Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்கள் தமது வகிபாகத்தை செலுத்த வேண்டும்”

Featured Replies

“பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்கள் தமது வகிபாகத்தை செலுத்த வேண்டும்”

Mark-field-Minister-uk.jpg?resize=800%2C
வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் விடுவிக்கப்பட்ட காணிகளில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளையும் சேவைகளையும் வழங்குவதற்கு தமது அரசாங்கம் உதவி வருவதாக பிரிட்டனின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.

தமது அரசாங்கம் வழங்கும் 10 இலட்சம் ஸ்டேலிங் பவுண் நிதியுதவி மூலம் மீளக்குடியமர்ந்த 600 குடும்பங்கள் வரை பயன் பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

ஜெனீவா பொறுப்புக்கூறல்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதனை ஊக்குவிப்பதில், பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்கள் தமது வகிபாகத்தை செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் போர் அனர்த்தங்களால் விளைந்த பாதிப்புக்களை சமாளிக்கும் முயற்சிகளில், இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்த உதவுவது முக்கியமான அம்சமாகும். இது போருக்குப் பிந்திய காலப்பகுதியில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை அரசாங்கமும் இணக்கம் கண்ட கூட்டு மூலோபாயத்தின் பிரதான விடயமாகவும் திகழ்கிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பிரிட்டன் அரசாங்கம் வழங்கும் நிதியுதவியின் மூலம் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மட்டக்களப்பு மாவட்டங்களில் மக்கள் மீளக் குடியமர்வதற்கு பல்வேறு வழிகளில் உதவிகள் வழங்கப்படவுள்ளன.

இலங்கையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் மற்றும் பொலிஸ் மற்றும் இராணுவ மறுசீரமைப்பு என்பன அடங்களாக சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை ஊக்குவிக்க பிரித்தானிய அரசாங்கம் தற்போது ஆதரவளித்து வருகின்றது. பிரித்தானியாவின் மோதல் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை நிதியத்தினால் இவற்றுக்கான நிதி உதவி வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

http://globaltamilnews.net/2018/91607/

  • கருத்துக்கள உறவுகள்

ஆளில்லா ஊரில் இருக்கும் கோவிலுக்கு சிலவு செய்வம் ,விளையாட ஆளில்லா கிளப்புகளுக்கு காசை வாரி வழங்குவம் கிளிநொச்சியில் இருக்கும் பரம்பரை காணியை  முஸ்லீமுக்கு வித்து லண்டனில் மகளின் சாமத்திய சடங்கு செய்வம் மற்றபடி வகிபாகமாவது மன்னங்கட்டியாவது கேட்டால் பரம்பரை எடிகேட் பீப்பிள் என்று பிணத்துவினம் . 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

ஆளில்லா ஊரில் இருக்கும் கோவிலுக்கு சிலவு செய்வம் ,விளையாட ஆளில்லா கிளப்புகளுக்கு காசை வாரி வழங்குவம் கிளிநொச்சியில் இருக்கும் பரம்பரை காணியை  முஸ்லீமுக்கு வித்து லண்டனில் மகளின் சாமத்திய சடங்கு செய்வம் மற்றபடி வகிபாகமாவது மன்னங்கட்டியாவது கேட்டால் பரம்பரை எடிகேட் பீப்பிள் என்று பிணத்துவினம் . 

தனிமனிதர்கள் தமக்கு முடிந்ததை, இலகுவானதை தான் செய்வார்கள், செய்யமுடியும். அதில் தவறில்லை.

நீஙகள் சொல்வது சரியானாலும், இது, வகிபாகம், தனிமனிதரால், மனிதர்களால் செய்யக்கூடியதல்ல.

ஸ்தாபக ரீதியல், ஒரு அமைப்பால்,  அல்லது, ஒரு வியாபாரநிறுவனம்,  மக்களிடம் பங்குகள் விற்று, முதல் பெற்றே,  அதை நடத்த முடியும்.

முல்லைத்தீவில் சிங்கள முதலாளியை வீழ்த்த, அங்குள்ள சாதாரண மீனவருக்கு உதவ பணம் எவ்வளவு தான் கொடுக்க முடியும்.?

அதையே நிறுவன ரீதயில் செய்தால்?

போலித்தனம் இல்லாத யாராவது முன்னின்று செய்தால் தான் உண்டு. 

 

Edited by Nathamuni

7 hours ago, பெருமாள் said:

ஆளில்லா ஊரில் இருக்கும் கோவிலுக்கு சிலவு செய்வம் ,விளையாட ஆளில்லா கிளப்புகளுக்கு காசை வாரி வழங்குவம் கிளிநொச்சியில் இருக்கும் பரம்பரை காணியை  முஸ்லீமுக்கு வித்து லண்டனில் மகளின் சாமத்திய சடங்கு செய்வம் மற்றபடி வகிபாகமாவது மன்னங்கட்டியாவது கேட்டால் பரம்பரை எடிகேட் பீப்பிள் என்று பிணத்துவினம் . 

முஸ்லீமுக்கு வித்ததுக்கு ஆதாரம் இருக்கா அல்லது சும்மா எழுந்தமானமாக எழுதுகின்றீர்களா.....!!!!

ஏன் என்றால் முஸ்லீமுக்கு வித்தது உண்மையானால் இது ஒரு  சம்பவம் மட்டுமா அல்லது சர்வசாதாரணமாக நடந்து வருகின்றதா...????

இதை தடுக்க வேண்டிய கடமை ஒவ்வோரு தமிழனுக்கும் உண்டு.....!!!

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Dash said:

முஸ்லீமுக்கு வித்ததுக்கு ஆதாரம் இருக்கா அல்லது சும்மா எழுந்தமானமாக எழுதுகின்றீர்களா.....!!!!

ஏன் என்றால் முஸ்லீமுக்கு வித்தது உண்மையானால் இது ஒரு  சம்பவம் மட்டுமா அல்லது சர்வசாதாரணமாக நடந்து வருகின்றதா...????

இதை தடுக்க வேண்டிய கடமை ஒவ்வோரு தமிழனுக்கும் உண்டு.....!!!

 

கிளிநொச்சியில்  மே 18 க்கு பிறகு 11 பள்ளிவாசல்கள் எப்படி திறக்க பட்டன என்பதை புரிந்துகொண்டால் ஆதாரம் கேட்க்க மாட்டீர்கள் .

அண்மையிலும் முல்லை நாயாறு பிரச்சனையில் தொடக்கம் நம்ம ஆள் ஏக்கர் கணக்கில் சிங்களவருக்கு காணியை வித்தது தொடக்கம் என்பதை அறிவீர்களா ?

58 minutes ago, பெருமாள் said:

கிளிநொச்சியில்  மே 18 க்கு பிறகு 11 பள்ளிவாசல்கள் எப்படி திறக்க பட்டன என்பதை புரிந்துகொண்டால் ஆதாரம் கேட்க்க மாட்டீர்கள் .

11 பள்ளிவாசல்களா??? இருப்பதே 1500 பேர் கூட இல்லை  அப்படி பார்த்தால் 100 பேருக்கு ஒரு பள்ள்வாசலா....!!!!

அண்மையிலும் முல்லை நாயாறு பிரச்சனையில் தொடக்கம் நம்ம ஆள் ஏக்கர் கணக்கில் சிங்களவருக்கு காணியை வித்தது தொடக்கம் என்பதை அறிவீர்களா ?

ஏதா எங்கட சகோத்ர இனம், இருந்து விட்டு போகட்டும், அரேபிய வந்தெறிகள் இல்லையே

முஸ்லீம்களுக்கு காணி விற்கும் பிரச்சனை பூதாகாரமாக வளர போகுது. எமது மண்ணிலேயே நாம் முஸ்லீம்களுக்கு அடிமையாகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இவர்களும் நன்கு திட்டமிட்டே செயல்படுகின்றனர், அதாவது நாம் கேட்டது வடக்கு கிழக்கு இணைந்த ஈழம்

 ஆனால் அவர்கள் வடக்கு கிழக்கு இணைந்த முஸ்லீம் தேசம்.

நாம் 35 வருடம் போராடி அடைந்தது எதுவும் இல்லை, ஆனால் அவர்கள் கிழக்கு மாகாணம் முழுமையாக கைபற்றி விட்டனர், வடக்கு மாகாணதில் மன்னார் மாவட்டம் கைபற்றியாச்சு, முல்லை மற்றும் வவுனியாவை பிடிக்க அடிதளம் இட்டாச்சு.

அதை விட தமிழ் கலாச்சாரத்தை கேவலபடுத்தி மூலை சலவ செய்து மதம் மாற்ற திட்டமிட்ட முறையில் இயக்கப்படும் முக புத்தக பக்கங்கள், இதை இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புக்களால் இயக்கப்படுகின்றன.

குறிப்பாக ஒருவரை அவதானித்து இருக்கிறம் , நான் நினைத்தன் அவர் ஒரு இலங்கை முஸ்லீம் என்று ஆனால் ஆராய்ந்து பார்த்தால் அவர் கேரளாவை சேர்ந்த முஸ்லிம் மலையாளி . இவரது முழு நேர தொழில் என்னவென்றால் தமிழரின் தேசியவாத கருத்துக்களை சிங்களத்தில்ன்மொழி பெயர்த்து சிண்டு முடிந்து விடுவது.

இபோழுது வன்னி மவட்ட அபிவிருத்தி வளர்ச்சி என்றால் முழுக்க ரிஷாடும் அவரது கூட்டமும் தான் நிக்கும். ஒரு தமிழனை காண முடியாது.

இதுக்கு மேலாக செம்மணியில் கைதொழில் பேட்டை அமைக்க போகிறாராம், இங்கு யாருக்கு வேலை வாய்ப்பு, முதலீடெல்லம் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இதை விட முக்கியமாக எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பணம் இறைக்கபடுகிறது. நன்றாக அவதானித்து பாருங்கள்  சிங்களவன் ஒரு புத்தர் சிலையை இராணுவ முகாமுக்குள் வைத்தால் ஜெனிவா வரை போய் முறையிடுபவர்கள் முஸ்லிம் முழு வன்னியையும் ஆக்கிரமிக்க என்ன செய்து கொண்டிருந்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

 

நாம் இருவர் நமக்கு இருவர் .அல்லது நாம் இருவர் நமக்கு ஒருவர் அல்லது நாம் இருவர் நமக்கு ஏன் ஒருவர் ? இதில் எதை இலங்கை அரசு கொள்கை யாக  உள்ளது ? அதை மதிக்கும் சமூகம் எது மிதிக்கும் சமூகம் எது ? 

வகை தொகையின்றி இறைவன் அளித்த வரம்  என பிள்ளை பெறுவோர் யார் .. ? அப்பொதான் ஒர் முடிவிற்கு வர இயலும் ..?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.