Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு சுமந்திரன் அழைப்பு

Featured Replies

தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு சுமந்திரன் அழைப்பு

 

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் 40 சபைகளை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் யாழ் மாவட்டத்தில் 13 சபைகளை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

உள்ளுராட்சி சபைத் தேர்தல் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிலையில் தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு  சுமந்திரன் அழைப்பு

இதற்கமைய இலங்கை தமிழரசுக் கட்சி 56 சபைகளில் போட்டியிட்டதாகவும் அதில் 40 சபைகளை கைப்பற்றியுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

 

அத்துடன் உள்ளுராட்சி சபை மூலம் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக, சமஷ்டி அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தும் தமிழ் கட்சிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://news.ibctamil.com/ta/politics/Sumanthiran-calls-for-Tamil-parties-to-unite

  • தொடங்கியவர்

தமிழ் கட்சிகள் சேர்ந்து செயற்பட வேண்டியது கட்டாயம் : தேர்தலின் பின் சுமந்திரன்

தெற்கில் மஹிந்த வெற்றி பெற்றுள்ள நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி இடையில் தடைப்படக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ் மக்கள் இடைக்கால அறிக்கையை நிராகரித்து வாக்களிக்கவில்லை.

தெற்கில் மஹிந்த வென்றுள்ள நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி இடையில் தடைப்படக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே தமிழ் மக்களுக்கு சமஷ்டிதான் தீர்வு என்ற நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகள் கொள்கை ரீதியில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/173978?ref=home-feed

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தமிழ் கட்சிகள் சேர்ந்து செயற்பட வேண்டியது கட்டாயம் : தேர்தலின் பின் சுமந்திரன்

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் கட்டுப்பணத்தையே திரும்பப்பெற்றுக்கொள்ளமுடியாதவர்கள் என வர்ணிக்கபட்ட கட்சிகளை சுமந்திரன் ஏன் இப்போது அழைக்கிறார்

கனடாவில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியில் சமஸ்டித்தீர்வு தோல்வியில் முடியுமாகவிருந்தாலும் அல்லது நிறைவேற்றப்பட்டாலும் நான் அரசியலிலிருந்து ஒதுங்கவே விரும்புகிறேன் எனக்கூறியபடி அரசியலிலிருந்து விலகவேண்டியதுதானே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

தேர்தலில் கட்டுப்பணத்தையே திரும்பப்பெற்றுக்கொள்ளமுடியாதவர்கள் என வர்ணிக்கபட்ட கட்சிகளை சுமந்திரன் ஏன் இப்போது அழைக்கிறார்

கனடாவில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியில் சமஸ்டித்தீர்வு தோல்வியில் முடியுமாகவிருந்தாலும் அல்லது நிறைவேற்றப்பட்டாலும் நான் அரசியலிலிருந்து ஒதுங்கவே விரும்புகிறேன் எனக்கூறியபடி அரசியலிலிருந்து விலகவேண்டியதுதானே.

அவர் ஒதுங்க மாட்டார் அவருக்கு பின்னால் நிற்க்கும் தமிழின எதிர்பாளர்களுக்கு இவரை விட தோதான ஆள் கிடைக்க மாட்டார் பாருங்க .

உண்மையில் பார்த்தால் தமிழ் மக்களுக்கு இந்த தேர்தல் ஒரு வெற்றிதான், கூத்தமைப்பு ஆட்டம் கண்டது அரசியல் தீர்வும் இன்றி பொருளாதார அபிவிருத்தியும் இன்றி தத்தளித்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேணும் என்ற நிர்ப்பந்த்தம்

மகிந்தவின் பலமானது மேற்குலக நாடுகளை தமக்கு சார்பான நிலைமையை உருவாக்க தமிழர் விடயத்தை கையில் எடுக்கலாம்.

அதே போல் அசைலம் அடிக்கிற ஆக்களுக்கும் இனி கொஞம் நல்ல காலம் பிறக்கும் ??

 

 

 

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்புக்குப் பின்னடைவு – ஒப்புக்கொள்கிறார் சுமந்திரன்

 

sumanthiranகடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒப்புக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,

“ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 56 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டது. இதுவரை வெளியான தகவல்களின்படி, 40 உள்ளூராட்சி சபைகளில் அதிகளவு ஆசனங்களைப் பெற்றுள்ளது. இது மிகப் பெரிய சாதனை.

பல நாடுகளின் தூதுவர்கள் எமக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 7 மாவட்டங்களில், முன்னரை விட சற்று கூடுதலான வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.

sumanthiran

கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட வாக்குகளுடன் ஒப்பிடும் போது, உள்ளூராட்சித் தேர்தலில் கிடைத்த வாக்குகள் கணிசமாகக்  குறைந்துள்ளது. இது ஒரு பின்னடைவு.

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 சபைகளில், 13 சபைகளில் அதிகளவு ஆசனங்களை கைப்பற்றியுள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள  பின்னடைவுக்கான காரணங்கள் குறித்து கூட்டமைப்பு விரைவில் ஆராயும், அதற்கான காரணங்களை கண்டறிந்து களைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/02/12/news/29054

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நவீனன் said:

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள  பின்னடைவுக்கான காரணங்கள் குறித்து கூட்டமைப்பு விரைவில் ஆராயும், அதற்கான காரணங்களை கண்டறிந்து களைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சனத்திற்கு விளங்கித்தான் உங்கன்ட கட்சியை ஒரு விழிப்புணர்வு நிலைக்கு கொண்டுவந்துள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ பாதுகாப்புடன்  சம்பந்தர்/ சுமந்திரன் வரும் போதே யோசித்தேன் மக்களின் ஆதரவு உள்ளவர்களுக்கு (நம்பிக்கை) இவ்வளவு பாதுகாப்பு எதற்கு என்று.

On 2/11/2018 at 6:39 PM, நவீனன் said:

தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு சுமந்திரன் அழைப்பு

இவ்வளவு கெதியா தான் பிச்சையெடுக்க வேண்டியிருக்கும் என்று சுமந்திரன் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்!

வேறு வழியில்லை!

On 2/11/2018 at 6:39 PM, நவீனன் said:

இதற்கமைய இலங்கை தமிழரசுக் கட்சி 56 சபைகளில் போட்டியிட்டதாகவும் அதில் 40 சபைகளை கைப்பற்றியுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

கைப்பற்றியவது உண்மையானால் எதற்கு மற்ற கட்சிகளிடம் யாசகம் செய்ய வேண்டும்.

சுமந்திரனின் இந்த பொய்யான கூற்றுக்களே, அல்லது உண்மைகளை விளங்க முடியாத அளவிற்கு அறிவற்ற மனிதராக இருப்பவர், அவர் அரசியல் தீர்வில் எப்படிப்பட்ட புரிதலை கொண்டிருப்பார் என்பதை தெளிவுபடுத்துகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.