Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மானிப்பாய் பொலிஸ் நிலையம் முன்பாக திரண்ட உறவுகள்-!!

Featured Replies

மானிப்பாய் பொலிஸ் நிலையம் முன்பாக திரண்ட உறவுகள்-!!

 
 
 
manipay.jpg
 
 
 

தென்மராட்சியின் பல்வேறு பிரதேசங்களை யும் சேர்ந்த 7 இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்று சுமார் 40 இற்கும் மேற்பட்டோர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பதைபதைப்புடன் திரண்டனர்.

வாள்வெட்டுக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் 7 பேரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர்.

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தின் முன்பாக, கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்று சுமார் 40பேர் வரையில் திரண்டிருந்தனர்.

 

எனது மகனுக்கும் இந்தச் சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லை என்று கைதான இளைஞன் ஒருவனின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்தார்.

வாள்வெட்டுக் குழுவுடன் தொடர்புடையதாக அவர் கைத்தொலை பேசியில் பதிந்துள்ள தகவல்களை தந்தை யிடம் காண்பித்தனர். தனக்கு இது தொடர்பில் எதுவும் தெரியாது என்று தந்தை பொலிஸாரிடம் கூறினார்.

அங்கு திரண்டிருந்த உறவினர்கள் பலர், கைதானவர்களுக்கு குற்றச் செயல்களுடன் தொடர்பு இல்லை என்றே தெரிவித்தனர். அவர்களை விடுவிக்குமாறும் கோரினர்.

http://newuthayan.com/story/09/மானிப்பாய்-பொலிஸ்-நிலையம்-முன்பாக-திரண்ட-உறவுகள்.html

  • கருத்துக்கள உறவுகள்

அப்பன் ஆத்தை வளர்ப்பு இப்ப அவர்களையே போலீஸ் ஸ்ரெசன் வாசலில கொண்டுவந்து விட்டுட்டுது. 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட பெற்றோர் இருக்கும் மட்டும் எத்தனை வெட்டுக் குழுக்கள் வேண்டுமானாலும் வரலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

வாள் வெட்டுக்குழுகள்.. எல்லாம் நல்லிரவில் பொலிஸ் காவல்நிலைகள்.. இராணுவக் காவல் நிலைகளை தாண்டிப் போகும் போது.. பிடிக்க முடியாதவர்கள்.. அப்பாவிகளை பிடித்து வைத்துக் கொண்டும் கதை விடலாம் தானே. ஏன் அப்படி செய்யாத சொறீலங்கா காவல்துறையா இது..??1

வாள் வெட்டுக்குழுவே.. இராணுவப் புலனாய்வாளர்களும்.. ஒட்டுக்குழு ஆக்களும்.. முஸ்லீம் காடைகளும்.. தமிழ் காடைகளும்.. சிங்கள.. பாதாள உலகக் கோஷ்டியும் தான். ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, Elugnajiru said:

அப்பன் ஆத்தை வளர்ப்பு இப்ப அவர்களையே போலீஸ் ஸ்ரெசன் வாசலில கொண்டுவந்து விட்டுட்டுது. 

3 hours ago, ரதி said:

இப்படிப்பட்ட பெற்றோர் இருக்கும் மட்டும் எத்தனை வெட்டுக் குழுக்கள் வேண்டுமானாலும் வரலாம் 

 

ஓ....அப்ப பொலிசு ஒழுங்காய் வேலைசெய்யுது எண்டு சொல்லவாறீங்க...ஓகே...ஓகே. :cool:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதும் அனைவரும் ஒருமுறை யாழ் கூடாநாட்டுக்குப் போய் வந்துவிட்டு கருத்து எழுதுங்கோ. நிலமை எப்படி இருக்குதெண்டுபாருங்கோ படு தூசணை வார்த்தைகள்தான் எனக்கு வருகுது. போலீசுக்கும் நிறுவனங்களுக்கும் இப்படியான காவாலிகள் தேவை போலீசுக்கு கப்பம் வாங்க நிதி நிறுவனங்களுக்குக் கொடுத்த கடனை அடாவடியாக அறவிட அல்லது பொருதளுக்கான தவணை செலுத்தாதுவிடின் பொருதளச் சீஸ் பண்ண. 

ஆரியகுளம் ரிற்றி எண்பதுகளில் மல்லாகச் சந்தியில் கால் இழந்தது இதனால்கான் ஒரு லொறியை சீஸ்பண்ணப்போய் வசமாய் மாட்டிக்கொண்டார். இது பழைய கதை.

அதைவிட யாழ் கூடாநாட்டின் படித்த மெதாவிகளாகவும் எதிர்கால அரசியல்வாதிகளாகவும் தற்போதைய அரசியல்வாதிகளாகவும் உலாவரும் அப்புக்காத்துபார் தங்க வருமனத்துக்காக இந்தமாதிரிப்பொறுக்கிகளை வெளியில எடுத்து உலாவ விடுகினம்.

சன்ன குழுவின் தலைவர் என அறியப்பட்டவர் இப்போது தம்பியார் பெயரில் சுவிஸில் அடைக்கலம் கேட்டிருக்கிறார். அக்குழுவின் உதிரிகள் இப்ப சின்னச்சின்ன குழுக்களாகப் பிறிந்துபோய் வன்முறையை வளர்க்கினம்.

தனுறொக் எனும் குழுவைச்சேர்ந்த தனு என்பவர் மானிப்பாய் கிட்டர்பூங்காவுக்கு முன்னால் உள்ள வீட்டில் வாழ்கிறார் இவர்தான் தற்போதைய கொக்குவில் பகுதி கதாநாயகன் இவர் யாழ் இந்துக்கல்லூரியில் காவாலித் துறையில் முதுகலைமானிப்பட்டம் படித்தவர்.  இப்படி ஊருக்கு ஊர் கனக்க வன்செயல் குழுக்கள் இயங்குகின்றன.

ஊருக்கு ஊர் இயங்கும் காவாலிக்கூட்டம்தான் நுண்கடன் நிறுவனங்களது கையாதளாகச் செயற்படுபவர்கள் ஒரு ஊரின் காவாலி இன்னுமொரு ஊருக்குள் புகுந்து கடன்வசூல் செய்வார் அதே இன்னுமொரு ஊர் காவாலி முதல் காவாலியின் ஊரில் கடன் வசூல் செய்வார் இவர்களுக்குள் நல்லமுறையில் வலைப்பின்னல் உள்ளது அதே நேரம் பெட்டைப்பிரச்சனையை யாராவது இழுத்துக்கொண்டுவந்தால் இருகுழுவும் முறுகுவினம்.

தவிர ரியூட்டரிக்கொட்டில்களுக்கு முன்பு பெட்டை பிடிப்பதிலும் பிரச்சனை வரும் அதிலிருந்து பாதுகாப்புத்தேட சம்பந்தப்பட்ட பொடியள் காவாலிக்கூட்டத்துடன் தொடர்பில் இருப்பார்கள் சிலவேளை வெளிநாடுகளிலிருந்து செல்லும் இளசுகளும்  கையில காசை எடுத்துக்கொண்டு ர்யூட்டரிக் கொட்டில்களில் மினக்கிடும் மச்சான் ஒண்டவிட்ட சகோதரம் இவர்களது மோட்டார்  சைக்கிள்தான் வெளிநாட்டுக்காரரின் புஸ்பகவிமானம் (இம்மோட்டர் சைக்கிளுக்கு நிதிஉதவி செய்தவர் சம்பந்தப்பட்டவராகவே இருப்பார்) பணப்புழக்கம் வெளிநாட்டு மோகம் இவைகள் பெண்பிள்ளைகளை மனம்மாறவைக்கும் பிறகென்ன கன்னைபுறித்து அடிபாடு அது இது என இழுபடும் ஊர் வன்முறைக்களமாக மாறும் ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் சபலபுத்தியுடன் சந்தோசம் கொண்டாடுவார்கள் பின்பு என்ன கலியாணக்களைதான்.

பாவம் காத்திருந்தவன் காதலியை நேத்துவந்தவன் பிளேனேத்திப்போடுவான் பாதிக்கபட்டவன் ஒண்ணுமே எனக்குப் பிடிக்கவில்லை என குணா கமலகாசனாக மாறி அபிராமி அபிராமி........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.