Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிக்கொடி மற்றும் கைக்குண்டு மீட்பு – ஒட்டுசுட்டானில் பரபரப்பு

Featured Replies

புலிக்கொடி மற்றும் கைக்குண்டு மீட்பு – ஒட்டுசுட்டானில் பரபரப்பு

download-3.jpg
 
 
 

புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டானில் புலிக்கொடி மற்றும் கைக்குண்டு என்பன மீட்கப்பட்டன.

இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் முச்சக்கரவண்டியைச் சோதனையிடும் போதே இவை மீட்கப்பட்டது.

http://newuthayan.com/story/09/புலிக்கொடி-மற்றும்-கைக்குண்டு-மிட்பு-ஒட்டுசுட்டானில்-பரபரப்பு.html

  • தொடங்கியவர்

முல்லைத்தீவில் புலிக்கொடியுடன் ஒருவர் கைது!

 

 

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் கொடி, 20 கிலோ கிளைமோர், கிரினைட்டுகளுடன்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை வேளையில் குறித்த பகுதியினூடாக பயணித்த முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்ட போதே குறித்த வெடிப்பொருட்களுடன் சந்தேகக நபர் சிக்கியுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் மூவர் பயணித்திருந்த நிலையில், ஏனைய இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

கிளிநொச்சி, திருவையாறு பகுதியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரையும், மீட்கப்பட்ட வெடிபொருட்களையும் போக்குவரத்து பொலிஸார் மாங்குளம் பொலிஸ் தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ள நிலையில், சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

http://athavannews.com/?p=691999/முல்லைத்தீவில்-புலிக்கொடியுடன்-ஒருவர்-கைது!/

  • தொடங்கியவர்

கிளைமோர் மீட்பு!! – தப்பியோடியவருக்கே தகவல்கள் தெரியுமாம்!!

கைது செய்யப்பட்ட இருவரும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள். தப்பி ஓடியவரும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

 

mulaitvu-750x430.jpg

 
 

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானின் இன்று அதிகாலை முச்சக்கர வண்டி ஒன்றிலிருந்து 20 கிலோ கிராம் எடையுடைய கிளைமோர் குண்டு, அதனை மறைந்திருந்து இயக்கும் ரிமோல்ட் உள்ளிட்ட கருவிகள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை மற்றும் புலிக் கொடி ஒன்று மீட்கப்பட்டன. முச்சக்கர வண்டி சாரதியும் மற்றொருவரும் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். ஓடிவருக்கே தகவல்கள் தெரியும் என சந்தேகநபர்கள் வாக்குமூலமளித்துள்ளனர்.

இவ்வாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள். தப்பி ஓடியவரும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டது. நெடுங்கேணிப் பகுதியிலிருந்து ஒட்டுசுட்டான் பகுதி வழியாக புதுக்குடியிருப்பு வீதியில் பயணித்த போதே முச்சக்கர வண்டி பொலிஸாரால் மீட்கப்பட்டது.

 

கைது செய்யப்பட்ட இருவரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. தமக்கு என்ன நோக்கம் எனத் தெரியாகது அவர்கள் தெரிவித்துள்ளனர். தப்பிஓடியவருக்குதான் கிளைமோர் உள்ளிட்டவை தொடர்பான தகவல் தெரியும் என அவர்கள் வாக்குமூலமளித்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதியும் மற்றொருவரும் தப்பி ஓடினர் என முல்லைத்தீவுப் பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்தனர்.

http://newuthayan.com/story/16/கிளைமோர்-மீட்பு-தப்பியோடியவருக்கே-தகவல்கள்-தெரியுமாம்.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முல்லைத்தீவில் விடுதலைப்புலி சீருடை, வெடிபொருள் ; பாரிய சதி நடவடிக்கை முறியடிப்பு

 

 
 

இன்று  அதிகாலை வேளை ஒட்டுசுட்டானில் இருந்து புதுக்குடியிருப்பு செல்லும் வீதியில் முச்சக்கர வண்டியில் விடுதலைப்புலிகளின் சீருடை மற்றும் புலிக்கொடியுடன்  இருவரை கைதுசெய்துள்ளதுடன் ஒருவர் தப்பி சென்றுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.

qq.jpg

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

ஒட்டுசுட்டான் பகுதியில்இருந்து முச்சக்கர வண்டி ஒன்று அதிகாலை வேளை புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த போது ஒட்டுசுட்டான் பேராற்று பகுதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் முச்சக்கர வண்டியினை சோதனை செய்துள்ளார்கள். இதன்போது அதில் இருந்த ஒருவர் தப்பி ஓடியுள்ள நிலையில் இருவர் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

முச்சக்கர வண்டியினை சோதனை செய்தபோது அதில் 15கிலோகிராம் நிறையுடைய  கிளைமோர் ஒன்று அதனை இயக்க பயன்படுத்தப்படும் ரிமோட்கள் ரவைகள் கைக்குண்டு புலிக்கொடி ஒன்று விடுதலைப்புலிகளின் சீருடை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

1.jpg

இச்சம்பவத்தினை தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்களை ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். 

gggggggg.jpg

முதற்கட்ட விசாரணைகளின் போது கைதான இருவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தப்பிஓடிய நபர் குறித்து பொலீஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதேவேளை பேராற்றுப்பகுதியில் பெருமளவான படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்..

கைதான நபர்கள் குறித்து பயங்கரவாத விசாரணைப்பிரிவின் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தை தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் பொலிஸார்  இராணுவம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் இணைந்து மேலதிக விசாரணைகளையும் தப்பியோடிய மற்றைய நபரை பிடிப்பதற்கான நடவ்டிக்கையினையும் மேற்கொண்டுள்ளனர்.

q.jpg

மேலும் இந்த நபர்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/35406

  • தொடங்கியவர்

முல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு!

 

 
 

முலைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உடைமைகளுடன் பொலிஸாரிடம் சிக்கியபோது தப்பிச் சென்ற சந்தேக நபரை ஸ்ரீ லங்கா பாதுகாப்புப் பிரிவு கடுமையாகத் தேடிவருகிறது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பேராறு பகுதியில் இன்று காலை வீதி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து சோதனையிட்டிருந்தனர்.

இதன்போது விடுதலைப் புலிகளின் கொடி, சீருடை மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து முச்சக்கர வண்டி சாரதி உட்பட இருவரை பொலிஸார் கைதுசெய்தனர்.

மேலும் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையம் அழைத்துவரப்பட்டு விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துவரும் அதேவேளை இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் என பலர் பொலிஸ் நிலையத்தில் குவிந்துள்ளனர்.

பொலிஸ் மற்றும் இராணுவம் இணைந்து தப்பியோடியவரை கைதுசெய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளை காட்டில் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் மேலுமொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நபரும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

இதனிடையே முல்லைத்தீவு மற்றும் நெடுங்கேணி பகுதிகளில் பல்வேறு இடங்களில் இராணுவம், பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் மேற்கொண்டு வருவதாக அறியமுடிகிறது

இந்த சம்பவம் மக்கள் மற்றும் முன்னாள் போராளிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

 
 

https://www.ibctamil.com/srilanka/80/102311?ref=home-imp-flag

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா  இதையெல்லாம் எடுத்துக்கொண்டு ஆட்டோ பிடித்து கொண்டு போவதென்பது  நல்ல திறிலிங்கான படம் போல தான் இருக்கு 

கிளைமோரை அடித்துவிட்டு அந்த இடத்தில் புலிக்கொடியை ஏற்றிவிடும் பிளானா இருக்குமோ ? 

memees.php?w=650&img=dmFkaXZlbHUvdmFkaXZ

இல்லை அம்பாள்குளத்திலே கிளைமோர் வைச்சு சிறுத்தை அடிச்சு facebook ல போடுவம் என்று கொண்டுபோயிருப்பாங்களோ .?

என்னவா இருக்கும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

யாரையோ பிடித்து உள்ளுக்கை போடப் போறாங்கள் அல்லது மண்டையில் போடப் போறாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் இரணைமடுபகுதியிலும்,வன்னியிலும் ஆரம்பிக்கப்படவுள்ள ஆயிரக்கணக்கான இராணுவ குடும்பங்களினது

குடியேற்றத்திற்கு உள்ளூர்காரர்களுக்கு காரணம் சொல்லவும் , சர்வதேச அழுத்தம் வந்தால் அதற்கு பதில் சொல்லவும்

அடித்தளம் இட்டாச்சு.

வடமாகாணத்தின் இனப்பரம்பல் ஏறக்குறைய மட்டக்களப்பு அம்பாறை,திருகோணமலை நிலைக்கு வந்தாகிவிட்டது.

தனி தமிழ் நாடு கேட்டு போராடிய எங்களை, தனி தமிழ் ஊர்கூட உங்களுக்கு இருக்ககூடாது என்று ஆக்கிவிட்டது பேரினவாதம்.

  • தொடங்கியவர்

புலிகளின் வெடிபொருட்களுடன் ஒட்டுசுட்டானில் நால்வர் கைது

 

ltte-ammunitions-1-300x200.jpgமுல்லைத்தீவு – பேராறு பகுதியில் வெடிபொருட்கள், புலிகளின் சீருடை, கொடி என்பனவற்றுடன் கைது செய்யப்பட்டவர்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், ஒட்டுசுட்டான்- புதுக்குடியிருப்பு வீதியில் உள்ள பேராறு பகுதியில் நேற்று அதிகாலை 4 மணியளவில் ரோந்து சென்ற இரண்டு சிறிலங்கா காவல்துறையினர், முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து சோதனையிட்டனர்.

அப்போது, அதிலிருந்த ஒருவர் தப்பியோடினார். அவர் கையை இழந்த முன்னாள் போராளி என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் முச்சக்கர வண்டியில் இருந்து கப்டன் பவான் (ஐயா) ரகத்தைச் சேர்ந்த 15 கிலோ எடையுள்ள தகர்ப்புக் குண்டு, டெட்டனேற்றர்கள், தொலைவுக் கட்டுப்பாட்டு கருவிகள், ரி-56 ரவைகள், கைக்குண்டுகள். விடுதலைப் புலிகளின் கொடிகள், சீருடைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

அந்த முச்சக்கர வண்டியின் சாரதியும், அதில் வந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

ltte-ammunitions-1.jpg

விசாரணைகளின் போது. முச்சக்கர வண்டி சாரதி தனக்கு ஏதும் தெரியாது என்றும், தப்பியோடிய நபரே வாடகைக்கு அமர்த்தி வந்தார் என்றும் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட மற்றைய நபர், விசாரணைகளின் போது வெடிபொருட்கள் குறித்து தப்பியோடியவருக்கே தெரியும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இவர்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ltte-ammunitions-2.jpgமேலும், தப்பியோடியவரைக் கைது செய்ய ஒட்டுசுட்டான் காட்டுப் பகுதியில் நேற்று சிறப்பு அதிரடிப்படையினர், காவல்துறையினர், இராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், தப்பியோடிய நபரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பிந்திய தகவல்கள் கூறுகின்றன.

கைது செய்யப்பட்ட நால்வரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், ஏற்கனவே காணாமல் போனவர் என்று காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டவர் என்றும், அவர் வேறு பெயர் ஒன்றில் செயற்பட்டு வந்திருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடைய மேலும் பலரும் விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும், கிளிநொச்சியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நான்கு உந்துருளிகள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவங்களால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள மக்கள் மத்தியிலும், முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் மத்தியிலும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/06/23/news/31524

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.