Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்பை ஆதரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களே : என்கிறார் கமல் குணரட்ன

Featured Replies

புதிய அரசியலமைப்பை ஆதரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களே : என்கிறார் கமல் குணரட்ன

 

 

புதிய அரசியலமைப்பை ஆதரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களே : என்கிறார் கமல் குணரட்ன

புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக கை உயர்த்துபவர்களுக்கு மரணத்தை தண்டனையாக வழங்க ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
அவ்வாறாக ஆதரிப்பவர்கள் தேசத்துரோகிகள் இவர்களுக்கு 1987 காலப்பகுதியில் ஜே.வி.பியினரால் தேசத்துரோகிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையை போன்று மரணத்தை தண்டனையாக வழங்கி அவர்களின் சடலங்கை இழுத்துச் செல்லப்பட வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே கமல் குணரட்ன இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)

http://www.samakalam.com/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொலை வெறி பிடித்த மனிதர் சொல்லுகிறார் யுத்த களத்தில் யாரும் கொல்லப்படவில்லையாம். எல்லோரையும் நம்பட்டாம். அவரவர் வாயே அவர்களை காட்டிக்குடுத்துவிடும். 

  • தொடங்கியவர்

நாட்­டில் தமிழ் மக்­க­ளுக்கு என்ன பிரச்­சினை இருக்­கி­றது?

கமால் குண­ரத்ன கேள்வி எழுப்­பு­கி­றார்

நாட்­டில்  தமிழ் மக்­க­ளுக்கு  என்ன பிரச்­சினை இருக்­கி­றது?
 

நாட்­டில் எங்­க­ளுக்குக் கிடைத்­த­தில் தமிழ் மக்­க­ளுக்கு எது கிடைக்­க­வில்லை. நாடா­ளு­மன்­றத்­தின் எதிர்க் கட்­சித் தலை­வ­ராக சம்­பந்­தன் தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றார்.

நாட்­டின் நீதி­ய­ர­ச­ராக சிறி­ப­வன் பணி­யாற்­றி­னார். கடற்­ப­டைத் தள­ப­தி­யாக ட்ராவிஸ் சின்­னையா இருக்­கின்­றார்.

அப்­ப­டி­யா­யின் நாட்­டில் தமிழ் மக்­க­ளுக்கு என்ன பிரச்­சினை இருக்­கின்­றது.

இவ்­வாறு நந்­திக் கட­லுக்­கான பாதை என்ற நூலை எழு­திய மேஜர் ஜெனரல் கமால் குண­ரத்ன கேள்வி எழுப்­பி­னார்

. கம்­பகாப் பிர­தே­சத்­தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்­பெற்ற நிகழ்­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­ னைக்­குத் தீர்வு காணும் வகை­யில் புதிய அர­ச­மைப்­புக் கொண்டு வரப்­ப­ட­வேண்­டும் என்று அரசு கூறி­வ­ரு­ கின்­றது.

ஆனால் நாட்­டில் தற்­போது தமிழ் மக்­க­ளுக்­குப் பிரச்­சினை இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. நாட்­டில் எங்­க­ளுக்குக் கிடைத்­த­தில் தமிழ் மக்­க­ளுக்கு எது கிடைக்­க­வில்லை.

நாடா­ளு­மன்­றத்­தின் எதிர்க் கட்­சித் தலை­வ­ராக சம்­பந்­தன் தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றார்.

நாட்­டின் நீதி­ய­ர­ச­ராக சிறி­ப­வன் பணி­யாற்­றி­னார்.

கடற்­ப­டைத் தள­ப­தி­யாக ட்ராவிஸ் சின்­னையா இருக்­கின்­றார். அப்­ப­டி­யா­யின் நாட்­டில் தமிழ் மக்­க­ளுக்கு என்ன பிரச்­சினை இருக்­கின்­றது.

அரசு எங்­க­ளுக்கு எதி­ரா­கச் செயற்­ப­டும் பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் தேவைக்கே புதிய அர­ச­மைப்­பைக் கொண்­டு­வர முயற்­சிக்­கின்­றது -– என்­றார்.

http://newuthayan.com/story/40102.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதவிகளால் தமிழருக்கு என்ன நன்மைகளை பெற்றுக் கொடுத்தார்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். தொலைந்தவர்களை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறோம், சொந்தக்காணிகளில் குடியிருக்க முடியவில்லை, வாழ்வாதாரம் பறிக்கப்பட்டிருக்கிறது, இப்படி இன்னோரன்ன பிரச்சனைகள் நாளுக்குநாள் முளைக்கிறது. வெறும் பதவி, உங்களைபோன்றவர்கள் பேசுவதற்கே உதவுகிறது. இன்னும் எம்மையும், உலகையும் ஏமாற்ற உதவுகிறது. 

புதிய அரசியலமைப்பை ஆதரிப்போர் கொல்லப்பட வேண்டும் – கமல் குணரத்னவின் ‘கொலைவெறி’

Maj.Gen_.Kamal-Gunaratne

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஆதரவாக இருப்போர் துரோகிகள் என்றும், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் போர்க்குற்றவாளிகளில் ஒருவரான, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன.

இறுதிக்கட்டப் போரில், சிறிலங்கா இராணுவத்தின் 53 ஆவது டிவிசனுக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பாலச்சந்திரன் படுகொலை உள்ளிட்ட, சரணடைந்த போராளிகள் பொதுமக்களைப் படுகொலை செய்தார்- போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்.

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து, எலிய என்ற அமைப்பின் ஊடாக, புதிய அரசியலமைப்புக்கு எதிரான பரப்புரைகளை முன்னெடுத்து வருகிறார்.

kamal-gota

கோத்தாபய ராஜபக்ச தலைமையில் கடந்த சனிக்கிழமை கம்பகாவில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன,

“புதிய அரசியலமைப்புக்கு ஆதரவானவர்கள் துரோகிகள், அவர்கள் கொல்லப்பட வேண்டும். இவர்களுக்கு கௌரவமான இறுதிச்சடங்கிற்கு இடமளிக்கக் கூடாது.

மேற்குலக மற்றும் புலம் பெயர் தமிழர்களின் தேவைக்காக, தமிழ்ப் பிரிவினைவாதிகளை திருப்திப்படுத்தும் வகையில், புதிய அரசியலமைப்பைக் கொண்டு வர அரசாங்கம் முயற்சிக்கிறது.

இந்தப் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவோர், அதற்கு ஆதரவு வழங்குவோர் நாட்டுக்குத் துரோகம் இழைத்தவர்களாவர் ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2017/10/25/news/26810

Maj.Gen_.Kamal-Gunaratne

சிங்களப் பயங்கரவாதி கமல் குணரத்ன

  • கருத்துக்கள உறவுகள்

 ஒருவர் கொல்லுவேன் என்கிறார், மற்றவர் குண்டு வெடிக்கும் என்கிறார்.புலிகளுக்கு , அரசியல் கைதிகளுக்கு எதிராக குரலெழுப்புவோர்     யார் பயங்கரவாதிகள், பயங்கரவாதத்தை உருவாக்கியவர்கள் யார் என்பதை புரிந்து கொண்டு பின் குரலெழுப்பினால் நல்லது. 

On 10/27/2017 at 1:41 PM, Rajesh said:

Maj.Gen_.Kamal-Gunaratne

சிங்களப் பயங்கரவாதி கமல் குணரத்ன

 

  • கருத்துக்கள உறவுகள்

இனக்கொலையாளர்களில் ஒருவனான இவனுக்குப் பயம்பிடித்துவிட்டதுபோலும். ஒருவேளை புதியஅரசியலமைப்பில் இனஅழிப்புக்கான நீதிகிட்டுமாயின் தானும் தண்டனைக்குள்ளாகலாம் என்ற அச்சத்தின் வெளிப்பாடாகவே இந்தக் கொக்கரிப்பு இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வேறு நாடாக இருந்திருந்தால்...இவரைத் தூக்கி உள்ளே போட்டிருப்பார்கள்!

சிங்களம் போக வேண்டிய தூரம் வெகு தூரம் என்பதையே இவரது கொக்கரிப்புகள் காட்டுகின்றன!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.