Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நக்கீரன் ஆசிரியர் கோபால், சென்னை விமான நிலையத்தில் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nakkheeran Gopal arrested in Chennai airport

நக்கீரன் ஆசிரியர் கோபால், சென்னை விமான நிலையத்தில் கைது!

சென்னையில் மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னையில் இருந்து புனே செல்ல புறப்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சில நிமிடம் முன் தமிழக போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்தனர். ஆளுநர் மாளிகையின் உத்தரவின் பேரில் கைது செய்யட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/nakkheeran-gopal-arrested-chennai-airport-331583.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நக்கீரன் கோபால் திடீர் கைது.. சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை.

சென்னை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை திடீரென கைது செய்யப்பட்டார். புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது அவரை கிண்டி போலீஸார் கைது செய்தனர். ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவிகளை பாலியல் முறைகேடுகளில் ஈடுபட அழைத்து நிர்ப்பந்தப்படுத்திய வழக்கில் கைதானவர் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி. இவர் குறித்து நக்கீரன் ஒரு செய்தி வெளியிட்டது. அதில், ஆளுநரை நிர்மலா தேவி 4 முறை சந்தித்ததாக நிர்மலா தேவி கூறியதாக இடம் பெற்றிருந்தது. இதையடுத்து நக்கீரன் மீது ஆளுநர் மாளிகை புகார் கொடுத்தது. அந்த புகாரின் பேரில்தான் போலீஸார் கோபாலைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கோபால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு வைத்து விசாரணை நடந்து வருகிறது. அது முடிந்ததும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள் என்று தெரிகிறது. கோபால் மீது என்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவில்லை.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/nakkheeran-gopal-arrested-chennai-airport-331583.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஆளுநரை நிர்மலா தேவி 4 முறை சந்தித்ததாக நிர்மலா தேவி கூறியதாக இடம் பெற்றிருந்தது. 

baashha.jpg

நக்கீரன் கோபால் எதற்கும்  துணிந்து எழுதுபவர் என்ன கொஞ்சம் திமுக சொம்பு  ..?

  • கருத்துக்கள உறவுகள்

இதன்மூலம் பல்கலை மாணவிகளைத் தவறான வழிக்குத் தூண்டியதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டில் தமிழக ஆளுனர் தாத்தா பஙீரிவால் புரோகித் அவர்களுக்கு ஆகக்கூடிய சம்பந்தம் இருக்கின்றது என அனைவருக்கும் தெரியும்படி அவரே செஞ்சுவிட்டார். இததான் தேரை இழுத்துத் தெருவில விடுகிறது எனச்சொல்லுறது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னாச்சு கோபால்,

சொல்லுங்க கோபால், சொல்லுங்க...

ஆமா... வெளில வந்த அப்புறம் சொன்னா போதும்...

  • கருத்துக்கள உறவுகள்

வாரம் இரு முறை வெளிவரும் செய்தி இதழான நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். நக்கீரன் இதழில் தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் குறித்து வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

செப்டம்பர் 25-28 தேதியிட்டு வெளியான நக்கீரன் இதழில் தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் குறித்து அட்டைப்படக் கட்டுரை ஒன்று வெளியானது. அந்தக் கட்டுரையில், கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு செல்லத் தூண்டியதான குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிர்மலா தேவி, ஆளுநரைச் சந்தித்ததாகக் கூறப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், செவ்வாய்க் கிழமையன்று புனேவுக்குச் செல்வதற்கோபால் கைதுசெய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட வைகோ சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையத்திற்கு வந்து, அவரைச் சந்திக்க வேண்டுமெனக் கூறினார், ஆனால், அதற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர் காவல் நிலையம் முன்பாகவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து வைகோ கைதுசெய்யப்பட்டார். காக சென்னை விமான நிலையத்திற்கு கோபால் வந்தார். அப்போது அவரை தடுத்து  நிறுத்திய காவல்துறையினர், கைதுசெய்வதாகத் தெரிவித்தனர். இதற்குப் பிறகு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு கோபால் கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

கோபால் கைதுசெய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. "பேராசிரியை விவகாரத்தில் "தொடர்" ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகை ஆசிரியரை, சர்வாதிகார - பாசிச மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு பாசிச பாஜக அரசும் - பொம்மை அதிமுக அரசும் விடுத்திருக்கும் பகிரங்க அச்சுறுத்தல். தங்கள் சித்தாந்தங்களுக்கு வேண்டாதவர்களை கைது செய்யத் தூண்டும் மத்திய பா.ஜ.க அரசும், தமிழக ஆளுநரும் கொல்லைப்புற வழியாக முகமூடி அணிந்துகொண்டு தங்கள் கட்டளைகளை நிறைவேற்ற எடுபிடி அடிமை அரசை பயன்படுத்துவது வெட்கக்கேடானது" என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். 

 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸும் இந்தக் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். 

கோபால் மீது என்ன புகார் அளிக்கப்பட்டது, எந்தப் பிரிவின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன என்ற விவரங்கள் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. 

https://www.bbc.com/tamil/india-45795378

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

à®à®¾à®°à®à®¾à®° வாதமà¯

நக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை கோர்ட்.. தேசத்துரோக வழக்கும் ரத்து!

நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதிரடியாக கூறி விட்டது. மேலும் அவர் மீது சுமத்தப்பட்ட தேச துரோக வழக்கையும் நீதிபதி ரத்து செய்து விட்டார்.

சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால் இன்று காலை வைத்து கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு எதிராக நக்கீரன் கோபால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்தார். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இதன் மீது விசாரணை நடந்தது.

நக்கீரன் கோபால் சார்பாக அவரது வழக்கறிஞர் பி.டி பெருமாள் வாதிட்டார். நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் தரப்பு பல முக்கியமான வாதங்களை முன்வைத்தனர்.124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்குப் பதிய முகாந்திரமில்லை. ஆளுநரை மிரட்டும் வகையில் நக்கீரன் கட்டுரை இல்லை. ஜனாதிபதி, ஆளுநரின் பணிகளைத் தடுத்தால்தான் 124 போட முடியும்.

ஆனால் இந்த கட்டுரை அப்படி இல்லை. கட்டுரையால் ஆளுநர் எந்த நேரத்தில் பணி செய்யாமல் இருந்தார் என்று விளக்க வேண்டும். நக்கீரன் கோபாலைக் கைது செய்ய ஆளுநரின் ஒப்புதல் இருக்கிறதா.கட்டுரை வந்து இவ்வளவு நாட்கள் கழித்து நடவடிக்கை எடுக்க என்ன காரணம். ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அவரது செயலாளர் வழக்கு கொடுத்தாரா என்பதை விளக்க வேண்டும், என்று கோபால் தரப்பு வாதிட்டது.

இதையடுத்து அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கோபிநாத், நக்கீரன் கோபால் மீது வழக்குத் தொடர ஆளுநரின் ஒப்புதலை அவரது செயலாளர் பெற்றாரா என்று கேட்டார். அதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் அது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று பதிலளித்தார்.

இதையடுத்து நீதிபதி கோபிநாத் தற்போது தீர்ப்பளித்துள்ளார். அதன் முக்கிய அம்சங்கள்: -

நக்கீரன் கோபாலை சிறைக்கு அனுப்ப முடியாது. -

நக்கீரன் கோபால் மீது சுமத்ப்பட்ட 124 வது பிரிவின் கீழான வழக்கை ஏற்க முடியாது.

நீதிபதியின் அதிரடி உத்தரவால் நக்கீரன் கோபால் விடுதலையாகி வெளியே வருகிறார். அவர் மீதான வழக்கும் தூள் தூளாகியுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/nakkheeran-gopal-applied-bail-chennai-egmore-court-331622.html

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

என்னாச்சு கோபால்,

சொல்லுங்க கோபால், சொல்லுங்க...

ஆமா... வெளில வந்த அப்புறம் சொன்னா போதும்...

 இது வெறும் அராஜகம் ..... திருமுருகன் காந்தியையும் இப்படித்தான் போட்டார்கள் 
நக்கீரன் கோபாலை ஜெயலலிதா பலமுறை கைது செய்து 
அவர் பத்திரிகை அலுவகங்களை உடைத்து துவம்சம் செய்தார்கள் 
நக்கீரன் மற்றவர்கள் போல் வெறும் பிழைப்பை மட்டும் பார்க்கவில்லை 

உண்மையை எழுதுவதால் அச்சுறுத்தல்கள் அவர்களுக்கு எப்போதும் உண்டு 

தமிழ்ர்கள் ஆகிய நாம் இப்படியானவர்களுக்கு கொடுக்கும் ஆதரவினாலேயே 
சில கேடு கெட்ட ஊடகங்களை ஒழிக்க முடியும்.

நாம் மாறாக மஞ்சள் பத்திரிகைகளுக்கு ஆதரவும் 
இவர்களுக்கு புறக்கணிப்பும் செய்துகொண்டு 
ஊடகங்கள் மேல் தப்பு சொல்லிக்கொண்டு இருக்கிறோம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 ஜேர்மனியில் உண்மையான பத்திரிகை சுதந்திரத்தின் மூலம் பெரும் பெரும் அரசியல் பதவிகளெல்லாம் காற்றில் தூக்கியெறியப்பட்ட வரலாறுகள் பல உண்டு. ஏன் நாட்டின் ஜெனாதிபதி கூட பதவியை விட்டு விலக வேண்டி வந்தது. இதெல்லாம் உண்மையான ஜெனநாயக நாடுகளில் மட்டுமே சாத்தியம்.

இந்தியா சிலோன் போன்ற நாடுகளில் சனநாயகத்தை எதிர்பார்ப்பவர்கள் அல்லது அங்கே இருக்கென்று சொல்பவர்களுக்கு நான் சொல்வது  நீங்களெல்லாம் ஐயோ பாவம் tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.