Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏற்கனவே இருந்தவையும் ஏற்கனவே இல்லாதவர்களும்

Featured Replies

தீவிரசிந்தனை செய்யக்கூடியவர்கள் மட்டும் தொடர்ந்து வாசிக்கவும்.. 

நான் சில சமயங்களில் எனக்குள் நினைத்துக்கொள்ளும் ஓர் விடயம் பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். அதை விளக்குவதற்கு இலகுவாக அமைவதற்காக சில உதாரணங்களை முதலில் குறிப்பிடுகின்றேன்.

=> தோமஸ் அல்வா எடிசன் இந்த உலகில் தோன்றினார், வாழ்ந்தார், பல விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை செய்தார், வாழ்ந்தார், பின்னர் மறைந்தார்.

=> திருவள்ளுவர் தோன்றினார், வாழ்ந்தார், திருக்குறளை இயற்றினார், வாழ்ந்தார், பின்னர் மறைந்தார்.

=> பீட்டர் தோன்றினார், வாழ்ந்தார், பெருந்தெருக்கள் போடும்பணியில் ஓர் கூலி தொழிலாளியாக பங்காற்றினார், வாழ்ந்தார், பின்னர் மறைந்தார்,

=> தங்கம்மா தோன்றினாள், வாழ்ந்தாள், எதுவித சமூகத்திட்டங்களிலும் பங்கெடுக்கவில்லை, வாழ்ந்தாள், பின்னர் மறைந்தாள்.

=> இவ்வாறு வெவ்வேறு கோடானுகோடி கோடி கோடி மனிதர்கள் தோன்றினார்கள்/தோன்றுகின்றார்கள்/தோன்றுவார்கள், வாழ்ந்தார்கள்/வாழ்கின்றார்கள்/வாழ்வார்கள், எதையோ செய்தார்கள்/செய்கின்றார்கள்/செய்வார்கள் அல்லது செய்யவில்லை/செய்யமாட்டார்கள், பின்னர் மறைந்தார்கள்/மறைகின்றார்கள்/மறைவார்கள்.

இனி மயக்க நிலை தொடர்கின்றது..

தோமஸ் அல்வா எடிசன் அவர் இல்லாத ஒன்றை படைத்தாரா அல்லது இருக்கும் ஒன்றை விளங்கிக்கொண்டாரா? 

திருவள்ளுவர் திருக்குறளை எழுதினாரா அல்லது மொழியறிவை அனுபவித்து திருக்குறளை உணர்ந்தாரா?

அதாவது,

ஒரு விஞ்ஞானியாகட்டும், கவிஞனாகட்டும், கலைஞனாகட்டும், அவர்கள் உருவாக்கியவை அல்லது படைத்தவை என்று கூறப்படுபவை அவர்களுக்கு - அந்த தனித்தனி மனிதர்களுக்கு அவை புதிய அனுபவங்கள் ஒழிய அவை உண்மையில் ஏற்கனவே இல்லாத புதியதானவை அல்லவே?

ஒரு விஞ்ஞானியாகட்டும், கவிஞனாகட்டும், கலைஞனாகட்டும், அவர்கள் உருவாக்கியவை அல்லது படைத்தவை என்று கூறப்படுபவை அவர்களுக்கு - அந்த தனித்தனி மனிதர்களுக்கு அவை புதிய அனுபவங்கள் ஒழிய அவை உண்மையில் ஏற்கனவே இல்லாத புதியதானவை அல்லவே?

ஏற்கனவே இருந்தவையும்.. ஏற்கனவே இல்லாதவர்களும்..

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரபஞ்சத்தில் பருப்பொருளாக இல்லாத ஒன்றை உருவாக்க மனிதனால் முடியும் என்பதைத்தான் மனிதன் உருவாக்கிய மதம், கடவுள், பணம், ஜனநாயகம், கலைகள், சமூக ஒழுங்குகள் போன்றன உணர்த்துகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இருந்த அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்தார் என நம்பவைத்த மாதிரிதான்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

முதலிலேயே தீவிர சிந்தனை செய்பவர்களுக்கு மட்டும் எண்டு கோடு போட்டு காண்பித்ததால் நான் வாசிக்கவில்லை

 

  • கருத்துக்கள உறவுகள்

கோழியா முட்டையா முதல் வந்தது?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தேடல் குருஜி.....!  tw_blush:

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பக்குவப்பட்ட மனித இனம் வாழ்ந்து வந்திருக்கு. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு முன்பும், பனைஓலைச்சுவடிகளுக்கு முன்பும் வாழ்ந்தவர்கள் சாதாரணமாக சராசரி நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்திருக்கின்றார்கள். ஆனால் இன்றோ இவ்வளவு சாதனங்கள் இருந்தும் ஒரு மனிதன் எவ்வித நோய் நொடியுமின்றி,மருந்து மாத்திரை இல்லாமல்  அறுபத்தி ஒண்டரை ஆண்டுகளுக்கு மேல் வாழ்வது அசாத்தியமாய் இருக்கின்றது. இதெல்லாம் மனிதனுக்குத்தான்.

அடர்காட்டில் வாழும் விலங்குகளும், ஆழ்கடலில் வாழும் மீனினங்களும், ஆகாயத்தில் சஞ்சரிக்கும் பறவைகளும் இன்றும் அன்றைய வாழ்க்கையையே வாழுகின்றன.....!  tw_blush:

இல்லாதவற்றில் இருந்து எதையுமே எடுக்க முடியாது. ஏற்கனவே இருப்பவற்றை எடுத்துதான் அவற்றை சேர்த்தும் பிரித்தும் மாற்றியும் வைப்பதன் மூலம் கண்டுபிடிப்புகள் உருவாகின்றன.

ஒலியும் அப்படியே அண்டத்திலும் பிண்டத்திலும் நிறைந்துள்ளது. காற்றைக் கொண்டு ஏற்ற இறக்கங்களுடன் வெளியேற்றுவதன் மூலம் பேச்சுக்கள் மொழிகள் உருவாகின்றன...!  tw_blush:

ஏதோ என் நினைவில் இருந்து......!  tw_blush:

 

9 hours ago, suvy said:

இல்லாதவற்றில் இருந்து எதையுமே எடுக்க முடியாது. ஏற்கனவே இருப்பவற்றை எடுத்துதான் அவற்றை சேர்த்தும் பிரித்தும் மாற்றியும் வைப்பதன் மூலம் கண்டுபிடிப்புகள் உருவாகின்றன.

நீங்கள் கூறுவது இயற்கையான சிந்தனை முறை.. தொடர்ந்து எழுதுங்கள்.

நீங்கள் கூறியது போல் அண்டத்தில் உள்ளதே பிண்டம் பிண்டத்தில் உள்ளதே அண்டம் என்று சித்தர் பாடல் உள்ளது. அதே போல் மனிதன் உருவாக்கிய ஒரு இயந்திரம் சிந்தித்தால் மனிதனிடம் உள்ளதே இயந்திரத்திலும் உள்ளது இயந்திரத்தில் உள்ளதே மனிதனிடமும் உள்ளது என்றும் சிந்திக்க முடியும். ஒரு மனிதனின் உடல் இயக்கத்திற்கு ஒப்பாகவே ஒரு கார் அமைகின்றது. சாதாரண முள்ளு கரண்டி மேசைகரண்டி கூட மனிதனின் கைகளை பிரதிபலிக்கின்றது. காரைப் பொறுத்தவரை மனிதன் அதைப்படைத்த கடவுளாகின்றான்.  மனிதனை பொறுத்தவரை இந்த அண்டம் அவனை படைத்த கடவுளாகின்றது. விவாதத்துக்கான கருத்துக்களாக இவற்றை முன்வைக்க முடியாவிட்டாலும் இவ்வாறு சிந்திப்பதில் ஒரு சுவார்சியம் இருக்கின்றது. 

 

On 2/4/2018 at 1:04 AM, கரும்பு said:

தோமஸ் அல்வா எடிசன் அவர் இல்லாத ஒன்றை படைத்தாரா அல்லது இருக்கும் ஒன்றை விளங்கிக்கொண்டாரா? 

திருவள்ளுவர் திருக்குறளை எழுதினாரா அல்லது மொழியறிவை அனுபவித்து திருக்குறளை உணர்ந்தாரா?

அதாவது,

ஒரு விஞ்ஞானியாகட்டும், கவிஞனாகட்டும், கலைஞனாகட்டும், அவர்கள் உருவாக்கியவை அல்லது படைத்தவை என்று கூறப்படுபவை அவர்களுக்கு - அந்த தனித்தனி மனிதர்களுக்கு அவை புதிய அனுபவங்கள் ஒழிய அவை உண்மையில் ஏற்கனவே இல்லாத புதியதானவை அல்லவே?

ஒரு விஞ்ஞானியாகட்டும், கவிஞனாகட்டும், கலைஞனாகட்டும், அவர்கள் உருவாக்கியவை அல்லது படைத்தவை என்று கூறப்படுபவை அவர்களுக்கு - அந்த தனித்தனி மனிதர்களுக்கு அவை புதிய அனுபவங்கள் ஒழிய அவை உண்மையில் ஏற்கனவே இல்லாத புதியதானவை அல்லவே?

இல்லத ஒன்றை படைத்தார் என்பதற்கில்லை என்றே தோன்றுகின்றது.. ஒவ்வொருவருக்கும் இந்த சிந்தனை மாறுபடும்.

உதாரணமாக எடிசன் கணடுபிடிதத வெளிச்சம் சூரியனில் உள்ளது. 

சமுதாயம் மிக சீரழிந்த நிலையில் இருந்தபோது ஒழுக்க நெறிகளை எழுதவேண்டிய தேவை திருவள்ளுவருக்கு இருந்தது.

இவ்வாறு சிந்தனையை தூண்டும் பதிவுகளை தொடரந்து எழுதுங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

ல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பக்குவப்பட்ட மனித இனம் வாழ்ந்து வந்திருக்கு. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு முன்பும், பனைஓலைச்சுவடிகளுக்கு முன்பும் வாழ்ந்தவர்கள் சாதாரணமாக சராசரி நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்திருக்கின்றார்கள். ஆனால் இன்றோ இவ்வளவு சாதனங்கள் இருந்தும் ஒரு மனிதன் எவ்வித நோய் நொடியுமின்றி,மருந்து மாத்திரை இல்லாமல்  அறுபத்தி ஒண்டரை ஆண்டுகளுக்கு மேல் வாழ்வது அசாத்தியமாய் இருக்கின்றது. இதெல்லாம் மனிதனுக்குத்தான்.

இப்போது விரும்பியோ விரும்பாமலோ இரசாயன உயிர்கொல்லிகள் நாளாந்தம் நாம் சாப்பிடும் உணவுகளில் சேர்த்தே சாப்பிடுகிறோம்.அப்புறம் எப்படித் தான் உயிர் வாழ்வது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.