Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உரிய தீர்வு கிடைக்காவிடில் தமிழர்கள் தம் வழி வகுப்பர்!!

Featured Replies

  • உரிய தீர்வு கிடைக்காவிடில் தமிழர்கள் தம் வழி வகுப்பர்!!
 
 

உரிய தீர்வு கிடைக்காவிடில் தமிழர்கள் தம் வழி வகுப்பர்!!

 

ஒன்­றி­ணைந்த இலங்­கைக்­குள் தமிழ் மக்­க­ளுக்கு உரிய தீர்வு கிடைக்­கா­ விட்­டால் தமிழ் மக்­கள் தமக்­கு­ரிய வழியை வகுத்­துக்­கொள்­வார்­கள் என்று தெரி­வித்துள்­ளார் தமிழ்த் தேசிய கூட் ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன்.

கொழும்பு தமிழ் சங்­கத்­தில் நேற்று நடை­பெற்ற இந்­திய பத்­தி­ரி­கை­யா­ளர் தி.ராம­கி­ருஷ்­ண­னின் ‘ஓர் இனப்­பி­ரச்­சி­னை­யும், ஓர் ஒப்­பந்­த­மும்’ என்ற நூல் அறி முக விழா­வில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­துக்கொண்டு கருத்­துத் தெரி வித்­த­போதே அவர் இவ்­வாறு கூறி­னார். அவர் தெரி­வித்­தா­வது,

நாட்டை பிரிப்­பது எமது நோக்­கம் அல்ல. ஒரு­மித்த நாட்­டுக்­குள் நாங்­கள் தனித்த ரீதி­யில் வாழ்ந்த பகு­தி­க­ளில் அதி­யுட்ச அதி­கூ­டிய அதி­கார பகிர்வு மூல மாக எமது உள்­ளக சுய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு நாங்­கள் மரி­யா­தை­யாக, சுய மரி­யா­தை­யு­டன் கௌர­வ­மாக, மதிப்­பாக வாழ வேண்­டும் என்­பதே எங்­க­ளது கொள்கை. 1987ஆம் இலங்­கைக்கு இந்­தி­யா­வுக்­கும் இடை­யில் கைச்­சாத்­தி­டப்­பட்ட ஒப்­பந்­தத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய கடப்­பாடு இந்­தி­யா­வுக்கு உள்­ளது. இந்த கட­மை­யி­லி­ருந்து இந்­தியா விலக முடி­யாது.

எமது நாட்­டுக்­குள், எமது மக்­க­ளு­டன் பேசி நாங்­கள் ஏற்­றுக்­கொள்­ளக் கூடிய ஒர் தீர்வை நாங்­கள் ஏற்­ப­டுத்த விரும்­பு­கின்­றோம். அதற்­கான தீர்வு கிடைக்­கா­விட்­டால். அந்த வித­மான நியா­ய­மான தீர்வு கிடைக்க எது செய்ய வேண்­டுமே, அதை செய்ய நாங்­கள் தயங்க மாட்­டோம்.- என்­றார்.

http://newuthayan.com/story/87457.html

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் நூல் அறிமுக விழாவில் தெரிவிக்கும் விடயமா....

உங்களுக்கு நெஞ்சில் பலமிருந்தால் பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டி அறிவியுங்கள் பார்க்கலாம்......

மைதிரியும் ரணிலும் போடும் பிஸ்கட்டை கவ்வுபவர்களுக்கு ஏன் இப்படியான சவுண்ட்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை ஆக்கள் எப்பவும் கலியாணவீடு சாமத்திய வீடுகளிலைதான் வீராவேசத்தை காட்டுவினம்....tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எங்கடை ஆக்கள் எப்பவும் கலியாணவீடு சாமத்திய வீடுகளிலைதான் வீராவேசத்தை காட்டுவினம்....tw_blush:

அங்கதான் பெண்பிரசுகள் அதிகம் இருப்பினம் ....அவையள் பார்த்தால் வீரம் தானா வரும் கண்டியளோ

சரி ஏற்கனவே வகுத்த வழிக்கு என்னாச்சு.??

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பகலவன் said:

சரி ஏற்கனவே வகுத்த வழிக்கு என்னாச்சு.??

இப்பிடி கேள்வி கேக்கிற ஆக்களைத்தான் "தம்பிமாருக்கு ஒண்டும் தெரியாது" எண்டு 40வருசமாய் சொல்லிக்கொண்டு வரினம் :cool:

  • கருத்துக்கள உறவுகள்

உப்படித்தான் வட்டுக்கோட்டையில வைச்சு உசுப்பேத்திட்டு இன்றும் அதையே சொல்லிக்கிட்டு இருக்குது ஒன்னு.. அதுக்குப் பக்கத்தில இருக்குது ஒன்னு.. ஹிந்தியாவின்ர ஆட்டத்துக்கு ஆடி தமிழீழம் பிரகடனம் பண்ணிட்டு ஒரிசா.. ராஜஸ்தான்.. டெல்லின்னு சுகபோகம் கண்டிட்டு வந்திருக்குது இன்னொன்னு.

இதுங்க எல்லாம்.. தமிழ் மக்களை ஒரு வழி பண்ணின கேசுங்க. வந்திட்டுதுங்க... தமிழர்கள் ஒரு வழி பண்ணுவார்களுக்கு மீண்டும்... பூச்சியத்தில இருந்து ஆரம்பிச்சு.. ஹிந்தியாவுக்கு வக்காளத்து வாங்க. தமிழினத்தின் இன்றைய முழுத்துன்பியலுக்கும் ஹிந்தியா தான் முக்கிய காரணம். அதை மறைக்க இதுங்க.. சிங்கள எஜமானனுக்கும் காவடி தூக்கி.. ஹிந்தியனுக்கும் தூக்குதுங்க. :rolleyes:tw_angry:

  • தொடங்கியவர்

இந்­தியா கட­மை­யி­லி­ருந்து விலக முடி­யாது : நியா­ய­மான தீர்­வின்றேல் செய்­ய­வேண்­டி­யதை செய்­வ­தற்கும் நாம் தயார்; ஒற்­று­மையே அவ­சியம் என்­கிறார் சம்­பந்தன்

16-9fb1d5d434e034e404a3526e0a06f6c42051124f.jpg

 

(ஆர்.யசி)

இலங்கை – இந்­திய ஒப்­பந்தம் இறந்­து­வி­ட­வில்லை. அது உயி­ர்ப்புட­னேயே இருக்­கி­றது. அந்த ஒப்­பந்தம் எமக்குத் தேவை. அதன் உள்­ள­டக்­கங்கள் நிறை­வேற்­றப்­பட வேண்டும். இதற்கு இந்­தியா ஆக்­க­பூர்­வ­மான பணி­களை ஆற்­ற­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இது இந்­தி­யாவின் கட­மை­யாகும். இந்தக் கட­மை­யி­லி­ருந்து இந்­தியா வில­க­மு­டி­யாது  என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.  

எமது மக்­க­ளு­டனும் எமது தலை­வர்­க­ளு­டனும் பேசி பிரச்­சி­னைக்குத் தீர்­வைக்­காண நாம் விரும்­பு­கின்றோம். அவ்­விதம் தீர்வை ஏற்­ப­டுத்த முடி­யா­து­விட்டால் நியா­ய­மான தீர்வைப் பெற எதனைச் செய்ய வேண்­டுமோ அதனைச் செய்­வ­தற்கு நாம் தயா­ரா­க­வுள்ளோம். இந்­தியா மூலம்தான் பிரச்­சி­னைக்குத் தீர்­வு­காண முடியும் என்று இந்த நாடு நினைப்­பது நாம் விரும்­ப­வில்லை. இந்த நாட்டு மக்­களின் சம்­ம­தத்­துடன் அவர்­களின் ஒத்­து­ழைப்­புடன் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண வேண்டும் என்றே நாம் விரும்­பு­கின்றோம் என்றும் சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டினார்.

இந்­திய பத்­தி­ரி­கை­யாளர் தி.ராம­கி­ருஷ்ணன் எழு­திய "ஓர் இனப்­பி­ரச்­சி­னையும் ஓர் ஒப்­பந்­தமும் " நூல் வெளி­யீட்டு விழா நேற்று முன்­தினம் மாலை கொழும்பு வெள்­ள­வத்தை தமிழ் சங்­கத்தில் இடம்­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் கூறு­கையில்,

'ஓர் இனப்­பி­ரச்­சி­னையும் ஓர் ஒப்­பந்­தமும்' என்ற நூல் இனப்­பி­ரச்­சி­னை­யினை அடிப்­ப­டை­யாக வைத்து எழு­தப்­பட்­டுள்­ளது. இதில் இனப்­பி­ரச்­சினை தொடர்­பிலும் இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்தின் முன்­ன­ரான நிலை­மைகள் தொடர்­பிலும், ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்ட பொழுது நில­விய நிலை­மைகள் சம்­பந்­த­மா­கவும் அதற்கு பின்­ன­ரான நிலை­மைகள் குறித்தும் ஆரா­யப்­பட்­டுள்­ளது. இன்­றைய நிலை­மை­களில் எவ்­வா­றான வகையில் கையாள முடியும் என்­பது கவ­னிக்­கப்­பட வேண்­டிய விட­ய­மாகும்.

 1983 ஆம் ஆண்டு நாட்டில் பாரிய இனக் கல­வ­ரமும் அதன் மூல­மான இன அழிப்பும் இடம்­பெற்­றன. இத­னை­ய­டுத்து ஒரு­வ­ரது இழப்பு சம்­பந்­த­மான சட்ட விசா­ரணை நடை­பெ­றாது இறந்­த­வ­ரது பிர­தே­சத்தில் அடக்கம் செய்ய அவ­ச­ர­கால சட்­டத்தின் மூலம் தீர்­மானம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இந்த தீர்­மா­னத்தை இந்­தி­யாவின் அப்­போ­தைய தலை­வர்கள் விமர்­சித்­தனர். அதற்கு பின்னர் இலங்­கையில் கல­வ­ரங்கள் இடம்­பெற்ற நிலையில் இந்­தியா நேர­டி­யாக தலை­யிட்டு இந்­தி­யாவின் கருத்தை தெளி­வாக முன்­வைத்­தது. அவர்­களின் நல்­லெண்ண முயற்­சி­களை இலங்­கைக்கு முன்­வைத்­த­துடன் அதன் மூல­மாக இலங்­கையின் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வு­களை பெற்­றுத்­த­ரு­வ­தா­கவும் குறிப்­பிட்ட நிலையில் அதனை இலங்கை ஏற்­றுக்­கொண்­டது.

இதன் பின்­னரும் இனப்­பி­ரச்­சினை தீர்வு தொடர்பில் பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. குறிப்­பாக 1983ஆம் ஆண்டில் அப்­போ­தைய இந்­திய பிர­தமர் இந்­திரா காந்­தியின் விசேட தூதுவர் கோபா­ல­சு­வாமி பார்த்­த­சா­ரதி முதல் முறை­யாக இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டார். இந்­தி­யாவில் இருந்து அமிர்­த­லிங்­கமும் நானும்­கூட இலங்­கைக்கு வந்தோம். இலங்கை ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்த்­த­ன­விற்கும் இக் குழுக்­க­ளுக்கும் இடையில் கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது. அதேபோல் எமக்கும் இந்­திய பிர­தமர் இந்­தி­ரா­காந்­திக்கும் இடையில் ஒரு பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றது.

இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்­வு­காண்­பது குறித்து தீர்க்­க­மாக முடி­வுகள் எடுக்­கப்­பட்­டன. நாம் குறிப்­பிட்ட வரம்­பு­க­ளுக்குள் முழு­மை­யான முயற்­சி­களை எடுப்போம் என்ற வாக்­கு­று­தி­யினை அவர்கள் எமக்கு கொடுத்­தனர். பின்னர் 1984 ஆம் ஆண்டும் ஒரு மாநாடு இடம்­பெற்­றது. இதுவும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுகள் குறித்து இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­யாகும்.

மாகாண சபைகள் மூல­மாக பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இந்த பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றன. எனினும் பேச்­சு­வார்த்தை முடி­வ­டைந்த பின்னர் மாகாண சபைகள் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. இலங்கை அர­சாங்கம் தொடர்ந்தும் மாவட்ட சபைகள் என்ற அடிப்­ப­டையில் செயற்­பட்டு வந்­தது. துர­திர்ஷ்­ட­வ­ச­மாக 1984 ஆம் ஆண்டு ஐப்­பசி மாதம் 31 ஆம் திகதி பாரதப் பிர­தமர் இந்­திரா காந்தி கொலை­செய்­யப்­பட்டார்.

அதன் பின்னர் அவ­ரது மகன் ராஜீவ் காந்தி பிர­த­ம­ராக பத­வி­யேற்றார். அப்­போது நாமும் அவரை டில்­லியில் சந்­தித்தோம். அப்­போது அவர் எமக்கு கொடுத்த உறு­தி­யான வாக்­கு­றுதி என்­ன­வென்றால் "இலங்கை பிரச்­சி­னையில் எனது தாயாரின் கொள்­கையை பின்­பற்­றுவேன், உங்­களை நான் ஒரு­போதும் கைவி­ட­மாட்டேன்" என்­ப­தாகும். 1985 இல் திம்பு பேச்­சு­வார்த்தை நடை­பெற்­றது. இலங்கை அர­சாங்கம் தமிழர் விடு­தலை கூட்­டணி மற்றும் ஏனைய தமிழர் போராளி குழுக்கள் ஆகி­ய­வற்றை இணைத்து இந்த பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றது. இதிலும் மாகாண சபை முறை­மையை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. பேச்­சு­வார்த்தை ஒரு முடி­வில்­லாது நிறை­வுக்கு வந்­தது.

1986 ஆம் ஆண்டு இந்­திய பிரதி வெளி­வி­வ­கார அமைச்சர் மற்றும் அமைச்சர் சிதம்­பரம் ஆகிய இரு­வரும் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு பேச்­சுக்­களை முன்­னெ­டுத்­தனர். பின்னர் 1986 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத­ம­ளவில் இலங்கை அர­சாங்­கத்­திற்கும் தமிழர் விடு­தலை கூட்­ட­ணிக்கும் இடையில் தொடர்ச்­சி­யாக பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஒவ்­வொரு மாதமும் குறைந்­தது 10 நாட்கள் நீண்ட பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இந்த பேச்­சு­வார்த்­தையின் போதுதான் முதல் முறை­யாக இலங்கை அர­சாங்கம் மாகாண சபை­களை ஏற்­ப­டுத்த ஓர­ளவு இணக்கம் தெரி­வித்­தது. அவ்­வி­த­மான ஒரு வரைவின் அடிப்­டையில் இந்­திய அர­சாங்­கத்­திற்கு ஒரு பிரே­ர­ணை­யையும் அனுப்பி வைத்­தது.

இந்த நிலையில் 1986 பிற்­ப­கு­தி­யிலும் 1987 ஆம் ஆண்டு முற்­ப­கு­தி­யிலும் வட­ம­ராட்­சியில் இரா­ணுவ நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. வட­ம­ராட்­சியில் இருந்து விடு­தலைப் புலி­களை முழு­மை­யாக வெளி­யேற்­று­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் ஒரு பாரிய முயற்­சி­யினை முன்­னெ­டுத்­தது. எனினும் இரா­ணுவ ரீதி­யாக இந்த பிரச்­சி­னை­க­ளுக்கு ஒரு தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்க கூடாது என்­பதை நாம் இலங்கை அர­சாங்­கத்­திடம் தொடர்ச்­சி­யாக கூறி வந்­தி­ருந்தோம். இந்த பிரச்­சி­னைக்கு காணப்­படும் தீர்வு ஒரு அர­சியல் தீர்­வாக இருக்க வேண்டும், அர­சியல் பேச்­சு­வார்த்தை மூல­மாக உரு­வாக்க வேண்டும், அந்த தீர்வு இரா­ணுவ ரீதி­யாக அமைய முடி­யாது, அவ்­வாறு அமைந்தால் அது எமக்கு பெரும் பாத­க­மாக அமையும் என கூறினோம். அதன் அடிப்­ப­டையில் இந்த இரா­ணுவ நகர்­வு­களை நிறுத்­தக்­கூறி இந்­திய அர­சாங்கம் இலங்­கைக்கு மிகவும் உறு­தி­யான ஒரு செய்­தியை தெரி­வித்­தது.

அதன் அடிப்­ப­டையில் இரா­ணுவ முயற்­சிகள் நிறுத்­தப்­பட்­டன . அதனைத் தொடர்ந்தும் இடம்­பெற்ற சில சம்­ப­வங்­களின் பிற­குதான் 1987 ஆம் ஆண்டு ஆடி மாதம் 29 ஆம் திகதி இலங்கை இந்­திய ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. இதற்கு முன்­னைய தினம் அமிர்­த­லிங்கம், சிதம்­பரம் மற்றும் நானும் பாரத பிர­த­மரை இந்­தி­யாவில் சந்­தித்தோம். இந்த ஒப்­பந்­தத்தை நாங்கள் பார்த்தோம், நாங்கள் கூற­வேண்­டிய விட­யங்­களை கூறினோம், இந்த ஒப்­பந்­தத்தில் வட­கி­ழக்கு இணை­வ­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. ஆனால் ஒரு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பும் நடை­பெறும் என்று கூறப்­பட்­டி­ருந்­தது. அதனை நாங்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை, அதனை நீக்க வேண்டும் என கூறினோம். இவற்­றினை அடுத்து சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடை­பெ­றாது வடக்கு, கிழக்கு மக்­களின் முழு­மை­யான ஒத்­து­ழைப்­புடன் பிரச்­சி­னை­களை தீர்க்கும் வாக்­கு­றுதி வழங்­கப்­பட்­டது. அதன் அடிப்­ப­டையில் அடுத்த நாள் ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

இந்த ஒப்­பந்தம் என்ன வித­மான தீர்வை அடிப்­ப­டை­யாக கொண்­டது, அதனை நாம் அடைந்­துள்­ளோமா இல்­லையா என்­பதை நாம் தெரி­வித்­து­கொள்ள வேண்டும். அதில் இலங்கை தீவின் ஒற்­றுமை, தேசிய ஒரு­மைப்­பாடு, இறைமை பாது­காக்­கப்­பட வேண்டும். இலங்கை தீவு ஒரே நாடாக இருக்க வேண்டும். இலங்கை தீவு பல இனங்­களை உள்­ள­டக்­கிய பல மொழி­களை பேசும் மக்­களை உள்­ள­டக்­கிய பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு சமூகம் கொண்­டது. சிங்­கள, தமிழ், முஸ்லிம் எல்­லோ­ருக்கும் தனித்­து­வ­மான கலா­சார மொழி அடை­யா­ளங்கள் உள்­ளன. அவை சிறப்­பாக பாது­காக்­கப்­பட வேண்டும். வட­கி­ழக்கு மாகா­ணங்­களை சரித்­திர ரீதியில் தமிழ்­பேசும் மக்கள் வாழ்ந்து வந்­துள்­ளனர். ஆகவே இவற்­றினை கொண்டு ஒற்­று­மையை தேசிய ஒரு­மைப்­பாட்டை பலப்­ப­டுத்­தக்­கூ­டிய பாது­காக்­கப்­பட்ட பல இனங்­களை மொழி­களை மதங்­களை பின்­பற்றும் சமூ­கங்கள் என்ற அடிப்­ப­டையில் இந்த ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டது. இதன் அடிப்­ப­டையில் வட­கி­ழக்கு மாகா­ணங்கள் ஒன்­றி­ணைக்­கப்­படும். ஆனால் ஒரு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு இடம்­பெறும் என்ற கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. 1987 ஆம் ஆண்டு நாம் தெரி­வித்த கருத்­துக்­க­ளுக்கு அமைய ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன தீர்வு குறித்து எழுத்து மூல வாக்­கு­று­தி­களை வழங்­கி­யி­ருந்தார். எனினும் விடு­தலைப் புலி­க­ளு­ட­னான போரின் நிமிர்த்தம் அந்த வாக்­கு­திகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

அதன் பின்னர் மாகாண சபை தேர்தல் நடை­பெற்­றது. அதில் நாங்கள் போட்­டி­யி­ட­வில்லை. ஏனெனில் 13ஆம் அர­சியல் சாசன திருத்தம், மாகாண சபை திருத்தம் தமிழ் தேசிய பிரச்­சி­னைக்கு ஒரு நிரந்­த­ர­மான தீர்வு அல்ல என்­பது எமது உறு­தி­யான நிலைப்­பாடு. இன்றும் அதுவே எமது நிலைப்­பா­டாக உள்­ளது. 13ஆம் திருத்­தமும் மாகாண சபை முறை­மையும் ஒரு நிரந்­த­ர­மான தீர்­வாக அமைய முடி­யாது என்­பதே எமது இன்­றைய நிலைப்­பாடு. ஆனால் பல சாத­க­மான தன்­மை­களும் இடம்­பெற்­றுள்­ளன.

பிரே­ம­தாச ஆட்­சியில் மங்­கள முன­சிங்க குழுவின் பிரே­ரணை 13க்கும் அப்பால் செல்­கின்­றது, ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆட்­சியில் வெளி­வி­வ­கார அமைச்சர் பீரிசின் பிரே­ர­ணைகள் 13க்கு அப்பால் சாத­க­மான தன்­மை­களை கொண்­டுள்­ளது. ஜனா­தி­பதி மஹிந்த ஆட்­சியில் பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ர­ணவின் சர்­வ­கட்சிக் குழுவின் பிரே­ர­ணையும் 13க்கு அப்பால் செல்­கின்­றது. மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் இந்­தி­யா­விற்கு பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்­கி­யுள்ளார். 13 ஆம் திருத்­தத்­திற்கு அப்பால் சென்று பூர­ண­மான தீர்வு ஒன்­றினை காண்போம் என வாக்­கு­றுதி வழங்­கப்­பட்­டுள்­ளது. ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாய­கத்­திற்கு இந்த வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

ஆகவே நாம் இந்த விட­யங்­களை மறந்­து­விட முடி­யாது. இவற்­றினை நாம் மிகவும் தெளி­வாக நிதா­ன­மாக கையாள வேண்டும். இணைப்பை பொறுத்த வரையில் அது புதிய விடயம் அல்ல. பண்­டா­ர­நா­யக -செல்­வ­நா­யகம் ஒப்­பந்­தத்தில் வடக்கில் ஒரு பிராந்­திய சபை, கிழக்கில் இரண்டு அல்­லது இரண்­டிற்கு மேற்­பட்ட பிராந்­திய சபைகள் என ஒப்­பந்­த­மா­கி­யுள்­ளது. இதனை முஸ்லிம் தலை­மைகள் ஏற்­று­கொண்­டன. முஸ்லிம் மக்­களின் ஒத்­து­ழைப்பு இல்­லாது இந்த சிக்­கல்­களை தீர்க்க முடி­யாது. எமது பக்கம் நியாயம் உள்­ளது. ஆனால் அவர்கள் பக்க நியா­யத்­தையும் கருத்தில் கொண்டு செயற்­பட வேண்டும். அவற்­றினை கவ­னத்தில் கொண்டு ஒரு இணக்­கப்­பாடு எட்­டப்­பட வேண்டும். இதில் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு தொடர வேண்டும்.

இலங்கை இந்­திய ஒப்­பந்தம் இறந்­து­வி­ட­வில்லை. இன்றும் நாங்கள் இந்­தி­யா­வுடன் இது குறித்து நாம் பேசு­கின்றோம். இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு இன்றும் உள்­ளது. அதேபோல் நாட்­டினை நாங்கள் குழப்ப விரும்­ப­வில்லை, இந்­தி­யாவின் மூல­மாக மட்­டுமே இந்த பிரச்­சி­னை­களை தீர்க்க முடியும் என இந்த நாடு நினைப்­பதை நாம் விரும்­ப­வில்லை.

இந்த நாட்டு மக்­களின் பூரண ஒத்­து­ழைப்­புடன் அனை­வ­ரு­மாக இணைந்து ஒரு தீர்­வினை பெற்­றுக்­கொள்ள முடியும் என்றால் அதனை நாங்கள் வர­வேற்­கின்றோம். ஆட்சி மாற்­றத்தின் பின்னர் பாரா­ளு­மன்றம் ஒரு அர­சியல் சாசன சபை­யாக மாற்­றப்­பட்டு ஒரு நட­வ­டிக்கைக் குழு நிய­மிக்­கப்­பட்டு, பல உப குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் தற்­போது இடம்­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் விளை­வு­களின் கார­ண­மாக சில தாம­தங்கள் ஏற்­பட்­டுள்ள போதிலும் கூட இந்த முயற்­சிகள் கைவி­டப்­ப­ட­வில்லை. இந்த முயற்­சிகள் தொடர வேண்டும் என்­பதே எமது கருத்­தா­கவும் உள்­ளது. இவை ஒரு முடி­விற்கு வர­வேண்டும். அவ்­வாறு வரும் நிலையில் இதற்கு முன்னர் முன்­வைக்­கப்­பட்ட பிரே­ர­ணைகள் அனைத்தும் உள்­வாங்­கப்­பட்டு பரி­சீ­லிக்­கப்­பட்டு சொற்­களில் எமக்கு ஆனந்தம் தரா­விட்­டாலும் கூட உள்­ள­டக்கம் எமக்கு திருப்­தியை தர வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும்.

ஆனால் இவற்றை அடைய நாங்கள் அர­சியல் விளை­யாட்­டுக்­களை முன்னெடுக்கக்கூடாது. எங்கள் மத்தியில் ஒற்றுமை அவசியம். ஒருமித்து நிற்க வேண்டியது அவசியம். அவ்வாறு ஒன்றாக செயற்பட்ட காரணத்தினால் தான் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றினை உருவாக்க முடிந்தது. அவ் ஒற்றுமை தொடர வேண்டும். எமது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாக இருக்க வேண்டும். மத்திய அரசாங்கத்தின் தலையீடு இல்லாத தீர்வாக, தெளிவான அரசியல் பகிர்வு கொண்ட தீர்வாக அமைய வேண்டும். எவரையும் பகைத்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வடக்கை போலவே தெற்கிலும் வாய்ப்புகள் கிடைகின்றன. ஆகவே இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் கைவிடக்கூடாது. நாட்டினை பிரிப்பது எமது நோக்கம் அல்ல, ஒருமித்த நாட்டுக்குள் எமக்கான அங்கீகாரம் அவசியம் என்பதே எமது கோரிக்கையாகும்.

எமது சுய மரியாதையை இழக்காது வாழ வேண்டும். இதனை அடைய வேண்டும். அதற்கு எமது ஒற்றுமை அவசியம். ஆகவே இந்த ஒப்பந்தம் குறித்த புத்தகம் ஒரு நீண்ட பாதையின் ஒரு பக்கமாகும். இந்த ஒப்பந்தம் தொடர்கின்றது, அதனை நிறைவேற்ற வேண்டியது இந்தியாவின் கடமை. அந்தக் கடமையிலிருந்து இந்தியா மீற முடியாது. அதேபோல் எமது தலைமைகளுடன் பேசி ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோம். அது கிடைக்காத பட்சத்தில் எதை செய்ய வேண்டுமோ அதனை செய்து தீர்வை பெற்றுக்கொள்ளவும் நாம் தயங்க மாட்டோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-26#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.