Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘அந்த இரண்டிலும் பங்​கேற்க மாட்டோம்’.... இரா.சம்பந்தன்

Featured Replies

‘அந்த இரண்டிலும் பங்கேற்க மாட்டோம்’.... இரா.சம்பந்தன்
 

70 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் தாம் கலந்துக்கொள்ளப்போவதில்லை என, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்  காரணமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் பிரசார  நடவடிக்கையில் ஈடுபடும் பொருட்டு எதிர்வரும் தினங்களை ஒதுக்கியிருப்பதன் காரணமாக, இந்நிகழ்வில் பங்குபற்ற முடியாதென அவர் அறிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 6 ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள பிணைமுறி மோசடி அறிக்கை மீதான விவாதத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துக்கொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அந்த-இரண்டிலும்-பங்-கேற்க-மாட்டோம்/175-211096

  • கருத்துக்கள உறவுகள்

 

அரசியல் தந்திர நகர்வாம்.tw_angry:

6 hours ago, நவீனன் said:

70 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் தாம் கலந்துக்கொள்ளப்போவதில்லை என, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மக்களை ஏமாற்ற சம்மந்தனின் தேர்தல் கூத்து!

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für இனி வயசுக்கு வந்து என்ன வராட்டி என்ன..

இனி வயசுக்கு... வந்து என்ன வராட்டி என்ன..
ஸ்ரீலங்கா... கொடுத்த இரண்டு கோடி ரூபாய், பறி போகப் போறது நிச்சயம் .
அதுக்காகத் தன்னும், ஒருக்கால் போய்... சிங்கக்  கொடியை, தூக்கி விட்டு வாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, nunavilan said:

 

அரசியல் தந்திர நகர்வாம்.tw_angry:

6 hours ago, போல் said:

மக்களை ஏமாற்ற சம்மந்தனின் தேர்தல் கூத்து!

வழமை போல பின் கதவாலை போய் சந்திப்பினம் :cool:

  • தொடங்கியவர்

கூட்டமைப்பு நாடாளுமன்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்காது

 

TNA-manifasto-2018 (2)சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரும் 6ஆம் நாள் நடைபெறவுள்ள, அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜனநாயக தேசிய முன்னணியும் என்று அறிவித்துள்ளன.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் முன்னைய ஆட்சிக்கால ஊழல்கள், மோசடிகள், முறைகேடுகள் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக எதிர்வரும் 6ஆம் நாள், காலை 10.30 மணிக்கு சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகள் வரும் 7ஆம் நாளுடன் முடிவடையவுள்ள நிலையில், அதற்கு முதல் நாள் இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது.

தேர்தல் பரப்புரைச் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதால் தமது கட்சியினால், இந்த விவாதத்தில் பங்கேற்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்லவுக்கு இவர்கள் அறிவித்துள்ளனர்.

சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது அதிகாரபூர்வமற்ற வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/02/03/news/28803

 

சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டங்களில் இருந்து ஒதுங்குகிறார் சம்பந்தன்

 

sampanthanசிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் நிகழ்வுகளில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்கமாட்டார் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடலில் நாளை காலை சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

பிரித்தானிய இளைவரசர் எட்வேர்ட் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார்.

எனினும், சுதந்திர நாள் விழாவில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனோ, அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேறு பிரதிநிதிகளோ பங்கேற்கமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளதால், சுதந்திர நாள் நிகழ்வுகளில் பங்கேற்க முடியாதிருப்பதாக, இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பதாக வெளியான செய்திகளை, கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் மறுத்துள்ளார்.

தேர்தல் பரப்புரைகள் காரணமாகவே நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வுகளில் பங்கேற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

http://www.puthinappalakai.net/2018/02/03/news/28807

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.