Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முல்லைத்தீவில் புத்தர் சிலை வைக்க சென்ற பிக்குகளுக்கு நடந்த விபரீதம்!!!

Featured Replies

முல்லைத்தீவில் புத்தர் சிலை வைக்க சென்ற பிக்குகளுக்கு நடந்த விபரீதம்!!!

 

 
 

முல்லைத்தீவு, குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் புத்தர்சிலை ஒன்றிணை அமைக்கும் நோக்குடன் புத்தர்சிலையோடு வருகை தந்த பிக்குமார் அடங்கிய குழுவொறைினை குமுழமுனை பிரதேச இளைஞர்கள் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.

mullai1.jpg

சிலை வைக்க வருவதை அறிந்த குமுழமுனை இளைஞர்கள் தடுப்பதற்காக குருந்தூர் மலைக்கு  சென்றவேளை அதை அறிந்த பிக்குகள் குழு தப்பி சென்ற நிலையில் தன்னிமுறிப்பு குளக்கட்டுபகுதியில் வைத்து இளைஞர்கள் வழி மறித்துள்ளனர். இதன்போது குறித்த பகுதிக்கு வடமாகாண அமைச்சர் சிவநேசன், உறுப்பினர் ரவிகரன் பிரதேச சபை தவிசாளர் தவராசா பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பிரசன்னமாகியுள்ளனர்.

mullaai3.jpg

mullai2.jpg

mullai4.jpg

இதனால் அப் பகுதியில் முறுகல் நிலை தோன்றியுள்ளதோடு பிக்குகள் குழு பிரதேச வாசிகளின் எதிர்ப்பினை தாங்க முடியாத நிலையில் பொலிஸாரின் தலையீட்டுடன் அனைத்துப் பொருட்களுடனும் திரும்பிச் சென்றுள்ளனர்.

குறித்த பிரதேசமான  தமிழர்களுடன் வரலாற்றுடன் தொடர்புடையது எனவும் அங்கு பல நூற்றாண்டு காலமாக ஐயனார் ஆலையமொன்று இருந்துள்ளதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

http://www.virakesari.lk/article/39745

  • தொடங்கியவர்

ஒட்டுசுட்டானில் பதட்டம்!! குடியேறவந்த பிக்கு விரட்டியடிப்பு!! பொலிசாரின் கண்முன் நடந்த சம்பவம்

 

 

வன்னி ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகப்பகுதிக்கும். கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப்பிரிவிற்கும் உட்பட்ட குருந்தூர்மலைப்பகுதியில் நெடுங்கேணிப்பகுதி பொலீஷ் நிலையத்தினரின் ஆதரவோடு பௌத்தமதகுருவானவர் குருந்தூர்மலைப்பகுதியில் பௌத்த விகாரை ஒன்றை அமைமத்து, சிங்களகுடியேற்றமும் செய்யமுற்பட்டனர்.

இதை கேள்விப்பட்ட தமிழ் மக்கள் உடனே அங்குசென்று 'எமது பகுதியில் எவரும் குடியேற்றங்கள் செய்யக்கூடாது என்றும் எமது தமிழர் தாயகத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று கூச்சலிட்டு பௌத்த பிக்குவையும், குடியேற வந்த சிங்கள இளைஞர்களையும் விரட்டியடித்தனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/crime/80/105658?ref=bre-news

 

  • கருத்துக்கள உறவுகள்

40684231_666006570451277_605237469984797

  • தொடங்கியவர்

 

 

ஒட்டுசுட்டானில் பதட்டம்!!

  • தொடங்கியவர்

குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்க வந்த பிக்குகள் உட்பட 12 பேர் கைது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

2961-6.jpg?resize=800%2C533
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு- குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்கும் நோக்கில் வந்த பௌத்த பிக்குகள் உட்பட 12 பேர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில்,

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதிதயில் உள்ள தண்ணிமுறிப்பு கிராமத்தில் தமிழ் மன்னர்கள் வாழ்ந்த வரலாற்று எச்சங்களுடன் குருந்தூர் மலை காணப்படுகின்றது. இந்த மலையை ஆக்கிரமிப்பதற்கு பல தடவைகள் முயற்சிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள பழமையான சிவன் ஆலயத்தை மக்கள் பராமரிக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில், 4 வாகனங்களில் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 12 பேர் தங்குமிடம் அமைப்பதற்கான வசதிகள், விகாரை அமைப்பதற்கான கட்டிட பொருட்கள், புத்தர் சிலை ஆகியவற்றுடன் குருந்தூர் மலைப்பகுதிக்கு வருவதை ஊர் மக்கள் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து ஒன்றுதிரண்ட மக்கள் தண்ணிமுறிப்பு கிராமத்திற்கு சென்று அங்கு தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள். இதனையடுத்து தண்ணிமுறிப்பு பகுதியை அண்டியுள்ள தண்டுவான் என்ற இடத்தில் வைத்து விகாரை அமைக்கவந்தவர்களை பொதுமக்கள் மடக்கிப்பிடிக்க முயற்சித்தபோது சிலர் தப்பி ஓடியுள்ளனர்.

எனினும் 4 வாகனங்களில் வந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 12 பேர் மக்களால் பிடிக்கப்பட்டு தண்ணிமுறிப்பு குளத்திற்கு அருகில் கொண்டுவரப்பட்டனர். இதனையடுத்து சம்பவத்தை அறிந்த ஒட்டுசுட்டான் காவல்துறையினர் தண்ணிமுறிப்பு குளப்பகுதிக்கு வந்தனர். எனினும் தாம் விகாரை அமைக்கப்போவதாகவும், அங்கே இதற்கு முன்னர் விகாரை அமைந்திருந்ததாகவும் அவர்கள் கூறிக்கொண்டிருந்த நிலையில் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

எனினும் காவல்துறையினர் வந்ததால் அமைதி காத்தனர். இதனையடுத்து மக்களால் பிடிக்கப்பட்ட 12 பேரும் அவர்களுடைய வாகனங்களும், உடமைகளும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.  காவல்துறையினர் அவர்களை நாளை புதன்கிழமை நீதிமன்றில் முற்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர். நாங்களும் அவர்களை நாளை நிதிமன்றில் முற்படுத்தவேண்டும் என்பதையும், தண்ணிமுறிப்பு கிராமம் தமிழ் மக்கள் வாழும் பகுதி இங்கே ஒரு பௌத்தர் கூட இல்லாத நிலையில் விகாரை அமைப்பதை ஏற்று க்கொள்ள முடியாது என்பதையும் கூறியிருக்கின்றோம்.

இந்நிலையில் தாம் நீதிமன்றில் முற்படுத்துவோம். என காவல்துறையினா உறுதியாக கூறி பௌத்த பிக்கு உள்ளிட்ட 12 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து மக்கள் கலைந்து சென்றுள்ளனர்என தெரிவித்தார்.

2961-1.jpg?resize=800%2C5332961-2.jpg?resize=800%2C5332961-3.jpg?resize=800%2C5332961-4.jpg?resize=800%2C5332961-5.jpg?resize=800%2C533  2961-7.jpg?resize=800%2C5332961-8.jpg?resize=800%2C5332961-9.jpg?resize=800%2C5332961-10.jpg?resize=800%2C5332961-11.jpg?resize=800%2C5332961-12.jpg?resize=800%2C533

 

 

http://globaltamilnews.net/2018/94236/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தீவில்.. முஸ்லிம்.. மற்றும் சிங்கள பெளத்த பயங்கரவாதிகள் எல்லாரும் சேர்ந்து புலிகளை மீண்டும் வா வா என்று அழைக்கிறார்கள் போலவே தெரிகிறது. 

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்படும் வரை இது போன்ற தமிழின அழிப்புக்கள் தொடரவே செய்யும்.

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் நீதித்துறை சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளுக்கு சார்பாக 7 தசாப்தங்களுக்கு மேலாக இயங்கிவருகிறது.

17 hours ago, நவீனன் said:

இந்நிலையில் தாம் நீதிமன்றில் முற்படுத்துவோம். என காவல்துறையினா உறுதியாக கூறி பௌத்த பிக்கு உள்ளிட்ட 12 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து மக்கள் கலைந்து சென்றுள்ளனர்என தெரிவித்தார்.

நீதிமன்றில் முற்படுத்தினார்களா அல்லது வழமைபோல தமிழ் மக்களை ஏமாற்றினார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.