Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்ணா சிலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை பேரணி; செப்டம்பர் 5-ம் தேதி பலத்தை நிரூபிக்க அழகிரி தீவிரம்; 1 லட்சத்துக்கும் அதிகமானோரை திரட்ட முடிவு

Featured Replies

அண்ணா சிலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை பேரணி; செப்டம்பர் 5-ம் தேதி பலத்தை நிரூபிக்க அழகிரி தீவிரம்; 1 லட்சத்துக்கும் அதிகமானோரை திரட்ட முடிவு

 

 
downloadjpg

மு.க.அழகிரி: கோப்புப்படம்

அண்ணா சிலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ள பேரணியில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர், தென் மண்டல அமைப்புச் செயலாளர் என திமுகவில் செல்வாக்கோடு வலம் வந்த மு.க.அழகிரிக்கும், அவரது தம்பியும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இடையே மோதல் வெடித்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டார். அதன்பிறகு ஸ்டாலினை அவ்வப்போது விமர் சித்தாலும் அரசியலில் இருந்து அழகிரி ஒதுங்கியே இருந்தார். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 89 தொகுதிகளில் வென்ற திமுக நூலிழையில் ஆட்சி அமைக் கும் வாய்ப்பை இழந்தது. அதனைத் தொடர்ந்து, ‘‘ஸ்டாலின் இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது’’ என அழகிரி விமர்சித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த அழகிரி, ‘’ஸ்டாலின் செயல் தலைவர் அல்ல. செயல்படாத தலைவர்’’ என கடுமையாக சாடினார்.

 

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். அவர் சிகிச்சை பெற்ற 11 நாட்களும் அழகிரி, ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் மருத்துவமனையிலேயே இருந்த னர். அப்போது அழகிரி - ஸ்டாலின் இடையே இணக்கத்தை ஏற்படுத்த அவர்களது சகோதரி செல்வி மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 13-ம் தேதி கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்திய அழகிரி, ‘கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர். அடுத்து என்ன செய்வது என்பதை விரைவில் அறிவிப்பேன்’ என கூறியிருந்தார். கருணாநிதி மறைந்த ஒரு வாரத்தில் அழகிரி எழுப்பிய இந்த கலகக் குரல் திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் வரும் செப்டம்பர் 5-ம் தேதி கருணாநிதி நினைவிடத்துக்கு பேரணி நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘செப்டம்பர் 5-ம் தேதி அண்ணா சாலை, வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை யிலிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடத்த இருக்கிறேன். இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந் தும் 1 லட்சத்துக்கும் அதிகமா னோர் பங்கேற்பார்கள். கருணாநிதி யின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் என்பதை அப்போது அனைவரும் புரிந்து கொள்வார்கள். எனது பின்னணி யில் பாஜக உட்பட எந்தக் கட்சியும் இல்லை. கருணாநிதி யின் லட்சியத்தை நிறைவேற்று வதற்கான முயற்சியில் இறங்கி யுள்ளேன்’’ என்றார்.

வரும் 28-ம் தேதி திமுக பொதுக் குழுவில் கட்சித் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், அழகிரி பேரணி நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://tamil.thehindu.com/tamilnadu/article24750053.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • கருத்துக்கள உறவுகள்

பிரியாணியும் குவாட்டரும் போடுவாய்ங்க...

வேற யாரு வாறீங்க?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

அப்போது அழகிரி - ஸ்டாலின் இடையே இணக்கத்தை ஏற்படுத்த அவர்களது சகோதரி செல்வி மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

யார் அழுதாலும் உடைவு கொண்பேர்ம் .

கொஞ்ச நாளைக்கு பிரியாணி கடைக்காரங்கள் ஓட்டல்களை பூட்டி இளைப்பாறுவது அவர்களின் உடம்புக்கு நல்லது .

  • தொடங்கியவர்

மு.க.அழகிரியின் பேரணியை முறியடிக்க ஸ்டாலின் தீவிரம்: மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை

 

 
alagirijpg

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து காலியாக உள்ள திமுக தலைவர் பதவிக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. கடந்த 2017 ஜனவரி 4-ம் தேதி முதல் செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின், திமுகவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், கருணா நிதியின் மகனுமான மு.க.அழகிரி கட்சித் தலைமையை கைப்பற்ற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு திமுகவில் இருந்து அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார். அதன் பிறகு ஸ்டாலினுக்கு எதிராக அவ் வப்போது கருத்துகளை தெரிவித்து வந்தாலும் அரசியலில் இருந்து அழகிரி ஒதுங்கியே இருந்தார்.

 

கருணாநிதி மறைவுக்குப் பிறகு அழகிரியை கட்சியில் இணைக்க குடும்பத்தினர் முயற்சித்தனர். அதற்கு ஸ்டாலின் மறுத்து விட்ட தாகக் கூறப்படுகிறது. கடந்த 13-ம் தேதி கருணாநிதி நினை விடத்தில் அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, “கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவில் அறிவிப்பேன்’” என்றார். ஸ்டாலினுக்கு போட்டி இருக்காது என்று கூறப்பட்ட நிலையில் அழகிரியின் இந்த கலகக்குரல் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனது பலத்தை நிரூபிப்பதற்காக வரும் செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் பேரணி நடத்த அழகிரி முடிவு செய்துள் ளார். அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை பேரணி நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

இதற்காக திமுக தலைமை நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், மாவட் டச் செயலாளர்கள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்களுடன் அழகிரி தொடர்ந்து பேசி ஆதரவு திரட்டி வருகிறார். ஸ்டாலினால் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர்கள், அதிருப்தியில் இருப்பவர்களை அழகிரியின் பக்கம் இழுக்க அவரது ஆதரவாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

மாவட்டச் செயலாளர்கள் மீது அதிருப்தியில் உள்ள ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள் பலர் அழகிரி நடத்தும் பேரணி யில் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த ஸ்டாலின், மாவட்டச் செயலாளர் களை தொடர்புகொண்டு, ஆலோசித்து வருகிறார். இது தொடர்பாக மாவட்டச் செயலாளர் ஒருவர் கூறும்போது, “சென்னையில் அழகிரி நடத்தும் பேரணி யில் திமுக நிர்வாகிகள் யாரும் பங்கேற்கக் கூடாது. அதிருப்தியில் உள்ள கட்சியினரை அரவணைத்துச் செல்ல வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். திருவாரூர், திருப்பரங் குன்றம் இடைத்தேர்தல் மட்டுமல்லாது மக்களவைத் தேர்தலும் வருவதால் கட்சி உடையாமல் பலமானதாக இருக்க வேண்டும். இல்லையெனில் யாருக்கும் பலனில்லாமல் போய்விடும் என ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்டச் செயலாளர்களுடன் மாவட்டச் செயலாளர்கள் பேசி வருகின்றனர். அழகிரியின் பேரணியை முறியடிக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்” என்றார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24757754.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி நம்மாளு! இதோ.. தெலுங்கு ஊடகமே சொல்லுது.. 

 

?‍♂️

  • தொடங்கியவர்

989 முதல் 2018 வரை.. அழகிரியின் அரசியலும், திக்குமுக்காடும் நிலவரமும்!

117_thumb.jpg
 

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார தென்மாவட்டங்களில் 1994-ம் ஆண்டுக்குப் பிறகு, தி.மு.க-வில் அவர் வைத்ததே சட்டம் என்கிற அளவுக்கு அழகிரியின் அதிகாரம் சென்றது.  அவர் கைகாட்டும் ஆளுக்குத்தான் கட்சிப் பதவி கிடைத்தது; தேர்தலில் நிற்க சீட் கொடுக்கப்பட்டது.

1989 முதல் 2018 வரை.. அழகிரியின் அரசியலும், திக்குமுக்காடும் நிலவரமும்!
 

தி.மு.க-வில் முக்கியப் பதவி வகித்து, மத்திய அமைச்சராகவும் இருந்த மு.க.அழகிரியை `அஞ்சா நெஞ்சன்' என்று வாஞ்சையோடு கருணாநிதி அழைத்ததும் உண்டு. முரசொலி பத்திரிகையைக் கவனிப்பதற்காக 1979-ம் ஆண்டு மதுரை மண்ணில் காலடி எடுத்து வைத்தார். ஆனாலும், 1989-ம் ஆண்டிலிருந்துதான் மதுரையில் அவர் கோலோச்ச ஆரம்பித்தார். மனக்கசப்பு ஏற்பட்டு தி.மு.க-வுக்கு எதிராக, வைகோ களம் கண்டபோது, மு.க.அழகிரி மதுரை மண்டலத்தில் கட்சியினரைச் சந்தித்து தொடர்ந்து தி.மு.க-விலேயே தக்கவைக்கும் பணியில் முக்கியப் பங்காற்றினார். இதையடுத்து, கட்சியில் அதிகார மையமாக மெள்ள மெள்ள உருமாறினார். 

ஸ்டாலின் அழகிரி

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார தென்மாவட்டங்களில் 1994-ம் ஆண்டுக்குப் பிறகு, தி.மு.க-வில் அவர் வைத்ததே சட்டம் என்கிற அளவுக்கு அழகிரியின் அதிகாரம் சென்றது.  அவர் கைகாட்டும் ஆளுக்குத்தான் கட்சிப் பதவி கிடைத்தது; தேர்தலில் நிற்க சீட் கொடுக்கப்பட்டது. அழகிரி ஆதரவாளர்கள் சிலர் அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர். கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமலேயே, தென் மாவட்ட தி.மு.க-வில் அதிகார மையமாகச் செயல்பட்டார். இந்நிலையில்தான், கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்ற திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில், அதுவரை தமிழகம் கண்டிராத புதிய ஃபார்முலாவை நிறைவேற்றி, தி.மு.க-வுக்கு வெற்றி தேடித்தந்தார். அதன் பிறகு அவர் அதிகார மையத்தின் உச்சத்துக்குச் சென்றார் எனலாம்.  

 

 

கருணாநிதியுடன்

திருமங்கலம் வெற்றிக்குப் பரிசாக, கட்சியில் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு, அழகிரிக்கு வழங்கப்பட்டது. அதுவரை கட்சித் தொண்டர்களால் மட்டுமே `அஞ்சா நெஞ்சன்' என்று புகழப்பட்ட அழகிரியை, மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சித் தலைவராக இருந்த மறைந்த கருணாநிதியே, `அஞ்சா நெஞ்சன் அழகிரி' என்று புகழ்ந்து பேசினார். தென் மாவட்டங்களில் பெரும்பாலான தி.மு.க. நிர்வாகிகள், அழகிரி பக்கம் இருக்க, ஒருசில நிர்வாகிகள் மட்டுமே ஸ்டாலின் அணியில் இருந்தனர். பின்னர் 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், மதுரை தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் ஆனார். 

 

 

இந்த நிலையில் 2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற்று முதல்வர் ஆனதும், உள்ளூர் அரசியலிலிருந்து படிப்படியாக ஒதுங்கி, மத்திய அமைச்சர் பதவியில் மட்டும் பிஸியாக இருந்தார். இந்த நேரத்தில்தான், மகன் துரை தயாநிதி மீது கிரானைட் முறைகேடு வழக்கு தொடர்ந்தது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு. இதையடுத்து, அழகிரி ஆதரவாளர்கள் போலீஸ் நடவடிக்கைகளுக்கு பயந்து தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கினர். மதுரையில் தி.மு.க. ஆட்டம்காண ஆரம்பித்தது. 

அதன்பின்னர், 2013-ம் ஆண்டு, மத்திய அமைச்சர் பதவியை மு.க.அழகிரி ராஜினாமா செய்ததும், கட்சிப் பணிகளில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களோடு அழகிரியின் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க படுதோல்வி அடைந்தது. மு.க.அழகிரி முற்றிலுமாக தி.மு.க-விலிருந்து ஓரங்கட்டப்பட்டார். மதுரை மாநகர் தி.மு.க கட்சி நிர்வாகம் முற்றிலுமாகக் கலைக்கப்பட்டு, ஸ்டாலின் ஆதரவாளர்கள் பதவிக்குக் கொண்டுவரப்பட்டனர். அழகிரியையும் கருணாநிதி கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார். அதன்பின்னர், அழகிரிக்கு இறங்குமுகம்தான். இதனால் மு.க.ஸ்டாலின் கை ஓங்கியது.

 

 

ரஜினியுடன்

இதற்கிடையில் 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், தி.மு.க. 89 இடங்களைப் பிடித்தபோதிலும், ஆட்சியைப் பிடிக்கமுடியவில்லை. இதையடுத்து கருணாநிதி உடல் நலம் குன்றி, கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்தார். தி.மு.க செயல் தலைவரானார் ஸ்டாலின். முழுக்க முழுக்க கட்சி நிர்வாகம் அனைத்தும் ஸ்டாலின் கைக்கு வந்தது. இப்போது, கருணாநிதி மரணத்துக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் - மு.க.அழகிரி மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு பேட்டி அளித்த மு.க.அழகிரி, ``எனது ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்து விட்டேன்'' என்று கூறினார். ரஜினி, பி.ஜே.பி ஆதரவாளர்கள், அழகிரியைப் பின்னாலிருந்து இயக்குகிறார்கள் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இதை அடியோடு மறுத்துள்ளார் அழகிரி. 

இந்நிலையில், ஆகஸ்ட்  28-ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார். செப்டம்பர் 5-ம் தேதி, கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதிப் பேரணியை நடத்தப்போவதாக மு.க.அழகிரி அறிவித்துள்ளார். இதுகுறித்து மு.க.அழகிரி அளித்த பேட்டியில், ``சென்னையில் செப்டம்பர் 5-ம் தேதி நடத்தும் அமைதிப் பேரணியில் கட்சித் தொண்டர்கள், யார் பக்கம் உள்ளார்கள் என்பதை நிரூபிப்பேன்'' என்று கூறினார். இப்படி, அழகிரி அரசியல் நகர்வுகளை மேற்கொண்டாலும் கட்சியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து விட்டார். சென்னை அமைதிப் பேரணிக்கு தனது ஆதரவாளர்களைத் திரட்டும் வேலைகளில் அழகிரி இறங்கியுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் ஆட்கள் அதற்கு செக் வைக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள். `நீயா.. நானா..?' என்று அண்ணன் தம்பி இருவரும் களம் இறங்கியிருப்பதை ஆளும் அ.தி.மு.க உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது.

https://www.vikatan.com/news/politics/134902-political-war-between-mkalagiri-and-mkstalin.html

  • கருத்துக்கள உறவுகள்

நாம சப்போர்ட் அழகிரிக்கே நீங்க தொடங்குங்க ராசா ..............................................?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

நாம சப்போர்ட் அழகிரிக்கே நீங்க தொடங்குங்க ராசா ..............................................?

நாங்களும்... அஞ்சா  நெஞ்சன்  அழகிரி பக்கம் தான். ?
ஜேர்மனியில் ..  கலைஞர்  திராவிட முன்னேற்ற கழகத்திற்கு, கிளையே  திறந்து விட்டோம்.   :grin:

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.