Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருபதுக்கு 20 போட்டியில் நாணய சுழற்சியில் சூழ்ச்சி ; இலங்கை அணிக்கு நடந்த அநீதி (வீடியோ இணைப்பு)

Featured Replies

இருபதுக்கு 20 போட்டியில் நாணய சுழற்சியில் சூழ்ச்சி ; இலங்கை அணிக்கு நடந்த அநீதி (வீடியோ இணைப்பு)

 

 
 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற இருபதுக்கு இருபது போட்டியின் போது நாணய சுழற்சியில் இலங்கை அணியே வெற்றிப் பெற்றதாகவும், அதை இந்திய அணிக்கு வழங்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் வர்ணனையாளர் முரளி கார்த்திக்கால் இந்த நாணய சுழற்சி மேற்கொள்ளப்பட்ட போது,உபுல் தரங்க நாயணத்தை சுழற்றிய வேளையில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி தலையென (HEAD) என கோரினார்.

பின்னர், போட்டி தீர்மானிப்பாளரான ஹேன்ட் பிக்ரொப்ட் பூ (TRAIL) என அறிவித்து உபுல் தரங்கவை நோக்கி கையை காட்டினார்.எனினும், மீண்டும் அவர் எதையோ கூற முயற்சித்த போதும், வர்ணனையாளரான முரளி கார்த்திக் தலை (IT'S HEAD) என அறிவித்து கோலி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் முதலில் களத்தடுப்பினை தெரிவுசெய்தார். எனினும்,இலங்கை அணித்தலைவர் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்றிருந்தால் முதலில் களத்தடுப்பினை தெரிவுச்செய்யவே இருந்ததாக வர்ணணையாளரிடம் தெரிவித்திருந்தார்.

குறித்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.இருபதுக்கு20  போட்டிகளின் போது நாணய சுழற்சியின் வெற்றியானது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/24123

  • தொடங்கியவர்

நாணயச்சுழற்சியின் பின்னணியில் இருக்கும் மர்மமென்ன ? 

 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு - 20 போட்டியில் இடம்பெற்ற நாணயச்சுழற்சியின் சூழ்ச்சி தொடர்பில் இலங்கை அணித் தலைவர் உபுல் தரங்க கருத்து வெளியிட்டுள்ளார்.

india.jpg

இரு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு - 20 போட்டி கடந்த 6 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

 

போட்டியின் நாணயச் சுழற்சியின் போது தொகுப்பாளராக கடமை புரிந்தது இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி கார்த்திக் ஆவார். போட்டித் தீர்ப்பாளராக அன்டி பைகுரேப்ட் கடமை புரிந்தார்.

 

 

நாணயத்தை இலங்கை அணித்தலைவர் சுண்டும் போது தலை என இந்திய அணியின் தலைவர் விராட் கோலி கேட்டுக் கொண்டார். 

எனினும் சுண்டப்பட்ட நாணயம் சற்று தூரம் சென்றதால், அவ்விடத்துக்கு சென்ற போட்டித் தீர்ப்பாளர் 'பூ' எனத் தெரிவித்தார். 

அதற்கிடையில் குறுக்கிட்ட முரளி கார்த்திக் அது தலையெனத் தெரிவித்து, தனது கையில் இருந்து ஒலிவாங்கியை உடனடியாக கோலியிடம் நீட்டினார்.

அப்போது உடனடியாக போட்டித் தீர்ப்பாளர்  முன்வந்து கையை நீட்டியபோதும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இலங்கை அணியின் தலைவரும் எவ்வித அவதானமுமில்லாது கோலியை முன்னுக்கு வருவதற்கு இடமளித்து விட்டு பின் நகரந்து சென்று விட்டார்.

குறித்த காணொளி இணையத்தளங்களில் வைரலாக பரவிவருவதையடுத்து சம்பவம் தொடர்பில் இலங்கை அணித் தலைவர் உபுல் தரங்க கருத்து வெளியிட்டுள்ளார்.

 

“நாணயச் சுழற்சியின் முடிவை போட்டியின் தீர்ப்பாளர் சரியாகத் தான் தெரிவித்திருந்தார். ஆனால் அறிவிப்பாளர் நாணயச்சுழற்சியின் முடிவை பிழையாக அறிவித்து” விட்டார் என தரங்க தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் ஐ.சி.சி.யோ இலங்கை கிரிக்கெட் சபையோ அல்லது இந்திய கிரிக்கெட் சபையோ எவ்வி நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பதுடன் அங்கு அருகிலிருந்த இந்திய அணியின் தலைவர் விராட் கோலிக்குகூட விளங்கவில்லையாவென கிரிக்கெட் ஆர்வர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

 

இதேவேளை, போட்டியின் தீர்ப்பாளர் அதனை மாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தும் அவரும் அந்த நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/24160

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணி தோற்றதற்கு நல்லதொரு காரணம் கண்டுபிடித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கை அணி தோற்றதற்கு நல்லதொரு காரணம் கண்டுபிடித்துள்ளனர்.

இல்லை இது ஒரு பெரிய மோசடி.ஆனால் இதை செய்ததது தமிழ் நாட்டு வீரர்.அதால அவர் தன் இனத்தின் எதிரியை பழி வாங்கிட்டார் என்டு வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா முதல் ஓவரிலேயே 6 விக்கட்டை சரித்திருப்பாங்க, 

அறிவிப்பாளர் பிழை விடுகிறார் என்று தெரிந்தும் தட்டிக்கேட்க திரணியில்லாத அணித்தலைவர்.

  • தொடங்கியவர்

இலங்கை அணி தலைவர் திரணி இல்லாதவர்.. சரளமாக ஆங்கிலம் கதைக்க தெரியாதவர்.

இந்திய அணி தலைவர் நேர்மை இல்லாதவர்..  இப்படியே சொல்லி கொண்டு போகலாம்.

முரளி கார்த்திக் வேண்டும் என்றே முடிவை மாற்றி விட்டார். (நான் நம்பவில்லை அதை. காரணம் இது அவர்களது தொழில். இப்படியான தவறுகளால் இனிமேல் போட்டிகளில் வாய்ப்பு வராது)

 

போட்டி நடுவர்   Andy Pycroft   ஏன் உடனே தடுத்து நிறுத்தவில்லை? அவரது வாயில் என்ன கொழுக்கட்டையா இருந்தது..:unsure:

முரளி கார்த்திக் அறிவிப்பாளர்.  அவரால் எந்த முடிவும் எடுக்க முடியாது.

போட்டி நடுவர் தலையிட்டு முடிவை மாற்றி இருக்க வேண்டும். அதுதான் நியாயம், போட்டிக்கு அழகு.

ICC இதுவரை இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தது? :rolleyes:

Edited by நவீனன்
எழுத்து பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக மைதானத்துக்குள் நடுவர்களையும் விளையாடுபவர்களையும் தவிர மற்றவர்களை உள்ளே அனுமதித்ததே தவறு. நாங்கள் டெனிஸ் போலில் விளையாடும்போது கூட தடியுடன் வரும் அம்மாவோ மாமாவோ அந்த ஓவர் முடிந்ததுக்கப்புறம் தான் விட்டுத் துரத்துவார்கள். இந்த அடிப்படை நாகரீகம் கூடவா இவர்களுக்குத் தெரியவில்லை........!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.