Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனி­வாவில் அர­சுக்கு தோல்வி...பொறுப்­புக்­கூ­றலில் சிறிது கால அவ­காசம் வழங்­கிப்­பார்ப்போம் என்­கி­றது கூட்­ட­மைப்பு

Featured Replies

ஜெனி­வாவில் அர­சுக்கு தோல்வி

07-9ee9e669cabd9721087d843c7d40f2e5b1c9222c.jpg

 

பொறுப்­புக்­கூ­றலில் சிறிது கால அவ­காசம்  வழங்­கிப்­பார்ப்போம் என்­கி­றது கூட்­ட­மைப்பு

(ஆர்.யசி)

அர­சாங்­கத்­திற்கு இன்னும் சிறிது கால அவ­காசம் கொடுத்து பொறுப்­ புக்­கூ­ற­லையும் நீண்­ட ­கால நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளையும் வெற்­றி­கொள்ள அனு­ம­திக்­கவும் அதனை நிரா­க­ரிக்கும் பட்­சத்தில் சர்­வ­தேசசமூ­கத்­துடன் இணைந்து நெருக்­க­டி­களை கொடுக்­கவும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தயார் என கூட்­ட­மைப்பின் ஊடக பேச்­சாளர் எம்.எ.சுமந்­திரன் எம்.பி தெரி­வித்தார்.  

இம்­முறை ஜெனி­வாவில் அர­சாங்கம் முன்­னெ­டுத்த அனைத்து முயற்­சி­களும் தோல்­வியில் முடிந்­துள்­ளக. பொறுப்­புக்­கூ­றலை நிரா­க­ரித்­த­மை­யி­னா­லேயே அர­சாங்கம் இவ்­வாறு நெருக்­க­டியை சந்­திக்க நேர்ந்­தது எனவும் அவர்­கு­றிப்­பிட்டார்.

பொறுப்­புக்­கூறல் விவ­கா­ரத்தில் அர­சாங்­கத்தின் அச­மந்­தப்­போக்கை ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் கடு­மை­யாக சாடி­யுள்ள நிலையில் இம்­முறை ஜெனிவா கூட்டம் குறித்து வின­விய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்.

ஜெனி­வாவில் அமெ­ரிக்­கா­வுக்­கான தூதுவர் ஒருவர் தற்­போது இல்­லாத நிலையில் நாம் அமெ­ரிக்­கா­விற்கு சென்று அங்கு எமது நிலைப்­பா­டு­களை முன்­வைக்க வேண்­டிய தேவை இருந்­தது. அதற்­க­மை­யவே நாம் அமெ­ரிக்­கா­விற்கு சென்று எமது நிலை­பா­டு­களை தெரி­வித்தோம். எமது சந்­திப்­புகள் இடம்­பெற்ற நாட்­க­ளி­லேயே சில நாடு­களின் தீர்­மானம் அமெ­ரிக்க அதி­கா­ரி­களின் மேசைக்கு வந்­து­விட்­டது. எனவே நாங்கள் அவர்­க­ளிடம் முன்­வைத்த கார­ணி­களும் ஏனைய நாடு­களின் நிலைப்­பாடும் ஒரே தன்­மையில் இருந்­தன. ஆகவே எமக்கு இந்த சந்­திப்­புகள் சாத­க­மான தன்­மை­க­ளையே ஏற்­ப­டுத்­தின.

மேலும் நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த காலம் தொடக்கம் பொறுப்­புக்­கூறல் மற்றும் நீண்­ட­கால நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் குறித்து எமது பூரண ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கி­யுள்ளோம். நீண்­ட­கால பொறுப்­புக்­கூறல் என்ற விட­யத்தில் புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்கம் அதன் மூல­மான நல்­லி­ணக்க நகர்­வு­க­ளுக்கு நாம் காலம் கொடுத்­துள்ளோம். இன்னும் சிறிது கால அவ­கா­சமும் இச் செயற்­பா­டு­க­ளுக்கு தேவைப்­ப­டு­கின்­றது. எனவே அத­னையும் வழங்கி அதில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை அவ­தா­னிக்க வேண்டும் என நான் இந்த சந்­திப்­பு­களில் எடுத்­து­ரைத்தேன். கொடுக்­கப்­படும் சிறிய கால அவ­கா­சத்தில் அர­சாங்கம் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் சாத­க­மான செயற்­பா­டு­களை காட்­ட­வில்­லை­யெனில் அதன் பின்னர் அர­சாங்­கத்­திற்கு நாம் வழங்கும் ஒத்­து­ழைப்­பு­களை வழங்­காது அர­சாங்­கத்தை நிரா­க­ரிப்­ப­தா­கவும் அதுவே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு எனவும் நான் சர்­வ­தேச சமூ­கத்­திடம் எடுத்­து­ரைத்­துள்ளேன்.

நல்­லி­ணக்க நகர்வில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் மீதான அவ­நம்­பிக்கை கார­ண­மாக அர­சாங்­கத்தை நிரா­க­ரிக்க நாம் கடந்த 2015 ஆம் ஆண்டு கொள்கை பிர­க­ட­னத்தில் கூட தெரி­வித்­துள்ளோம். எனினும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் தமிழ் மக்­க­ளுக்­கான தீர்­வு­களை பெற்­றுக்­கொள்ளும் சாத­க­மான தன்­மை­களை ஏற்­ப­டுத்­திய நிலையில் எமது நிலைப்­பாடு அது­வா­கவே இருந்­தாலும் கூட நாம் இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தை ஆத­ரித்து அதன் மூல­மாக எமது காரி­யங்­களை நிறை­வேற்­றிக்­கொள்ள முயற்­சித்து வரு­கின்றோம்.

 இந்த மூண்டு ஆண்­டு­களில் அர­சாங்கம் ஒரு­சில நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்த போதிலும் எந்த செயற்­பாட்­டிலும் பூரணத் தன்­மை­யினை வெளி­ப­டுத்­த­வில்லை. அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ர­மாக இருந்­தாலும் அல்­லது பொறுப்­புக்­கூறல் விவ­கா­ர­மாக இருந்­தாலும் அவற்றில் முன்­னேற்­றங்­களை வெளி­ப­டுத்­த­வில்லை. எனவே நாம் அவ்­வா­றான நிலையில் எமது உறு­தி­யான நிலை­பாட்­டினை தொடர்ந்தும் கையாண்டு அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுப்போம் என்­ப­தையும் நான் சுட்­டிக்­காட்­டினேன்.

எவ்­வாறு இருப்­பினும் இம்­முறை ஜெனி­வாவில் எமது செயற்­பா­டுகள் அனைத்­துமே தமிழ் மக்­க­ளுக்கு சாத­கத்­தன்­மை­களை ஏற்­ப­டுத்தும் வகையில் அமைந்­துள்­ள­துடன் அர­சாங்­கத்­திற்கு பாரிய தோல்­வி­யா­கவே அமைந்­துள்­ளன. அர­சாங்­கதின் சகல முயற்­சி­களும் இம்­முறை தோல்­வியில் முடி­வ­டைந்­துள்­ளன. அதற்கு எமது விஜ­யமே கார­ண­மாகும். நாம் நாட்டின் உண்­மை­யான நிலை­மை­களை எடுத்துரைத்து தக்க காரணிகளை முன்வைத்தமை அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அமைந்துவிட்டது. இனியும் நல்லாட்சியில் காலத்தை கடத்த முடியாது என்பதை அரசாங்கம் உணர வேண்டும். கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றாவிட்டால் எமதும் சர்வதேசத்தினதும் நெருக்கடிகளுக்கு அரசாங்கம் முகங்கொடுக்க வேண்டும் என்பதை இம்முறை சர்வதேசத்தில் அரசாங்கத்தின் தோல்விகள் வெளிபடுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்,.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-26#page-1

  • கருத்துக்கள உறவுகள்

 

5 hours ago, நவீனன் said:

 

07-9ee9e669cabd9721087d843c7d40f2e5b1c9222c.jpg

 

பொறுப்­புக்­கூ­றலில் சிறிது கால அவ­காசம்  வழங்­கிப்­பார்ப்போம் என்­கி­றது கூட்­ட­மைப்பு

பாலை ஊற்றிப் பாம்பை நாம் வளர்த்தாலும் நம்மையே கடிக்கத்தானே வரும் அதை சிறீலங்காவில் அடித்துக்கொல்ல முடியாது. :(

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா மூஞ்சூறொன்று அவசரமாய் அமெரிக்கா பறக்குதென்று பாத்தேன். புலிகள் தங்கள் இன்னுயிரை குடுத்து சர்வதேசப் பொறிமுறை ஒன்றை திறந்து விட எல்லோரும் ஒன்று சேர்ந்து இழுத்து இரும்புப் பூட்டுப்போட்டு விட. தானாகவே திறந்து கொண்ட கதவில்  எங்கே சிங்களவன்  மாட்டிவிடபோறானே என்று பரிதவித்து ஓடிப்போய் மூடிபோட்டு சவால் வேற. தன்னால தான் ஆனதாம். இதுக்கு அள்ளி வேண்டியிருப்பார்.  சம்பந்தனுக்கு உச்சி குளிர்ந்திருக்கும். இதுகள் எவ்வளவு செய்தாலும் சிங்களவன்தமிழரை  நம்பப்போவதில்லை. தமிழர்  உயிரோடு இருக்குமட்டும்.  நாரதருக்கு ...........     .......

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு தமிழில் வெட்டுவம் புடுங்குவம் என்று சொல்வது பின்னர் சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்தில் பம்முவது இது தான் கூட்டமைப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

ஜெனி­வாவில் அர­சுக்கு தோல்வி...பொறுப்­புக்­கூ­றலில் சிறிது கால அவ­காசம் வழங்­கிப்­பார்ப்போம் என்­கி­றது கூட்­ட­மைப்பு..... 

தமிழ்ச் சந்ததி அழியும் மட்டும் அவகாசம் குடுக்கிற பிளான் போலை கிடக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

அவன் தமிழரை இலங்கைப் பிரஜைகளாக எண்ணவே இல்லை. நாம் செய்வதை கண்டு கொள்ள வேண்டியதுதான் என்கிறான். இது ஏதோ பெருமை பேசுது. வெளி நாட்டுக்காரன் யாரோ குடுக்காரன் பூந்து விட்டான் என்று நினைச்சிருப்பான்..  அமெரிக்கா சொன்னது நீங்கள் ஜெனீவா வரவேண்டாம் நாங்கள் பேசி தீர்வைப் பெற்று தாறோம் என்று சொன்னது..... வெறும்  பூச்சாண்டிதானே. உவனுகள் எல்லாம் சிங்களவனின் பின்பக்கம் கழுவி பெருமைப்படத்தான் லாயக்கு. இதுக்கு சட்டத்தரணிப்  படிப்பு தேவையில்லை. அது சரியாய் தெரிஞ்சிருந்தால் உப்பிடிப் புலம்பித்திரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.