Jump to content

ஒரு பொண்ணு தப்பு செய்யறதுக்கு முன்னாடி நூறு தடவை யோசிக்கணும்!


Recommended Posts

ஒரு பொண்ணு தப்பு செய்யறதுக்கு முன்னாடி நூறு தடவை யோசிக்கணும்! கௌதம் மேனனின் ஒன்றாக நிறுவனம் வெளியிட்டுள்ள குறும்படம்!

 

 
maa

 

பதின் வயதினரை குழந்தைகள் என்பதா வளர்ந்தவர்கள் என்பதா? அவர்கள் வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தைகள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். தங்களுடைய குழந்தைப் பருவத்தை மெள்ள இழந்து கொண்டிருக்கும் வளர் இளம் பருவத்தினர். புத்தம் புது இளைஞர்கள். இவ்வயதில் ஆண்களாகட்டும் சரி பெண்களாக இருந்தாலும் சரி, சதா சர்வ காலம் தன்னைப் பற்றியே அதிகம் சிந்திக்கும் மனப்பான்மை ஏற்படும். நான் எனது என்ற தன்னியல்பும், சுயம் சார்ந்த சிந்தனையும் தோன்றும் சமயம், மேலும் தன்னுடல் பற்றிய அதீத உணர்வுகள் உருவாகும் காலகட்டம் இது.

இந்த வயதில் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர் கண்ணாடியை கையாள்வது போலத்தான் அவர்களிடம் பழக வேண்டியிருக்கிறது. அவர்களை அதிக கண்டிப்புடன் வளர்த்தாலும் பிரச்னை, சுதந்திரமாக வளர்த்தாலும் பிரச்னை. காரணம் கண்டித்தால் மனம் உடைந்து அவர்களில் சிலர் எடுக்கும் தவறான முடிவுகள் தீவினையாக பெற்றோரின் வாழ்நாள் முழுவதும் சுட்டெரிக்கும். கண்டிக்காமல் போனால் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகள் பெற்றோர்களின் மீதும் முக்கியமாக தாயின் மீதும் தான் பழிச் சொற்கள் வந்து சேரும். என்ன வளர்த்திருக்கா ஒரு புள்ளைய என்ற சொற்றொடர் ஒரு தாயைத் துரத்துவது போல தந்தையைத் துரத்துவது இல்லை. மேலும் ஆண் பெண் அது சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி இணைந்து தவறு செய்தால் அதில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். முள்ளில் சேலை விழுந்தாலும், சேலையை முள் கிழித்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான் என்ற பழைய சொல்லாடல் என்றும் பொருந்தும். ஆனால் காலந்தோறும் அணுகுமுறை என்பது மாறிவருகிறது. 

அத்தகைய ஒரு அணுகுமுறையை அடித்தளமாக வைத்து, அண்மையில் கெளதம் வாசுதேவ் மேனன் தனது ஒன்றாக எனும் தயாரிப்பு நிறுவனம் மூலமாக இக்குறும்படத்தை வெளியிட்டுள்ளார். மா என்று தலைப்புடைய இக்குறும்படத்தை அன்புற்குரிய அம்மாவுக்கு என்று சமர்ப்பணம் செய்துள்ளார் கெளதம் மேனன். 'லட்சுமி’ குறும்படப் புகழ் இயக்குநர் சர்ஜுன் கே.எம் இயக்கம் மற்றும் படத்தொகுப்பில், சுதர்ஷன் ஸ்ரீநிவாஸனின் ஒளிப்பதிவில், சுந்தரமூத்தி கே.எஸ் இசையில் இக்குறும்படம் வலைஞர்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்து ட்ரண்டிங்கில் டாப் 5 வரிசையில் உள்ளது.

இக்காலகட்டத்துக்குத் தேவையான கதைக் களன். தைரியமான அணுகுமுறை. மகளாக அனிக்காவும் தாயாக கனி குஸ்ருதியும் நடித்துள்ளனர் (இவர் மிஷ்கினின் பிசாசு படத்தில் குடிகாரனின் மனைவியாக நடித்தவர்). இருவரின் இயல்பான நடிப்பும் உடல்மொழியும் இப்படத்திற்கு பெரிய பலம். பதின்வயதுக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு விழிப்புணர்வு தரவல்ல இந்தக் குறும்படம் இதோ 

 

http://www.dinamani.com/cinema/cinema-news/2018/jan/28/maa-a-short-film-produced-by-gowtham-vasudev-menon-onraaga-2852890.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்போன்ற சிந்தனையுள்ள அம்மாக்கள் கிடைப்பது பதின்ம வயது பெண்பிள்ளைகளுக்கு கிடைக்கும் வரம் என்றுதான் சொல்ல வேண்டும்......!

அருமையான குறும்படம்......!

Link to comment
Share on other sites

3 hours ago, suvy said:

இவர்போன்ற சிந்தனையுள்ள அம்மாக்கள் கிடைப்பது பதின்ம வயது பெண்பிள்ளைகளுக்கு கிடைக்கும் வரம் என்றுதான் சொல்ல வேண்டும்......!

அருமையான குறும்படம்......!

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற அம்மா இருக்கின்றனரா என்ற கேள்விக்கு பதில் ஆச்சரியக்குறிதான்.

Link to comment
Share on other sites

குழந்தைப் பருவ எல்லைகளை உடைக்கும் 'மா' குறும்படம்

 

 
ma%20short%20movie

குறும்படத்தின் கதைக்களம் நாளுக்குநாள் மாறிக்கொண்டே வருகிறது. இதுதான் பேசவேண்டுமென்ற எந்தக் கட்டுப்பாட்டையும் அது உடைக்கத் தொடங்கிவிட்டது.

ஆண்பெண் உலகத்தின் சிடுக்குகளை வெவ்வேறுவிதமாக பேசித் தீர்க்க முற்படும் இந்த நவீன படைப்புவடிவத்தின் ஊடாக இன்னும் பல முயற்சிகள் வரத் தொடங்கியுள்ளன. ஆனால் அவையெல்லாம் போதுமான பக்குவத்தோடு இருக்கிறதா என்பதுதான் கேள்வி.

சமீபத்தில் வலைதளங்களில் வெளியாகி 'தாம்பத்ய உறவு' கணவன் எனும் எல்லையை கடந்துசென்றதைப் பேசிய 'லக்ஷ்மி' குறும்படம் ஆயிரக்கணக்கான வலைவாசிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதைப்பற்றிய உரையாடல் முடிவதற்குள்ளாகவே அதன் இயக்குநர் இயக்குநர் சர்ஜூன் கே.எம். இன்னொரு குறும்படத்தோடு களம் இறங்கியுள்ளார். இக்குறும்படத்தை தமிழ் திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் தயாரித்துள்ளார்.

குறும்படத்தின் களம் ஒன்றாக எண்டர்டெயின்மென்ட் ஒரிஜனல் வழங்கியுள்ள மா குறும்படம் ஹாக்கி டோர்னமெண்ட் விளையாட்டில் ஆர்வம் உள்ள 10ஆம் வகுப்புப் படிக்கும் பெண் அவளது வயதைத் தாண்டி நேரும் சம்பவங்களால் அலைக்கழிக்கப்படுகிறாள்.

இக்குறும்பட இயக்குநரின் முதல் படமான 'லட்சுமி' படத்தின் ஆரம்பத்தில் வருவதுபோல கொஞ்சம் ரசாபாசமான காட்சிகள் இதில் ஏதுதும் இல்லையென்பது கொஞ்சம் ஆறுதல். விளைவைப் பற்றி அறியாமல் அவள் ஒரு தவற்றைச் செய்கிறாள். ஹாக்கி விளையாட்டின் நண்பனோடு விருப்பார்வத்தோடு ஈடுபடும் பாலியல் சேர்க்கைக்குப் பிறகு 3 மாதம் கழித்துதான் குறும்படத்தின் காலம் தொடங்குகிறது.

அதனால் பிரச்சனையில்லை. மற்றபடி கர்ப்பமுற்றதை உணர்ந்தபிறகு அவள் பிரச்சனையை எதிர்கொள்ளும் நிமிடங்களே கதைக்களனாக அமைந்துள்ளதால் படம் கவனமாக ஒரு கவிதை போல காட்சிப்படுததப்பட்டுள்ளது.

இந்தமாதிரி பிரச்சனைகள் எல்லாம் ஜெயகாந்தன், பாலச்சந்தர் படங்களில் 70கள் 80களிலேயே பார்த்தாகிவிட்டது. இந்தமாதிரி பிரச்சனைகளை தனது படைப்புகளில் முன்வைத்த அத்தகைய படைப்பாளிகள் அதைக் கடந்துபோவதற்காக பின்னிய காட்சிகள் புரட்சிக் காட்சிகளாக அந்நாட்களில் பார்க்கப்பட்டன.

ஆனால் இப்படம் அவற்றிலிருந்து சற்றே மாறுபடுகிறது. அச்சிறு பெண் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூட விரும்புகிறாள்.... இக்குறும்படத்தில் 15 வயது பெண்ணின் விருப்பம்தான் பிரச்சனை. விருப்பம் எந்த வயதில் வரவேண்டும் என்பதில் சமீபத்தில் பொதுவெளிகளில் உரையாடல் தொடங்கியுள்ளது. ஆனால் 15 வயதுவரை குழந்தைப் பருவம் உள்ளதாக சட்டம் சொல்கிறது. மேலும் இக்காலத்தின் உணவுப்பழக்கவழக்கத்தில் 7ஆம் வகுப்பு பெண்கூட வயதுக்கு வந்துவிடுகிறாள். எனவே அவளுடைய குழந்தைப்பருவம் இல்லையென்று எப்படி சொல்லமுடியும்?

15 வயதில் உடல் சார்ந்த விருப்பம் தவறில்லை. குழந்தைப் பெற்றுக்கொள்வது மட்டும்தான் தவறு என்று இத்திரைப்படம் சொல்கிறது.

பெண்ணின் தாய் இந்தமாதிரி மகளை அணுகும்விதம் மிகமிக புதுசு. அக்குழந்தையை அரவணைத்து வெகுசாதாரணமாக இப்பெண் குழந்தையின் தந்தைக்கு அதாவது தன் கணவனுக்குத் தெரியாமல் பிரச்சினையைக் கடந்துசொன்றுவிடக் கூடியதாக கையாளுகிறார் அத்தாய்.... பெண் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்க அவளை மீண்டும் புத்துயிர்ப்பதுகூட ஒருவகையில் நன்றாகத்தான் இருக்கிறது.

 

ஆனால் இயக்குநருக்கு நமது கேள்விகள் வேறு...

லக்ஷ்மி குறும்படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் சரிபாதி இருந்தது. படத்தையே ரிஜக்ட் செய்தவர்களும் உண்டு. அதை ஒப்பிடும்போது மா குறும்படம் வைத்திருக்கும் அடிப்படையே கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது.

இப்படத்தில் மறைக்கமுடியாத நினைவுச்சின்னமாக பெண்ணுக்கு கர்ப்பம் என்ற அடையாளம் உருவாகிறது. அதை மறைக்க பெரிய உணர்ச்சிபோராட்டமும் வேண்டியிருக்கிறது இப் பெண்ணுக்கு. இதுஎதுவும் ஆணுக்கு இல்லை. ஆண் சார்ந்த குற்றவுணர்ச்சிக்கு பெரிய அளவில் வேலையில்லை, அதுசார்ந்த எந்த விவாதமும் படத்தில் இல்லை. புரிதலும்கூட இல்லை.

மா என்றால் அன்னை என்று பொருள் அதுகூட இந்தி மொழியில்... அந்த இந்தி வார்த்தையை இக்குறும்படத்திற்கு சூட்ட வேண்டிய அவசியம் என்ன என்றெல்லாம் நாம் கேள்வி எழுப்பவேண்டியதில்லை. அது இயக்குநரின் ஒருவகையான தேர்வு என்றுகூட விட்டுவிடலாம்.

படத்தில் ஒரு பொறுப்புள்ள கல்லூரி புரபொசரின் வீட்டுக்குள் ஒரு முக்கியப் பிரச்சனை அவரது கண்களை மறைத்து நடப்பதாக காட்டுவது நம்பும்படியாக இல்லை.

இளம் குழந்தைகளுக்கு சாதாரணமாகவே தீயாகப் பற்றிக்கொள்ளத் தூண்டுகிறது ஊடகம் சினிமா, வலைதளங்கள் போன்றவை. அது ஆண் செய்தாலும் சரி பெண் செய்தாலும் சரி பெண்குழந்தையின் விருப்பம் என்றாலும், குழந்தைப் பருவ காமத்தைச் சொல்லும் படமாக இது அமைந்துள்ளது என்பதுதான் உண்மை.

இந்தமாதிரியான அசட்டுத்தனமான புதுமைப் புரட்சிகள் தேவைதானா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. இதில் பங்கேற்றவர்களின் சிறந்த நடிப்பு, கேமரா, திரைக்கதை நேர்த்தி குறைத்துமிதிப்பிட்டுவிட முடியாத அளவுக்கு பொறுந்தியுள்ள இக்குறும்படம் முழுக்கமுழுக்க இயக்குநரின் சினிமா ஆர்வம் தவிர வேறெதாகவும் அதை நியாயப்படுத்த முடியவில்லை.

ஒரு முக்கியப் பிரச்சனையை அதன் தீவிரத்தின் ரணங்களுக்கான சிராய்ப்புகள் எதுவும் இன்றி அழகான திரைக்கதை வடிவத்திற்குள் பொருந்தி பெரிய சினிமாவின் மினியேச்சராக இக்குறும்படம் அமைந்திருப்பதையும் இன்னொருவகையில் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

http://tamil.thehindu.com/opinion/blogs/article22549602.ece

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றிகள்..

அம்மா கதாபாத்திரம் சிறப்பு. இறுதியில் மகள் மீதான நம்பிக்கையும் மீண்டும் விளையாட மைதானத்துக்கு அனுப்புவதும் நல்ல முடிவு. ஆனால் கவலையும் பெண்களுக்கு ஏற்படும் நெருக்கடியும் மன உழைச்சலும் தான் காட்டப்படுகின்றது. இவற்றுக்கு நிகராக கருக்கலைப்பின் சிரமங்களையும் சிறுமியின் மன உடல் வலிகளையும் காட்டத் தவறிவிட்டார்கள். போட்டோ எடுத்ததா இல்லை வேறுயாருடனும் பகிரப்பட்டதா என்ற உறுதிப்படுத்தலுக்கு கொடுக்கும் முன்னுரிமையை கருக்கலைத்தலின் சிரமங்களை வெளிபபடுத்துவதற்கும் கொடுத்திருந்தால் நல்லதொரு பாடமாக இது இருந்திருக்கும். கருவுண்டாகாத முறையில் பாதுகாப்பாக சிறுவர்கள் உடற்சேர்க்கையில் ஈடுபடலாம் என்ற எண்ணத்தையும்  இப்படம் கணிசமானளவு தோற்றுவிக்கின்றது. முழுமைபெறவில்லை.. 

Link to comment
Share on other sites

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

உங்கள் கருத்து போன்றே சிலரது கருத்தும் இருந்தது இந்த வீடியோ பதிவில் youtube இல்.

 

3 hours ago, சண்டமாருதன் said:

இணைப்பிற்கு நன்றிகள்..

அம்மா கதாபாத்திரம் சிறப்பு. இறுதியில் மகள் மீதான நம்பிக்கையும் மீண்டும் விளையாட மைதானத்துக்கு அனுப்புவதும் நல்ல முடிவு. ஆனால் கவலையும் பெண்களுக்கு ஏற்படும் நெருக்கடியும் மன உழைச்சலும் தான் காட்டப்படுகின்றது. இவற்றுக்கு நிகராக கருக்கலைப்பின் சிரமங்களையும் சிறுமியின் மன உடல் வலிகளையும் காட்டத் தவறிவிட்டார்கள். போட்டோ எடுத்ததா இல்லை வேறுயாருடனும் பகிரப்பட்டதா என்ற உறுதிப்படுத்தலுக்கு கொடுக்கும் முன்னுரிமையை கருக்கலைத்தலின் சிரமங்களை வெளிபபடுத்துவதற்கும் கொடுத்திருந்தால் நல்லதொரு பாடமாக இது இருந்திருக்கும். கருவுண்டாகாத முறையில் பாதுகாப்பாக சிறுவர்கள் உடற்சேர்க்கையில் ஈடுபடலாம் என்ற எண்ணத்தையும்  இப்படம் கணிசமானளவு தோற்றுவிக்கின்றது. முழுமைபெறவில்லை.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நவீனன்.

முதலாவதாக இந்த கதைக்கு ஏற்றமாதிரி நடித்த தாய்க்கும் மகளுக்கும் பாராட்டுக்கள்.

அடுத்து இது மாதிரியான பிரச்சனைகள் உலகளாவிய பிரச்சனையாக உள்ளது.

மேலைத்தேய நாடுகளில் இதை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் பெற்றோர்களே முக்கிய இடங்களில் பாதுகாப்புறைகளை வையுங்கள் என்று சொல்லும் நிலை.

இனிவரும் காலங்களில் எதுவுமே செய்யாதே என்பதை விட பாதுகாப்பாக செய் என்று சொல்லும் மனோபக்குவம் வர வேண்டும்.

Link to comment
Share on other sites

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

இந்த வீடியோ தொடர்பாக மேலே சண்டமாருதன் எழுதியவாறு மாறுபட்ட கருத்தில் விவாதிக்கிறார்கள் youtube இல்.

 

6 hours ago, ஈழப்பிரியன் said:

இணைப்பிற்கு நன்றி நவீனன்.

முதலாவதாக இந்த கதைக்கு ஏற்றமாதிரி நடித்த தாய்க்கும் மகளுக்கும் பாராட்டுக்கள்.

அடுத்து இது மாதிரியான பிரச்சனைகள் உலகளாவிய பிரச்சனையாக உள்ளது.

மேலைத்தேய நாடுகளில் இதை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் பெற்றோர்களே முக்கிய இடங்களில் பாதுகாப்புறைகளை வையுங்கள் என்று சொல்லும் நிலை.

இனிவரும் காலங்களில் எதுவுமே செய்யாதே என்பதை விட பாதுகாப்பாக செய் என்று சொல்லும் மனோபக்குவம் வர வேண்டும்.

 

Link to comment
Share on other sites

மாற்றுக் களம்: தாய்க்கும் மகளுக்கும் ‘மா’

 

 

02chrcjmaa%202

பெண்களின் பாலியல் சுதந்திரத்தைப் பேச முயன்று தமிழ் வலைவாசிகளின் கவனத்தை ஈர்த்து, சலசலப்பையும் ஏற்படுத்திய குறும்படம் ‘லட்சுமி’. இதன் இயக்குநர் சர்ஜுன் கே.எம். இயக்கத்தில் கடந்த வாரம் யூடியூபில் வெளியானது ‘மா’ என்ற புதிய குறும்படம். ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, இரண்டு முதன்மைக் கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு படிக்கும் விடலைப் பெண் கருவுறுகிறாள். தன்னுடைய தாயிடம் நடந்ததைச் சொல்ல இருவரும் இணைந்து சூழலை எதிர்கொள்வதுதான் ‘மா’ குறும்படத்தின் கதை.

 

நுட்பமான திரைமொழி

‘பாலியல் சுதந்திரம்’ என்ற கருத்தாக்கத்தைப் போலவே ‘பதின்பருவ கர்ப்பம்’ என்பதும் பொதுச் சமூகத்தில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய தலைப்பே! சமூக ஒழுக்க மரபுகளை மீறும் எந்த ஒன்றும் நிச்சயம் எதிர்ப்பையும் சந்திக்கும் கவனத்தையும் ஈர்க்கும். அந்த வகையில் ‘லட்சுமி’ குறும்படம் இரண்டையும் பெற்றது. ஆனால், ஒரு கலைப் படைப்பு நேர்மையாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே அது சமூகத்தில் தாக்கம் செலுத்திக் காலத்தை வெல்லும். இத்தகைய புரிதலோடு அணுகினால் ‘லட்சுமி’ குறும்படத்தைக் கையாண்டவிதத்தைக் காட்டிலும் நுட்பமாக ‘மா’வில் திரைமொழி பேசியிருக்கிறார் இயக்குநர் சர்ஜுன்.

குறிப்பாகத் தாய்-மகள் உறவை நுணுக்கமாகப் படம் பதிவுசெய்திருக்கிறது. தன்னுடைய 15 வயது மகள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததும் முதலில் வெறுத்தொதுக்கும் தாய் பின்னர் அவளை அரவணைத்தல், மகளின் நிலையைக் கணவரிடம் சொல்லிவிடத் துடித்தாலும் அதன் பாதகத்தை எண்ணி அமைதி காத்தல், இறுதி காட்சியில் மகளை மீண்டும் நிமிர்ந்தெழ உத்வேகம் அளித்தல் என கம்பீரமாகத் தாய்மையைத் தன்னுடைய திறமையான நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கிறார் மலையாள நடிகை கனி கஸ்ருதி.

 

பெண்ணுக்காக, பெண்ணைப் பற்றி

இவை சாத்தியமாகக் காரணம் பிரியங்கா ரவிந்திரனின் திரைக்கதை. பிரியங்காவைப் பாராட்டும் அதே வேளை, திரைக்கதாசிரியராக ஒரு பெண்ணைக் கொண்டுவந்த இயக்குநருக்கும் பாராட்டுகள். பெண்மையை, பெண்களின் வாழ்வுலகை அவர்களின் அகவுலகை ஆண் மையப் பார்வையில் வெளிப்படுத்தும் கலை வெளிப்பாடுகள் முழுமையானவை என்று கூறிவிட முடியாது. திரைக்கதையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. சர்ஜுன் அவ்விதத்தில் ஒரு பெண் திறமையை இப்படத்துக்குப் பயன்படுத்திக்கொண்டிருப்பது நம்பகத்தின் அருகில் பார்வையாளர்களைக் கொண்டுவருகிறது.

 

02chrcjmaa%201
ஆண் தன்மையில் திருப்பம்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இது முதன்முறையாகப் பேசப்பட்டிருக்கும் கருப்பொருள் அல்ல. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ முதல் ‘ஆதலால் காதல் செய்வீர்’வரை ஆண்கள் பெண்களை மயக்கித் தங்களுடைய வலைக்குள் விழ வைப்பதாகவே திருமணத்துக்கு வெளியே உருவாகும் பாலியல் உறவுகள் புனையப்பட்டு வந்திருக்கின்றன. இத்தகைய உறவில் பெண்களுக்குச் சம்மதமோ விருப்பமோ இருப்பதாகச் சொல்லும் துணிச்சல் அரிதாகவே வெளிப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ‘லட்சுமி’, ‘மா’ இரண்டு படங்களும் அத்தகைய மனத்தடையை மீறி உள்ளன. குறிப்பாக, ‘மா’வில் உள்ள ஹரி கதாபாத்திரம்

நிகழ்ந்தவற்றுக்குப் பொறுப்பேற்கும் காட்சி ஆண் தன்மை குறித்த புனைவில் முக்கியத் திருப்பம் அல்லது சோதனை முயற்சி எனலாம். அந்தத் தருணத்தில் படம், யார் மீதோ பழி போட்டுவிட்டு விலகி ஓட நினைக்காமல், பாலியல் கல்விக்கான தேவையை மறைமுகமாக வலியுறுத்துகிறது. அதே சோதனை முயற்சியைத் தந்தை கதாபாத்திரத்திலும் இயக்குநர் செய்திருக்க வேண்டும். ஆனால், அவரோ ஹாக்கி வீராங்கனையான தன்னுடைய மகளின் விளையாட்டுப் பயிற்சிக்கான உடையை குறைபேசுவது, தனக்கு வரும் அலைபேசி அழைப்பில் சக ஆசிரியரிடம் ஆண்-பெண் நட்பைக் கொச்சைப்படுத்துவது என்பதாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

இத்தனை குறைகளையும் கடந்து பதின்பருவ பாலியல் சிக்கலையும் தாய்-மகளுக்கு இடையிலான புரிதலையும் நுட்பமாகத் திரையில் பேச முயன்றிருக்கிறது ‘மா’.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22621386.ece

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2018 at 1:17 AM, நவீனன் said:

குழந்தைப் பருவ எல்லைகளை உடைக்கும் 'மா' குறும்படம்

 

 
ma%20short%20movie

குறும்படத்தின் கதைக்களம் நாளுக்குநாள் மாறிக்கொண்டே வருகிறது. இதுதான் பேசவேண்டுமென்ற எந்தக் கட்டுப்பாட்டையும் அது உடைக்கத் தொடங்கிவிட்டது.

ஆண்பெண் உலகத்தின் சிடுக்குகளை வெவ்வேறுவிதமாக பேசித் தீர்க்க முற்படும் இந்த நவீன படைப்புவடிவத்தின் ஊடாக இன்னும் பல முயற்சிகள் வரத் தொடங்கியுள்ளன. ஆனால் அவையெல்லாம் போதுமான பக்குவத்தோடு இருக்கிறதா என்பதுதான் கேள்வி.

சமீபத்தில் வலைதளங்களில் வெளியாகி 'தாம்பத்ய உறவு' கணவன் எனும் எல்லையை கடந்துசென்றதைப் பேசிய 'லக்ஷ்மி' குறும்படம் ஆயிரக்கணக்கான வலைவாசிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதைப்பற்றிய உரையாடல் முடிவதற்குள்ளாகவே அதன் இயக்குநர் இயக்குநர் சர்ஜூன் கே.எம். இன்னொரு குறும்படத்தோடு களம் இறங்கியுள்ளார். இக்குறும்படத்தை தமிழ் திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் தயாரித்துள்ளார்.

குறும்படத்தின் களம் ஒன்றாக எண்டர்டெயின்மென்ட் ஒரிஜனல் வழங்கியுள்ள மா குறும்படம் ஹாக்கி டோர்னமெண்ட் விளையாட்டில் ஆர்வம் உள்ள 10ஆம் வகுப்புப் படிக்கும் பெண் அவளது வயதைத் தாண்டி நேரும் சம்பவங்களால் அலைக்கழிக்கப்படுகிறாள்.

இக்குறும்பட இயக்குநரின் முதல் படமான 'லட்சுமி' படத்தின் ஆரம்பத்தில் வருவதுபோல கொஞ்சம் ரசாபாசமான காட்சிகள் இதில் ஏதுதும் இல்லையென்பது கொஞ்சம் ஆறுதல். விளைவைப் பற்றி அறியாமல் அவள் ஒரு தவற்றைச் செய்கிறாள். ஹாக்கி விளையாட்டின் நண்பனோடு விருப்பார்வத்தோடு ஈடுபடும் பாலியல் சேர்க்கைக்குப் பிறகு 3 மாதம் கழித்துதான் குறும்படத்தின் காலம் தொடங்குகிறது.

அதனால் பிரச்சனையில்லை. மற்றபடி கர்ப்பமுற்றதை உணர்ந்தபிறகு அவள் பிரச்சனையை எதிர்கொள்ளும் நிமிடங்களே கதைக்களனாக அமைந்துள்ளதால் படம் கவனமாக ஒரு கவிதை போல காட்சிப்படுததப்பட்டுள்ளது.

இந்தமாதிரி பிரச்சனைகள் எல்லாம் ஜெயகாந்தன், பாலச்சந்தர் படங்களில் 70கள் 80களிலேயே பார்த்தாகிவிட்டது. இந்தமாதிரி பிரச்சனைகளை தனது படைப்புகளில் முன்வைத்த அத்தகைய படைப்பாளிகள் அதைக் கடந்துபோவதற்காக பின்னிய காட்சிகள் புரட்சிக் காட்சிகளாக அந்நாட்களில் பார்க்கப்பட்டன.

ஆனால் இப்படம் அவற்றிலிருந்து சற்றே மாறுபடுகிறது. அச்சிறு பெண் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூட விரும்புகிறாள்.... இக்குறும்படத்தில் 15 வயது பெண்ணின் விருப்பம்தான் பிரச்சனை. விருப்பம் எந்த வயதில் வரவேண்டும் என்பதில் சமீபத்தில் பொதுவெளிகளில் உரையாடல் தொடங்கியுள்ளது. ஆனால் 15 வயதுவரை குழந்தைப் பருவம் உள்ளதாக சட்டம் சொல்கிறது. மேலும் இக்காலத்தின் உணவுப்பழக்கவழக்கத்தில் 7ஆம் வகுப்பு பெண்கூட வயதுக்கு வந்துவிடுகிறாள். எனவே அவளுடைய குழந்தைப்பருவம் இல்லையென்று எப்படி சொல்லமுடியும்?

15 வயதில் உடல் சார்ந்த விருப்பம் தவறில்லை. குழந்தைப் பெற்றுக்கொள்வது மட்டும்தான் தவறு என்று இத்திரைப்படம் சொல்கிறது.

பெண்ணின் தாய் இந்தமாதிரி மகளை அணுகும்விதம் மிகமிக புதுசு. அக்குழந்தையை அரவணைத்து வெகுசாதாரணமாக இப்பெண் குழந்தையின் தந்தைக்கு அதாவது தன் கணவனுக்குத் தெரியாமல் பிரச்சினையைக் கடந்துசொன்றுவிடக் கூடியதாக கையாளுகிறார் அத்தாய்.... பெண் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்க அவளை மீண்டும் புத்துயிர்ப்பதுகூட ஒருவகையில் நன்றாகத்தான் இருக்கிறது.

 

ஆனால் இயக்குநருக்கு நமது கேள்விகள் வேறு...

லக்ஷ்மி குறும்படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் சரிபாதி இருந்தது. படத்தையே ரிஜக்ட் செய்தவர்களும் உண்டு. அதை ஒப்பிடும்போது மா குறும்படம் வைத்திருக்கும் அடிப்படையே கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது.

இப்படத்தில் மறைக்கமுடியாத நினைவுச்சின்னமாக பெண்ணுக்கு கர்ப்பம் என்ற அடையாளம் உருவாகிறது. அதை மறைக்க பெரிய உணர்ச்சிபோராட்டமும் வேண்டியிருக்கிறது இப் பெண்ணுக்கு. இதுஎதுவும் ஆணுக்கு இல்லை. ஆண் சார்ந்த குற்றவுணர்ச்சிக்கு பெரிய அளவில் வேலையில்லை, அதுசார்ந்த எந்த விவாதமும் படத்தில் இல்லை. புரிதலும்கூட இல்லை.

மா என்றால் அன்னை என்று பொருள் அதுகூட இந்தி மொழியில்... அந்த இந்தி வார்த்தையை இக்குறும்படத்திற்கு சூட்ட வேண்டிய அவசியம் என்ன என்றெல்லாம் நாம் கேள்வி எழுப்பவேண்டியதில்லை. அது இயக்குநரின் ஒருவகையான தேர்வு என்றுகூட விட்டுவிடலாம்.

படத்தில் ஒரு பொறுப்புள்ள கல்லூரி புரபொசரின் வீட்டுக்குள் ஒரு முக்கியப் பிரச்சனை அவரது கண்களை மறைத்து நடப்பதாக காட்டுவது நம்பும்படியாக இல்லை.

இளம் குழந்தைகளுக்கு சாதாரணமாகவே தீயாகப் பற்றிக்கொள்ளத் தூண்டுகிறது ஊடகம் சினிமா, வலைதளங்கள் போன்றவை. அது ஆண் செய்தாலும் சரி பெண் செய்தாலும் சரி பெண்குழந்தையின் விருப்பம் என்றாலும், குழந்தைப் பருவ காமத்தைச் சொல்லும் படமாக இது அமைந்துள்ளது என்பதுதான் உண்மை.

இந்தமாதிரியான அசட்டுத்தனமான புதுமைப் புரட்சிகள் தேவைதானா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. இதில் பங்கேற்றவர்களின் சிறந்த நடிப்பு, கேமரா, திரைக்கதை நேர்த்தி குறைத்துமிதிப்பிட்டுவிட முடியாத அளவுக்கு பொறுந்தியுள்ள இக்குறும்படம் முழுக்கமுழுக்க இயக்குநரின் சினிமா ஆர்வம் தவிர வேறெதாகவும் அதை நியாயப்படுத்த முடியவில்லை.

ஒரு முக்கியப் பிரச்சனையை அதன் தீவிரத்தின் ரணங்களுக்கான சிராய்ப்புகள் எதுவும் இன்றி அழகான திரைக்கதை வடிவத்திற்குள் பொருந்தி பெரிய சினிமாவின் மினியேச்சராக இக்குறும்படம் அமைந்திருப்பதையும் இன்னொருவகையில் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

http://tamil.thehindu.com/opinion/blogs/article22549602.ece

மிக நேர்த்தியாக படமாக்கப்பட்ட குறும்படம். நடித்ததை விட வாழ்ந்து காட்டினார்கள் தாயும் சேயும். சமூகம் மேலும் பக்குவம் பெறத் தேவையான படம். வலைத்தளங்களில் எப்படியோ இத்தனைக் காலம் இக்குறும்படத்தைப் பார்க்கவில்லை. நவீனன் அவர்களுக்கு நன்றி. 

பின்னூட்டம் அளிக்கையில் தேவையின்றி முழுக் கட்டுரையை Quote செய்துவிட்டேன். யாழ் நண்பர்கள் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IPL 2024 கிண்ணத்தை சுவீகரித்தது கொல்கத்தா நைட்ரைடஸ் Published By: VISHNU 26 MAY, 2024 | 10:46 PM   இந்தியன் பிறீமியர் லீக் 2024 இருபது 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் அரங்கில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமானது. கிண்ணத்தை தன்வசப்படுத்து நோக்கில் இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதியதில் கொல்கத்தா நைட்ரைடஸ் அணி கிண்ணத்தை சுவீகரித்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து, 18.3 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றது. 114 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடஸ் அணி, 10.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட்ரைடஸ் அணி சார்பாக Venkatesh Iyer ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும், Rahmanullah Gurbaz 39 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வழி வகுத்தனர். https://www.virakesari.lk/article/184561
    • துயரமான பதிவு. ஆழ்ந்த இரங்கல்கள்!
    • விள‌ம்ப‌ர‌ நிறுவ‌னங்க‌ள் கோவிக்க‌ போகினம் ஹா ஹா😁...........................................  
    • மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வடமாகாணம் மேம்படுத்தப்படும் - ஜனாதிபதி  Published By: VISHNU   26 MAY, 2024 | 07:08 PM 2017ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது வடமாகாண சுகாதார சேவையை மேம்படுத்தவதற்காக தன்னால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இன்று மக்களிடம் கையளிக்க முடிந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நவீன வைத்தியசாலைகளுடன் கூடிய சுகாதார வசதிகளை வடக்கு மாகாணம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மேல் மாகாணத்தைப் போன்று மேம்பட்ட சுகாதார சேவைகளைக் கொண்ட மாகாணமாக வடக்கின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை இன்று (26) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.  நெதர்லாந்து அரசாங்கத்தின் ஆதரவுடன் 4500 மில்லியன் ரூபா செலவில் இந்த மருத்துவ சிகிச்சை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது  வட மாகாணத்தில் உள்ள மிகப் பெரிய மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் என்பதோடு மனநல மறுவாழ்வுப் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, ஆய்வுகூடம், கதிரியக்கப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நெதர்லாந்துத் தூதுவர் பொனி ஹோபேக் அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார். மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது: இந்த மருத்துவப் பிரிவை இன்று திறந்து வைக்கும் போது இதன் பின்னணியைக் குறிப்பிட வேண்டும். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், யுத்தம் காரணமாக வடமாகாணத்தில் தடைப்பட்ட சேவைகளை மீளமைப்பதற்கான அடிப்படைப் பணிகளை அப்போதைய அரசாங்கம் ஆரம்பித்தது. முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்தப் பிரிவுகள் அனைத்தின் முன்னேற்றத்துக்கு, இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கிணங்க, வடமாகாணத்தில் சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்காக புதிய மருத்துவப் பிரிவுகளை நிறுவுவதற்கு பிரதமர் என்ற ரீதியில் நெதர்லாந்து அரசாங்கத்துடன் கலந்துரையாடினேன். அப்போது வடமாகாண சபையில் இருந்த சுகாதார அமைச்சரும், முன்னாள் முதலமைச்சரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். யுத்தத்திற்கு முன்னர், கொழும்புக்கு அடுத்தபடியாக சிறந்த சுகாதார சேவையைக் கொண்ட பிரதேசமாக யாழ்ப்பாணம் திகழ்ந்தது. மேல்மாகாணம் அபிவிருத்தியடைந்த நிலையில் தென் மாகாணமும் மத்திய மாகாணமும் அபிவிருத்தியடைந்தன. வடக்கு மாகாணத்தை மீண்டும் அந்த நிலைக்கு கொண்டு வருவதே எனது நோக்கமாகும். அதனால்தான் இந்த மருத்துவமனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு  மேம்படுத்தப்படுகிறது. அத்துடன், 2017ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கும், அதற்கு தேவையான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் நான் பிரதமராக இருந்து பணத்தை ஒதுக்கினேன். இன்று இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் இந்தப் பணிகள் உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என்று பணித்தேன். இப்போது வடக்கு மாகாணத்தில் நவீன மருத்துவமனைகள் உள்ளன. யாழ்ப்பாண வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்ற தீர்மானித்தோம். மேலும் மன்னார் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யப்படும் அதே வேளை வவுனியா வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றுவதுடன் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்று வழங்கப்படும். ராகம வைத்தியசாலைக்குப் பிறகு இந்த நவீன இயந்திரங்களைக் கொண்ட ஒரே வைத்தியசாலை மாங்குளம் வைத்தியசாலை என்பது குறிப்பிடத் தக்கது. யுத்தம் காரணமாக அங்கவீனமடைந்தவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராகம வைத்தியசாலை ஸ்தாபிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்களுக்கு ராகம வைத்தியசாலை போன்ற நவீன வைத்தியசாலையை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். வடமாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 04 வைத்தியசாலை பிரிவுகளில் உள்ள உபகரணங்கள் இலங்கையில் உள்ள பல வைத்தியசாலைகளில் இல்லை. இந்த சாதனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு மருத்துவமனை நிர்வாகமும், மருத்துவமனை முகாமைத்துவமும் முயற்சி எடுக்க வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தின் சிறப்பான நிலை காரணமாக கியூபா சுகாதார சேவைகளில் முன்னணியில் உள்ளது. எனவே, மருத்துவமனை நிர்வாகத்தையும் முகாமைத்துவத்தையும் உயர் நிலைக்கு கொண்டு வர பாடுபட வேண்டும். அதற்கு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆசிய அபிவிருத்தி நிதியத்தில் இருந்தும் நிதி ஒதுக்கீடு பெறலாம். இந்தச் செயற்பாடுகள் அனைத்தினூடாகவும் நாட்டில் நம்பிக்கையான சுகாதார சேவையை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம் என்பதையும் கூற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்: நெதர்லாந்து அரசாங்கத்தின்  நிதி உதவியுடன் நான்காயிரத்து ஐநூறு மில்லியன் ரூபா செலவில் மாங்குளம் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் இப்பிரதேச மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு பெரும் உதவியாக உள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வாறான வசதிகளை வழங்கி சேவையாற்றிய நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நாடு பல சவால்களை எதிர்நோக்கியிருந்த வேளையில் ஜனாதிபதி அச்சமின்றி முன் வந்து அந்த சவால்களில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக நாட்டைக் பொறுப்பேற்றார். இந்த நாடு அப்போது இருந்த நிலையை மக்கள் மறக்கவில்லை என்று நான் நம்புகிறேன். அந்த நிலையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக ஜனாதிபதி தன்னை அர்ப்பணித்தார். அதன் பலனை இந்நாட்டு மக்கள் இன்று அனுபவித்து வருகின்றனர். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமாகாணத்தில் செலவிடும் மூன்றாவது நாள் இன்று. இந்த மூன்று நாட்களாக வடமாகாணத்திற்கு விஜயம் செய்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரில் கண்டு அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இன்று அவரால் திறந்து வைக்கப்படும் இந்த மருத்துவ மறுவாழ்வு சிகிச்சை மற்றும் மனநல மேம்பாட்டு மையம் ‘டிரைவ்’ திட்டத்தின் கீழ் திறக்கப்படும் மூன்றாவது மருத்துவமனையாகும். வடமாகாண சுகாதார சேவையில் இது ஒரு மைல் கல்லாக மாறும் என்பது உறுதி. ஜனாதிபதியின் ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் ஊக்கம் காரணமாக இந்த திட்டம் யதார்த்தமாகிறது. 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக இருந்த போது வடமாகாணத்திற்கு இத்திட்டத்தை பெற்றுக் கொடுத்திருந்தார். இன்று மாங்குளம் வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்ட மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதுடன் அதன் மூலம் அவர் சுகாதாரத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். சுகாதாரத் துறை மாத்திரமின்றி  அனைத்து துறைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர் எஸ். நோகராதலிங்கம்: இந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை. இன்று இந்த மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனைய மருத்துவமனைகளுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுத்தால், இப்பகுதி மக்கள் முழுமையாக பயன்பெறுவார்கள். இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலதான்: இந்தப் பிரிவு  இந்த வன்னி மாவட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமமாகும். இதற்காக முயற்சித்த அனைவருக்கும், குறிப்பாக எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வட மாகாணத்துக்கே  ஒரு பெரும் வளமாக இதனைப் பெற்றிருக்கின்றோம். இந்த வளம் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த வைத்தியசாலை மிகச் சிறப்பாக நடைபெற அவசியமான அனைத்து வளங்களையும் நீங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் நான் முன்வைக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோபேக் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/184556
    • வெள்ளிக் கிழ‌மை ராஜ‌ஸ்தான் கூட‌ ந‌ட‌ந்த‌ விளையாட்டு போல் அவுஸ் க‌ப்ட‌ன் நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்து அதிக‌ ர‌ன்ஸ் அடிக்க‌ முடியாம‌ போய் விட்ட‌து   போர‌ போக்கை பார்த்தால் விளையாட்டு 12ஓவ‌ருக்கை முடிந்து விடும் போல் இருக்கு.....................................................
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.