Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1983ல் தமிழருக்கு நிகழ்ந்ததே இன்று எமக்கு நிகழ்கின்றது

Featured Replies

1983ல் தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும் தானே? அது தான் இன்று எங்களுக்கு நடக்கின்றது என பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கண்டி, அக்குறனையில் நிகழ்ந்துள்ள வன்முறைச் சம்பவங்களை அடுத்து அக்குறனை, 8ம் கட்டையிலுள்ள முஸ்லிம் ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”அக்குறனைப் பிரதான சந்தியில் உள்ள கடைத் தொகுதித் தொடர் நெருப்பூட்டபட்டதை ஆயுதம் தரத்தவர்கள் பாரத்துக்கொண்டிருந்தனர். அதனையடுத்து சில முஸ்லிம் இளைஞர்கள் கற்களை வீசத் தொடங்கியதுடன் அவ்வாயுதம் தரித்தவர்கள் நெருப்பூட்டியவர்களை நோக்கி ” அவர்கள் தாக்குகின்றார்கள், நீங்களும் ஆயுதங்களை எடுத்து வாருங்கள்” என துவேசமூட்டுகின்றனர். இது தான இந்த நாட்டின் சட்டமும் ஒழுங்கும்? அன்று தமிழர்களுக்கு நடந்தது இன்று எமக்கு ஆரம்பித்துள்ளது என அக்குறனை 8ம் கட்டையைச் சேர்ந்த அப்துல் ஜபார் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

 

 

http://www.thaarakam.com/sri-lanka/1983ல்-தமிழருக்கு-நிகழ்ந்தத/

20 minutes ago, sudaravan said:

1983ல் தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும் தானே? அது தான் இன்று எங்களுக்கு நடக்கின்றது என பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இரண்டுக்கும் பாரிய வேறுபாடு உண்டு.

அன்று முஸ்லிம்கள் பரவலாக தமிழ் மக்களின் சொத்துக்களை கொள்ளையிடடனர்.

இன்று மட்டுமல்ல என்றும் தமிழர்கள் தம்மிடம் முஸ்லிம்களால் திருடப்பட்ட முஸ்லிம்களின் திருட்டுச் சொத்துக்களைக் கூட மீளப் பெற முயற்சிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

குருபரன் குமாரவடிவேலு கோபிக்கஒபோகிறார்......

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் இப்பதான் சுடலை ஞானம் பிறக்குது. தமிழன் உங்களுக்காக அழுகிறான். நீங்கள் என்றால் தேடித் தேடி காட்டியும் குடுத்து, கூடியும் அழித்திருப்பீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

83ல் தமிழ் சைவ குருக்கள்களை தார் பீப்பாயில் போட்டு எரித்தார்கள். அந்தளவு கொடுரமாக சிங்களவன் இன்னும் செய்ய ஆரம்பிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம்   கண்ணுக்கு  முன்னுக்குத்தான்

நான்  பறி கொடுத்ததை

நானே  என்  கண் முன்னால் 

கணக்கு  முடிக்கப்படுவதை  பார்ப்பேன்  என்றே  சொல்லி  வருகின்றேன்

பார்க்கின்றேன்

இன்னும்  பார்ப்பேன்

  • கருத்துக்கள உறவுகள்

28795935_2280228201991220_16442776321935

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

இப்பவெல்லாம்   கண்ணுக்கு  முன்னுக்குத்தான்

நான்  பறி கொடுத்ததை

நானே  என்  கண் முன்னால் 

கணக்கு  முடிக்கப்படுவதை  பார்ப்பேன்  என்றே  சொல்லி  வருகின்றேன்

பார்க்கின்றேன்

இன்னும்  பார்ப்பேன்

கணக்கு முடிகிறது. எடுத்தவன் எடுத்ததை வட்டியோடு  இழக்கிறான். புதிதாய் அவன் இழப்பது குறைவு. ஆனால் நாம் இழந்தது இழந்ததுதான் விசுகு. எடுத்தவன் திருப்பி நமக்குத் தருவதுமில்லை, பறித்தவனும் இது உங்களுடையது என்று மீட்ப்பதுமில்லை என்னிடம் எடுத்தவன் அதை வேறுஒருவனிடம்  இழக்கும்போது எமக்கு ஒரு சந்தோசம், எமக்கு ஒரு பாடம். அவ்வளவே.

  • கருத்துக்கள உறவுகள்

1983 இல் நடக்கும்போது உங்களுக்கு புரியவில்லை, முள்ளிவாய்க்காலில் நிகழும்போது  தெரியவில்லை. சேர்ந்து பாம்புக்கு பால் வாத்து அதன் கோர ஆட்டத்தை ரசித்து பாராட்டினீர்கள். அந்த ஆட்டம் தமிழருக்கு மட்டுந்தான் என உள்ளூர மகிழ்ந்து இருந்தீர்கள். அது இப்போ   உங்களுக்கு எதிராக திரும்பும்போதுதான்  தமிழரின் நினைவு வருகிறதா? இல்லை தமிழரைஉதவிக்கு  அழைக்கிறீர்கள்.  தமிழர், நீங்கள் கேட்க்காமலேயே தங்களால் இயன்றதை செய்துகொண்டுதானிருக்கிறார்கள். இனியாவது சேர்ந்து ஒன்றுபட்டு வாழ முயலுங்கள். அதற்கான காலம் வந்துவிட்டது. அதற்கான அழைப்பாக  இந்த வன்முறையை எடுத்துக்கொள்ளுங்கள். சிங்களவன் இதை தமிழ் முஸ்லீம் பிரச்னையாக காட்ட தமிழர் பிரதேசங்களில் உள்ள பள்ளிவாசல்களுக்கு  இராணுவ பாதுகாப்பு, முஸ்லீம்கள் இதை சிங்கள தமிழ் பிரச்னையாக காட்ட அப்பப்ப பழையதை கிண்டிறதும், தமிழர் பிரதேசத்தில் வன்முறை உருவாக்க முயல்வதும் தெரிகிறது. எப்படிஇருப்பினும் இரு பகுதிக்கும் ஒரு உதவிக்கரம் தேவைப்படுகிறது தங்கள் சிக்கலை வேறொரு தலையில் கட்டி தாம் தப்புவதற்கு 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/03/2018 at 10:48 AM, satan said:

கணக்கு முடிகிறது. எடுத்தவன் எடுத்ததை வட்டியோடு  இழக்கிறான். புதிதாய் அவன் இழப்பது குறைவு. ஆனால் நாம் இழந்தது இழந்ததுதான் விசுகு. எடுத்தவன் திருப்பி நமக்குத் தருவதுமில்லை, பறித்தவனும் இது உங்களுடையது என்று மீட்ப்பதுமில்லை என்னிடம் எடுத்தவன் அதை வேறுஒருவனிடம்  இழக்கும்போது எமக்கு ஒரு சந்தோசம், எமக்கு ஒரு பாடம். அவ்வளவே.

இதை  நானோ  நீங்களோ  மனதார  விரும்பி எழுதவில்லை

அவ்வாறான ஒரு  மனநிலை  எமக்கு வரவே  கூடாது

ஆனால் 

கேட்டு

கெஞ்சி

அழுது புரண்டு

பலி  கொடுத்து

இனமே  அழிந்து  நின்ற  போதும்

முதுகையே  காட்டி நின்றவர்களை

முதுகிலே  மட்டமே  குத்தியவர்களை நினைக்கையில்....

நாமும் சாதாரண  மனிதர்கள் தானே???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.