Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் முதியவர் செய்த வேலை- 17 வயதுச் சிறு­மிக்குச் செய்த கொடூரம்!!

Featured Replies

வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் முதியவர் செய்த வேலை- 17 வயதுச் சிறு­மிக்குச் செய்த கொடூரம்!!

 

rape-2.jpg

 
 
 

காங்­கே­சன்­து­றைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட 17வய­துச் சிறு­மியை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டில் அதே­யி­டத்­தைச் சேர்ந்த 59வய­து­டைய முதி­ய­வர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் தெரி­வித்­த­தா­வது,
சிறுமி தனது சித்­தி­யா­ரு­டன் வசித்து வரு­கின்­றார். வீட்­டில் யாரும் இல்­லாத நேரத்­தில் சிறு­மியை அய­லில் உள்ள 59வயது முதி­ய­வர் நேற்­று­ முன்­தி­னம் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளார்.

சிறு­மி­யின் தம்பி இந்த விட­யத்தை அறிந்து சித்­தி­யா­ருக்கு தெரி­வித்­துள்­ளார். அவர் முறைப்­பாடு செய்­ததற்கு அமை­வா­கவே, சந்­தேக நப­ரைக் கைது ­செய்­துள்­ளோம் -– என்­ற­னர் பொலி­ஸார்.

http://newuthayan.com/story/10/வீட்டில்-யாரும்-இல்லாத-தருணத்தில்-முதியவர்-செய்த-வேலை-17-வயதுச்-சிறு­மிக்குச்-செய்த-கொடூரம்.html

 

 

 

யாழில் 9 வயதுடைய மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை கைது

 

 
 

யாழில் 9 வயதுடைய மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை கைது

புங்குடுதீவு பகுதியில் 9 வயதுடைய மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், சிறுமியின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தில் வசித்து வரும் ஒருவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்து 9 வயதான மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். சில தினங்களாக இந்த சம்பவம் நடந்து வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(15)

http://www.samakalam.com/செய்திகள்/யாழில்-9-வயதுடைய-மகளை-பாலி/

  • கருத்துக்கள உறவுகள்

வய‌து போன முதியவர்கள் ஏன் இவ்வளவு காடையர்களாக இருக்கின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

வயது போனால் முதியவர்கள்தானே. சும்மா என்னத்துக்கு முதியவர் முதியவர் என்று எழுதுகிறார்களோ தெரியவில்லை. வேண்டுமென்றால் அவர்களை காமுகன் என்று எழுதலாம்.இன்னும் சில வருடங்களில் நான்கூட முதியவர் ஆகலாம். ஏன் நீங்கள் எல்லோரும்கூட , இனி யாரும் வாலிபத்துக்கு திரும்ப முடியாது.ஆனால் முதுமை மட்டும் உங்களை வரவேற்க காத்திருக்கு. இப்படி எழுதுவதைப்பார்க்க கடுப்பாய் இருக்கு.....!  ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இன்னும் சில வருடங்களில் நான்கூட முதியவர் லாம்

என்னது இன்னும் வயசு போகணுமா? யோசித்து பாருங்கள் ஊரில் பென்சன் எடுத்தாலே பழசு.இங்கு 65 தாண்டினாலும் வயது போட்டுது என்பதனை ஏற்க மறுக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னது இன்னும் வயசு போகணுமா? யோசித்து பாருங்கள் ஊரில் பென்சன் எடுத்தாலே பழசு.இங்கு 65 தாண்டினாலும் வயது போட்டுது என்பதனை ஏற்க மறுக்கிறது.

உஸ்.... உங்களுக்கும் சேர்த்துதான் நான் கதைக்கிறேன், கண்டும் காணாதமாதிரி இருங்கோ.....!  ?

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் அங்கே தாக்குதல் ; இங்கே தாக்குதல் பல இராணுவத்தினர் பலி என்று செய்திகள் ஊர்ப்புதினத்தில் வரும்.

இப்போது சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள்தான் செய்திகளாக வருகின்றன.?

ஐம்பது, அறுபது வயதில் முதுமை வருவதில்லை. இந்த வயதில் உள்ளவர்களை நம்பி பிள்ளைகளை அவர்களுடன் பழகவிடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

வயது போனால் முதியவர்கள்தானே. சும்மா என்னத்துக்கு முதியவர் முதியவர் என்று எழுதுகிறார்களோ தெரியவில்லை. வேண்டுமென்றால் அவர்களை காமுகன் என்று எழுதலாம்.இன்னும் சில வருடங்களில் நான்கூட முதியவர் ஆகலாம். ஏன் நீங்கள் எல்லோரும்கூட , இனி யாரும் வாலிபத்துக்கு திரும்ப முடியாது.ஆனால் முதுமை மட்டும் உங்களை வரவேற்க காத்திருக்கு. இப்படி எழுதுவதைப்பார்க்க கடுப்பாய் இருக்கு.....!  ?

தமிழ் படங்களில், பிள்ளை 9 அல்லது 10 படிக்கும். 10 வயதில தாவணி போட்டவுடன் பாட்டு காதல்.... நம்பகத்தன்மை இல்லாத பூச்சுத்தல்.

30 வயது நடிகை, அப்படியே 10/11 வயதா நடிக்கும் போது ஏற்றுக்கொள்வதைப்போல, இதையும் பார்க்கவேண்டும். ரென்சனாகக் கூடாது.

ரஜனியை இப்ப விட்டாலும், 20 வயதுக்காரரா நடிக்க ரெடி!!

அவரெல்லாம் இப்படியா ரென்சனாவாரு?

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

முன்பெல்லாம் அங்கே தாக்குதல் ; இங்கே தாக்குதல் பல இராணுவத்தினர் பலி என்று செய்திகள் ஊர்ப்புதினத்தில் வரும்.

இப்போது சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள்தான் செய்திகளாக வருகின்றன.?

ஐம்பது, அறுபது வயதில் முதுமை வருவதில்லை. இந்த வயதில் உள்ளவர்களை நம்பி பிள்ளைகளை அவர்களுடன் பழகவிடக்கூடாது.

இங்கு வயது ஒரு பிரச்சினை இல்லை கிருபன். தரம் தாழ்ந்த காமம் தான் பிரச்சினை. அதனால்தான் சொல்கிறேன் அவர்களை காமுகர் என்று அழைக்க வேண்டும் என்று. "காமுகர் நெஞ்சில் நீதியில்லை, அவர்க்கு தாயென்றும் தாரம் என்றும் பேதமில்லை". முதியவர் என்று குறிப்பிடும்போது ஆண் /பெண் இரு பாலரையும்தான் குறிக்கப் படுகிறது. பல்லாயிரம் மக்கள் வாழும் சமூகத்தில் யாரோ நாலுபேர் நாதாரி வேலை செய்தால் என்ன சொல்வது. மீண்டும் சொல்கிறேன் விரும்பினாலும் வாலிபம் திரும்பி வராது, விரும்பாவிட்டாலும்  வயோதிபம் வருவது உறுதி.....!  ?

2 hours ago, Nathamuni said:

தமிழ் படங்களில், பிள்ளை 9 அல்லது 10 படிக்கும். 10 வயதில தாவணி போட்டவுடன் பாட்டு காதல்.... நம்பகத்தன்மை இல்லாத பூச்சுத்தல்.

30 வயது நடிகை, அப்படியே 10/11 வயதா நடிக்கும் போது ஏற்றுக்கொள்வதைப்போல, இதையும் பார்க்கவேண்டும். ரென்சனாகக் கூடாது.

ரஜனியை இப்ப விட்டாலும், 20 வயதுக்காரரா நடிக்க ரெடி!!

அவரெல்லாம் இப்படியா ரென்சனாவாரு?

 

நாதம் இதில் என்ன டென்ஷன் இருக்கு. இப்பதான் பிக்பாஸில் கமல் ஆனந் வைத்தியநாதனிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார் வயசு மனசிலதான் இருக்கெண்டு. tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஐம்பது, அறுபது வயதில் முதுமை வருவதில்லை. இந்த வயதில் உள்ளவர்களை நம்பி பிள்ளைகளை அவர்களுடன் பழகவிடக்கூடாது.

பத்து வயசில சிறுமிகள் வயதுக்கு வருவது ஒருபக்கம் எண்டால், ஒரு வயதுக்கு மேல், திருவாசகம், திருவெம்பாவை, கோயில் நிர்வாகம் எண்டு திரியிற கோஸ்டிகளுக்கு கோதாரி பிடிச்ச, வயாகராவை காட்டி.... பெரிய்......ய பிரச்சணையாக் கிடக்குது.

நம்ம மாதிரி பெடியல் தான் பாவம்... என்ன சொல்லுறியள், கிருபன்?

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஈவினிங் ஸ்ரான்டட் செய்தி; சிறு குழந்தைக்கு தந்தையும், இன்னும் ஒரு குழந்தையை எதிர்பார்த்திருக்கும் 39 வயதான ACCA கணக்காளராக வேலை பார்த்த, ஆசீப் கிடியா, வயது குறைவான கன்னிச் சிறமியை இணையத்தில், £50 க்கு தேடியிருக்கிறார். 40 வயது பெண் 15 வயது பெண்ணாக நடித்து விரித்த வலையில் வீழ்ந்து, 18 மாத ஒத்திவைக்க்பட்ட சிறைத்தண்டணை வழங்கப்பட்ட நிலையில் வேலை இழந்து, பட்டம் விலக்கப்பட்ட நிலையில் பூட்டுகள் திருத்துபவராக வேலை செய்கிறார்.

தேவைதானே...

*ரயிலில் இருந்து யாழுக்காக உடனடி சேவை :grin: 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இன்றைய ஈவினிங் ஸ்ரான்டட் செய்தி; சிறு குழந்தைக்கு தந்தையும், இன்னும் ஒரு குழந்தையை எதிர்பார்த்திருக்கும் 39 வயதான ACCA கணக்காளராக வேலை பார்த்த, ஆசீப் கிடியா, வயது குறைவான கன்னிச் சிறமியை இணையத்தில், £50 க்கு தேடியிருக்கிறார். 40 வயது பெண் 15 வயது பெண்ணாக நடித்து விரித்த வலையில் வீழ்ந்து, 18 மாத ஒத்திவைக்க்பட்ட சிறைத்தண்டணை வழங்கப்பட்ட நிலையில் வேலை இழந்து, பட்டம் விலக்கப்பட்ட நிலையில் பூட்டுகள் திருத்துபவராக வேலை செய்கிறார்.

தேவைதானே...

*ரயிலில் இருந்து யாழுக்காக உடனடி சேவை

இதைத் தான் சொல்வது வந்தா மலை போனால் மயிர் என்று.

ரயிலில் இருந்து உடனடி சேவை செய்வதிருக்கட்டும் சைக்கிள் விட்ட இடத்தை நிக்குதா என்று போய்ப் பாருங்க.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

இதைத் தான் சொல்வது வந்தா மலை போனால் மயிர் என்று.

ரயிலில் இருந்து உடனடி சேவை செய்வதிருக்கட்டும் சைக்கிள் விட்ட இடத்தை நிக்குதா என்று போய்ப் பாருங்க.

சைக்கிள் போனால் போகட்டும்...

வாங்கிட்டுப் போகலாம்... 

சுவியரை சந்தோசப்படுத்துறது முக்கியம், கண்டியளே! ?ஆள் டபக்கெண்டு டவுணாப் போட்டார்

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

பத்து வயசில சிறுமிகள் வயதுக்கு வருவது ஒருபக்கம் எண்டால், ஒரு வயதுக்கு மேல், திருவாசகம், திருவெம்பாவை, கோயில் நிர்வாகம் எண்டு திரியிற கோஸ்டிகளுக்கு கோதாரி பிடிச்ச, வயாகராவை காட்டி.... பெரிய்......ய பிரச்சணையாக் கிடக்குது.

நம்ம மாதிரி பெடியல் தான் பாவம்... என்ன சொல்லுறியள், கிருபன்?

முறுக்கெடுத்து திரியேக்கை தீனி கிடைக்காத பொடியள்தான் பாவம்?

50 தாண்டிய காமுகர்களின் சேட்டைகளைப் பற்றி கிட்டடியில ஒரு கதை இணைச்சிருந்தன். நீளம் என்று பலர் படிக்கவில்லை?

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் அந்தக் கதையை படித்திருந்தேன் கிருபன்.....! tw_blush:

வேறொருவருடைய கணனியில் பார்த்ததால் கருத்தெழுத முடியவில்லை......! 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

முறுக்கெடுத்து திரியேக்கை தீனி கிடைக்காத பொடியள்தான் பாவம்?

50 தாண்டிய காமுகர்களின் சேட்டைகளைப் பற்றி கிட்டடியில ஒரு கதை இணைச்சிருந்தன். நீளம் என்று பலர் படிக்கவில்லை?

 

இப்பொழுத்தான் இந்தக்கதையை படித்தேன்.

ஏன் இதற்கு பிறழ்வு என தலைப்பிடப்பட்டுள்ளது? காமம் மனிதனுக்கு இயல்பானதே. ஆனால் அதை எப்படி தீர்த்துகொள்வது என்பதுதான் பிரச்சினை. 

ஏன் இந்தக்கதையில் கதாநாயகனை ஓர் மனப்பிறழ்வானவனாக காட்டப்படுகின்றது? அது என்ன காமத்தை கடந்த நிலை? இப்படி ஓர் நிலை வாழ்வில் எந்த ஸ்டேஜில் வரும்? வயாதானவர்கள் கோயிலுக்கு சொன்று புத்தகம் மட்டும்தான் வாசிக்க வேண்டுமா? அவர்களும் உணர்ச்சியுள்ள் மனிதர்கள்தானே? சபலம் ஆட்கொள்ளுவதில் என்ன தவறு?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இப்பொழுத்தான் இந்தக்கதையை படித்தேன்.

ஏன் இதற்கு பிறழ்வு என தலைப்பிடப்பட்டுள்ளது? காமம் மனிதனுக்கு இயல்பானதே. ஆனால் அதை எப்படி தீர்த்துகொள்வது என்பதுதான் பிரச்சினை. 

ஏன் இந்தக்கதையில் கதாநாயகனை ஓர் மனப்பிறழ்வானவனாக காட்டப்படுகின்றது? அது என்ன காமத்தை கடந்த நிலை? இப்படி ஓர் நிலை வாழ்வில் எந்த ஸ்டேஜில் வரும்? வயாதானவர்கள் கோயிலுக்கு சொன்று புத்தகம் மட்டும்தான் வாசிக்க வேண்டுமா? அவர்களும் உணர்ச்சியுள்ள் மனிதர்கள்தானே? சபலம் ஆட்கொள்ளுவதில் என்ன தவறு?

சமூகக் கட்டுப்பாடுகள், பண்பாடுகள், விழுமியங்கள் உள்ளவர்கள் காமத்தையும் கட்டுப்படுத்தவேண்டும் என்பதுதானே நாகரீகமான சமூகத்தின் எதிர்பார்ப்பு. இல்லாவிட்டால் வெறும் விலங்குதானே.

இந்தத் திரியில் உள்ள செய்தியும் சமூக ஒழுங்கை மீறியதால்தானே  வந்தது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.