தேகநபர் தனி நபராக தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். அந்நிலையில் சந்தேகநபரின் மனைவி சிறையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவருக்கு உடைகளை வழங்க பொதி செய்து சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களிடம் கையளித்துள்ளார்.
 
 
அந்த பொதியினை சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் சோதனையிட்ட போது, அதனுள் இருந்து ரெஸ்­ரர் (மின்சாரம் பரிசோதிக்கும் கருவி ) ஒன்று மீட்கப்பட்டது.
 
 
அதனை தொடர்ந்து மனைவியை கடுமையாக எச்சரித்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் , கணவனை பார்க்க சிறைக்கு வருவதற்கும் தடை விதித்துள்ளனர்.
 
பின்னணி. 
 
நல்லூர் பின் வீதியில் கடந்த 22ஆம் திகதி மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்து இருந்ததுடன் , மற்றுமொரு மெய் பாதுகாவலர் காயமடைந்திருந்தார்.
 
 
அந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சிவராசா ஜெயந்தன் கடந்த 25ஆம் திகதி யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அதனை அடுத்து குறித்த நபரை யாழ்.நீதவான் முன்னிலையில் போலீசார் முற்படுத்திய போது சந்தேக நபரை எதிர்வரும் 8ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு இட்டு இருந்தார்.

http://globaltamilnews.net/archives/34810

27 minutes ago, நவீனன் said:

சிறைக்குள் ரெஸ்ரர் கடத்தல் – நல்லூர் துப்பாக்கி சூட்டு சந்தேகநபரின் மனைவிக்கு கணவரை பார்க்க ஒருவருட தடை

ஆமா இவர் முன்னாள் புலியின் எத்தனையாவது மனைவி 

1 hour ago, ஜீவன் சிவா said:

ஆமா இவர் முன்னாள் புலியின் எத்தனையாவது மனைவி 

நீங்க உங்க  வீட்டில் எத்தனையாவதோ அதற்கு அடுத்ததாக இருக்கலாம். நீங்க guess பண்ணிய மாதிரி ஒரு guess தான். 

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கு கொஞ்சக் காலம் வால் பிடிச்சிட்டு.. ஈபிடிபி.. புளொட் ஒட்டுக்குழுக்களில் 10 வருசம் இருந்தவன் எல்லாம் இப்ப முன்னாள் புலி தாப்பா. அவனுக்கு எத்தனை மனைவி என்று ஆராய்வதற்கு என்று சில முன்னாள் அசைலக் கேசுகள்.. இப்போ.. சொறீலங்கா மீது தீவிர காதல் கொண்டு அங்க போய் நிற்கினம். என்னத்திற்கு.. கட்டுக்காவல் இல்லாத சூழலில்.. மேயுறத்திற்காகவா..???! tw_blush::rolleyes:

7 hours ago, trinco said:

நீங்க உங்க  வீட்டில் எத்தனையாவதோ அதற்கு அடுத்ததாக இருக்கலாம். நீங்க guess பண்ணிய மாதிரி ஒரு guess தான். 

அப்ப எட்டாவதா :grin:

2 hours ago, nedukkalapoovan said:

சொறீலங்கா மீது தீவிர காதல் கொண்டு அங்க போய் நிற்கினம். என்னத்திற்கு.. கட்டுக்காவல் இல்லாத சூழலில்.. மேயுறத்திற்காகவா..???! tw_blush::rolleyes:

ஆமா நீங்களும்தான் கட்டுக்காவல் இல்லையெண்டு இஞ்ச வந்து மேஞ்சது மறந்திட்டுதாக்கும் :grin::grin:

மேஞ்சு முடிஞ்சதும் 42 புல்லும் சரியில்லை எண்டு கத்தினது இப்பவும் எதிரொலிக்குது. :grin::grin::grin:

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஜீவன் சிவா said:

ஆமா இவர் முன்னாள் புலியின் எத்தனையாவது மனைவி 

என் இந்தக் கேள்வி??? ..................... அவர் உள்ளே என்பதால் இடையில் புகுந்து ஆட்டைய போடவா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.