Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படம் : மணபந்தல்(1961)

இசை: MSV & ராமமூர்த்தி 

வரிகள்: கண்ணதாசன் 

பாடியோர் :   PB சீனிவாஸ் & சுசிலா

பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வையிழந்தேன் - நீ
பாடும் மொழி கேட்டதிலே வார்த்தையிழந்தேன்
நேற்று வந்த நினைவினிலே நெஞ்சமிழந்தேன் - நீங்கள்
நேரில் வந்து நின்றவுடன் என்னை மறந்தேன்

காத்திருந்து காத்திருந்து பொறுமையிழந்தேன்
ஆஆஆஆஆஆஆஆ ஓஓஓஓஓஓஓஓஓ
காத்திருந்து காத்திருந்து பொறுமையிழந்தேன் - தென்றல்
காற்று வைத்த நெருப்பினிலே ஆவியிழந்தேன்

பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வையிழந்தேன்

கண்ணருகே இமையிருந்தும் கனவு காண்பதேன் - உங்கள்
கையருகே மங்கை வந்தும் கதைகள் சொல்வதேன் -

வாய் மலர்ந்து சிரித்ததம்மா காதலன் கிளியே - இங்கே
காய் திறந்தும் கனிந்ததம்மா மாதுளங்கனியே

மாதுளங்கனியே காதலன் கிளியே - இனி
மயங்கும் இன்ப இரவினிலே

வாலிபத் திருநாள் வாலிபத் திருநாள்
வடிவத்தோடு மனது சேரும் வாழ்வினில் ஒரு நாள் இனி
வளரும் இன்ப இரவினிலே வாலிபத் திருநாள்

  • Replies 2.9k
  • Views 246.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிலாமதி
    நிலாமதி

    கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே

  • பால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....!  💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......!  🌹

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    படம்: அமுதா(1975) இசை: MSV  வரிகள் : கண்ணதாசன்  பாடியோர் : TMS 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா.....!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்......!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிசய ராகம்  ஆனந்த ராகம்  அழகிய ராகம்  அபூர்வ ராகம்......!  💞

  • கருத்துக்கள உறவுகள்

படம் :  எதிரிகள் ஜாக்கிரதை(1967)

இசை : S விருத்தாசலம்

பாடியோர் : TMS & சுசீலா

வரிகள் : கண்ணதாசன்

நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்
கோலத்தை மூடிய மேலுடை ஆடும்
கூப்பிடும் பாணியில் பாட்டொன்று பாடும்

நேருக்கு நேர் நின்று பார்ப்பது பார்வை
நீலத்தில் ஊறிய பூ விழிப் பாவை
கோலத்தை மூடிய பால் வண்ணக் கிள்ளை
கூப்பிடும் போதென்ன காளைக்கு வேலை (நேரு)

பச்சைப் புல்லாலே கட்டிய மேடை
பள்ளிக்கு வாவென்று செய்கின்ற ஜாடை
ஒன்று விடாமல் கண்ட பின்னாலே
உள்ளத்தில் ஓடுது பொல்லாத வாடை

கன்னி வாழை தென்னம்பாளை
கையில் விழுந்து கனியை தருமோ
மாலையைச் சூட்டுங்கள்
வேடிக்கை காட்டுங்கள் (நேரு)

முகம் தெரியாத இருள் வரும்போது
முற்றிய காதலில் தள்ளாடும்போது
பகல் வரும்போது விலகி நின்றாலும்
பக்கம் வந்தால் பின்பு ஓடுவதேது
வஞ்சி மேனி தஞ்சமாகி
கொஞ்ச அழைத்தால் கோடி சுகமே
தோள்களில் ஆடட்டும் தூக்கத்தில் பேசட்டும் (நேரு)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லவன் எனக்கு நானே நல்லவன் .....!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாழம்பூவின் நறுமணத்தில் .....!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்......!  💞

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே  இங்கு இணைத்தேனா,

அல்லது வேறு  யாரும் இணைத்தார்களா  தெரியவில்லை,

இந்த கருப்பு வெள்ளை பாடல் ஐயா டி எம் எஸ்  குரலில் கேட்பது..

எஸ் பிபி  குரலில் கேட்பது 

சுவை.

ஏற்கனவே பகிரபட்டிருந்தால் மன்னிக்கவும்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலைச்சாரலில் இளம்பூங்குயில் அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்......!   💞

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா ......!  💞

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாருமில்லை இங்கே......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புன்னகையோ பூமழையோ ......!   💞

  • கருத்துக்கள உறவுகள்

படம் :  நாட்டுகொரு நல்லவன் (1959)

இச ை : மாஸ்ரர்.வேணு

பாடியோர் : சீர்காழி & சுசீலா .

வரிகள் : ஆத்மநாதன்

வண்ண மலரோடு கொஞ்சும்

வாசத்தென்றல் போலெ வாழ்விலே....

காதல் கதை பேச இது நல்ல நேரமே..நா..மே
கதை பேச இது நல்ல நேரமே...
வண்ண மலரோடு கொஞ்சும்

வாசத்தென்றல் போ..லெ வாழ்விலே

காதல் கதை பேச இது நல்ல நேரமே..நாமே...
கதை பேச இது நல்ல நேரமே...

நீல ஒளி வீசும் நிலாவிலே

ஒஒஒஒஒஒ ..

நெஞ்சம் ஒன்றானோம் இந்நாளிலே
ஒஒஒஒஒஒ ..
நீல ஒளி வீசும் நிலாவிலே
ஒஒஒஒஒஒ ..
நெஞ்சம் ஒன்றானோம் இந்நாளிலே
ஒஒஒஒஒஒஒ ..

என்றும் அழியாத போதை  இன்பம்

உருவாகும் வாழ்விலே

காதல் கதை பேச இது நல்ல நேரமே நாமே

கதை பேச இது நல்ல நேரமே
வண்ண மலரோடு கொஞ்சும்
வாசத்தென்றல் போலெ வாழ்விலே
காதல் கதை பேச இது நல்ல நேரமே நா...மே
கதை பேச இது நல்ல நேரமே

நெஞ்சில் நடமாடும் சிந்தாமணி

ஒஒஒஒஒஒஒ ..

நம்மை தடை செய்வார் இல்லை இனி
ஒஒஒஒஒஒ ..
நெஞ்சில் நடமாடும் சிந்தாமணி
ஒஒஒஒஒஒ ..
நம்மை தடை செய்வார் இல்லை இனி
ஒஒஒஒஒஒ ..

நாளும் இணையாக மனம் போலே
புது வாழ்வு தேடுவோம்

காதல் கதை பேச இது நல்ல நேரமே நா....மே

கதை பேச இது நல்ல நேரமே
வண்ண மலரோடு கொஞ்சும்
வாசத்தென்றல் போலெ வாழ்விலே....
காதல் கதை பேச இது நல்ல நேரமே..நாமே
கதை பேச இது நல்ல நேரமே.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடி  என்னடி உலகம் இது எத்தனை கலகமோ ......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதிதேவி சந்நிதியில் .......!   💞

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான்  சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடமாடுகின்றாள்......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் உண்டாகும் கட்டழகி உன்னாலே (தங்கவேலு மனோரமாவின் அழகிய நடனம்).......!   💞

  • கருத்துக்கள உறவுகள்

படம் : முகத்தில் முகம் பார்க்கலாம்(1979) 

இசை : இளையராஜா

வரிகள் : கங்கை அமரன்

பாடியோர் :  மலேசியா & சுசீலா

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறுமுறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன்
நீ .. வரும் வரை (ஆசை)

பொங்கி வரும் அலை பூச்சரம் போட
பூமியை சேர்கின்றது
பொன்னிறம் போல் எழில்
வெண்ணிற வானில் மன்மத தேர் வந்தது

மலர் கணைகள் விழி வழியே
மது மயக்கம் மொழி வழியே
மாற்றம் இங்கே தோற்றம் ... வா இப்போது (ஆசை)

வாழ்ந்திருந்தால் தினம் நான்
உன்னோடு வாழ்வினை பார்த்திருப்பேன்
வாழ்கை எல்லாம் சுகம் வளர்வதைப்போல
நான் உனை சேர்ந்திருப்பேன்

கனவுகளே நினைவில் வரும்
நினைவுகளே நிதமும் சுகம்
கண்ணா என்றும் என்றும் நான் உன்னோடு (ஆசை)

காலமெல்லாம் உந்தன் காலடி தேடி
காவியம் பாட வந்தேன்
கண் விழித்தால் உன்னை காண்பது போலே
கனவினில் நான் இருந்தேன்
உறவிருந்தால் தனிமையில்லை
தனித்திருந்தால் இனிமையில்லை
இனிமேல் பிரிவேயில்லை ....

நாம் ஒன்றானோம் (ஆசை)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மனம் வாழ்க.......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வண்ண மலரோடு கொஞ்சும் வாசத்தென்றல் போலெ வாழ்விலே காதல் கதை பேச இது நல்ல நேரமே.....!  💞

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மை டியர் மீனா உன் ஐடியா என்ன வதைப்பதுதானா என்னை வதைப்பதுதானா......!   💞

 

  • கருத்துக்கள உறவுகள்

படம் : சொன்னது நீதானா (1978)

இசை : இளையராஜா

வரிகள் : புலமைபித்தன்

பாடியோர் :  மலேசியா & சென்சி

அலங்கார பொன் ஊஞ்சலே
அழகாடும் பூஞ்சோலையே
இளமாதுளை மலைத்தேன் சுவை
முத்தாரம் சூடி முத்தாடு கண்ணே (அலங்கார)

வானில் உலவும் ஊர்வசி
வனத்தில் தவழும் மாங்கனி
எனை மயக்க வந்தவள்

மாலை பூத்த மல்லிகை
மயக்கம் சேர்த்த மெல்லிசை
எனை தழுவி நின்றவள்
அழகு கலைகள் நிலவும் எந்தன் (அலங்கார)

ஏட்டில் பாடும் நாயகி
எழுத்தில் கூடும் காரிகை
புது எண்ணம் கண்டவள்

கூட்டில் வாழும் பைங்கிளி
கூடச் சொல்லும் மான் விழி
மது கிண்ணம் கொண்டவள்
இளமை குலுங்க இனிமை வழங்கும் (அலங்கார)

காதல் ராணி குங்குமம்
காளை மனதில் சங்கமம்
புது இன்பம் துவங்கலாம்
கோவில் காணும் பூசைகள்
தேவன் கொண்ட ஆசைகள்
இனி என்றும் நிலைக்கலாம்
புதிய வழியை எடுத்து சொல்லும் (அலங்கார)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரும்பி வா ஒளியே திரும்பி வா .......!  💞

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாடாமலரே தமிழ்த் தேனே ........ சிவாஜி  பானுமதி.....!   💞

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.