Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரண்டு வாரங்களில் புதிய கட்சி: வடக்கு முதல்வரின் முக்கிய முடிவு?

Featured Replies

இரண்டு வாரங்களில் புதிய கட்சி: வடக்கு முதல்வரின் முக்கிய முடிவு?

 

cv-vigneswaran_0.jpg

 

வடக்குமான முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இரண்டு வாரங்களில் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக செயற்பட்டு வரும் அவர் அடுத்த மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் புலம்பெயர் அரசியல் கட்சி ஒன்றினை எதிர்வரும் 2 வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்தகாலங்களில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சி அல்லது முன்னணி ஒன்றை ஆரம்பித்தால், அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வரக் கூடிய சாத்தியம் இல்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாகத் தேர்தலில் நிற்கலாம் என விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

ஆனால் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் மூலோபாய ரீதியாகவும் நடைமுறை அடிப்படையிலும் அவ்வாறு நிற்பதால் பல பிரச்சினைகள் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவித்தார்.

இருப்பினும் புதிய கட்சி ஒன்றை தொடங்குமாறு பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றார்கள். கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்கின்றார்கள். அதற்குரிய காலம் கனிந்து விட்டதோ நான் அறியேன். என அவர் முன்னர் தெரிவித்திருந்தார்.

ஆனால் தமிழ் மக்களை பிரித்து எமது இனத்தை அழிப்பதற்கும், எமது ஒற்றுமையைச் சீர் குலைக்கவும் பல சக்திகள் முயன்று கொண்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமனற உறுப்பினர் சிவமோகன் நேற்று தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமன்றி இவ்வாறு தமிழ் மக்களை பிரிக்கும் வேலையில் ஈடுபட்டால் பிரபாகரனை காட்டிக்கொடுத்த கருணாவை போல வடக்கை காட்டி கொடுத்தவர் விக்னேஸ்வரனாக இருப்பார் எனவும் கூறியிருந்தார்.

இவ்வாறு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலர், விக்னேஸ்வரன் கட்சியை ஆரம்பிப்பது தொடர்பில் முரணான கருத்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் எவ்வித கருத்துக்களும் தெரிவிக்காமல் இருப்பதும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

எது எப்படியாயினும் விக்னேஸ்வரன் கட்சி ஆரம்பித்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இருக்கும் மக்களின் செல்வாக்கு குறைவடையக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட முதலமைச்சர், அக்கட்சியை பாதிக்கின்ற வகையில் செயற்பட மாட்டேன் என கடந்த காலங்களில் தெரிவித்துவந்தாலும் கூட இரு தலைவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றால் இந்த முடிவு மாற்றமடையக் கூடும் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/?p=682188-இரண்டு-வாரங்களில்-புதிய-கட்சி:-வடக்கு-முதல்வரின்-முக்கிய-முடிவு?

1 hour ago, நவீனன் said:

ஆனால் தமிழ் மக்களை பிரித்து எமது இனத்தை அழிப்பதற்கும், எமது ஒற்றுமையைச் சீர் குலைக்கவும் பல சக்திகள் முயன்று கொண்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமனற உறுப்பினர் சிவமோகன் நேற்று தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமன்றி இவ்வாறு தமிழ் மக்களை பிரிக்கும் வேலையில் ஈடுபட்டால் பிரபாகரனை காட்டிக்கொடுத்த கருணாவை போல வடக்கை காட்டி கொடுத்தவர் விக்னேஸ்வரனாக இருப்பார் எனவும் கூறியிருந்தார்.

சிவமோகன் போன்ற எட்டப்பர்களுக்கு வால்பிடிக்கும் கும்பலிடம் இதைப் போன்ற கருத்துக்களையே எதிர்பார்க்க முடியும்! 

1 hour ago, நவீனன் said:

வடக்குமான முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இரண்டு வாரங்களில் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எப்போது சம்மந்தன், சுமந்திரன், மாவை கும்பல் தமிழின விரோத அரசியலில், தமிழின படுகொலைகாரர்களை பாதுகாக்கும் ஈனச் செயல்களில்  ஈடுபட ஆரம்பித்ததோ அன்றிலிருந்தே புதிய கட்சி ஒன்றின் தேவையை தமிழ் மக்கள் சிந்திக்க தொடங்கியிருந்தனர்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் முயற்சி மிகவும் தாமதமானது என்றாலும் தமிழர்களின் சுயகௌரவத்துக்கும் அரசியல் ஈடேற்றத்துக்கும் இதைவிட வேறுவழியில்லை!

இதற்கான உறுப்பினர்களை தெரிவுசெய்யும் போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிகவும் கவனமாக நல்லதொரு குழுவை அமைத்து செயற்பட வேண்டும். பட்டப்படிப்பு உள்ளவர்கள் என்ற போர்வையில் சத்தியமூர்த்தி, டெனிஸ்வரன் போன்ற கயவர்கள் உள்நுழையாமல் கவனமெடுக்கவேண்டும். பட்டபடிப்பில்லாத திறமையாளர்களும் உள்ளனர். இன்றும் கௌரவமாக வாழ்ந்துவரும் அனுபவமுடைய சில போராளிகளையும் உள்வாங்குவது சிறப்பானது. விலை போகமுடியாத, இணைந்து செயற்படும் பக்குவமுடைய  பலவித அறிஞர்களை உள் வாங்குவதும் அவசியம்.

சொந்த, பந்தங்களுக்கு இடம்கொடுக்கும் பேர்வழிகளை தவிர்க்க வேண்டும்.  

சுரேஷ் பிரேமச்சந்திரன்,நிமலன் கார்த்திகேயன், மனோகணேசன்  ...  போன்ற சுயநலவாதிகள் சொற்களை நம்பாமல் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் வித்தியாதரன், ஆனந்தசங்கரி, .... போன்ற கைக்கூலிகளை, அவர்களின் முகவர்களை,  அருகில் நெருக்கவே விடக்கூடாது.

கூல் கும்பல் போன்ற எட்டப்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

பக்குவமான இளைஞர்கள் சிலரையும் உள்வாங்க வேண்டும்! பிச்சைக்கார பட்டதாரிகளை தூரவைப்பது நலம்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் புதிய கட்சி துவங்கி வாக்குகள் பிளவுபட்டு சிங்களக் கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் பெறக்கூடிய வாய்ப்புக்களை உருவாக்காமல் ஏற்கனவே உருவாக்கப்பட்டு கொள்கைப் பிடிப்புடன் இயங்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவதே வாய்ப்பானது .சுரேஸ் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆனந்த சங்கரியுடன் கூட்டு வைத்து சொதப்பின மாதிரி இருக்கக்கூடாது.

On 6/3/2018 at 10:32 PM, புலவர் said:

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவதே வாய்ப்பானது .

விக்னேஸ்வரன் அவர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற சுயநல அரசியல்வாதிகளின் கீழ் செயற்படுவதுவும், சம்-சும் குழுவுடன் செயற்படுவதுவும் ஓன்று தான்.

முடிவெடுக்கும், வழிநடத்தும் பங்கெடுப்பில்லா ஒரு கூட்டணி விக்னேஸ்வரன் அவர்களின் திறமையை தற்போதுள்ள நிலை போலவே 70% க்கு மேல் கட்டிப்போட்டுவிடும்!

  • கருத்துக்கள உறவுகள்

மேலும்  மேலும்  எம்மவரிடையே  பிரிவுகளும் பிளவுகளும்

கட்சிகளும்  தேவையற்றது  மட்டுமல்ல

எமது  பலத்தை  பாதிக்கும்

அத்துடன்  மற்றவர்களின்  (தமிழர்  விரோத  போக்குடையவர்கள் மற்றும் தேசியக்கட்சிகளின்)

பலத்தை  அதிகரிப்பதினூடாக எமது கோரிக்கைகளை  வலுவற்றதாக்கும்

எனவே  கூடிப்பேசி  எல்லோரும் ஒரு  முடிவுக்கு  வருவதே  சிறந்தது

  • கருத்துக்கள உறவுகள்

பதவிக்கும் பணத்திற்கும் புகழுக்கும் ஏங்கித்தவிக்கும் அரசியல்வாதிகள் எப்படிக் கூடிப்பேசி முடிவு எடுப்பார்கள்.
ஏமாறும் மக்கள் இருக்கும்வரை அவர்கள் ஏமாற்றிக்கொண்டேயிருப்பார்கள்.
தெளிவாகவேண்டியவர்கள் மக்கள் மட்டுமே
அதுவரை அவர்களின் தலையில் அவர்களே மண் தூவிக்கொண்டிருப்பார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.