Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”பிரபாகரனை எப்போது கொன்றோம்?” மீண்டும் சொல்கிறார் கமால் குணரத்ன!

Featured Replies

”பிரபாகரனை எப்போது கொன்றோம்?” மீண்டும் சொல்கிறார் கமால் குணரத்ன!

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் பயங்கரவாதம் தொடர்பான எந்தவித பிரச்சினைகளும் எழவில்லை என ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், ”கை, கால் என உடல் உறுப்புக்களையும் உணர்ச்சிகளையும் இழந்து எமது இராணுவத்தினர் எதற்காக யுத்தம் செய்தார்கள்? எதற்காக இவ்வளவு துன்பத்தையும் அவர்கள் தாங்கிக்கொண்டார்கள்” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்துவரும் முன்னாள், வன்னி பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த கமால் குணரத்ன என்பவரே இவ்வாறு கூறியுள்ளார்.

 “எலிய - ஒளிமயமான அபிலாசைகள்” என்ற பெயரிலான புதிய அமைப்பை, கோத்தபாய ராஜபக்ச தலைமையில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தமிழ், சிங்களம், முஸ்லிம் என அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இராணுவத்தினர் இத்தனை துயர்களையும் தாங்கிக்கொண்டார்கள். முத்தையா முரளிதரனினதும் சுசந்திகா ஜெயசிங்கவினதும் இலக்குகளையும் சாதனைகளினையும் யாருமே இன்னமும் முறியடிக்கவில்லை என்று பேசிக்கொள்கிறார்கள். ஆனால் எமது இராணுவத்தினரின் சாதனைகள் பற்றி யாருமே பேசுவதில்லை.

வடக்கு தமிழ் மக்களுடன் நாம் இருந்தோம். அவர்களுடைய அபிலாசைகள் பற்றி எமக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் குடும்பத்துடன் வாழ்வதற்கான சந்தோசமான சூழலையையுமே விரும்பினார்கள். அவர்களுக்கு அந்த வாழ்க்கையை மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் நாம் பெற்றுக்கொடுத்தோம்.

மேலும் அவர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தோம், வடக்கில் தற்போது குண்டு வெடிக்கவில்லை, மக்கள் பங்கர்களுக்குள் பயந்து மறையவில்லை. எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கின்றார்கள். கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி காலை 10.30 மணிக்கு வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்றோம். அதன்பின் பயங்கரவாதம் தொடர்பில் எந்த பிரச்சினையும் இதுவரை ஏற்படவில்லை.” எனவும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Says-Kamal-Gunaratne-again

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான் வேதம் ஓதுகிறது.

சந்திரிகா காலத்தில், தமிழர் ஒருவர் IGP வந்துவிட்டார் என, கோபாவேசத்தில் தனது ஓய்வு வரும்வரை 8 மாதம் காத்திருந்து, ஓய்வு கிடைத்தபின்னர், சிங்கள ஹெல உறுமயவில் சேர்ந்து இப்படிதான், பெரும் ஆவேசமாக நாட்டுப்பற்று கொண்டவராக பீத்தினார், கொட்டகடேனிய என்பவர்.

அவர் சந்தர்ப்பவாதி என அறிந்த ஒருவரும் கண்டு கொள்ளாமல் விட்டதால், அவரும் காணாமல் போனார்.

இப்ப இவர்.  tw_confused:

5 minutes ago, Nathamuni said:

சாத்தான் வேதம் ஓதுகிறது.

சந்திரிகா காலத்தில், தமிழர் ஒருவர் IGP வந்துவிட்டார் என, கோபாவேசத்தில் தனது ஓய்வு வரும்வரை 8 மாதம் காத்திருந்து, ஓய்வு கிடைத்தபின்னர், சிங்கள ஹெல உறுமயவில் சேர்ந்து இப்படிதான், பெரும் ஆவேசமாக நாட்டுப்பற்று கொண்டவராக பீத்தினார், கொட்டகடேனிய என்பவர்.

அவர் சந்தர்ப்பவாதி என அறிந்த ஒருவரும் கண்டு கொள்ளாமல் விட்டதால், அவரும் காணாமல் போனார்.

இப்ப இவர்.  tw_confused:

ஒன்றுமில்லை, மகிந்த்வின் ஆட்சி காலத்து ராஜாக்கள் எல்லாம் ஒவொர்வராக வழக்குகளை சந்திக்க ஆரம்பித்து உள்ளனர், அதான் இந்த்தால் பிரபாகரனை காட்டி மக்கள் மத்தியில் அனுதாபத்தை திரட்ட பார்க்குது

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நவீனன் said:

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி காலை 10.30 மணிக்கு வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்றோம். அதன்பின் பயங்கரவாதம் தொடர்பில் எந்த பிரச்சினையும் இதுவரை ஏற்படவில்லை.” எனவும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை நாங்கள் தான் கொன்றோம் என்று சொல்லி இதுவரை பல  பயிற்ச்சி பட்டறைகள் நடாத்தி அதன் மூலம் கிடைத்து வந்த மில்லியன் கணக்கான டொலருக்கும் சேர்த்து ஆப்பு விழுந்துவிட்டது அதுக்கும் சேர்த்து ஆள் ஒப்பாரி வைக்குது .

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, பெருமாள் said:

பிரபாகரனை நாங்கள் தான் கொன்றோம் என்று சொல்லி இதுவரை பல  பயிற்ச்சி பட்டறைகள் நடாத்தி அதன் மூலம் கிடைத்து வந்த மில்லியன் கணக்கான டொலருக்கும் சேர்த்து ஆப்பு விழுந்துவிட்டது அதுக்கும் சேர்த்து ஆள் ஒப்பாரி வைக்குது .

இவர் பீலா விடுறார். பிரபாகரனின் உடல் மட்டுமே கிடைத்தது. 

பிரபாகரன் உயிருடன் கிடைத்திருந்தால், கொழும்பு கொண்டு சென்று காட்சிப் படுத்தி அரசியல் செய்திருப்பார்கள்.

ஜெகத் பதறுறார்.

இவர்கள் யுத்த குற்ற விசாரணை தொடர்பில் ஜ.நா வில் வாக்குறுதி  கொடுத்து இரண்டு வருட தவனை பெற்றார்கள். 

ஆனால் எதுவுமே செய்யவில்லை என ஜ.நா அதிகாரி விசனம் தெரிவிக்க அவருடன் வாயாடினார், விஜயதாச ராஜபக்ச.... இப்ப அவர் வெளிய.

ஆப்பு இறுகுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

ஆள் இல்லை என்பது உண்மை இவர்கள் கடைசியாக காட்டிய உடல் உண்மையிலே அவருடையதுகிடையாது என்பதும் உண்மை .இங்கும் களத்தில்  படத்துக்கு மாலை போட்டு கும்பிடுறவரும் எதிர்வு கூறி இருந்தார் கோடாலியை கொண்டு வந்து காட்டுவாங்கள் என்று கடைசி நேர கோதாவில நிண்டவையள் கொஞ்சம் கொஞ்சமாய் உண்மையை உளறி விட்டினம் .

23 minutes ago, பெருமாள் said:

இங்கும் களத்தில்  படத்துக்கு மாலை போட்டு கும்பிடுறவரும் எதிர்வு கூறி இருந்தார் கோடாலியை கொண்டு வந்து காட்டுவாங்கள் என்று கடைசி நேர கோதாவில நிண்டவையள் கொஞ்சம் கொஞ்சமாய் உண்மையை உளறி விட்டினம் .

புரியவில்லை ???

54 minutes ago, Nathamuni said:

 

ஜெகத் பதறுறார்.

 

ஆப்பு இறுகுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

இது தான் உண்மை !!!

மகிந்தவும்/ கோத்தாவும் அதிகமாக சவுண்ட் விடுவதை பார்த்தால் தெரியுது.

இவர்களுக்கு இப்ப இருக்கிற ஒரே தெரிவு சம்பந்தன்/ சுமந்திரன் காலில் விழுவது.

அவர்களும் போர் குற்றம் என்ன போரே நடக்கவில்லை என்று சொன்னாலும் சொல்லுவீனம். வெற்றிகரமாக காபாற்றிவிடுவீனம்

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Dash said:

புரியவில்லை ???

இவர்கள் அடிச்சுவிட்ட கதைகள்வதந்திகள் ஆகிவிட்டன .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

ஆள் இல்லை என்பது உண்மை இவர்கள் கடைசியாக காட்டிய உடல் உண்மையிலே அவருடையதுகிடையாது என்பதும் உண்மை

ஆள் இல்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்? அறிக்கை விடாவிட்டால், காமராவுக்கு முன்னால் வராவிட்டால் ஆள் இல்லை என்ற முடிவுக்கு வரலாமா? நான் இப்படி சொல்லவதை வைத்து அவர் இருக்கிறார் என்று நான் சொல்வதாக முடிவு எடுத்து விடாதீர்கள். உண்மையில் எங்களுக்கு இருப்பதொ இல்லாமல் போனதோ தெரியாது.

தம்மை மையப்படுத்தி இலங்கை அரசியலை இலங்கை தமிழரும் சிங்களவரும் அணுகியது இலங்கை அரசியலில் பல படு தோல்விகளுக்கு முக்கிய காரணம். அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ காரணங்களுக்காக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இலங்கை ஒரு முக்கியமான நாடு. சிறிமாவோ போன பிறகு சீனா தனது பிடியை இறுக்க மகிந்த ராஜபக்சவை பயன்படுத்தி வந்தது. அமெரிக்காவுக்கு ரணில். பிரபாகரனின் தலைமயிலான போர் தோற்றதற்கு காரணம் இந்திய அரசியல்வாதிகளை நம்பி அமெரிக்காவுடன் ஆழமான உறவை ஏற்படுத்தாமல் விட்டதே. இறுதி அழிவுக்கு காரணம் ரணிலை ஜனாதிபதியாக வரவிடாமல் தடுத்தது.

7 hours ago, Dash said:

மகிந்தவும்/ கோத்தாவும் அதிகமாக சவுண்ட் விடுவதை பார்த்தால் தெரியுது.

இவர்களுக்கு இப்ப இருக்கிற ஒரே தெரிவு சம்பந்தன்/ சுமந்திரன் காலில் விழுவது.

அவர்களும் போர் குற்றம் என்ன போரே நடக்கவில்லை என்று சொன்னாலும் சொல்லுவீனம். வெற்றிகரமாக காபாற்றிவிடுவீனம்

எப்படி லலித் வீரதுங்க துணி கொடுத்ததற்காக உள்ளுக்கு போனாரோ அப்படியே கோத்தா மற்றும் இராஜபக்ச குடும்பங்களும் கொள்ளை அடித்தற்காக அல்லது முஸ்லிம் ரக்பி வீரரை கொன்றதற்காக உள்ளே போவார்களே தவிர தமிழரை கொன்றதற்காக அல்ல. இதை அமெரிக்கா தனது அரச நலன் கருதி செய்யும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Jude said:

ஆள் இல்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்? அறிக்கை விடாவிட்டால், காமராவுக்கு முன்னால் வராவிட்டால் ஆள் இல்லை என்ற முடிவுக்கு வரலாமா? நான் இப்படி சொல்லவதை வைத்து அவர் இருக்கிறார் என்று நான் சொல்வதாக முடிவு எடுத்து விடாதீர்கள். உண்மையில் எங்களுக்கு இருப்பதொ இல்லாமல் போனதோ தெரியாது

உங்களுக்கு பதில் எழுதுவதுக்கு எனக்கு அறிவு கானதுங்கோ .

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவரும் 700 போராளிகளும் களத்தை விட்டு வெளியேறி விட்டதாகவே சொல்லப்படுகிறது.

இவர்கள் இன்னும் பிரபாகரனை கொன்று கொண்டிருப்பதும் இந்த உண்மை தெரிந்ததால் தான் போலும். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.