Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவிடம் வழங்கப்படாது’

Featured Replies

nimal.jpg

தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவிடம் வழங்கப்படாது என்றும், அதனை விமானப்படையே முன்னெடுக்கும் என்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணி உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்ற விமல் வீரவன்சவின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், நிமல் சிறிபால டி சில்வா,

“அவ்வாறு எந்த திட்டமும் இல்லை, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படாது.

விமானப்படையின் உதவியுடனேயே புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பாக, பிரதமரும் நானும் தீர்மானம் எடுத்து விட்டோம்.

தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டே, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி விமானப்படைக்கு வழங்கப்படுகிறது.” என்று கூறினார்.

http://thinakkural.lk/article/18813

  • கருத்துக்கள உறவுகள்

அதானே நாலு கறல் தட்டிய கப்பலை கொடுத்துவிட்டு இப்படி உரிமை எடுக்க கூடாது சைனா போல் மில்லியன் கணக்கில் கடன் குடுத்தால் எல்லாம் சரியாகும் .

  • கருத்துக்கள உறவுகள்

பல பேரிண்ட மண்டை தப்பியது ☺️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Athavan CH said:

தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவிடம் வழங்கப்படாது என்றும், அதனை விமானப்படையே முன்னெடுக்கும் என்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதென்ன கொடுமை.. சிங்கள அரச பயங்கரவாத தேசிய பாதுகாப்பிற்காக.. விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் அழித்தொழிக்க வந்த ஹிந்திய அக்காவை.. சொறீலங்கா தங்கச்சி.. இப்படி சந்தேகிப்பது நியாயமா. எல்லாம் பெரியக்கா சீனாவின் சினம் பார்த்துப் போலும். ?

பாவம்.. ஹிந்திய அக்கா... பெரியக்கா சீனா முன் மண்டியிட வேண்டியதாப் போயிற்றே... சொறீலங்கா தங்கச்சியை நம்பி. 

Edited by nedukkalapoovan

"பலாலி விமான நிலையம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கவில்லை"

 

(ரொபட் அன்டனி )

பலாலி விமான நிலையத்தை 70/30 அல்லது 60/40 என்ற அடிப்படையில் இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வது குறித்து பேசப்படுகின்றது. ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

palali.jpg

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாரந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு  பதிலளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/40749

பலாலி விமான நிலைய விவகாரம் – புதுடெல்லி அதிகார மட்டத்தில் குழப்பம்

 

 

Palaly_Airport-300x200.jpgபலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணியை சிறிலங்கா விமானப்படையே மேற்கொள்ளும் என்றும், இந்தியாவிடம் கையளிக்கப்படாது என்றும் சிறிலங்கா அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியிருப்பது, புதுடெல்லி அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான விரிவான திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக, இந்திய விமான நிலைய அதிகார சபையும், இந்திய வெளிவிவகார அமைச்சும் அண்மையில் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டிருந்தன.

இது தொடர்பான தகவல்கள் நேற்றுமுன்தினம் வெளியாகிய நிலையில்,  சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணியை இந்தியாவிடம் கொடுக்கும் எண்ணம் இல்லை என்றும், ஊடகங்களில் வெளியாகிய செய்தியில் உண்மையில்லை என்றும் கூறினார்.

சுற்றுலா அபிவிருத்தி நிதியம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை ஆகியன இணைந்து பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யப் போவதாகவும், இதற்கான பணிகளை சிறிலங்கா விமானப்படையே முன்னெடுக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதற்காக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை 750 மில்லியன்  ரூபாவையும், சுற்றுலா அபிவிருத்தி நிதியம் 1000 மில்லியன் ரூபாவையும் செலவிடும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பின் மீது சிறிலங்கா அரசாங்கம் அதிக கரிசனை கொண்டுள்ளது என்றும் எனவே, இதற்காக அபிவிருத்திப் பணியை கையளிக்க முன்னர், அதனை யார் மேற்கொள்வது என்று ஆராய்ந்து இந்த முடிவை எடுத்ததாகவும் அமைச்சர் நிமல் சிறி பால டி சில்வா தெரிவித்தார்.

பலாலி விமான நிலையம், ஏ-320 விமானங்கள் தரையிறங்கும் வகையில் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான விரிவான திட்டத்தை தயாரிக்கவுள்ளதாக, இந்திய விமான நிலைய அதிகாரசபை நேற்றுமுன்தினம் அதிகாரபூர்வமாக செய்திக்குறிப்பை வெளியிட்ட நிலையில், சிறிலங்கா அமைச்சர் அதனை மறுத்திருப்பது புதுடெல்லி அதிகார மட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, உயர்மட்டப் பேச்சுக்கள் விரைவில் முன்னெடுக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.net/2018/09/19/news/32985

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 உலகத்திலையே நீயா நானா போட்டி சிறிலங்காவிலைதான் நடக்குது.......உதவியே செய்யாமல் யாருமே எட்டிப்பார்க்காத நாடுகள் இருக்கும் போது சிங்களச்சிறிலங்காவுக்கு  பாய்விரிக்க கனசனம் புடுங்குப்படுதுகள். :27_sunglasses:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 உலகத்திலையே நீயா நானா போட்டி சிறிலங்காவிலைதான் நடக்குது.......உதவியே செய்யாமல் யாருமே எட்டிப்பார்க்காத நாடுகள் இருக்கும் போது சிங்களச்சிறிலங்காவுக்கு  பாய்விரிக்க கனசனம் புடுங்குப்படுதுகள். :27_sunglasses:

பக்கத்து வைக்கோல் பட்டரை நாயால் வந்த போட்டி மற்றபடி கிழக்கு ஆபிரிக்கா துறைமுகம்கள் சைனாவின் கைகளுக்கு போய் கனகாலம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.