Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட இலங்கை சேர்ந்த முஸ்லிம் இளைஞன்! அதிர்ச்சித் தகவல்!

Featured Replies

NSW போலீசார் நடத்திய விசாரணையின் ஒரு பகுதியாக 25 வயது இலங்கையர் பயங்கரவாதத் தொடர்புடைய குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

முஹமட் நிஜாம்டன் என்ற இளைஜர் சிட்னியின் கென்சிங்டன் நகரில் நேற்று கைது செய்யப்பட்டார். மேலதிக விபரங்களை இன்று போலீசார் பத்திரிகையாளர் மகாநாட்டில் வெளியிடவுள்ளனர்   

NSW Joint Counter-Terrorism Team charge 25-year-old man with terror offences

A 25-year-old Sri Lankan man has been charged with terrorism-related offences as part of an investigation conducted by the NSW Joint Counter-Terrorism Team (JCTT).

Mohamed Nizamdeen was arrested yesterday at Kensington, in Sydney's south-east.

He appeared in Waverley Local Court today where he was refused bail and the matter was adjourned to October 24.

வெளிநாட்டில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட இலங்கை சேர்ந்த முஸ்லிம் இளைஞன்! அதிர்ச்சித் தகவல்

 

 

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையை பின்னணி கொண்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் நிஸாம்தீன் என்ற 25 வயதுடைய இளைஞன் சிட்னி கென்ஸின்டன் (Kensington) பகுதியில் வைத்து நேற்று பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கும் ஐ.எஸ். அமைப்புக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என நம்பப்படுவதாக சிட்னி புலனாய்வு அதிகாரி மைக்கல் மெக்டிமென் கூறியதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்கள் அடங்கிய குறிப்பேடு ஒன்று பல்கலைக்கழக ஊழியர் ஒருவரால் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டதன் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மாணவர் விசாவில் அவுஸ்திரேலியாலவில் தங்கியிருக்கும் அதேநேரம் UNSW பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகிறார்.

சிட்னியில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டதற்கான ஆவணங்கள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி இந்நபர் தனியாகவே இயங்கியதாக நம்பப்படுவதாகவும் இதற்கு முன்னர் இவர் மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் பதிவு செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவரின் மாணவர் விசா செப்டம்பர் மாதம் முடிவடைந்த நிலையில், அவர் தொடர்ந்தும் இங்கே தங்கியிருப்பதற்கான நடடிவக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதேநேரம் இவர் இலங்கை உட்பட சில நாடுகளுக்கு சென்று திரும்பியதாகவும் கூறியுள்ளனர்.

குறித்த நபர் இன்று வெவெர்லி (Waverley) நீதிமன்றில் முன்னிலையான போது இவருக்கு பிணை வழங்க அனுமதி மறுக்கப்பட்ட அதேநேரம் அவரது வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 24-ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

https://www.tamilwin.com/australia/01/192150?ref=home-latest

  • தொடங்கியவர்

பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட நபர் பற்றிய மேலதிக தகவல்கள்:

- அவுஸ்திரேலியாவிட்கு மாணவர் விசாவில் வந்துள்ளார் 
- நியூ  சவுத் வெல்ஸ் பல்கலைக்கழகத்தில் (UNSW) தொழிநுபவியலாளராகவும்  (UNSW IT department,) பணியாற்றி வருபவர் 
- அவர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் நியூ  சவுத் வெல்ஸ் பல்கலைக்கழகத்தை தாக்குவத்திட்கு உதவக்கூடிய தகவல்களை வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்படுள்ளது 
- மேலும் சிட்ட்னியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தாக்க உதவக்கூடிய தகவல்களை வைத்திருந்தார் எனவும்  குற்றம் சாட்டப்படுள்ளது 
- அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் முக்கிய நபர்கள் தாக்குதல் இலக்குகளாக குறிப்பிடப்படிருத்தாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர் 
- ஐசிஸ் பயங்கரவாத குழுவுக்கு விசுவாசம் உடையவர் என்றும் ஊடக தகவல்கள் கூறுகின்றன 

-----------------------------------------------------

நல்லவேளையாக இவர் பெரிய அனர்த்தம் ஒன்றை செய்ய முன்னர் மடக்கிவிடார்கள். ஆனாலும் இவர் இலங்கையை சேர்ந்தவர் என்பது இங்குள்ளவருக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. 
 

 

Alleged Islamic State affiliate charged with possessing blueprint to attack 'symbolic' Sydney locations

A 25-year-old Sri Lankan man accused of being an Islamic State affiliate has been charged with possessing a blueprint to target several "symbolic" Sydney locations.

Key points:

  • Mohamed Nizamdeen is accused of preparing a document detailing plans for terror attacks
  • Police allege he was to target landmarks and people in the Harbour City
  • The UNSW employee was wearing a white collared shirt when his matter was heard in court this morning

Officers from NSW's Joint Counter Terrorism Team (JCTT) arrested Mohamed Nizamdeen at Kensington, in Sydney's south-east.

The University of New South Wales contractor appeared in Waverley Local Court today where he was refused bail, with the matter adjourned to October 24.

Mr Nizamdeen is in Australia on a student visa, and police will allege they found documents containing plans to facilitate terrorism attacks on the university campus.

Mr Nizamdeen is in Australia on a student visa, and police will allege they found documents containing plans to facilitate terrorism attacks on the university campus.

Police searched a unit on Defries Avenue in Zetland about 2:00am today, where they seized several electronic items. They are currently searching his workplace.

Australian Federal Police (AFP) detective superintendent Michael McTiernan said the charges were "serious and significant".

"It is quite a significant document which requires further analysis," he said.

"At this stage there is a number of locations and individuals named in that document who are potential targets."

Police allege Mr Nizamdeen was acting on his own, and despite telling a media conference he appeared to be an Islamic State affiliate, they have not charged him with being a member of a terrorist organisation.

The ABC understands Mr Nizamdeen was working is a business systems analyst in UNSW's IT department, including working on a project to help students better understand cyber security.

NSW Police detective acting superintendent Michael Sheehy said investigations were in their infancy.

"At this stage, there [are] no concerns for public safety," he said.

"This is clearly an offence in relation to the preparation of a document. It is not an offence in relation to capability of this individual."

The JCTT comprises officers from the AFP, NSW Police, the Australian Security Intelligence Organisation, and the NSW Crime Commission.

Police said Mr Nizamdeen's visa was to expire in September, and that he was in the process of applying for another one.

http://www.abc.net.au/news/2018-08-31/nsw-police-charge-sri-lankan-man-with-terror-offences/10186784

 

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு முழுக்க .... இது தான் ரேடியோ, டி.வி எல்லாம் போய்க் கொண்டிருக்குது!

எஙக முடியுது எண்டு பாப்பம்!

பயங்கரவாத குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சிட்னியில் கைது….

குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக சிட்னியில் இருந்து – K.S.N.K
 
Mohamed-Nizamdeen.jpg?resize=800%2C534

பயங்கரவாத  செயற்பாட்டுடன் தொடர்பு சந்தேகத்தில்  அவுஸ்திரேலியாவில் இலங்கையர்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  பயங்கரவாத குற்றச்சாட்டில் இலங்கை பிரஜை ஒருவர் நேற்றையதினம் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன. மொஹமட் நிஸாம்டீன் என்னும்  25 வயதுடைய   இளைஞர் ஒருவரே   அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடைய மாணவர் விசா செப்டம்பர் மாதம் காலாவதியாக உள்ளதாகவும், சிட்னியிலுள்ள கென்சிங்டனில் உள்ள NSW பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிக்கொண்டு இருப்பவர் எனவும், இலங்கை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலக்கு வைக்கப்பட்டுள்ள நபர்கள், இடங்களின் பெயர்கள் உள்ளிட்டவை அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டு புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டு இருந்ததாக  சிட்னியின் பயங்கரவாத எதிர்ப்பு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை காலை ஜெட்லண்டில் உள்ள ஒரு பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது   ஏராளமான மின்னணு பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிடுதல், தகவல்களை ஆவணப்படுத்தல், அதனுடனான  ஈடுபாடு, பயங்கரவாத நடவடிக்கைக்கு  உதவுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர்மீது சுமத்தப்பட்டுள்ளன.

அவர் இன்று  வெள்ளிக்கிழமை Waverley  உள்ளூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது  பிணையில்  செல்ல நீதிமன்றம் மறுத்துள்ளதுடன் விசாரணைக்காக  தடுத்து வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

இந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தீவிரமானவையாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் இருப்பதாகவும்,    அவுஸ்திரேலிய சமஸ்டி  காவற்துறையின் துப்பறியும் அதிகாரி மைக்கேல் மெக்டெர்ரன் தெரிவித்துள்ளார். எனினும்  கைது செய்யப்பட்டவருக்கு எதிராக எவ்வித பயங்கரவாத குற்றச்சாட்டுக்களும் இதற்கு முன்னர் சுமத்தப்படவில்லை  எனவும்  அதற்கான பதிவுகள்  fகாணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nizamdeen was set to face Waverley Court today.

Nizamdeen was set to face Waverley Court today. (Supplied)

The accused is a staff member at the University of NSW.

 

nisam.png?resize=696%2C413

 

 

Nizamdeen was set to face Waverley Court today.

Nizamdeen was set to face Waverley Court today. (Supplied)

 

 

 

http://globaltamilnews.net/2018/93532/

பிரதமர் வெளிவிவகார அமைச்சர் -இலங்கை பிரஜையின் முக்கிய இலக்கு

 

 
 

அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை முஸ்லீம் பிரஜை மல்கம் டேர்ன்புல் யூலி பிசப் போன்ற முக்கிய தலைவர்களை இலக்கு வைத்துள்ளார் என  அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முகமட் கமர் நிஜாம்டீனிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் இந்த அதிர்ச்சிதரும் விடயம் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பிரதமர் மல்கம் டேர்ன்புல் மற்றும் மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் உட்பட பல முக்கிய பிரமுகரை இந்த நபர் இலக்குவைத்துள்ளார் என காவல்துறை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

இதேவேளை சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை நீதிமன்றம் அவரிற்கு பிணை வழங்க மறுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு கல்வி விசாவில் வருகை தந்து  நியுசவுத்வேல்ஸ் பல்கலைகழகத்தில் பணியாற்றி வந்த முகமட் கமர்  நிஜாம்டீன் என்பவரையே  நியுசவுத்வேல்ஸின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

சிட்னியின் தென்கிழக்கில் உள்ள கென்சிங்டனில் உள்ள பல்கலைகழக வளாகத்தில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

sril_aus1.jpg

இலங்கையை சேர்ந்த நபர் பல்கலைகழக வளாகத்திலும் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் என  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரது வீட்டை சோதனையிட்ட காவல்துறையினர் பல இலத்திரனியல் உபகரணங்களை அவரது வீட்டிலிருந்து மீட்டுள்ளனர்.

இலங்கை பிரஜையிடமிருந்து  பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்வதற்கான திட்டங்கள் குறித்த ஆவணங்களையும் இலக்கு வைக்க கூடிய பல இடங்கள் மற்றும் நபர்களின் விபரங்கள் அடங்கிய குறிப்பேட்டையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள நபரிடமிருந்து மீட்கப்பட்ட  ஆவணங்கை வைத்துப்பார்க்கும்போது அவருக்கும் ஐஎஸ் அமைப்பிற்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/39502

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு நன்மை செய்தாலும் குண்டை பரிசளிக்க இவர்களால் மட்டுமே முடியும். என்ன செய்வது சிறு வயதிலிருந்து வளர்க்கப்பட்ட விதம் அப்படி  

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நவீனன் said:

வெளிநாட்டில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட இலங்கை சேர்ந்த முஸ்லிம் இளைஞன்! அதிர்ச்சித் தகவல்

இது அதிர்ச்சித் தகவல் என்றால்! ? 

இதற்கென்ன பெயர் வைப்பது?? ?

 

 

முல்லைத்தீவு சிங்களக் குடியேற்றம்- கூட்டமைப்பின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது சிறிலங்கா அரசு

 

Mahinda-Samarasinghe-300x199.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெளியிடங்களைச் சேர்ந்தவர்களைக் குடியேற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாf, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமத்திய குற்றம்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான அதிபர் செயலணிக் கூட்டத்தில் முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிய குற்றச்சாட்டுக்கு, சிறிலங்கா அதிபரும், அமைச்சர்களும் பதிலளிக்காமல் இருந்தமை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த  அமைச்சர் மகிந்த சமரசிங்க, “ இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பிரச்சினையை எழுப்பியதும், சிறிலங்கா அதிபர் உடனடியாக, அந்தப் பிரதேசத்தில் திட்டங்களுக்கு பொறுப்பான மூத்த அதிகாரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

நிலைமைகள் குறித்து கேட்டறிந்தார். அந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் அவர் கூறினார்.  கூட்டமைப்பின் கரிசனைக்கு அந்த இடத்திலேயே பதிலளிக்கப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

இது அதிர்ச்சித் தகவல் என்றால்! ? 

இதற்கென்ன பெயர் வைப்பது?? ?

 

 

முல்லைத்தீவு சிங்களக் குடியேற்றம்- கூட்டமைப்பின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது சிறிலங்கா அரசு

 

Mahinda-Samarasinghe-300x199.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெளியிடங்களைச் சேர்ந்தவர்களைக் குடியேற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாf, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமத்திய குற்றம்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான அதிபர் செயலணிக் கூட்டத்தில் முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிய குற்றச்சாட்டுக்கு, சிறிலங்கா அதிபரும், அமைச்சர்களும் பதிலளிக்காமல் இருந்தமை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த  அமைச்சர் மகிந்த சமரசிங்க, “ இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பிரச்சினையை எழுப்பியதும், சிறிலங்கா அதிபர் உடனடியாக, அந்தப் பிரதேசத்தில் திட்டங்களுக்கு பொறுப்பான மூத்த அதிகாரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

நிலைமைகள் குறித்து கேட்டறிந்தார். அந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் அவர் கூறினார்.  கூட்டமைப்பின் கரிசனைக்கு அந்த இடத்திலேயே பதிலளிக்கப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்.

 

அது பிழை என்றால் இது சரி ஆகாது.

ஐ.எஸ்.எஸ் இயக்க உறுப்பினரான இலங்கை அமைச்சரின் மருமகன் கைது வெளியாகும் பகிர் தகவல்கள் !

 

 

இலங்கையைச் சேர்ந்த கமர் நிஜாம்டீன் என்ற 25 வயதுடைய இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

இவர் இலங்கையிலுள்ள அமைச்சர் ஒருவரின் மருமகன் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் விளையாட்டு துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகன் என ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற இவர், முன்னாள் இலங்கை வங்கித் தலைவரான காலம் சென்ற சட்டத்தரணி ஜெஹான் கமர் காஸிம் அவர்களின் பேரனும், உள்ளூராட்சி, மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்களின் மருமகனும் ஆவார். இவரது பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த நீதிமன்ற விசாரணை ஒக்டோபர் 24ஆம் திகதி இடம்பெறும்.

குறித்த தகவல் சர்வதேச ரீதியில் பல்வேறு சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இவர் மல்கம் டேர்ன்புல், யூலி பிசப் போன்ற முக்கிய தலைவர்களை குறிவைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் சந்தேக நபரை இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய வேளை நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.

மொகமட் நிசாம்டீன் எனும் குறித்த இளைஞர் சிட்னியிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றிவந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகொண்டதாக சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.

அவுஸ்திரேலியாவின் பயங்கரவாத தடுப்புப் பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்தனர்.

இணையதளம் வாயிலாக குறித்த இளைஞர் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகொண்டுள்ளாரா என்ற கோணத்தில் அவர்மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.ibctamil.com/srilanka/80/105489

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.