Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்­லிம்­களின் துன்பம், வலியை எம்மால் உணர முடி­கின்­றது.!

Featured Replies

முஸ்­லிம்­களின் துன்பம், வலியை எம்மால் உணர முடி­கின்­றது.!

 

 

தமிழ் மக்­களின் உரி­மைக்­காக வழங்கும் அழுத்­தங்­களை போன்று   முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றை­க­ளையும் கவ­னத்தில் கொண்டு இம்­முறை ஜெனிவா தீர்­மானம் அமைய வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்கள் தமிழர் என்ற  உணர்வில் எமது உரி­மைக்­காக இணைந்து போரா­ட­வேண்­டிய காலம் வந்­துள்­ளது என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார். 

அடக்­கு­மு­றை­களின் கொடு­மை­யினை அனு­ப­வித்­த­வர்கள் என்ற ரீதியில் முஸ்லிம் மக்கள் மீதான அடக்­கு­மு­றையை எம்மால் உணர முடி­கின்­றது எனவும் அவர் குறிப்­பிட்டார். 

நேற்று வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் மது­வரி திருத்­தச்­சட்டம் மீதான விவா­தத்தின் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், கடந்த இரண்டு தினங்­க­ளுக்கு முன்னர் கண்­டிய மற்றும் அம்­பா­றையில் இடம்­பெற்ற சம்­பவங்கள் எமது மனங்­களை உலுக்­கியவைகளாக மாறி­யுள்­ளன.  

கடந்த காலங்­களில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் பல இடம்­பெற்­றுள்­ளன. வர­லாற்றுக் காலத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் மீதான அடக்­கு­முறை இடம்­பெற்­றமை பதி­வா­கி­யுள்­ளது. அப்­போது தமிழ்த் தலை­மைகள் முஸ்­லிம்கள் தொடர்பில் குரல் கொடுக்­க­வில்லை என்ற கருத்து நில­வி­யது. எனினும் தந்தை செல்வா முஸ்லிம் மக்கள் குறித்து தமிழ் மக்­களின் குரலாய் பாரா­ளு­மன்­றத்தில் குரல் கொடுத்தார். 

இன்று முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக நிகழும் அடக்­கு­முறை போன்றே தமிழ் மக்

­களும் அடக்­கு­மு­றைக்கு ஆளா­னார்கள். தமிழ் மக்கள் அடக்­கு­மு­றையின் போர்­வையில் படு­கொலை செய்­யப்­பட்­டனர். அன்று சிறு­பான்மை மக்­க­ளான எம்மை அடக்­கி­யதை போலவே இன்று முஸ்லிம் மக்கள் மீதும் அடக்­கு­முறை பிர­யோகிக்­கப்­பட்டு ஒடுக்­கப்­ப­டு­கின்­றனர். 

முஸ்லிம் மக்­களின் துன்பம், வலி என்­ன­வென்­பது குறித்து அடக்­கு­மு­றையை அனு­ப­வித்த ஒரு இன­மாக எம்மால் உணர முடி­கின்­றது. கண்­டியில் இடம்­பெற்ற சம்­பவம் யாரால் இடம்­பெற்­றது என்­பது குறித்தும் அது நடக்­க­வி­ருப்­பது என்­பது குறித்தும் பொலிஸ், புல­னாய்வு துறைக்கு தெரிந்­தி­ருக்க வேண்டும். பிரச்­சி­னை­களுக்கு தீர்வு காண இன, மத ரீதியில் அடக்­கு­மு­றை­களை கட்­ட­விழ்த்­து­விடக் கூடாது. ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் நிலை­மை­களை சரி­யாக இனங்­கண்டு பிரச்­சி­னை­களை தீர்க்க வேண்டும். அதேபோல் இன்று இலங்­கையின் கடந்த கால யுத்த குற்­றங்கள், மனித உரிமை மீறல்கள், தமிழ் மக்­களின் காணி விடு­விப்பு, மீள் குடி­யேற்றம், காணா­ம­லாக்­கப்­பட்டோர் விவ­காரம் குறித்து ஜெனி­வாவில் தற்­போது கூடி­யுள்ள மனித உரி­மைகள் பேர­வையில் ஆரா­யப்­ப­டு­கி­றது.  அதற்­கான தீர்வு ஒன்­றினை நாம் எதிர்­பார்த்து செயற்­பட்டு வரும் நிலையில் தற்­போது ஏற்­பட்­டுள்ள  முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­முறை சம்­ப­வங்­க­ளையும் பதிவு செய்து தமிழ் மக்கள் போல் முஸ்லிம் மக்­களின் உரி­மைக்கும் தீர்வு ஒன்­றினை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். முஸ்லிம் மக்­களும் இந்த நாட்டில் சம உரி­மை­யுடன் வாழக்­கூ­டிய அங்­கீ­கா­ரத்தை பெற்­று­க்கொ­டுக்க வேண்டும். 

கடந்த காலத்தில் அடக்­கு­முறை இரா­ணுவ ஆட்சி ஒன்று இடம்­பெற்ற நிலையில் அதில் இருந்து விடு­பட வேண்டும் என்­ப­தற்­கா­கவே மக்கள் நல்­லாட்சி அர­சாங்கம் ஒன்றை உரு­வாக்­கினர். இந்த ஆட்சியிலும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக அடக்குமுறை கையாளப்படுகின்ற நிலையில் நல்லாட்சி மீது நம்பிக்கை இழக்கப்பட்டு வருகின்றது. எனவே, அரசாங்கம் உடனடியாக மக்களின் உரிமைகளை பாதுகாக்கும்  நடவடிக்கை களை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/31423

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் மற்றும் கேப்பாப்பிலவு காணி சுவீகரிப்புக்கெதிராகப் போராடும் மக்களது வலிகாமத்தில் அதுதான் உங்கள் வீட்டுக்குக் கூப்பிடுதூரத்தில் குடியிருந்த மக்களது காணிகளை மீதும்போராடத்தில் ஈடுபட்டவர்களது துன்பம் வலியை உணருங்கள் அப்புறம் அடுத்தவன் இலைக்குச் சொதி ஊத்தலாம். 

தமிழர் வாழ்வுக்குப் பால்வார்த்துக் காரியம் பண்ண எத்தனிக்கும் உங்களையும் சுமந்திரனையும் இராஜவரோதையம் சம்பந்தனையும் ஓடவிரட்டும் காலம் மிக விரைவில் வரும்.

 

முஸ்லீம்களது துணை இல்லாதுவிட்டால் தமிழகளை இன அழிப்புச்செந்திருக்கமுடியாது என நேற்றைய தினம் இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திரிக்கிறார், அத்துடன் உங்களது பெயரையும் விரைவில் இப்பட்டியலில் சேர்த்து விரைவில் அறிக்கைவிடும்காலம் வந்தே தீரும். அப்போது இருக்குதெடா உங்களுக்கு விளக்குமாத்துப்பூசை 

  • கருத்துக்கள உறவுகள்

உவர் ஒருபக்கத்தால அவைக்கு வக்காலத்து வாங்க அவை மற்றப்பக்கத்தால உவைக்கு எதிராய் தனி அலகு கேட்டு போராடுவினம். மாவையர் பொத்திக்கொண்டு வரவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

உவர் ஒருபக்கத்தால அவைக்கு வக்காலத்து வாங்க அவை மற்றப்பக்கத்தால உவைக்கு எதிராய் தனி அலகு கேட்டு போராடுவினம். மாவையர் பொத்திக்கொண்டு வரவேண்டியதுதான்.

தனி அலகில் முல்லை, கிளிநொச்சியையும் சேர்ப்பினம்....விரைவில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, நவீனன் said:

அடக்­கு­மு­றை­களின் கொடு­மை­யினை அனு­ப­வித்­த­வர்கள் என்ற ரீதியில் முஸ்லிம் மக்கள் மீதான அடக்­கு­மு­றையை எம்மால் உணர முடி­கின்­றது எனவும் அவர் குறிப்­பிட்டார். 

 சொந்தச்சனம் காணிபூமியில்லாமல் நடு ரோட்டிலை நிக்குது....முதல்லை  அதை கவனியுங்கோ ஐயாமாரே

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 சொந்தச்சனம் காணிபூமியில்லாமல் நடு ரோட்டிலை நிக்குது....முதல்லை  அதை கவனியுங்கோ ஐயாமாரே

பெரிசா எடுக்காதீங்க இவங்க பேச்செல்லாம் அரசாங்கத்தின் காதுக்கு கேட்காது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.