Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடிவுகாண முடியாத பிரெக்சிற்

Featured Replies

முடிவுகாண முடியாத பிரெக்சிற்
 

- ஜனகன் முத்துக்குமார்

ஐக்கிய இராச்சியத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பிரெக்சிற் பேச்சுவார்த்தை, இரு பகுதியினரதும் பேரம்பேசும் நிலையில் மாற்றம் ஏற்படாததைத் தொடர்ந்து, நான்காவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஜூன் 23ஆம் திகதி இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில், வாக்களித்தோரில் 51.9 சதவீதமானவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஐக்கிய இராச்சியம் வெளியேற வாக்களித்திருந்தனர். அதைத் தொடர்ந்து இவ்வாண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தத்தின் 50ஆவது உறுப்புரையை ஐக்கிய இராச்சிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியதிலிருந்து, குறித்த திகதியிலிருந்து 2 வருட காலத்துள், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன் பொருட்டு, ஐக்கிய இராச்சியப் பிரதமர் தெரேசா மே, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர், ஒற்றைச் சந்தை முறைமையிலிருந்து ஐ.இராச்சியம் வெளியேறும் எனவும், 1972 ஐரோப்பிய ஒப்பந்தத்திலிருந்து விலகும் எனவும், ஆயினும் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தை இங்கிலாந்தின் உள்நாட்டு சட்டத்திற்குள் ஏற்கப்பட்ட நிலைமை மாறாது எனவும் தெரிவித்திருந்திருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுதலுக்கான ஐ.இராச்சிய அரசாங்கத் திணைக்களம் (DEXEU), 2016 ஜூலையில் உருவாக்கப்பட்டு, அதன் முதலாவது செயலாளராக டேவிட் டேவிஸ், பிரதமரால் நியமிக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள், இவ்வாண்டு ஜூனில், உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த சர்வஜன வாக்கெடுப்பைத் தொடர்ந்து, பிரெக்சிற் தொடர்பான பேச்சுவார்த்தைக்கான அடிப்படை எதிர்பார்ப்புகளை, ஐ.இராச்சியத் தலைவர்களும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் அறிவித்திருந்தனர். கடந்தாண்டில், ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கெல், ஐரோப்பிய ஒன்றியத்தின் நான்கு சுதந்திரக் கொள்கைகளை ஐ.இராச்சியம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, ஐரோப்பிய ஒற்றைச் சந்தை முறைமையுள் (ESM) தொடர்ந்து இருக்கலாம் எனத் தெரிவித்திருந்தார். பிரதமர் தெரேசா மே இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருதல், ஐ.இராச்சியத்தின் பிரெக்சிற் நடைமுறையின் ஒரு பகுதி எனவும், ஆயினும் குறித்த விடயமானது, ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள், ஐ.இராச்சியத்தில் சுதந்திரமாக வியாபாரம் செய்வதற்கு ஏற்றதாகவே அமையும் எனவும் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து அவர், ஐ.இராச்சியத்தில் தற்போது குடிகொண்டுள்ள 3.3 மில்லியன் ஐரோப்பிய ஒன்றிய புலம்பெயர்ந்தோரின் குடியேற்ற உரிமைகள், ஐ.இராச்சியத்தில் இருந்து வெளியேறி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள 1.2 மில்லியன் ஐ.இராச்சியப் பிரஜைகள், அவர்களது பரஸ்பர உரிமைகள், தொடர்ச்சியாக இப்போதுள்ளவாறே பேணப்படலாம் எனக் கூறியிருந்திருந்தார். இதற்கு, பெரும்பான்மை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள், ஆரம்ப ஒப்புதல் வழங்கியிருந்த போதிலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க், சான்செலர் மேர்க்கெல் ஆகியோரால் இது நிராகரிக்கப்பட்டிருந்தது.

ஜனவரி 2017 ல், பிரதம மந்திரி மே, 12 இலக்குகளை ஐ.இராச்சிய - ஐரோப்பிய ஒன்றியப் பேச்சுவார்த்தைகளுக்காக முன்வைத்திருந்தார். அவ்விலக்குகள், ஐரோப்பியாவில் நிரந்தர ஒற்றைச் சந்தை உறுப்பினராக ஐ.இராச்சியம் தொடர்ச்சியாக இருக்காது என்பதை உறுதிப்படுத்தியிருந்தன.

இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள், ஜூலை நடுப்பகுதியில் தொடங்கியிருந்தன. பல விடயங்கள் இன்னுமே விரிவாகப் பேசப்பட்டிருக்காத இந்நிலையில், வட அயர்லாந்து எல்லை, இங்கிலாந்தின் உள்ள ஐரோப்பியர்களின் குடியுரிமை உரிமைகள் தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளுக்கான உரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், தொடர்ச்சியாகத் தனது ஆதிக்கத்தைச் செலுத்தவேண்டும் என, பிரெக்சிற் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதம பேரம்பேசுநர் மைக்கேல் பார்னியர் கோரியிருந்தார். இது தொடர்பில் ஐ.இராச்சியம், இது தொடர்பான நீதிமன்றம் ஒன்று, தொடர்ச்சியாக இருக்குமாயின், அதில் ஐ.இராச்சிய நீதிபதிகளும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறியிருந்தது. அக்கோரிக்கையானது, ஐரோப்பிய உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டிருந்தது. ஐரோப்பிய நீதிமன்ற ஆதிக்கத்திலிருந்தும் ஐ.இராச்சீயம் விலகும் என, இதைத் தொடர்ந்து மே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையிலேயே பிரதமர் மே-க்கு, வட அயர்லாந்து மற்றும் ஐரோப்பிய - ஐ.இராச்சிய வர்த்தகம் தொடர்பில் கவனஞ்செலுத்துவதற்கு, 2 வார காலப்பகுதியை ஐரோப்பிய ஒன்றியம், நவம்பர் 17ம் திகதியை நிர்ணயித்துள்ளது. இது நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தையின் பின்னரான முடிவாக, ஐரோப்பிய ஒன்றியத்தால் தெரிவிக்கப்பட்டிருந்தமை, ஜேர்மன், பிரான்ஸ் நாடுகளின் உந்துதலே ஆகும் என, டேவிட் டேவிஸ் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவை எல்லாமே, குறித்த பிரெக்சிற் பிரிவானது, மிகவும் சுலபமானதல்ல என்பதையே காட்டுவதாய் உள்ளன.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முடிவுகாண-முடியாத-பிரெக்சிற்/91-207476

  • கருத்துக்கள உறவுகள்

சனத்துக்கும் வெறுத்துப் போச்சுது.

கடைசீல, அயர்லாந்து செய்தது போல, இன்னுமொரு குடியொப்பத்தைனை வைத்து, கடையைப் மூடப் போகினம்...

பிரித்தானியாவின் வட அயர்லாந்துக்கும், அதனிடம் இருந்து 1924 ல் சுதந்திரம் அடைந்த, ஐரோப்பிய யூனியன் உறுப்பினரான தென் அயர்லாந்துக்கும்  இடையேயான எல்லையால் பெரும் தொல்லை. அறுக்கை பண்ண, வேலி அடைக்க முடியாது.  

Edited by Nathamuni

இன்றைய செய்திகளின்படி ஐரோப்பிய வங்கிகளின் கட்டுப்பாட்டு மையயம் இலண்டனிலிருந்து பாரீசுக்கும் மருத்துவக் கட்டுப்பாட்டு மையம் நெதர்லாந்துக்கும் கைமாறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது தவிர பிரித்தானியா ஐரோப்பாவிலிருந்து பிரிந்து செல்வது தொடர்பான கால எல்லைகளை விரைவில் பிரித்தானியா நிர்ணயிக்காத பட்சத்தில் ஐரோப்பிய சட்ட வரயறைக்குட்பட்டு பிரித்தானியாவைப் பலவந்தமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நீக்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் வாழும் பிரித்தானியரும் பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பியரும் இழுபறி நிலையை எதிர்கொள்ளலாம். ஆனால் வர்த்தக நிறுவனங்கள் அவ்வாறில்லை. தமது எதிர்காலத்தை பிரித்தானியா பிரிவதற்கு முன்னர் தாமே தீர்மானிக்க எத்தனிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் திணைக்களம் பிரிந்து செல்ல பிரசாரம் செய்ய செலவழித்த பணத்தையும், மீறப்பட்ட விதி முறைகளை ஆராய மீண்டும் விசாரணையை ஆரம்பித்துள்ளது. மீண்டும் ஒரு வாக்கெடுப்பு நடந்தாலும் ஆச்சரிய படுவதிக்கில்லை. http://www.bbc.co.uk/news/uk-politics-42055523

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கடை அரசியல் சித்துவிளையாட்டுக்களை காட்டி தாங்கள் அரசியல்லை சூடாய் இருக்கிறம் எண்டு காட்ட வெளிக்கிட்டது இவ்வளவுத்துக்கு நாறும் எண்டது அவையள் கனவிலையும் நினைச்சிருக்கமாட்டினம்.கமருன் பாதியிலை விட்டுட்டு ஓடேக்கையே கனவிசயம் தெரிஞ்சு போச்சுது.....தெரேசாவை வைச்சு சமாளிப்பம் எண்டு பார்த்தாலும் வலு இறுக்கம்.

உண்மையிலையே மாக்கிரட் தட்சர் கெட்டிக்காரிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இவையள், பிரிட்டிஷ் வெள்ளையள், தங்களை மட்டும் பார்க்கிற சுஜ நலவாதிகள்.

எங்களை (வந்தேறிகளை) விடுங்கோ. இவர்களில் பலர் ஐரோப்பாவில் குடியேறி இருக்கினம். அவர்கள் பத்தி கவலை இல்லை. இங்கே கிழக்கு ஐரோப்பியன் வந்து புகுந்து விடடான், வேலையினை புடுங்கி விட்டான் எண்டது தான் இவையிண்ட குத்தி முறிவு.

இப்படி குத்தி முறிஞ்ச பலருக்கு முன்னாள் லண்டன் மேஜர் கென் லிவிங்ஸ்டன் ஒரு சூடு போடடார்..... ' தம்பிமார், நீங்கள் கட்டிலில் இருந்து, போர்வைக்குளால வெளிய வரேக்க, கிழக்கு ஐரோப்பியர் அரை நாள் வேலை முடித்திருப்பார்'....

அப்படி இருக்கிறது இவர்களது சோம்பேறித்தனம்.

கிழடு கடடைகளுக்கு பென்ஷன், ஓய்வு வீடுகள், பராமரிப்பு செய்ய தேவையான பணம் வரி மூலம் அறவிட எண்டால், குய்ஜோ, முறையோ என்பது... சரி கிழக்கு ஐரோப்பியர் வந்து வேலை செய்தால் வரிப் பணம் வருமே எண்டாலும் பிணக்கு.

பிரிய வேண்டும் எண்டு நாண்டு கொண்டு நிண்ட நைஜல் பராஜ் மனைவி கிழக்கு ஐரோப்பியர். அவருக்கு சப்போர்ட் பண்ணிய டிரம்ப் மனைவியும் கூட கிழக்கு ஐரோப்பியர்.

இன்னோருவர், போரிஸ் எல்ஸ்டின்.... மனைவி அரை சீக்கியர்.....

இவர்கள் எல்லாம் பசப்பு அரசியல் வாதிகள்.

டேவிட் கமரோன் குருவி மாதிரி ஒரு 10 MP மாரை சேர்த்து, லிபெரல் ஆதரவு தேவை இல்லாமல், அரசை அமைத்தால், தன்னை ஒரு பெரிய மேடம் என்று நினைத்துக் கொண்டு தேர்தலுக்கு போய், உள்ளதும் போய், மீண்டும் இன்னுமொரு கட்சியின் ஆதரவுடன்  பதவியில் ஓட்டிக் கொண்டு உள்ளார், பிரதம மே.

நம்ம ஊர் அரசியல் நிலைமை தான்.

இவர்களது பலவீனம் தெரிந்தே ஐரோப்பிய யூனியன் இறுக்கிப் பிடிக்கிறது. £40 பில்லியன் விவாகரத்து பணம் தந்து நடையை கட்டுங்கோ என்கிறது.

இவர்கள் இறுதியில் மீண்டும் ஒரு குடி ஒப்பத்துக்கு போவார்கள். சலித்துப் போய் உள்ள மக்கள் போதுமடா சாமி என்று மாத்திப் போடுவார்கள்.

அப்போது, டேவிட் கேமரன் கூட மீண்டும் வரக் கூடும்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.