Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாண மாம்பழம் என்றால் கொள்ளை பிரியம் முன்னாள் சனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவுக்கு

Featured Replies

யாழ்ப்பாண மாம்பழத்தைக் காதலித்த சந்திரிகா!

 

ஸ்ரீலங்காவின் முன்னாள் சனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவுக்கு யாழ்ப்பாண மாம்பழம் என்றால் கொள்ளை பிரியம் என்ற சாரப்பட வடக்கு மாகாண விவ்சாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.

தன்னுடன் சந்திரிகா ஒருமுறை பேசியிருந்தபோதே இந்த விடயத்தினைத் தெரிவித்ததாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண விவசாயக் கண்காட்சி இன்று காலை 09.30 மணியளவில், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சி. சத்தியசீலன் தலைமையில் யாழ். திருநெல்வேலியிலுள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமாகியது.

அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”இன்றைய காலத்தில் மாம்பழங்களை பழுக்க வைப்பதற்கு அதிகளவில் இரசாயன மருந்துகள் பாவிக்கப்படுகின்றன. இதனால், சுவை மிக்க யாழ்ப்பாண மாம்பழங்களைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. ஒரு வியாபார நிலையத்தில் காலை வேளையில் பச்சையாகக் காணப்படும் வாழைக்குலை மாலை வேளையில் அங்கு சென்று பார்க்கும் போது அது தக தகவென மஞ்சள் நிறத்தில் மாறியிருப்பதைக் காண முடிகிறது. இது இயற்கை முறையிலா பழுத்தது என்றால் இல்லை என்பதே விடையாகவுள்ளது.

இந்தக் கண்காட்சியில் ஓரிடத்தில் குரக்கன் மற்றும் சாமை நடப்பட்டிருந்தன. அவற்றைப் பார்த்து இது என்ன பயிர் எனச் சில மாணவர்கள் கேட்டார்கள். விவசாயத்திற்குப் பெயர் பெற்ற வடக்கு மாகாணத்தில் குரக்கன் பயிர் குறித்துக் கூட அறியாதவர்களாக இன்றைய மாணவ சமூதாயம் காணப்படுவது வேதனையானது.

யாழ். மாவட்டத்தில் ஒரு காலத்தில் மிகச் சிறப்பான முறையில் எமது மூதாதையர்களால் இயற்கை முறையிலான விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. இயற்கைப் பசளைகள் மாத்திரமே பயிர்ச் செய்கைக்குப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இந்த நிலைமை இன்றைய காலத்தில் பெரும்பாலும் மாற்றம் பெற்றுள்ளது.

சந்தை வாய்ப்பை மாத்திரம் நோக்காகக் கொண்டே தற்போது விவசாய நடவடிக்கைகள் பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், எமது மூதாதையர்கள் காலநிலையைக் கருத்தில் கொண்டும், உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கிலும் விவசாயத்தில் ஈடுபட்டார்கள். எங்களுடைய மண்ணில் பாரம்பரியமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த விவசாய முறைகள் அனைத்தையும் இழந்துவிட்டு எங்களுக்குத் தேவையான விவசாய முறைகளை வெளிநாடுகளில் தேடுகின்ற போக்கு மிகவும் வெட்கக்கேடானது. இந்த நிலை மாற்றமடைய வேண்டும்.” என்று குறிப்பிட்டார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/chandrika-jaffna-mango

  • தொடங்கியவர்

 

யாழ்ப்பாணம் திருநெல்வேலி விவசாய பயிற்சிக் கல்லூரியில் இன்று விவசாயக் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

யாழ்ப்பாண மாம்பழத்தைக் காதலித்த சந்திரிகா!

 

ஸ்ரீலங்காவின் முன்னாள் சனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவுக்கு யாழ்ப்பாண மாம்பழம் என்றால் கொள்ளை பிரியம் என்ற சாரப்பட வடக்கு மாகாண விவ்சாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.

தன்னுடன் சந்திரிகா ஒருமுறை பேசியிருந்தபோதே இந்த விடயத்தினைத் தெரிவித்ததாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண விவசாயக் கண்காட்சி இன்று காலை 09.30 மணியளவில், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சி. சத்தியசீலன் தலைமையில் யாழ். திருநெல்வேலியிலுள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமாகியது.

அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”இன்றைய காலத்தில் மாம்பழங்களை பழுக்க வைப்பதற்கு அதிகளவில் இரசாயன மருந்துகள் பாவிக்கப்படுகின்றன. இதனால், சுவை மிக்க யாழ்ப்பாண மாம்பழங்களைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. ஒரு வியாபார நிலையத்தில் காலை வேளையில் பச்சையாகக் காணப்படும் வாழைக்குலை மாலை வேளையில் அங்கு சென்று பார்க்கும் போது அது தக தகவென மஞ்சள் நிறத்தில் மாறியிருப்பதைக் காண முடிகிறது. இது இயற்கை முறையிலா பழுத்தது என்றால் இல்லை என்பதே விடையாகவுள்ளது.

இந்தக் கண்காட்சியில் ஓரிடத்தில் குரக்கன் மற்றும் சாமை நடப்பட்டிருந்தன. அவற்றைப் பார்த்து இது என்ன பயிர் எனச் சில மாணவர்கள் கேட்டார்கள். விவசாயத்திற்குப் பெயர் பெற்ற வடக்கு மாகாணத்தில் குரக்கன் பயிர் குறித்துக் கூட அறியாதவர்களாக இன்றைய மாணவ சமூதாயம் காணப்படுவது வேதனையானது.

யாழ். மாவட்டத்தில் ஒரு காலத்தில் மிகச் சிறப்பான முறையில் எமது மூதாதையர்களால் இயற்கை முறையிலான விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. இயற்கைப் பசளைகள் மாத்திரமே பயிர்ச் செய்கைக்குப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இந்த நிலைமை இன்றைய காலத்தில் பெரும்பாலும் மாற்றம் பெற்றுள்ளது.

சந்தை வாய்ப்பை மாத்திரம் நோக்காகக் கொண்டே தற்போது விவசாய நடவடிக்கைகள் பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், எமது மூதாதையர்கள் காலநிலையைக் கருத்தில் கொண்டும், உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கிலும் விவசாயத்தில் ஈடுபட்டார்கள். எங்களுடைய மண்ணில் பாரம்பரியமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த விவசாய முறைகள் அனைத்தையும் இழந்துவிட்டு எங்களுக்குத் தேவையான விவசாய முறைகளை வெளிநாடுகளில் தேடுகின்ற போக்கு மிகவும் வெட்கக்கேடானது. இந்த நிலை மாற்றமடைய வேண்டும்.” என்று குறிப்பிட்டார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/chandrika-jaffna-mango

 

சந்திரிக்கா மாத்திரமல்ல, எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். 
சில நாட்களுக்கு முன் பாக்கிஸ்தான் மாம்பழம் சாப்பிட்டேன் என்ன ருசிடாப்பா!
 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, colomban said:

 

சந்திரிக்கா மாத்திரமல்ல, எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். 
சில நாட்களுக்கு முன் பாக்கிஸ்தான் மாம்பழம் சாப்பிட்டேன் என்ன ருசிடாப்பா!
 

யாழ்பாணத்து மாம்பழத்தில் இல்லாத ஒன்று பாக்கிஸ்தான் மாம்பழத்தில் இருக்கே...... அதுதான் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கிறது. Bildergebnis für kiss  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நவீனன் said:

ஸ்ரீலங்காவின் முன்னாள் சனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவுக்கு யாழ்ப்பாண மாம்பழம் என்றால் கொள்ளை பிரியம் என்ற சாரப்பட வடக்கு மாகாண விவ்சாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.

சந்திரிக்கா இவரோடை ஏன் கறுத்தைக்கொழும்பானை பற்றி கதைச்சாவு????? அதை ஏன் இஞ்சை வந்து சொல்லுறாரு? :grin:

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்காவுக்கு ஒருத்தரும்....யாழ்ப்பாண முருங்கைக்காய் காவிக்கொண்டு போய்க் குடுக்கேல்லைப் போல கிடக்குது!

சம்பந்தன் ஐயா...தயவு செய்து நோட் பண்ணிக்கொள்ளவும் !

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

 

சந்திரிக்கா மாத்திரமல்ல, எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். 
சில நாட்களுக்கு முன் பாக்கிஸ்தான் மாம்பழம் சாப்பிட்டேன் என்ன ருசிடாப்பா!
 

இந்தியாக்காரன் பிடிபடுகிறதுபோல் களவு செய்வான் பாகிஸ்த்தான்காரன் அல்லாவுஅக்பர் என்று சொல்லிவிட்டு சீனாக்காரனின் கள்ள வேலையை இரவல் வேண்டி தன் களவு பிடிபடாமல் வியாபாரத்தை ஓட்டுவான். அந்த மாம்பழத்தை வயது குறைந்த பிள்ளைகளுக்கு கொடுத்து போயிடாதைங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.