Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விக்னேஸ்வரா கல்லூரிக்கு வந்த இந்திய விமானப் படையின் ஓய்வு பெற்ற அதிகாரி

Featured Replies

விக்னேஸ்வரா கல்லூரிக்கு வந்த இந்திய விமானப் படையின் ஓய்வு பெற்ற அதிகாரி

 
 
விக்னேஸ்வரா கல்லூரிக்கு வந்த இந்திய விமானப் படையின் ஓய்வு பெற்ற அதிகாரி
 Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இந்திய விமானப் படையின் ஓய்வு பெற்ற கமாண்டர் ரஞ்சன் காந்தி இன்று கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரிக்கு வருகை தந்தார்.

1929 ஆம் ஆண்டு முதல் 1942 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் இவரது பேரன் அச்சுதன்பிள்ளை அதிபராகக் கடமையாற்றினார் என்றும், அதன் நினைவாக இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. இலங்கை விமானப் படையினர் ஊடாக இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பாடசாலை வளாகத்தையும், கற்றல் செயற்பாடுகளையும் பார்வையிட்ட ரஞ்சன் காந்தி தனது பேரனின் ஒளிப்படத்தை பாடசாலைக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.

தனது தந்தையும் தனது உறவினர்களில் பலரும் இந்தப் பாடசாலையில் கல்வி கற்றிருந்தனர் என்றும், அதனால் தான் இந்தப் பாடசாலைக்கு வர வேண்டும் என்று விருப்புக் கொண்டிருந்தேன் என்றும் ரஞ்சன் காந்தி குறிப்பிட்டார்.

image-0-02-06-816e41246df64ad861624cf07eimage-0-02-06-6cb267f0cf6f5a3344195cfe0d

http://newuthayan.com/story/26404.html

  • கருத்துக்கள உறவுகள்

அனுமான் அன்று பறந்து வந்தார்...இவர் இப்ப பறந்து வாரார்....அப்படி என்னதான் லங்காபுரியில் கொட்டிகிடக்கு:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கனபேர் எங்களட்டப் படிச்சிட்டு தான் எங்களுக்கு குண்டு போட உதவி செய்திருக்காங்க. இப்ப நன்றிக்கடன் செலுத்தினமாம். :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nedukkalapoovan said:

கனபேர் எங்களட்டப் படிச்சிட்டு தான் எங்களுக்கு குண்டு போட உதவி செய்திருக்காங்க. இப்ப நன்றிக்கடன் செலுத்தினமாம். :rolleyes::unsure:

அப்படி சொல்ல முடியாது நெடுக்கர்.

யாழ் இந்து அதிபர்களாக ராவ் காரர்கள் அதாவது தெலுங்கர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களும், இந்த அச்சுதானந்தன் போன்ற மலையாளிகள், ரத்னாயக்க போன்ற பல சிங்களவர்களும் பிரிட்டிஷ் காலத்தில், குடாநாட்டின் அமெரிக்கன் மிஷன் பாடசாலைகளில், லண்டன் மெட்ரிகுலேஷன் படிக்க வந்தவர்கள். சிறப்பாக படித்தவர்கள் அங்கேயே வேலை எடுத்து தங்கி விட்டனர் 

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Nathamuni said:

அப்படி சொல்ல முடியாது நெடுக்கர்.

யாழ் இந்து அதிபர்களாக ராவ் காரர்கள் அதாவது தெலுங்கர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களும், இந்த அச்சுதானந்தன் போன்ற மலையாளிகள், ரத்னாயக்க போன்ற பல சிங்களவர்களும் பிரிட்டிஷ் காலத்தில், குடாநாட்டின் அமெரிக்கன் மிஷன் பாடசாலைகளில், லண்டன் மெட்ரிகுலேஷன் படிக்க வந்தவர்கள். சிறப்பாக படித்தவர்கள் அங்கேயே வேலை எடுத்து தங்கி விட்டனர் 

இருந்தாலும்.. இவர்கள் எல்லாம்.. தாம் கற்ற.. பணியாற்றிய கல்விக்கூடங்கள்.. போரால் நிலைகுலைந்து நின்ற போது உதவி செய்ய வரவில்லை.  ஏன் துன்பங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வரவில்லை. இப்ப விடுப்புக்கு வருவது ஏனோ..??! அதுதான் ஆதங்கம். :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழிலிருந்து வந்தவைதானே தெலுங்கு, மலையாளம், சிங்களம் எல்லாம்.... பெற்றவரை அனாதையாக்கி இல்லங்களில் தள்ளிவிடுவது ஒன்றும் புதுமையாகவோ, புதிதாகவோ வந்துவிடவில்லை. :( 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nedukkalapoovan said:

இருந்தாலும்.. இவர்கள் எல்லாம்.. தாம் கற்ற.. பணியாற்றிய கல்விக்கூடங்கள்.. போரால் நிலைகுலைந்து நின்ற போது உதவி செய்ய வரவில்லை.  ஏன் துன்பங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வரவில்லை. இப்ப விடுப்புக்கு வருவது ஏனோ..??! அதுதான் ஆதங்கம். :rolleyes:tw_angry:

அப்படி வந்த பலர் இன்று 'பச்சை' தமிழராக மாறியே விட்டனர். திரும்பி சென்றவர்களின் வாரிசே வந்தார்.

கனகாலத்துக்குப் பிறகு நெடுக்கரின் வாரிசு யாழ் இந்து போய், என் தாத்தா படிச்ச பள்ளிக்கூடம் என்று புளங்காகிப்பது போல் தான்.

எத்தனை தமிழர்கள், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு பகுதியில், 'சிங்களவராக' மாறியுள்ளனர் தெரியுமா.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

அப்படி வந்த பலர் இன்று 'பச்சை' தமிழராக மாறியே விட்டனர். திரும்பி சென்றவர்களின் வாரிசே வந்தார்.

கனகாலத்துக்குப் பிறகு நெடுக்கரின் வாரிசு யாழ் இந்து போய், என் தாத்தா படிச்ச பள்ளிக்கூடம் என்று புளங்காகிப்பது போல் தான்.

எத்தனை தமிழர்கள், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு பகுதியில், 'சிங்களவராக' மாறியுள்ளனர் தெரியுமா.

பூர்வீகச் சிங்களரை விடவும், சிங்களராக மாறியுள்ளவர்களால்தான் ஆபத்து அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Paanch said:

பூர்வீகச் சிங்களரை விடவும், சிங்களராக மாறியுள்ளவர்களால்தான் ஆபத்து அதிகம்.

அதுதான் பார்கிறோமே....

தச'நாயக்க', விக்கிரம'நாயக்க', பண்டார'நாயக்க', எக்க'நாயக்க', திச'நாயக்க', குமார'நாயக்க'..... எல்லா தெலுங்கு நாயக்கர்மாரும் இன்று சிங்களவர்களிலும் பார்க்க, அதிதீவிர சிங்களவர்களாக தமிழருக்கு எதிராக வேலை செய்கின்றனர்.

சரத் பொன்சேகா ஒரு சிங்களவராகிவிட்ட மலையாளி வம்சாவழி. இவர்களின் வழிவந்த இன்னுமோர் மலையாளி எம்ஜிஆர் தமிழகம் சென்று ஆண்டார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

. இப்ப விடுப்புக்கு வருவது ஏனோ..??! அதுதான் ஆதங்கம். :rolleyes:tw_angry:

உது விடுப்புக்கு வந்த விடயமாக தெரியவில்லை...முன்னாள் விமானப்படை அதிகாரிக்கு பின்னால் என்ன ராஜதந்திர புலானாய்வுகள் இருக்கோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.