Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரு.எம்.எ.சுமந்திரன் அவர்களின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.
கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் திரு எம்.எ.சுமந்திரன் அவர்கள் தனது புதிய பகைவர்களுக்கு எதிராக கெட்டவார்த்தைகளை பயன்படுத்துவதக்கு கூட்டமைப்பு மேடைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனேனில் இது தமிழர் கலாசாரல்ல. மேலும் இது தமிழர் நலன்களைப் பாதிக்கும். 
.
வவுனியாவில் நீங்கள் திரு.மைதிரிபால சிறிசேனவுக்கு எதிராக கெட்ட வார்த்தை பேசியமைக்கு மன்னிப்புக் கோருமாறு வேண்டுகிறேன். என்ன இருந்தாலும் அவர் சிங்கள மக்களின் தலைவர் ஆவார். இது எங்கள் மகத்தான தமிழ் கலாச்சாரத்துக்கும் தமிழர் நலன்களுக்கும் உகந்ததல்ல.
.
மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன் அவர்களே, நீங்கள் திரு ரணில் விக்கிரசிங்க அவர்களை பாதுகாக்க வவுனியாவில் ஆவேசப்பட்ட அளவுக்கு கோவத்தை இதுவரைக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற தமிழர் உரிமைப் பிரச்சினைகளில் காட்டியதில்லையே? அது ஏன்? 
.
தமிழர் நலன்களைப் பணயம் வைத்து போருக்கு அறைகூவி திரு.ரணில் அவர்களைப் பாதுகாக்கும் அளவுக்கு அவர் தமிழருக்கு தந்த உரிமைகள் எவை? இன்றைய பிரச்சினையில் அவர் தமிழர் விடுதலைக் கூட்டமைப்புக்கு எழுத்தில் தந்த வாக்குறுதிகள் எவை? தயவு செய்து அவற்றை பகீரங்க படுத்துங்கள். நிபந்தனையில்லாமல் திரு.மைதிரிபால சிறீசேனவை மட்டுமல்ல திரு.ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்க்கும் உங்களுக்கு தமிழ் மக்கள் ஆணையில்லை. மேலும் அது உரிமைக்குப் போராடும் தமிழரின் மகத்தான அரசியலுமல்ல.
.
சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தின் முன்பிருந்தே திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களை இலங்கை தமிழர்கள் அறிவார்கள். அவரிடம் தற்போது ஏற்பட்டிருக்கும் மனமாற்றம் என்ன? தமிழரின் ஆதரவைப் பெறுவதற்க்காக புதிதாக விட்டுத் தந்தத உரிமைகள் சலுகைகள் எவை? மேலும் அவர் அரசியல் கைதிகள் விடுதலை, நிலம் நீர்போன்ற நமது மக்களின் வாழ்வாதரங்களை இராணுவத்தின் பிடியில் இருந்து விடுவித்தல், பொதுப்பட்டியைல் இருக்கும் அம்சங்களையாவது மாநில அரசுக்கு விட்டுகொடுத்தல், ஏற்கனனவே வாக்களித்த இணைப்பாட்சி அரசியல் சட்டத்தை நிறைவேற நடவடிக்கை எடுத்தல் போன்ற தமிழர்களின் மிகக் குறைந்த பட்டசக் கோரிக்கைகளில் எதையாவது திரு ரணில் விக்கிரமசிங்க அவர்க்ள் .எழுத்துமூலம் ஏற்றுக் கொண்டிருக்கிறாரா?

திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிப்பதற்க்கு நிபந்தனையாக நீங்கள்  அவரிடமிருந்து எழுத்துமூலம் பெற்ற வாக்குறுதிகளை உடனே வெளியிடுங்கள்.

.

https://www.newsfirst.lk/2018/11/04/sumanthirans-deal-with-ranil-wickremesinghe/

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

கவிஜரே ரொம்பவும் தான் வினோதமான வேண்டுகோள்!

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு இன்னும் ரனிலை ஆதரிக்கவில்லை என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன் அவர்களே, நீங்கள் திரு ரணில் விக்கிரசிங்க அவர்களை பாதுகாக்க வவுனியாவில் ஆவேசப்பட்ட அளவுக்கு கோவத்தை இதுவரைக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற தமிழர் உரிமைப் பிரச்சினைகளில் காட்டியதில்லையே? அது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலை ஆதரிப்பதாக இதுவரை கூட்டமைப்பு கூறவில்லை, சட்டத்திற்குப் புறம்பான பிரதமர் நியமனத்தை எதிர்ப்பதாகவே கூறியுள்ளது.

இன்று சுமந்தரன் பேசியதற்காக ஆவேசப்படும் தாங்கள் இதுவரை சம் சும் & கோ தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைத்த போது எங்கிருந்தீர்கள்? 

கூட்டமைப்பே இவரது கைகளில் சிக்கியுள்ள போது எப்படி உங்களால் கூட்டமைப்பின் மேடைகளை பயன்படுத்த கூடாது என்பீர்கள்.

இந்த சம்பவம் இடம்பெற்றது தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிக் கூட்டத்தில் என்பது கூட உங்களுக்கு தெரியவில்லையா அல்லது சம்பந்தரின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்க்கும் நடவடிக்கையா? 

நீங்கள் எழுதுவது போல் சுமந்திரன் சம்பந்தருக்கு தெரியாமல் எதுவும் செய்யவில்லை, 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீரா அவர்களுக்கு.

தமிழ் அரசியலில் சுமந்திரனோ மற்றவர்களோ  தவறு செய்கிறபோது கண்டித்து விமர்சிக்கிறேன். அவர்கள் நல்லது செய்கிறபோது நிச்சயம் பாராட்டுகிறேன்.   சம்மந்தன் ஐயாவின் சரிகளை எபோதும்   பாராட்டுகிறேன்.   பிழைகளை முந்திக்கொண்டு எதிர்க்கிறேன.  மீரா நீங்கள் சரி பிழை பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டு  எதிர்க்கிறீங்க போல. அவரவர் வழிகள் அவரவருக்கு. 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

MY3 ற்கு கண்ணை மூடிக் கொண்டு கூட்டமைப்பு ஆதரவை வழங்கிய போது உங்கள் கண்டணத்தை வைத்தார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்சி   என்ற பெயரில் முன்னர் மைத்திரியும் ரணிலும் இணைந்து ஆட்சியமைத்தபோது தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் கூட்டமைப்பு எதிர்கட்சியாக இருந்து அரசுக்கு முண்டுகொடுத்தது என்று வைத்துக்கொண்டாலும் இன்று சிறிலங்காவின் அரசியல் நிலைமையே வேறு. அடுத்துவரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் நிகழப்போகும் பலப்பரீட்சையில்  பலசாலி ரணிலாகவோ அல்லது மகிந்தவாகவோ எவராக  இருந்தாலும் கூட்டமைப்பு தமிழருக்கு ஒரு நல்ல அரசியல் தீர்வைக்கொண்டுவரும் என்ற தமிழ் மக்களின் நம்பிக்கையை இந்த அரசியல் நெருக்கடி  கானல்நீராக்கிவிட்டது. தொடர்ந்தும் கூட்டமைப்பு எதிர்கட்சியாக நீடித்தால், வரப்போகும் பிரதமர் எவராக இருந்தாலும் அந்த ஆட்சிக்கு கூட்டமைப்பு நிச்சயம் முண்டுகொடுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை மட்டுமன்றி  கூட்டமைப்பு  எதிர்கட்சியாக இருப்பதால் அரசியல்பலம் அற்ற ஒரு கட்சியாக இருந்தே மிகுதிக்காலத்தையும் ஓட்டவேண்டி வரும். கடந்துசென்ற நாட்கள் நாம் பாடம் கற்றுக்கொள்ளவும் நல்ல வியூகமொன்றை அமைப்பதற்கும்  நல்ல சந்தர்ப்பத்தை  ஏற்படுத்தித் தந்ததை எமது அரசியல்வாதிகள் ஏனோ கண்டுகொள்ளவில்லை. எமது அரசியல் தலைவர்கள் வழமைபோல் சந்தர்ப்பத்தை கோட்டை விட்டு வாளாதிருந்துவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமிகு மீரா, இது என் பொது நிலைபாடு. இப்பவும் வெள்ளைவான் ஆட்ச்சியை ஆதரிக்குமாறு நான்கோரவில்லை. சுமந்திரன் தமிழர் பிரச்சினையில் காட்டாத கோபாவேசத்தோடு திடீரென வெறிகொண்டவர்போல தமிழர் மாண்புக்கு ஒவ்வாத பண்பற்ற மொழிகள் பேசுவதையே எதிர்க்கின்றேன். 

vanangaamudi சொல்வதில் எனக்கு உடன்பாடே. எதிர்கட்சித் தலைமை வகித்த காலத்தில் தமிழரின் செயல்படு வெளியை அகலமாக பராமரித்ததில் நிலம் மீட்பு போன்ற பிரச்சினைகளில் கூட்டமைப்பு பங்காற்றியுள்ளது. அதனை நிராகரிக்கவில்லை. இன்று சுமந்திரன் இந்த அரசின் வெற்றிக்கும் தொடற்சிக்கும் உரிமை கொண்டாடுவதைப் பார்த்தால் கூடமைப்பு நினைத்திருந்தால் அரசியல்கைதிகள் விடுதலை உட்பட அதிகம் வெற்றிகளைப் பெற்றிருக்கலாம் என தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குரிய பதில் தரப்பட்டுள்ளது, சம்பந்தரின் வாரிசால்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதிப்புக்குரிய மீரா, தகவலுக்கு நன்றி.

சிவஞானம் அவர்களுக்கு -

அரசியல் நாகரீகம்தான் தமிழரசுகட்ச்சியின் முகம். அது  சிவஞானமையாவுக்கு தெரியும். சரி நீங்கள் யாருக்காவது கை உயர்தினால் அரசியல் கைதிகள் வெளியே வர வேண்டும். சுமந்திரனின் நண்பர் ரணிலை காப்பாற்றுவதைவிட நமது அரசியல் கைதிகளைக் காப்பாற்றுவது சம்பந்தரின் முக்கிய கடமையாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.