Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஊழியர்கள்

Featured Replies

அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஊழியர்கள்
 

-நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என்.நிபோஜன்

நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் ஊழியர்கள், தாங்கள் வழங்கும் கடன்களை அறவிடும் போது, மக்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வதாக. பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.  

அண்மையில் ஊற்றுப்புலம் கிராமத்துக்குச் சென்ற கிளிநொச்சியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் கடன் அறவிடும் ஊழியர் ஒருவர், அன்றைய மாதாந்தக் கடன் தவணைப் பணத்தை மீளச் செலுத்தத் தவறிய ஒருவரை, பணத்தைக் கட்ட தகுதியில்லை என்றால், பிச்சை எடுத்துக் கட்டுமாறு, உரத்த குரலில் தெரிவித்துள்ளார்.  

இது மாத்திரமன்றி பல கிராமங்களில் அலுவலக நேரங்கள் தவிர்ந்த நேரங்களில் செல்லும் நிதி நிறுவன ஊழியர்கள் மக்களிடம் சண்டியர்கள் போல் நடந்துகொள்வதாகவும், வீட்டுப் பாவனைப் பொருட்களைத் தூக்கிச் செல்லப் போவதாக மிரட்டுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/அநாகரிகமாக-நடந்து-கொள்ளும்-ஊழியர்கள்/71-202571

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நாகரீகமான செயல் இல்லை. ஆனாலும் மற்றவனைப்போல் வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மட்டும் இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

இது ஒரு நாகரீகமான செயல் இல்லை. ஆனாலும் மற்றவனைப்போல் வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மட்டும் இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

அது இல்லை விசயம், சுவை.

இலங்கை, இந்தியாவில் இங்குள்ளது போல் கிரெடிட் ரெபெரென்ஸ் ஏஜென்சி இன்னும் வளரவில்லை. அதனால், கடன் கொடுப்பது, வசூலிப்பது மிகவும் கடினமானது. 

இங்கே நன்கு வளர்ந்து இருப்பதால், அரசு அறவிடும் முறைகளை கட்டுப்படுத்துகிறது. அதாவது ரிஸ்க் குறித்து, கிரெடிட் ரெபெரென்ஸ் ஏஜென்சி தகவலை வைத்து அளவிட்டு கொடுத்தாயானால், வசூலிப்பதில் கடுமை காட்டிட தேவை இல்லை என்பது சட்டம். அதாவது, வேலில போன ஓணானை சடடைக்குள் போட்டு விட்டு, பிறகு குத்துது, குடையுது என்று குளறாதே என்பதே அரச நிலைப்பாடு.

அங்கு அரசு இப்போது சட்டம் போட்டால், கடன் கொடுப்பதே நின்று விடும். இது பொருளாதார வளர்ச்சிக்கு பிரச்னை.

தொழில் செய்ய கடன் வாங்கி கையை சுட்டிருந்தால் தவறு இல்லை. ஆடம்பரத்துக்கு வாங்குவது தான் தவறு.

மற்றவனைப்போல் வாழ வேண்டும் என்று நினைப்பதில் பிழை இல்லையே. ஆனால் அடுத்தவனை போல வாழ, கடன் வாங்குவது தான் பிழை. இல்லையா?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

அது இல்லை விசயம், சுவை.

இலங்கை, இந்தியாவில் இங்குள்ளது போல் கிரெடிட் ரெபெரென்ஸ் ஏஜென்சி இன்னும் வளரவில்லை. அதனால், கடன் கொடுப்பது, வசூலிப்பது மிகவும் கடினமானது. 

இங்கே நன்கு வளர்ந்து இருப்பதால், அரசு அறவிடும் முறைகளை கட்டுப்படுத்துகிறது. அதாவது ரிஸ்க் குறித்து, கிரெடிட் ரெபெரென்ஸ் ஏஜென்சி தகவலை வைத்து அளவிட்டு கொடுத்தாயானால், வசூலிப்பதில் கடுமை காட்டிட தேவை இல்லை என்பது சட்டம். அதாவது, வேலில போன ஓணானை சடடைக்குள் போட்டு விட்டு, பிறகு குத்துது, குடையுது என்று குளறாதே என்பதே அரச நிலைப்பாடு.

அங்கு அரசு இப்போது சட்டம் போட்டால், கடன் கொடுப்பதே நின்று விடும். இது பொருளாதார வளர்ச்சிக்கு பிரச்னை.

தொழில் செய்ய கடன் வாங்கி கையை சுட்டிருந்தால் தவறு இல்லை. ஆடம்பரத்துக்கு வாங்குவது தான் தவறு.

மற்றவனைப்போல் வாழ வேண்டும் என்று நினைப்பதில் பிழை இல்லையே. ஆனால் அடுத்தவனை போல வாழ, கடன் வாங்குவது தான் பிழை. இல்லையா?

இதுதான் இங்கே நடக்கிறது ....
அடுத்த வீட்டு பெண்ணை போல விலையுயர்ந்த சேலை அணியவேண்டும் என்றால்  பரவாயில்லை ஆனால் கடன் வாங்கி அணிவதுதான் பிரச்சினை இப்படி அணிந்தே நடுத்தெருவிட்கு வந்த குடும்பம் ஒன்றும் எனக்கு அருகாமையில் வசிக்கின்றனர். அண்மையில் தான் சொந்தவீட்டை விற்று 
வாங்கிய வட்டி அதுபோட்ட குட்டியெல்லாம் அடைத்து வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர். ஆனால் வாங்கிய கை சும்மா இருக்குமா 
தற்போதும் தொடர்வதாக கேள்வி                                         

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை குற்றம் சொல்ல இயலாது ஏனென்றால் அந்த நிறுவனம் வழங்கிய  காசை கலக்சன் பண்ணிக்கொடுத்தால் தான் அவர்களுக்கு சம்பளம் ஆனால் அவர்கள் பச்சை பச்சை திட்டி தீர்த்தாலும் அந்த நிறுவன வாசலிலே மக்கள் கூட்டம் தின ம்தோறும் பார்க்கிறேன் . எல்லாம் ஆசை என்ன செய்வது  ஓடி ஒளிதல் பிறகு தற்கொலை இதுதான் நடந்தது நடக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

அது இல்லை விசயம், சுவை.

இலங்கை, இந்தியாவில் இங்குள்ளது போல் கிரெடிட் ரெபெரென்ஸ் ஏஜென்சி இன்னும் வளரவில்லை. அதனால், கடன் கொடுப்பது, வசூலிப்பது மிகவும் கடினமானது. 

இங்கே நன்கு வளர்ந்து இருப்பதால், அரசு அறவிடும் முறைகளை கட்டுப்படுத்துகிறது. அதாவது ரிஸ்க் குறித்து, கிரெடிட் ரெபெரென்ஸ் ஏஜென்சி தகவலை வைத்து அளவிட்டு கொடுத்தாயானால், வசூலிப்பதில் கடுமை காட்டிட தேவை இல்லை என்பது சட்டம். அதாவது, வேலில போன ஓணானை சடடைக்குள் போட்டு விட்டு, பிறகு குத்துது, குடையுது என்று குளறாதே என்பதே அரச நிலைப்பாடு.

அங்கு அரசு இப்போது சட்டம் போட்டால், கடன் கொடுப்பதே நின்று விடும். இது பொருளாதார வளர்ச்சிக்கு பிரச்னை.

தொழில் செய்ய கடன் வாங்கி கையை சுட்டிருந்தால் தவறு இல்லை. ஆடம்பரத்துக்கு வாங்குவது தான் தவறு.

மற்றவனைப்போல் வாழ வேண்டும் என்று நினைப்பதில் பிழை இல்லையே. ஆனால் அடுத்தவனை போல வாழ, கடன் வாங்குவது தான் பிழை. இல்லையா?

உதைத்தான் நானும் சொன்னனான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சர்வதேச நடைமுறை பிரச்சனையை எமது மக்களின் கேவலம் மாதிரி இங்கே ஓரிருவர் விபரிக்க முற்படுவது கவலைக்குரியது.

வெளிநாடுகளில் வங்கியில் கடன் எடுக்காமல் வீடு,கார் வசதிகளோடு வாழுபவர்கள் எத்தனை பேர் என கணக்கெடுத்தால் அத்தனையும் பிச்சைக்காரன் வாந்தியெடுத்தது போல் இருக்கும்.
டொனால்ட் ரம்ப் கடனோடை காலம் தள்ளினால் ஆகா ஓகோ.
ஆனால்....
பக்கத்து வீட்டு தம்புவாத்தியார் கடன் கட்டேலாமல்  தள்ளாடினால் அசிங்கம்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.