Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வில்பத்து விலத்திக்குளம் சட்டவிரோத காடழிப்பு – ரிஷாத் பதியுதீனின் தலையீடு உறுதிசெய்யப்பட்டுள்ளது

Featured Replies

வில்பத்து விலத்திக்குளம் சட்டவிரோத காடழிப்பு – ரிஷாத் பதியுதீனின் தலையீடு உறுதிசெய்யப்பட்டுள்ளது:-

 

wilpaththu-vilathikulam3.png?resize=538%

வில்பத்து விலத்திக்குளம் பகுதியில் சட்டவிரோத காடழிப்பு இடம்பெற்றுள்ளமை ஆய்வறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட விஷேட ஆய்வின் இறுதியில் தயாரிக்கப்பட்ட  அறிக்கையில்  உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இந்தக் காடழிப்பு சம்பந்தமாக ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூழலியளாலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வில்பத்து காடழிப்பு சம்பந்தமாக ஆய்வு செய்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவினால் தயாரிக்கப்பட்ட 136 பக்கங்களை கொண்ட விஷேட ஆய்வு அறிக்கை அண்மையில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

அதன்படி அந்த அறிக்கையில், விலத்திக்குளம் காட்டுப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும், வனப் பாதுகாப்பு ஜெனராலினால் 650 ஏக்கர் வனப் பிரதேசம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு மீள் குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

wilpaththu-vilathikulam4.jpg?resize=510%

அவ்வாறு அந்த வனப்பகுதியை விடுவிப்பதற்கு வனப் பாதுகாப்பு ஜெனராலுக்கு அதிகாரம் இல்லை என்பதுடன்,  இந்த செயற்பாட்டில் அப்போதைய வர்த்தக வாணிபத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் தலையீடு இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 05ம் திகதி ரிஷாத் பதியுதீனின் தலைமையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் விலத்திக்குளம் பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் இருந்து மீள் குடியேற்றித்திற்கு தேவையான காணியை விடுவிக்குமாறு வனப் பாதுகாப்பு ஜெனராலுக்கு அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அவருக்கு அவ்வாறு அறிவிக்கும் அதிகாரம் இல்லை என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டியது யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களையே என்றும், எனினும் இங்கு காணிகள் வழங்கப்பட்டிருப்பது காணிகளை இழந்த மக்களுக்கு அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.

wilpaththu-vilathikulam2.jpg?resize=618%wilpaththu-vilathikulam1.gif?resize=538%vilpattu.jpg?resize=640%2C405wilpaththu-vilathikulam5.jpg?resize=1024

http://globaltamilnews.net/2017/56961/

  • கருத்துக்கள உறவுகள்

இது நமக்கு நல்லா தெரியுமே வாப்பா...

அயித்தானே, இதில வேலைக்கு ஆவாது என்னு தானே..நானா... மொல்லதீவு பக்கத்தால...  கயிறு உட்டாறு.....

9 hours ago, Nathamuni said:

இது நமக்கு நல்லா தெரியுமே வாப்பா...

அயித்தானே, இதில வேலைக்கு ஆவாது என்னு தானே..நானா... மொல்லதீவு பக்கத்தால...  கயிறு உட்டாறு.....

மொல்ல தீவு பக்கம் கால வுட்டு நல்லா வாங்கி கட்டி கொண்டார்,அதிக்கி பொறொகு ஹிஜ்ராபுரத்துல பத்து வீட்டி கட்டி படம் காட்டுவாறு,

அதால இப்ப நானாவுண்ட டார்கட் கிளிநொச்சி

பாரதிபொறத்துல 60 குடும்பத்தை குடியேட்டித்தாறு.

On 12/23/2017 at 12:03 PM, நவீனன் said:
vilpattu.jpg?resize=640%2C405
 

வில்பத்து காட்டு வட எல்லைப் பகுதியில் மறிச்சுக்கட்டியிலிருந்து சிலாவத்துறை நோக்கிய பாதையே இந்தப்படத்தில் உள்ளது.

ஒவ்வொரு வீட்டுக்கும் 1 ஏக்கருக்கு கூடுதலான கள்ளக்காணி என்ற வகையில் 3000 வீடுகளுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது. வீடமைந்துள்ள காணிகளில் பெண்கள் பரவலாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் கால்நடைகளை வளர்ப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

அண்மையில் அந்தப் பகுதியால் சென்றபோது இவற்றை காணக்கூடியதாக இருந்தது.

  • தொடங்கியவர்

வில்பத்து எல்லைப்பகுதியில் மேலும் காடழிப்பு இடம்பெறுவதாக குற்றச்சாட்டு

 


வில்பத்து எல்லைப்பகுதியில் மேலும் காடழிப்பு இடம்பெறுவதாக குற்றச்சாட்டு
 

வில்பத்து தேசிய சரணாலயத்தை அண்மித்த வனப்பகுதி அழிக்கப்பட்டு வீடமைப்புத் திடட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தொடர்ந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

புத்தளம் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு வீடமைப்புத் திட்டம் இடம்பெறுவதாக சுற்றாடல் துறைசார் அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன.

இந்த குற்றச்சாட்மை நிரூபித்தால் தான் அரசியல் வாழ்க்கையில் இருந்து விடை பெறுவதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார இன்று சவால் விடுத்தார்.

மன்னார் மறிச்சிக்கட்டி பிரசேத்தில் இருந்து புத்தளம் எழுவான்குளம் பிரதேசம் வரையான 10 கிலோ மிற்றர் வனப்பகுதியில் வில்பத்து வலையத்தில் இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

இங்கு அமைக்கபட்ட சில வீடுகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட வீதி ஒன்றை கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இதே வேளை கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்ட விலத்திக்குளம் சரணாலயம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் கண்காய்வாளரினால் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் அறிக்கை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.

http://newsfirst.lk/tamil/2017/12/வில்பத்து-எல்லைப்பகுதிய/

  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு பக்கத்தால் காடழிப்பு, கள்ளக்காணி பிடிப்பு. மறுபக்கத்தில்,  தமிழர் இடம்பெயர்ந்த முஸ்லீம்களை மீள்குடியேற தடை போடுகிறார்கள் என்று எங்கடை அரைகுறையளை கூட்டிவைச்சு ஒப்பாரி. இதனால் தாங்கள் செய்யும் கள்ள வேலைகள் மறைந்துவிடும், தமிழர் குற்றவாளிகள் என்று நிருபணம் ஆகிவிடும், சாட்ச்சியாக ஒரு வலது குறைஞ்ச்சது எப்பவும் பக்கத்தில குந்திக்கொண்டிருந்து தலையாட்டும். கள்ளகாணியும் பெருகி குட்டியும்  போட்டு எங்களை விரட்ட எங்கடையள் வந்து வீரவசனம் பேசி எங்களுக்கு  நிலாக் காட்ட  வசதியாய் இருக்கும்.இதுகளை  தடுக்க ஆளில்லை விட்டுக்கொடுப்புக்கு வந்துவிடுவினம் ஆளாளுக்கு சொல்வீரர்.

ரிஷாட் பதியுதீனின் திருட்டுக் காணிகளை மீள் சுவீகாரம் செய்யும் காலம் வரும் என நம்பலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.